23-02-2024, 02:07 PM
【05】
ரகு : நடந்தது நடந்து போச்சு, இனி நல்லதே நடக்கும்..
கீத்து : இதுக்கு மேல என்ன நடக்க போகுது என மனதில் ஒரு வெறுமை நிறைந்து சொன்னாள்.
மீண்டும் அமைதி..
ரகு : அவரு ஏன் இப்படி பண்ணுனாருன்னு எனக்குத் தெரியும்..
ரகு மடியில் படுத்திருந்த கீத்து எழுந்தாள்.
கீத்து & ஷிவானி இருவரும் கீத்துவை "உனக்கு என்ன தெரியும்" என்பதைப் போல பார்த்தார்கள்.
ரகு முகத்தில் இப்போது ஓரளவுக்கு தெளிவு இருந்தது.
ரகு : நீ எதுக்கும் பயப்பட வேண்டாம். இந்த வீட்டுல நீ சந்தோஷம் நிறைந்து இருப்ப..
ஷிவானி : ஆ.. ஆமா... அண்ணி..
ரகு : எங்களை நம்பு கீத்து..
ஷிவானி : என்னையும்.. எங்களையும்..
ரகு : நீ இப்படி அழுதுகிட்டே. இருக்கக் கூடாது. நீ பழைய கீத்துவா மாற வேண்டும். நான் என்னோட கீத்துவா மீண்டும் உன்னை பார்க்கணும்.
கீத்து : சொல்றது ரொம்ப ஈசி டா..
ஷிவானி : அப்படி நினைக்காதீங்க அண்ணி..
ரகு : நீ தெளிவா இருந்தா மட்டும் தான், இந்த பிரச்சனைய நாம எதிர் கொள்ள முடியும் என தைரியம் கொடுக்க முயற்சி செய்தான்.
ஷிவானி : எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்.
ரகு : போ, போய் கொஞ்சம் ரெஸ்ட் எடு.
ரகு ஓரளவுக்கு நார்மல் நிலைக்கு வந்து விட்டான்.
ஷிவானி அதிர்ச்சியில் இருந்து மீண்டு விட்டாள்.
கீத்துவுக்கு தன்னம்பிக்கை கொஞ்சம் கொஞ்சம் திரும்ப வரும் எண்ணம். இருந்தாலும் நடப்பதை நினைக்க நினைக்க அவளுக்கு அழுகை வந்தது...
ரகு : ஷிவானி, அவளை உன் ரூமுக்கு கூட்டிட்டு போ.
கீத்து அழுது அழுது அவள் முகம் வீங்கியது. எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் மதியம் எந்த உணவும் சாப்பிடவில்லை.
மாலையில் ஷிவானி கீத்துவை எழுப்பி டீ குடிக்க சொன்னாள்..
கீத்து : வேண்டாம்..
ஷிவானி : நீங்க சாப்பிடாமல் அண்ணா எதுவும் சாப்பிடாது.
கீத்து : ஷிவானியை பார்த்தாள்.
ஷிவானி : கஷ்டம் தான், பட் பிளீஸ்.
மாலையும் எதுவும் சாப்பிடாமல் அப்படியே படுத்து தூங்கி விட்டாள்.
இரவு படுக்கையில் இருந்த கீத்துவை எழுப்பி கை பிடித்து ரகு அண்ட் ஷிவானி இழுக்க, 5 மினிட்ஸ் என்று சொல்லி படுக்கையில் இருந்து எழுந்து தன் முகத்தை கழுவிக் கொண்டு டைனிங் டேபிள் நோக்கி வந்தாள்.
அங்கே தன் காதலன், கணவன் மற்றும் ஷிவானி ஒருவருக்கு ஒருவர் பேசாமல் இருப்பதைப் பார்த்தாள்.
வா டியர் என்ற ரகுவை பார்த்து சிரித்தாள். ஷிவானி அருகில் இருந்த சேரில் உட்கார்ந்தாள்.
ஷிவானி : அண்ணி இட்லி வேணுமா இல்லை சப்பாத்தி?
குமார் : ஒருவேளை சாப்பாட்டுக்கு வழி இல்லாதவளா இருந்தவ எதுக் கொடுத்தாலும் சாப்பிடுவா..
அந்த வார்த்தை கீத்து தொண்டையைக் ஏதோ கவ்விப் பிடிப்பதை போல உணர்ந்தாள். அவள் கண்களில் மீண்டும் கண்ணீர்.
ஷிவானி : அண்ணா, இதெல்லாம் ரொம்ப ஓவர்.
கீத்து எனக்கு பசிக்கவில்லை என எழுந்தாள். ஆனால் அவளை நகர விடாமல் ரகு கைகள் பிடித்தது.
இங்கே நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போல சப்பாத்தி சாப்பிட்டான் குமார்.
ரகு : நீ உட்காரு..
ரகு : ரெண்டு பேருக்கும் இட்லி வை ஷிவானி..
கீத்து கைகள் அந்த பிளேட் உள்ளே போக மறுத்தது.
ரகு : இந்த வீட்டுல, நீயும் ஒருத்தி கீத்து. உன் புருசனுக்கு என்ன உரிமை இருக்கோ அதே உரிமை உனக்கும் இருக்கு என கீத்து வாயில் இட்லி ஊட்டினான்.
ரகு : கேக்குதா மிஸ்டர் குமார் என சத்தமாக சொன்னான்.
குமார் தன் தம்பி ரகுவை முறைத்தான். குமாரை பார்த்த கீத்து அடுத்து என்ன சொல்வான் என நினைத்து கொஞ்சம் பயந்தாள்.
குமார் : அது என் பொண்டாட்டி, இந்த ஊட்டி விடுற வேண்டாம்.
ரகு : சாப்பிடு டியர் என கெஞ்ச..
குமார் : இந்த கொஞ்சி பேசுற வேலையை இதோட நிறுத்திக்க என கோபத்தில் கத்திவிட்டு மாடியில் இருக்கும் தன் அறைக்கு சென்றான்.
குமார் போட்ட சத்தத்தில் கீத்து மற்றும் ஷிவானி இருவரும் பயந்து போய் விட்டார்கள்.
ரகு : அவன விடு டியர். டென்ஷன் பார்ட்டி.
ஷிவானி : ஆமா, சீக்கிரம் பி.பி. ஏறி சாகப் போறான்.
மூவரும் சிரித்தனர்.
ரகு : நீ சாப்பிடு டியர் என அவளுக்கு மூன்று இட்லிகள் ஊட்டி விட்டான்..
நடந்த சம்பவங்கள் அனைத்தும் வினோதமாக இருந்தாலும் தன் அண்ணனான ரகு மற்றும் கீத்துவை மட்டுமே ஷிவானியால் ஜோடியாக பார்க்க முடிந்தது. ஏற்கனவே அவர்கள் காதல் பற்றி தெரியும். அவர்கள் இருவருடரும் சேர்ந்து நேரங்கள் செலவிட்டுள்ளதால், இப்போது அவர்கள் இருவரும் கொஞ்சுவதையோ இல்லை சாப்பாடு ஊட்டி விடுவதையோ பார்க்கும்போது அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தெரியவில்லை.