Adultery விதியின் வழி
#96
Part 6

 
கீர்த்தியின் உதடு நந்தினியின் கன்னத்தில் பதிந்து இருக்க சில நிமிடங்கள் அப்படியே ஓடின.  திடீரென்று சுயநினைவுக்கு வந்த நந்தினி கீர்த்தியை தள்ளினாள்.  கீர்த்தியும் ஒரு வித பதட்டத்துடன் நந்தினி விட்டு விலகினார்.  இருவரும் ஒருவருக்கு ஒருவர் பார்த்து கொள்ள முடியாமல் தலை குனிந்து சில வினாடி இருந்தனர்.  நந்தினி அங்கே சிதறி இருந்த தன்னுடைய புத்தகங்களை எடுத்து பையில் வைத்து விட்டு நடக்க தொடங்கினாள்.  கீர்த்தியும் எதுவும் பேசாமல் அவளை விட்டு ஒரு 4 அடி தள்ளி நடந்து வந்தார்.  அப்படியே பஸ்ஸில் ஏறிட, இருவரும் வெவ்வெறு இருக்கையில் அமர்ந்து கொண்டனர்.  இருவருக்குள்ளும் ஒரு வித குற்ற உணர்ச்சி இருந்தது.  ஃபிரெண்ட் என்ற நிலையில் இருந்து ஒரு வித உடல் சார்ந்த ஈர்ப்பு ஏற்படுவதை இருவரும் உணர்ந்து கொஞ்சம் பயந்தனர்.
 
பஸ் பயணம் அமைதியாகவே முடிந்தது.  அன்று இரவு நந்தினி கொஞ்சம் கம்மியாகவே சாப்பிட்டு படுக்க சென்றாள்.  இதை கவனித்த உமா "ஏண்டி என்ன ஆச்சு.  எப்போவும் ஏதாவது சொல்லிட்டு இருப்பே.  இன்னைக்கு அமைதியா இருக்க.  காலேஜ் ல ஏதாவது பிரச்சனையா.  எதுவா இருந்தாலும் சொல்லு நம்ம கீர்த்தி சார் இருக்கார் பார்த்துப்பார்"
 
நந்தினி மனசுக்குள் "அவர் தான் ம்மா பிரச்சனையே" என்று நினைத்து கொண்டு "அம்மா அதெல்லாம் ஒன்னும் இல்ல. கொஞ்சம் தலைவலிக்குது. படுக்க போறேன்"
 
சொல்லிவிட்டு நந்தினி படுத்து விட்டாள்.  நந்தினிக்கு தனி ரூம் இருந்தாலும் அவள் எப்போதும் உமாவுடன் தான் படுப்பாள்.  நந்தினி படுத்த சில நிமிடங்களில் உமாவும் வீட்டு வேலையை முடித்து விட்டு அவள் அருகே வந்து படுத்தாள்.
 
மணி பார்த்தால் 8:30 தான் ஆகி இருந்தது.  உமா தன்னுடைய மொபைல் எடுத்து கீர்த்திக்கு டயல் செய்தாள்.  அதை பார்த்த நந்தினி "யாரு க்கு ம்மா போன் பண்ணுறே"
 
"கீர்த்தி சார் க்கு தான்"
 
என்று சொல்லும் போது நந்தினி உடனே எழுந்து அவள் போனை புடுங்கி கட் செய்தாள்.
 
"ஏன் ம்மா அவர் கிட்ட என்ன கேக்க போறே.  எனக்கு உடம்பு சரி இல்லைன்னா புரிஞ்சுக்க மாட்டியா" என்று கொஞ்சம் குரல் உயர்த்தி கத்திட உமாவுக்கு என்ன சொல்ல என்று புரியவில்லை.
 
உமாவின் மிஸ்ட் கால் பார்த்து கீர்த்தி அவளுக்கு போன் செய்திட உமா இப்போது எடுத்து "ஹலோ சார்"
 
"சொல்லுங்க உமா நீங்க தான் கால் பண்ணி இருந்தீங்க"
 
"தெரியாம டயல் பண்ணிட்டேன் சார்"
 
"அப்படியா.. சரி சரி.. வச்சிடுறேன்"
 
"சார் ஒரு சின்ன விஷயம்.  இன்னைக்கு நந்தினி கொஞ்சம் சோர்வா இருக்கா.. காலேஜ் ல ஏதாவது பிரச்சனையான்னு சொல்ல மாட்டேங்குறா.  உங்களுக்கு ஏதாவது தெரியுமா சார்"
 
கீர்த்திக்கு என்ன சொல்ல என்று தினரிட உடனே நந்தினி உமாவிடம் இருந்து போன் புடுங்கி "அம்மா நான் தான் சொல்லுறேன் ல ஒன்னும் இல்லைன்னு"
 
மறுமுனையில் அமைதியாக கேட்டு கொண்டு இருந்த கீர்த்தி அமைதியாக இருந்தார்.  உமா அவள் அப்படி பேசியதில் கொஞ்சம் கோவமாகி ரூம் விட்டு வெளியே சென்றாள்.  அப்போது நந்தினி போன் காதில் வைத்து "ஹலோ சார்"
 
கீர்த்தி உடனே "நந்தினி ஐ ஆம் சாரி" என்று சொல்லி உடனே போன் வைத்தார்.
 
நந்தினி என்ன சொல்ல என்று புரியாமல் போன் வைத்து விட்டு அதை பார்த்து கொண்டே இருந்தாள்.
 
அவள் கண்கள் லேசாக மூடி இருக்க அவள் கன்னத்தில் ஏதோ எறும்பு ஊறுவது போல இருந்தது.  அதை துடைத்து விட்டாள்.  அதையும் தாண்டி ஏதோ குத்துவது போல உணர்ந்தாள்.  அது எறும்பு இல்லை கண்டிப்பாக ஏதோ ஒரு ஆணின் மீசை முடி என்பதை உணர்ந்தாள்.  அந்த மீசை முடி அவளை குத்தி கொண்டே இருக்க இதழ்கள் அவள் கன்னங்களில் அழுத்துவதை உணர்ந்தாள்.  அவள் உடலில் எனோ ஒரு உஷ்னம் பரவுவது போல உணர்ந்தாள்.  அந்த உதடு சிறிது பிரிந்து மீண்டும் அவள் கன்னத்தை வருடியது.  இம்முறை அவள் கன்னங்களில் உதடுகள் அழுத்தி பதிந்தது.  அவள் திடுக்கிட்டு எழுந்து தள்ளினாள்.  அப்போது தான் அவள் உணர்ந்தாள் அது கனவு என்று.
 
--------------------------------------------
 
கதிரும் உமாவும் வழக்கம் போல ஹோட்டலில் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்.  ஒரு நாள் உமா கொஞ்சம் சோகமாக இருந்தாள்.  அப்போது கதிர் வந்து "என்ன ஆண்ட்டி ஏதோ யோசனைல இருக்கீங்க"
 
"ஏய் கதிர் என்ன வேலை செய்யுற இடத்துல ஆண்ட்டி னு கூப்பிடாதேன்னு எத்தனை தடவ சொல்லி இருக்கேன்."
 
"ஐயோ சாரி.. அப்போ எப்படி கூப்பிட"
 
"என்னோட பேர் சொல்லியே கூப்பிடலாமே"
 
"சரி ஆண்ட்டி.. சாரி.. உமா.. சொல்லுங்க.. any ப்ராப்ளேம் "
 
"டேய் இன்னைக்கு காலைல நீ வர்றதுக்கு முன்னாடி அந்த மேனேஜர் என் கிட்ட வந்து நான் மும்பை ல இருக்குற இவுங்க ப்ரான்ச் ல ஒரு ட்ரைனிங் அட்டென்ட் பண்ணிட்டு வரணுமா.. ஒரு வாரம் போகணுமாம்"
 
"அதுல என்ன உமா பிரச்சனை."
 
"தனியா போகணும்.  அதுவும் இல்லாம நந்தினிய விட்டுட்டு போகணும்.  அது தான் என்ன பன்னன்னு தெரியல.  மேனேஜர் புரிஞ்சுக்க மாட்டேங்குறாங்க"
 
"நான் வேணும்னா மேனேஜர் கிட்ட பேசி உங்களுக்கு பதிலா நான் போகட்டுமா"
 
"நல்ல ஐடியா இருக்கு. மேனேஜர் ஒத்துப்பாரா"
 
அப்போ அந்த மேனேஜர் அங்கே வர கதிர் அவர் கிட்ட இதை பத்தி பேசினான்.  அதுக்கு அந்த மேனேஜர் "கதிர் உனக்கு அந்த ட்ரைனிங் தேவை இல்லை.  நீ ஏற்கனவே டிப்ளமோ படிச்சு இருக்கே.  ஆனா உமா படிச்சது இல்லை.  அதுக்கு தான் இந்த 1 வீக் ட்ரைனிங்"
 
கதிர் "சார் அவுங்க தனியா போக பயப்படுறாங்க"
 
மேனேஜர் "சரி நான் ஒன்னு பண்ணுறேன்.  நீயும் அந்த ட்ரைனிங் ஜாயின் பண்ணிக்கோ.  நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து போயிட்டு வந்திடுங்க" சொல்லிவிட்டு மேனேஜர் சென்றுவிட்டார்.
 
கதிர் உமாவிடம் "என்ன மேடம்.. மேனேஜர் கிட்ட பேசியாச்சு.  இப்போ ஓகே தானே"
 
"டேய்.. எனக்கு போகவே புடிக்கல.. நீ என்னடான்னா"
 
"ஆண்ட்டி.. சாரி உமா.. இந்த மாதிரி சான்ஸ் ல மும்பை சுத்தி பாத்துக்கணும்.  நாம தனியா போனா செலவு தான்"
 
"சுத்தி பாக்குற வயசா எனக்கு.  நந்தினி எப்படி மேனேஜ் பண்ணுவான்னு தெரியல"
 
"நந்தினி என்ன சின்ன பொண்ணா"
 
"எனக்கு அவ சின்ன பொண்ணு தான்.  நேத்து கூட என்ன ஆச்சுன்னு தெரியல, காலேஜ் ல வந்ததுல இருந்து ரொம்ப கோவமா இருக்கா"
 
"உமா.. அவ கிட்ட சொல்லு.  கண்டிப்பா வழி கிடைக்கும்"
 
அடுத்த வாரம் மும்பை போக ஹோட்டல் மேனேஜர் டிக்கெட், அக்கோமோடேஷனை அரேஞ் பண்ணி விட்டார்.  அன்று மதியமே எல்லா டீடைல் உமாவுக்கு, கதிருக்கும் கிடைத்தது.
 
--------------------------------------------
 
நந்தினி கீர்த்தி அன்று காலேஜ் இல் பேசிக்கொள்ளவில்லை.  அன்று மதியம் கீர்த்திக்கு கிளாஸ் எதுவும் இல்லை.  அதனால் அவர் சீக்கிரம் காலேஜ் விட்டு கிளம்பினார்.  அப்போது அவர் மொபைல் சிணுங்கியது.  அதில் நந்தினி தான் கால்.  அதை எடுத்த கீர்த்தி
 
"ஹெலோ"
 
"சார்.. உங்க கிட்ட கொஞ்சம் பேசணும். நீங்க ஃபிரியா"
 
"நான் இப்போ தான் காலேஜ் விட்டு கிளம்பினேன் நந்தினி"
 
"ஒரு 2 நிமிஷம் பஸ் ஸ்டாப் ல வெயிட் பண்ணுங்க.  நான் வந்துடுறேன்"
 
சொல்லிவிட்டு நந்தினி ஓடி வந்தாள்.  அவள் ஓடி வருவதை பார்த்து கீர்த்தி ஒரு வித பயம் கொண்டார்.  ஏற்கனவே ஒரு தடவை அரை வாங்கியாச்சு.  இப்போ என்ன நடக்க போகுதோ என்று சுத்தி பார்த்தார்.  பஸ் ஸ்டாப் மதிய வேலை அதனால் கூட்டம் குறைந்து இருந்தது.  நந்தினி அருகில் வந்ததும் அவள் முகத்தில் ஒரு வித மகிழ்ச்சி இருந்தது.  கண்டிப்பாக அவள் கோவத்தில் இல்லை என்று புரிந்து கொண்டு
 
"மெல்ல வரலாம்ல"
 
"உங்கள எப்படியாவது புடிச்சிடணும்னு ஓடி வந்தேன்"
 
"என்ன விஷயம்"
 
"ஹ்ம்ம் செய்யறதை எல்லாம் செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நழுவினா விட்டுடுவாங்களா"
 
கீர்த்தி முகம் சுருங்கியது. "சாரி நந்தினி ஏதோ தெரியாம ஒரு உணர்ச்சில"
 
"தெரியாம தான் எங்க கிளாஸ் 4 ஸ்டுடென்ட்ஸ் க்கு எக்ஸாம் பீஸ் கட்டினீங்களா"
 
கீர்த்திக்கு நந்தினி தன்னை திட்ட வருவாள் என்று நினைத்து அவள் இந்த விஷயம் சொன்னதும் ஒரு வித ஷாக் உணர்ச்சியில் "அது வந்து" என்று உளறினார்.
 
"சார் என்னோட லைப் ல இந்த அளவுக்கு மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்ணுறவங்கள பார்த்தது இல்லை."
 
"நந்தினி இதெல்லாம் ஒரு சின்ன விஷயம்.  பாவம் படிக்குற பசங்க. கஷ்டப்படுறாங்க.  அதனாலே ஹெல்ப் பண்ணேன்"
 
"யாருக்கும் தெரியக்கூடாது ன்னு சொல்லிலே ஹெல்ப் பண்ணி இருக்கீங்க.  எப்படியோ விஷயம் தெரிஞ்சிடுச்சு.  நாங்க ஃபிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து உங்களுக்கு ஒரு சின்ன ட்ரீட் நாளைக்கு வைக்கலாம்னு இருக்கோம்.  அதை சொல்ல தான் ஓடி வந்தேன்"
 
"இப்போ எதுக்கு இதெல்லாம்"
 
"சார் நாளைக்கு கேன்டீன்ல சின்ன பார்ட்டி ஓகேவா"
 
கீர்த்தி சிரித்து விட்டு "சரி சரி.. எனக்கு பஸ் வருது நான் கிளம்புறேன்.  நீ கிளாஸ் முடிச்சிட்டு வீட்டுக்கு போ" என்று பஸ் வருவதை பார்த்து கொண்டு இருந்தார்.
 
கீர்த்தி பஸ் வருவதை பார்த்து கொண்டு இருக்க, நந்தினி கொஞ்சம் அருகில் வந்து "சார் இன்னொரு விஷயம்"
 
கீர்த்திக்கு கொஞ்சம் பயத்தில் பார்க்க நந்தினி தொடர்ந்தாள். "நேத்து கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன்.. அந்த பையன நினைச்சு.  உங்களுக்கு ரொம்ப தேங்க்ஸ் சொல்லணும்னு நினைச்சேன்.  ஆனா ஏதோ ஒரு உணர்ச்சில உங்கள கட்டி புடிச்சுட்டேன்.  அந்த நேரத்துல ஒரு ஆறுதல் தேவை பட்டது.  எனக்கு என்னவோ ஒரு அப்பாவா உங்கள நினைச்சுட்டேன்.  என்னோட அப்பா இருந்தா கூட இந்த மாதிரி என்ன அரவணைச்சு இருப்பாங்களான்னு தெரியல.  ஆனா நீங்க உண்மைல கிரேட்"
 
கீர்த்தி மனதில் சுருக்கென்று ஏறியது.  தன்னை அப்பா மாதிரி நினைக்குற பொண்ணு கிட்ட தான் ஒரு மாதிரி பார்த்ததை நினைத்து வருந்தினார்.  அப்படியே எதுவும் பேசாமல் இருந்தார்.
 
நந்தினி தொடர்ந்தாள்.. "சார் நேத்து தான் ஒரு ஆணோட முத்தம் எப்படின்னு தெரிஞ்சுது.  நீங்க என்ன அரவணைத்து கொடுத்த முத்தம் ஒரு ஸ்டராங் டோஸ் மாதிரி இருந்தது.  எனக்கு என்ன சொல்லன்னு தெரியல"
 
கீர்த்தி "நந்தினி ஐ அம் சோ சாரி.. என்ன இருந்தாலும் உன்னோட அனுமதி இல்லாம.."
 
"சார் இருக்கட்டும் சார்.  நான் தப்பா நினைக்கல.  நீங்க சந்தோஷமா இருங்க.. நான் கிளம்புறேன்"
 
அவள் சொன்ன அடுத்த நொடி பஸ் வந்தது.  கீர்த்தி அவளை பார்த்து கொண்டே பஸ் ஏறினார்.
Like Reply


Messages In This Thread
விதியின் வழி - by Aisshu - 14-08-2023, 04:01 PM
RE: விதியின் வழி - by Bigil - 08-09-2023, 08:38 PM
RE: விதியின் வழி - by M boy - 12-09-2023, 01:34 PM
RE: விதியின் வழி - by M boy - 17-09-2023, 04:43 AM
RE: விதியின் வழி - by M boy - 08-10-2023, 11:37 PM
RE: விதியின் வழி - by Aisshu - 13-12-2023, 03:15 PM
RE: விதியின் வழி - by M boy - 29-12-2023, 04:33 PM
RE: விதியின் வழி - by Bigil - 02-01-2024, 08:04 PM



Users browsing this thread: 8 Guest(s)