Fantasy ⭐♥️காற்றாய் வந்த காத்தவராயனின் ◉⁠‿⁠◉ மோகதாபம்♥️⭐
#70
பாகம் -6

தோழிகள் இளவரசியை தேடி கொண்டு உள்ளே வரவும் காத்தவராயன் தப்பித்து வெளியே ஓடி விட்டான்.

நல்ல வேளை இருட்டில் நின்று இருந்ததால் மதிவதனி முகத்தை அவர்களால் கவனிக்க முடியவில்லை.

மதிவதனி அவசரமாக உதட்டில் ஒட்டி இருந்த அவன் எச்சிலை அவசரமாக தன் துணியில் துடைத்தாள்.

"இளவரசி ஏன் இங்கே தனியா நிக்கறிங்க?"தோழிகள் கேட்டனர்.

"இல்ல இங்கே யாரோ நடமாடும் சத்தம் கேட்டது,அது என்னவென்று பார்க்க தான் வந்தேன்.வரும் வழியில் கையில் இருந்த தீப்பந்தம் தவறி கீழே விழுந்து அணைந்து விட்டது." என்று மதிவதனி ஒருவழியாக சமாளித்தாள்.

மதிவதனி மேலே சென்றவுடன்,ரகசிய சுரங்கப்பாதையின் மறுபக்கத்தில் யாராவது நடமாடுகிறார்களா?என்று பார்த்து வர ஆட்களை அனுப்பினாள்.போன காவலாளி வந்து சொன்ன தகவலில் ஏமாற்றமே மிஞ்சியது.

"சரி,அங்கே எப்பவும் ஆட்களை காவலுக்கு போடு.சந்தேகப்படும்படி யார் வந்தாலும் உடனே அவனை கைது செய்து என் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்து "என்று அவனுக்கு ஆணையிட்டாள்.

"உத்தரவு தேவி" என அவனும் விடைபெற்றான்.

காத்தவராயனுக்கு இருப்பு கொள்ளவில்லை.

என்ன சுவையாக இருந்தன அவள் உதடுகள்,தேனும்,முக்கனியும் சேர்ந்து கொடுக்கும் சுவையை விட  தித்தித்தனவே அவள் இரு உதடுகள்.வெளிப்புறம் இருக்கும் உதடுகளே இவ்வளவு சுவை இருக்கும் என்றால் அவள் இரு தொடைகளுக்கு இடையே மறைக்கப்பட்டு பாதுகாக்கபட்டு இருக்கும் கீழ் இதழ்கள் எவ்வளவு சுவை இருக்கும்?என அவன் நாவில் எச்சில் ஊறியது.

இங்கே கொஞ்சம் அவசரப்பட்டாலும்,எல்லாமே பாழாகி விடும் என அவன் மனசு எச்சரித்தது.

வேடசந்தன் வீட்டுக்கு காத்தவராயன் சென்றான்.

என்ன நண்பா,ரொம்ப நேரம் ஆளையே காணோம்..?

காத்தவராயன் அதற்கு,கொஞ்சம் நீராடி விட்டு வரலாம் என்று சென்றேன் வேடசந்தா..!ஆனால் உங்கள் நாட்டின் பொன்முகலி ஆற்றில் குளிக்க ஆரம்பித்த உடன் ஏனோ வெளியே வரவே விருப்பம் இல்லை.அதனால் வர தாமதம் ஆகி விட்டது.!அதுவும் உங்கள் நாட்டு ஆற்றின் நீர் என்ன சுவை..!தேவலோகத்தில் உள்ள அமிர்தம் கூட உங்கள் ஆற்றின் சுவைக்கு ஈடாகாது என்று மதிவதனியின் உதடுகளை நினைத்து சொன்னான்.

அதற்கு வேடசந்தன் புரியாமல்,"என்ன நண்பா,நானும் தான் தினமும் இந்த ஆற்றின் நீரை தான் குடிக்கிறேன்.ஆனால் எனக்கு அப்படி ஒன்றும் தோன்றவில்லையே."

உங்கள் ஆற்றிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரு ஊற்று உள்ளது நண்பா,அந்த நீரை தான் நான் சொன்னேன்.சரி நாம் கோட்டைக்குள் போகலாமா?என்று கேட்டான்.

"வா போகலாம்" என்று வேடசந்தன் அவனை அழைத்து சென்றான்.

முதலில் கோட்டையில் உள்ள கோவிலுக்கு அழைத்து சென்றான்.கோட்டைக்குள் உள்ளே செல்லும் போது பிரமாண்டமான அகழியை கடந்து செல்ல வேண்டி இருந்தது.அகழியின் ஓரத்தில் தன் வாயை பிளந்து கொண்டு கோரை பற்களை காட்டி ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் முதலைகளை பார்க்க நேர்ந்தது. வேடசந்தன் தினமும் வரும் நபர் ஆதலால் காவலாளிகள் கோட்டையில் உள்ளே செல்ல எளிதில் அனுமதி தந்தனர்.புலவர்கள்,மக்கள் அனைவரும் இன்னும் அனுமதிக்காக ஓரமாக காத்து இருந்தனர்.காத்தவராயன் கோட்டையின் உயரமான மதிற்சுவர்களையும்,பெரிய வாயிற் கதவுகளையும் பார்த்து வியந்து கொண்டே சென்றான்.பத்து யானைகள் ஒரு சேர வந்து முட்டினாலும் இந்த வாயிற்கதவை உடைக்க முடியாது என அவனுக்கு தெரிந்தது.அங்கங்கே காவலுக்கு இருக்கும் படை வீரர்களையும் கணக்கிட்டு கொண்டே செல்ல ஒன்று மட்டும் அவனுக்கு தெளிவாக தெரிந்தது.கண்டிப்பாக கோட்டையில் இருக்கும் வரை மதிவதனியை கவர்ந்து செல்ல முடியாது.ஏதாவது தந்திரம் செய்து அவளை வெளியே வர வைத்தால் மட்டுமே நாம் நினைத்தது நடக்கும் என அவனுக்கு புரிந்தது..

என்ன வேடசந்தா ,இன்னிக்கு பார்த்து இவ்வளவு நேரம் ஆயிடுச்சு.?பூசாரி அவன் கையில் இருந்த பூக்களை வாங்கி கொண்டே கேட்டார்.

"ஏன் பூசாரி சற்று தானே தாமதம் ஆகியிருக்கு.இன்னிக்கு என்ன இவ்வளவு பரபரப்பாக இருக்கீங்க?"

இளவரசி இன்று இறைவனை தரிசிக்க நம் கோவிலுக்கு வருகிறார்கள் வேடசந்தா,எந்நேரமும் அவர்கள் இங்கே பிரவேசிக்க கூடும் என்று சொல்லி கொண்டே அலங்காரம் செய்ய அவசரமாக கருவறைக்குள் நுழைந்தார்.

அதை கேட்டு காத்தவராயன் மிகவும் குதூகலம் அடைந்தான்.ஆகா அவளை மீண்டும் எப்படி நேரில் தேடி செல்வது  என்று நினைத்தோம்.?ஆனால் அவளே நேரில் இங்கு வருகிறாள் என நினைத்தான்.

கொஞ்ச நேரத்தில் ரதத்தில் படை வீரர்கள் புடைசூழ மதிவதனி வந்து சேர,அவள் அழகில் மெய்மறந்து காத்தவராயன் எச்சில் வடிய பார்த்து கொண்டு  நின்று இருந்தான்.

காவலாளிகள் வழியில் இருந்த அனைவரையும் அப்புறப்படுத்தி கொண்டே வந்தனர்.நின்று கொண்டு இருந்த காத்தவராயனையும் பிடித்து தள்ளினர்.

இதில் காத்தவராயனும் கோபம் அடைந்து பிடித்து தள்ளிய வீரன் மேல் பாய்ந்தான்.இருவரும் வாளை உருவி கொண்டு சண்டை போட்டனர்.உடனே காத்தவராயனை பத்து,பதினைந்து வீரர்கள் சூழ்ந்து கொண்டே தாக்க தொடங்கினர்.

அனைவரிடமும் வீராவேசமாக சண்டை போட்டாலும் காவலாளிகள் எண்ணிக்கை அதிகமாக அதிகமாக காத்தவராயன் மடக்கி பிடிக்க பட்டான்.

சென்று கொண்டு இருந்த இளவரசியை பார்த்து "அபயம் இளவரசி அபயம்"என்று காத்தவராயன் கூக்குரலிட மதிவதனி திரும்பி பார்த்தாள்.

அங்கே வந்த மதிவதனி,"என்ன இங்கே கலாட்டா"என்று கேட்க

நம் வீரனை இவன் தாக்கினான் என்று அங்கு இருந்த காவலாளிகள் சொல்ல,

ஒரு கிழவனிடம் சண்டை செய்ய இத்தனை பேரா? நல்ல வீரர்கள் தான் என்று கிண்டல் செய்தாள்.

வந்து இருந்த புதியவனை பார்த்து,"யார் நீ?உன்னை பார்த்தால் இந்த நாட்டில் உள்ளவனை போல் தெரியவில்லையே?உன்னிடம் எப்படி வாள் வந்தது?"என அதிகாரத்துடன் மதிவதனி கேட்க,

தேவி,நான் நாடு நாடாக வியாபாரம் செய்யும் யாத்ரீகன்.என்னுடைய பொருட்களின் பாதுகாப்பிற்காக எப்பொழுதும் வாள் வைத்து இருப்பது வழக்கம்.உங்களிடம் நான் கொண்டு வந்த விலை உயர்ந்த நவரத்தினங்களை விற்பதற்காக நின்று கொண்டு இருந்தேன்.ஆனால் உங்கள் வீரர்கள் அமைதியாக நின்று கொண்டு இருந்த என்னை பிடித்து தள்ளி சண்டை செய்தார்கள்.அதனால் என் பாதுகாப்பிற்காக நானும் சண்டை செய்ய வேண்டியதாகி விட்டது.

"அவரை விடுவியுங்கள்"என்று மதிவதனி கூறியவுடன் காவலாளிகள் அவனிடம் இருந்து அகன்றனர்.

"எங்கே நீ கொண்டு ரத்தினங்களை காண்பி"என்று மதிவதனி கேட்க,

காத்தவராயன் தான் கொண்டு வந்த நவரத்தினங்களை சுருக்கு பையில் இருந்து எடுத்தான்.

அதை பார்த்து மதிவதனி கண்கள் ஆசையில்  அகல விரிந்தது.

"அருமை, உன்னோட ரத்தினங்கள் எல்லாம் அற்புதமாக ஜொலிக்கின்றன. எங்கு இருந்து இதை கொண்டு வந்தாய்" என்று கேட்க,

தேவி,இதில் சில ரத்தினங்கள் கடல் கடந்து அந்நிய தேசத்தில் இருந்து தருவிக்கபட்டவை.இதில் நீல நிற வைரம் மட்டும் மாயமலையில் இருந்து வாங்கி வந்தேன்.

என்னது மாயமலையா?அங்கு தான் யாரும் உள்ளே செல்ல முடியாதே"என்று அவள் வியப்பாக கேட்டாள்.

"என் ஒருவனுக்கு மட்டுமே அங்கு அனுமதி தேவி,மேலும் அங்கு ஒரு வைர சுரங்கமே இருக்கிறது.அதில் நான் கொண்டு வந்த வைரத்தை விட இன்னும் உயர்தர வைரங்கள் கிடைக்கின்றன.ஆனால் அவர்கள் அந்த வைரங்களை வெளியில் விற்பது இல்லை."

ஏன் ?என மதிவதனி கேட்க,

அந்த மாதிரி உயர்ந்த ஜாதி வைரங்களை அந்த நாட்டு மக்கள் மட்டுமே அனுபவிக்க வேண்டுமாம்.அதனால் இரண்டாம் தர வைரங்களை மட்டுமே விற்கிறார்கள்.யாராவது படை எடுத்து அந்நாட்டு மன்னனை வெற்றி கொண்டால் மட்டுமே அந்த வைரங்களை அடைய முடியும்.ஆனால் அந்நாட்டு மன்னன் காத்தவராயனை இதுவரை யாருமே வெற்றி கொண்டது இல்லை.

என்ன உளறுகிறாய் ? சிறிது நாட்களுக்கு முன் தான் அவன் படையை நான் வெற்றி கொண்டு அவன் மகனை கொன்றேன்.?தெரியாதா உனக்கு?

எனக்கு தெரியும் தேவி,ஆனால் இன்னும் அவன் நாடு காத்தவராயன் வசம் தானே உள்ளது.நீங்கள் அவன் இடத்தில் சென்று நாட்டை கைப்பற்றினால் தானே முழு வெற்றியாகும்.?மேலும்  உங்களுக்கு காத்தவராயனை பற்றி தெரியவில்லை?அவன் மார்பில் போரில் ஏற்பட்ட காயங்களின் வடு மட்டும் 72.ஆனால் உங்கள் மேனியில் ஒரு காயம் ஏற்பட்டதற்கான ஒரு சிறு காயம் கூட இல்லை.அவன் தன் படையை முன் நின்று போர் செய்பவன்.ஆனால் தாங்கள் படைக்கு பின்னால் இருந்து பாதுகாப்பாக போர் செய்பவர் என கூறி அவள் தன்மானத்தை சீண்டினான்.

மதிவதனி முகம் கோபத்தால் சிவந்தது.

"என்ன வார்த்தை கூறினாய்?"என்று அவள் வாளை எடுக்க,

"பொறுங்கள் தேவி,நான் உண்மையை தானே சொன்னேன். ஒரு சாதாரண கிழட்டு வியாபாரி என்னிடம் உங்கள் வீரத்தை காட்ட வேண்டாம்.சென்று உங்கள் வீரத்தை அந்த காத்தவராயனிடம் காண்பித்து அவனை வெற்றி கொண்டால் என்னிடம் உள்ள மொத்த ரத்தினங்களை உங்களிடமே எந்த வித காசும் வாங்காமல் கொடுத்து விடுகிறேன்" என்று அவன் சொல்ல மதிவதனி அமைதி ஆனாள்.

"கூடிய விரைவில் அந்த காத்தவராயனை போரில் கொன்று விட்டு உன்னை சந்திக்கிறேன் வியாபாரி" என மதிவதனி கூற,

"சரி "என அவனும் விடை பெற்றான்.

அடுத்து காத்தவராயன் செய்த செயல் மதிவதனியை மாயமலையை நோக்கி படை எடுக்க செய்தது.அது என்ன?

நண்பர்களே,நேற்று ஒரு "நினைவோ ஒரு பறவை" போல ஒரு காதல்கதை கரு கிடைத்தது.உடனே எழுத வேண்டும் என்று என் மனதை உந்தி தள்ளியது.ஆனால் இந்த கதையை எழுத தொடங்கி விட்டபடியால் இதை விட்டு அதை எழுத தோன்றவில்லை.இந்த கதை முடித்த பிறகு அதை எழுத தொடங்க வேண்டும்.கதையின் பெயர் "உயிராக வந்த உறவே" என்று வைக்கலாம் என்று இருக்கிறேன்.நாயகி பெயர் தாரிணி.நாயகன் பெயர் சிவா.நினைவோ ஒரு பறவையில் வரும் ராஜா ,சஞ்சனா கேரக்டரை ஒரு guest ரோலாக பயன்படுத்தலாம் என்று நினைக்கிறேன்.

[Image: images-75.jpg]
My thread


காத்தவராயனின் மோகதாபம்

https://xossipy.com/thread-57993.html

3 Roses ஸ்ருதி(அசின்) மது(காஜல்)அனிதா(ஜெனிலியா)

https://xossipy.com/thread-52019.html

Like Reply


Messages In This Thread
RE: காற்றாய் வந்த அசுரனின் வேட்டை♥️♥️♥️ - by snegithan - 04-10-2023, 09:50 PM



Users browsing this thread: 10 Guest(s)