Non-erotic பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert)
#23
(18-08-2023, 09:32 AM)Thiru93x Wrote:
நீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. யாராலும் மறுக்க முடியாது. மாறி வரும் இந்த இயந்திர உலகத்தில் பொறுமை என்பதே இப்போது கிடையாது. 


அந்த காலத்தில் செக்ஸ் புத்தகங்கள் அவ்வளவு எளிதாக கிடைத்து விடாது. அதற்கான புத்தக கடை எது என்பதே பலருக்கு தெரியாது. அதற்க்கு பின் பிட்டு பட வீசிடி வந்தது. அதை வாங்க அவ்வளவு யோசித்து யாரும் இல்லாத நேரமாக கடைக்குள் போய் அதை கூச்சப்படாமல் கேட்டு வாங்க வேண்டும். வாங்கும் போது கடைக்காரன் ஏற இறங்க பார்ப்பான். வீட்டில் யாரும் இல்லாத போது கேசட் போட்டு பார்க்க முடியும். பார்க்கும் போது கரண்டு கட் ஆனால் இன்னும் படபடப்பு ஆகி விடும். வீட்டில்  மாட்டி விடுவோமே அசிங்கமாய் போய் விடுமே என்று பயம் இருக்கும் அன்று எந்த வேலையும் நடக்காது.

ஆனால் இப்போது அப்படி இல்லை. மொத்த உலகமும் போனில் அடங்கி விட்டது.

கதை படிப்பதில் 80% பேர்கள் 90ஸ் & அதற்கு முன் பிறந்தவர்கள் தான். இந்த காலத்தில் பாதிபேருக்கு தமிழ் எழுத்துக்கள் படிக்கவே தெரிவது இல்லை. 

என்னை பொறுத்தவரை, கதை எழுதுவதால் எழுத்தாளருக்கு பொருளாதார அடிப்படையில் எதுவும் கிடைப்பது இல்லை தான். ஆனால், கதை எழுதும் போது வருகிற கற்பனை திறன்,  மனநிறைவு, எழுதும் கதபாத்திரமாக தன்னை தானே நினைத்து பிடித்தபடி எழுதிக் கொள்ளுவது, மற்றும் தன் கதையின் கதாபாத்திரங்களை உண்மையான மனிதர்களாக நினைத்து அவர்களை படைப்பது என்று எக்கச்சக்கமான சின்ன சின்ன சந்தோஷம் உண்டு.

இவையே ஒரு நல்ல எழுத்தாளருக்கு மனநிறைவை தரும் என்று நம்புகிறேன். மத்தபடி கமெண்ட் லைக் கேட்பது எல்லாம் வாசகர்கள் பார்வையில் அந்த கதாபாத்திரங்கள் எழுத்தாளரின் கற்பனை படியே அமைகிறதா என்று உறுதி படுத்தி கொள்ள தான்.

இங்கு கதை எழுத வந்து ஒன்றை புரிந்து கொண்டேன் நண்பா,comments and views என்று எதிர்பார்த்து கதை எழுதினால் விரக்தி அடைந்து நிச்சயம் பாதியில் தான் நிறுத்த வேண்டி வரும்.ஏனெனில் நீங்கள் ஒன்றை கவனித்தால் புரியும்.நம் தமிழ் தளத்தில் login செய்து படிக்கும் வாசகர்களை விட login செய்யாமல் படிக்கும் வாசகர்கள் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்.login செய்து படிக்கும் வாசகர்கள் கூட பெரும்பாலும் கருத்து சொல்வதில்லை.நானும் விமர்சனங்களை எதிர்பார்த்து பலமுறை ஏங்கி இருக்கிறேன்.குறைந்தபட்சம் நீங்கள் எழுதுவதில் இந்த பகுதியை இப்படி கொண்டு போய் இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும் என நேர்மறையான விமர்சனங்களைப் முன் வைக்கலாம்.நான் இது வரை 3 கதைகளை எழுதி இருக்கிறேன்.முதல் கதை எழுதும் போது மட்டும் comment கேட்டு கேட்டு அலுத்து போய் இப்போ என் பொழுது போக்கிற்காக மட்டுமே எழுதுகிறேன்.அதில் ஒரு குறிப்பிட்ட வாசகர் krishkj வழக்கம் போல் ஆரோக்கியமான விமர்சனத்தை முன் வைப்பார்.இப்பொழுது நான் எழுதும் "நினைவோ ஒரு பறவை"கதையில் யாரிடமும் comment தொந்தரவு செய்வது இல்லை.ஓரளவு ஆரோக்கியமான comment கிடைக்கிறது அதில் சில பெண் வாசகர்களும் அடங்கும்அதுவும் என் கதையில் காமம் குறைவு என்பதால் படிக்கும் வாசகர்களும் குறைவு தான்.கதையில் தான் காமம் வருமாறு வடிவமைப்பேன்.என்னால் முடிந்த அளவு தினமும் update கொடுக்கிறேன்.ஆனால் அதற்கே எனக்கு 2 அல்லது 3 மணி நேரம் தேவைப்படுகிறது.இதனால் மற்றவர்கள் எழுதும் ஸ்டோரியை கூட படிக்க நேரம் கிடைப்பது இல்லை.இந்த திரியை பார்த்த பிறகு ஒன்றை புரிந்து கொண்டேன்.எழுதும் நேரத்தை குறைத்து கொண்டு மற்றவர்கள் கதையையும் படித்து comment போட வேண்டும் என்று.நன்றி
Like Reply


Messages In This Thread
RE: பெண்கள் & வாசகர்கள் கவனத்திற்கு...(Alert) - by Geneliarasigan - 18-08-2023, 12:36 PM



Users browsing this thread: 1 Guest(s)