18-04-2023, 07:02 AM
(This post was last modified: 18-04-2023, 07:04 AM by RARAA. Edited 1 time in total. Edited 1 time in total.)
(16-04-2023, 11:02 PM)Reader 2.0 Wrote: இந்த கதையின் ஏதாவது ஒரு கட்டத்தில் நீங்கள் கோட்டை விட்டு விடுவீர்கள்... உங்களை ஒரு முறையாவது திட்ட வேண்டும் என்பதற்காக கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடினாலும்... குற்றம் தவறு என்று எதையும் கண்டுபிடிக்க முடியவில்லையே..
உண்மை மட்டும் தான் சொல்ல வேண்டும் என்றால், ஒவ்வொரு அத்தியாயம் முழுவதும் படித்துப் பார்த்து விட்ட பிறகு வேறு எந்த வேலையும் செய்ய முடியாத அளவுக்கு அப்படியே பிரமித்துப் போய் அப்படியே உட்கார வைத்து விடுகிறீர்கள்..
இப்போது கூட அப்படித்தான் பிரமை பிடித்து பேச முடியாமல் இருக்கிறது... பிரமிப்பு நீங்கிய பிறகு அல்லது பிரமிப்பு கொஞ்சம் குறைந்த பிறகு தான் கமெண்ட் போட வேண்டும்...
நன்றி
உங்களுடைய கமெண்டிற்கு எப்போதும் நான் மதிப்பளிப்பேன்.
ஏனெனில் அதனில் பொதுவாக இல்லாமல் கதையை விமர்சனம் செய்து எழுதுவீர்கள். பிடித்தது பிடிக்காதது என்று.
நீங்கள் குறை சொல்லாத அளவிற்கு எழுதியதில் எனக்கு மிக சந்தோஷம்.
அடுத்தடுத்த அப்டேட்களும் இவ்வாறே இருக்குமென நம்புகிறேன்
நன்றி
RARAA