04-03-2023, 05:00 AM
(This post was last modified: 04-03-2023, 07:04 AM by தமிழ் சுகம். Edited 1 time in total. Edited 1 time in total.)
இந்த பதிவுகளில் insta, சீரியல், சினி actress பற்றி பேசிய எவனும் உண்மை பேசவில்லை, அதை பற்றி கவலை இல்லை. உங்களின் வீணான, வெத்துவேட்டு கனவுகளை பற்றி யாருக்கும் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மற்றவர்களை பற்றி தவறான தகவல்களை பரப்புவது தவறு. இங்கிலீஷில் எழுதினாலும் தமிழில் எழுதினாலும் எந்த மொழியில் எழுதினாலும் அவதூறு அவதூறே. கால் காசுக்கு மதிப்பில்லாத இது போன்ற டேஷ்கள் உண்மையில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள். ஏற்று கொள்ள முடியாவிட்டாலும் இதுதான் நிதர்சனம். சைபர் கிரைம் இப்போது தமிழ்நாட்டில் மிகவும் ஆக்ட்டிவ் ஆக உள்ளது. இந்தியா முழுக்கவே ஹெல்ப் லைன் கொடுத்து இருக்கிறார்கள். ஆன்லைனில் புகார் கொடுத்து விட்டு அமைதியாக இருக்கலாம். அதன் பிறகு அவர்கள் பார்த்து கொள்வார்கள். இந்த தளத்தில் ஏராளமான கற்பனை கதைகள் உள்ளன. அது மாதிரி படித்து விட்டு போங்கள். அதை விட்டு விட்டு இந்த மாதிரி உளறி கொண்டு இருந்தால்...சட்டையை கிழித்து கொண்டு ரோட்டில் அலைந்தால்தான் பைத்தியம் என்று அர்த்தம் அல்ல!!! மற்றவர்களை தவறாக சித்தரிப்பது, பொய் சொல்லி கொண்டு திரிவது...அதை மற்றவர்கள் நம்புவதாக நினைத்து கற்பனையில் வாழ்வதும் மன நோய்தான்.