28-05-2019, 10:17 AM
ஊட்டியில் மிஸ் செய்யக்கூடாத கேர்ன்ஹில்... இயற்கையின் செல்லத் தொட்டில்!
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளம் கவர்ந்த இடமாக மாறிவருகிறது கேர்ன்ஹில் வனப்பகுதி. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகச் சுற்றிப்பார்க்கும் இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது இது. ஊட்டி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 3 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது.
![[Image: 158433_thumb.jpg]](https://image.vikatan.com/news/2019/05/images/1088X550/158433_thumb.jpg)
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், படகு சவாரி, மலை ரயில் எனப் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்து காணப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் வனங்களையும், வன விலங்குகளையும் காணவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி வனங்களைக் காண ஆர்வமுடன் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி, தொட்டபெட்டா, சிங்கார, பகல்கோடுமந்து உள்ளிட்ட இடங்கள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடிகளைக் கொண்டு சூழல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சூழலியல் சுற்றுலா இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் உள்ளம் கவர்ந்த இடமாக மாறி வருகிறது கேர்ன்ஹில் வனப்பகுதி. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகச் சுற்றிப்பார்க்கும் இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது இந்த வனப்பகுதி.
[color][font]
ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது கேர்ன்ஹில். சிறிய வாகனம் மட்டுமே செல்லக்கூடிய, இரு மருங்கிலும் மரங்கள் அடர்ந்த ஒரு குறுகிய சாலையில், சிறிது தூரம் சென்றால் அடர்ந்த காட்டுக்குள் வனத்துறைச் செயல் விளக்கக் கட்டடம் ஒன்று உள்ளது. அதன் அருகிலேயே டிக்கெட் கவுன்டர். பெரியவர்களுக்கு ரூ.20-ம் சிறியவர்களுக்கு, ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்த இந்த வனப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தோடர் பழங்குடி மக்களின் பாரம்பர்ய வளைவுக் குடில், இரட்டைக் கட்டடம் ஆகியவை இங்கே உள்ளன. உள்ளே இருக்கும் விளக்க மையத்தில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீலகிரி அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் எனக் கலைநயத்தோடு தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியின் மாதிரி, பாறைச் சரிவில் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, சிறுத்தை, நீலகிரி கருமந்தி போன்றவற்றின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
[/font][/color]
[color][font]
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரியின் உருவான வரலாறு போன்ற தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நீலகிரிக்கே உரித்தான ஓரிட வாழ்விகள், பறவைகள், வன விலங்குகளின் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் உள்ளது. இங்குள்ள வனத்தில் சிறுத்தை, மான், காட்டெருமை, அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சிக் கோபுரத்திலிருந்து இயற்கை காட்சிகளைப் பார்வையிடலாம். சிறப்பம்சமாக, ராட்சத மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நடந்துசென்று பார்த்து மகிழ்வது வழக்கம். கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்துசெல்கின்றனர்.
[/font][/color]
[color][font]
வனத்துறையால் நடத்தப்படும் காட்டுமாடு மற்றும் புலி என்ற பெயரில் இரு தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும் அரிய வகை ஆர்க்கிட் மலர்களைக் காக்க பசுமைக் குடில் அமைக்கப்பட்டு பழவகைகளில் ஆர்க்கிட்கள் வளர்க்கப்படுகின்றன. பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தோடர் பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில் தோடர் எம்ராய்டரி சால்வை, தேன், சாக்லேட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இயற்கையின் செல்லத்தொட்டில் போன்ற இந்த இடம், காடுகளைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவத்தைத் தருகிறது.
[/font][/color]
[color][font]
இயற்கை எழில் கொஞ்சும் கேர்ன்ஹில் வனப்பகுதியைக் கண்டு ரசிக்க வந்த வேலூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பானுமதி கூறுகையில், ``கோடை விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் ஊட்டி வந்தோம். வந்த இடத்தில் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இங்கே வந்து பார்த்தோம். இந்த இடத்தின் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஊட்டி நகருக்கு அருகில் இப்படி ஒரு பகுதி இருப்பதே அதிகம் யாருக்கும் தெரிவதில்லை. ஆதிகாலத்துக்குத் திரும்பியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அடுத்த முறையும் இதே இடத்துக்கு வரவேண்டும் போல உள்ளது” எனச் சிலாகித்தார்.
[/font][/color]
[color][font]
வனத்துறையினர் கூறுகையில் ``சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சமீபத்தில் இதைச் சீரமைத்துள்ளோம். சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முறையான சோதனைக்குப் பின்னரே பயணிகளை அனுமதிக்கின்றோம், சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் பொருள்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சிக் காலங்களில் மட்டும் நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை. பாதுகாப்புடன் பார்த்து ரசித்துச் செல்ல வனத்துறை உதவும்” என்றனர்.[/font][/color]
ஊட்டியில் சுற்றுலாப் பயணிகளின் உள்ளம் கவர்ந்த இடமாக மாறிவருகிறது கேர்ன்ஹில் வனப்பகுதி. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகச் சுற்றிப்பார்க்கும் இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது இது. ஊட்டி மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து வெறும் 3 கி.மீ தூரத்தில் இருக்கிறது இது.
![[Image: 158433_thumb.jpg]](https://image.vikatan.com/news/2019/05/images/1088X550/158433_thumb.jpg)
இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரியில் சுற்றுலாப் பயணிகளைக் கவர பூங்காக்கள், பொழுதுபோக்கு அம்சங்கள், படகு சவாரி, மலை ரயில் எனப் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்து காணப்பட்டாலும், சுற்றுலாப் பயணிகள் வனங்களையும், வன விலங்குகளையும் காணவே அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். இப்படி வனங்களைக் காண ஆர்வமுடன் வரும் சுற்றுலாப் பயணிகளை வரவேற்க முதுமலை புலிகள் காப்பகம், அவலாஞ்சி, தொட்டபெட்டா, சிங்கார, பகல்கோடுமந்து உள்ளிட்ட இடங்கள் வனத்துறை சார்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. உள்ளூர் மக்கள் மற்றும் பழங்குடிகளைக் கொண்டு சூழல் மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு அதன் மூலம் சூழலியல் சுற்றுலா இங்கு நடத்தப்பட்டு வருகிறது. இந்தப் பட்டியலில் தற்போது சுற்றுலாப் பயணிகளின் உள்ளம் கவர்ந்த இடமாக மாறி வருகிறது கேர்ன்ஹில் வனப்பகுதி. ஊட்டி வரும் சுற்றுலாப் பயணிகள் வழக்கமாகச் சுற்றிப்பார்க்கும் இடங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்ட ஓர் இடமாக உள்ளது இந்த வனப்பகுதி.
ஊட்டி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து எமரால்டு செல்லும் சாலையில் 3 கி.மீ. தொலைவில் நம்மை வரவேற்கக் காத்திருக்கிறது கேர்ன்ஹில். சிறிய வாகனம் மட்டுமே செல்லக்கூடிய, இரு மருங்கிலும் மரங்கள் அடர்ந்த ஒரு குறுகிய சாலையில், சிறிது தூரம் சென்றால் அடர்ந்த காட்டுக்குள் வனத்துறைச் செயல் விளக்கக் கட்டடம் ஒன்று உள்ளது. அதன் அருகிலேயே டிக்கெட் கவுன்டர். பெரியவர்களுக்கு ரூ.20-ம் சிறியவர்களுக்கு, ரூ.10-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைந்த இந்த வனப்பகுதி நீலகிரி கோட்ட வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. தோடர் பழங்குடி மக்களின் பாரம்பர்ய வளைவுக் குடில், இரட்டைக் கட்டடம் ஆகியவை இங்கே உள்ளன. உள்ளே இருக்கும் விளக்க மையத்தில் முந்நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்த நீலகிரி அப்படியே வடிவமைக்கப்பட்டுள்ளது. பல லட்சம் ஆண்டுகள் பரிணாமத்தில் உருவான சோலை மரக்காடுகள், புல்வெளிகள், மலைத்தொடர்கள் எனக் கலைநயத்தோடு தத்ரூபமாகக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வனப்பகுதியின் மாதிரி, பாறைச் சரிவில் மாநில விலங்கான நீலகிரி வரையாடு, சிறுத்தை, நீலகிரி கருமந்தி போன்றவற்றின் உருவங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
[/font][/color]
நீலகிரி மாவட்டத்தில் வசிக்கக்கூடிய பழங்குடியின மக்களின் வரலாறு குறித்த புகைப்படங்கள், நவீன நீலகிரியின் உருவான வரலாறு போன்ற தகவல்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. நீலகிரிக்கே உரித்தான ஓரிட வாழ்விகள், பறவைகள், வன விலங்குகளின் ஒலிகள் அடங்கிய தொகுப்பும் உள்ளது. இங்குள்ள வனத்தில் சிறுத்தை, மான், காட்டெருமை, அணில், புலி உள்ளிட்ட வன விலங்குகளின் மாதிரி உருவங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த வனத்திற்கு நடுவே சுற்றுலாப் பயணிகள் நடைப்பயணம் மேற்கொள்ளும் வசதியும் உள்ளது. நடைப்பயணமாகச் சென்று வனத்தின் நடுவே உள்ள காட்சிக் கோபுரத்திலிருந்து இயற்கை காட்சிகளைப் பார்வையிடலாம். சிறப்பம்சமாக, ராட்சத மரங்களுக்கு நடுவே தொங்கும் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் சுற்றுலாப் பயணிகள் ஏறி நடந்துசென்று பார்த்து மகிழ்வது வழக்கம். கேர்ன்ஹில் வனத்தில் உள்ள தொங்கு பாலம் மற்றும் வன விலங்குகளின் மாதிரிகளைப் பார்வையிட ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இப்பகுதிக்கு வந்துசெல்கின்றனர்.
[/font][/color]
வனத்துறையால் நடத்தப்படும் காட்டுமாடு மற்றும் புலி என்ற பெயரில் இரு தங்கும் விடுதிகள் உள்ளன. மேலும் அரிய வகை ஆர்க்கிட் மலர்களைக் காக்க பசுமைக் குடில் அமைக்கப்பட்டு பழவகைகளில் ஆர்க்கிட்கள் வளர்க்கப்படுகின்றன. பழங்குடியின மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் வகையில் தோடர் பழங்குடியின மக்களின் 2 விற்பனை மையங்கள் உள்ளன. இவற்றில் தோடர் எம்ராய்டரி சால்வை, தேன், சாக்லேட்கள் போன்றவை விற்பனை செய்யப்படுகின்றன. இயற்கையின் செல்லத்தொட்டில் போன்ற இந்த இடம், காடுகளைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு புது அனுபவத்தைத் தருகிறது.
[/font][/color]
இயற்கை எழில் கொஞ்சும் கேர்ன்ஹில் வனப்பகுதியைக் கண்டு ரசிக்க வந்த வேலூரைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி பானுமதி கூறுகையில், ``கோடை விடுமுறையைக் கொண்டாட குடும்பத்துடன் ஊட்டி வந்தோம். வந்த இடத்தில் நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டு இங்கே வந்து பார்த்தோம். இந்த இடத்தின் அழகை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. ஊட்டி நகருக்கு அருகில் இப்படி ஒரு பகுதி இருப்பதே அதிகம் யாருக்கும் தெரிவதில்லை. ஆதிகாலத்துக்குத் திரும்பியது போன்ற உணர்வு ஏற்படுகிறது. அடுத்த முறையும் இதே இடத்துக்கு வரவேண்டும் போல உள்ளது” எனச் சிலாகித்தார்.
[/font][/color]
வனத்துறையினர் கூறுகையில் ``சூழலியல் சுற்றுலாவை மேம்படுத்தும் வகையில் சமீபத்தில் இதைச் சீரமைத்துள்ளோம். சுற்றுலாப் பயணிகளுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. முறையான சோதனைக்குப் பின்னரே பயணிகளை அனுமதிக்கின்றோம், சூழலுக்குக் கேடுவிளைவிக்கும் பொருள்கள் கொண்டுவரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வறட்சிக் காலங்களில் மட்டும் நடைப்பயணம் மேற்கொள்ள அனுமதி இல்லை. பாதுகாப்புடன் பார்த்து ரசித்துச் செல்ல வனத்துறை உதவும்” என்றனர்.[/font][/color]