கருப்பு தினம்!
#6
நீ டவுன் போய் வேலை செஞ்சி கிழிக்க வேணாம். நீ பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து சம்பாதிச்சதும் போதும். உன் மாமன் மகன் பக்கிரிசாமியை கட்டிக்கிட்டு அவனுக்கு பொங்கி போட்டுக்கிட்டு வச வசன்னு புள்ளை குட்டியை பெத்து போடுற வழியை பாரு...
கடுமையாக திட்டி/கொட்டி தீர்த்தார் அப்பா!

கோவம் வந்தது...
என்னால் அந்த பக்கிரி சாமியை கட்டிக்க முடியாது.
நான் சென்னை போறேன்.

அப்பா : போடி போ... நீ படிக்க போறேன்னு சொன்னப்பவே உன் காலை ஒடச்சிருக்கனும்.
உன் கூடத்தானே படிச்சா கனகா. அவள் என்ன வெளியூர் வேலைக்கா போனா?
அவள் மாமா சாமிக்கண்ணை கல்யாணம் பன்னி 2 பெத்து போட்டு கைல ஒன்னு இடுப்புல ஒன்னு வயித்துல ஒன்னுண்னு இருக்கா..

நீ.. படிப்பு வேலைன்னு சுத்துற..

உன் வயசு பொண்ணுங்க எல்லாம் மஞ்சள் தேச்சி குளிக்கும் போது நீ செங்கல் கட்டி தேச்சி குளிக்கிற..

நான் : அது செங்கல் கட்டி இல்லை .. அது சோப்..

அப்பா : என்ன கருமமோ.. அதை போட்டு நீ குளிச்சிட்டு வந்தா அப்படி ஒரு நாத்தம்.

நான்‌ : அது நாத்தம் இல்லை வாசம். முன்ன பின்ன சோப்பு போட்டு குளிச்சிருந்தா தெரியும்.

அப்பா : என்னடி ? படிச்ச திமிரா? அப்பனையே எதிர்த்து பேசுற?

கண்டதை சாப்பிடுற... சந்தனம் தேய்க்கிற முகத்துல ஏதோ பசையை தேய்க்கிற...

நான் : அது பசை இல்லை Fair & Lovely Cream

அப்பா : என்ன தஸ்ஸு புஸ்ஸூன்னு அப்பனை திட்டுற?

நான் : அய்யோ.. அப்பா நான் உன்னை திட்டலை. அந்த க்ரீம் பெயர் சொன்னேன்...

அப்பா : குறுக்க பேசாத... நீ கண்ட கண்ட மாவு எடுத்து மூஞ்சில அப்பிக்கிறதெல்லாம் எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?

நான் : அப்பா அது மாவு இல்லை ... பான்ஸ் பவுடர்..

அப்பா : உன் வயசு பொண்ணுங்க எல்லாம் எண்ணெய் வடிய கருத்து போய் ஒல்லியா எவ்ளோ அழகா இருக்காளுங்க.
நீ கண்டதை தேச்சிக்கிட்டு , கண்டதை தின்னுக்கிட்டு, கண்டதை பூசிக்கிட்டு..
உடம்பு பெருத்து கெடக்கு. டியூஷன் வரவன் உன்னை கண்ட எடத்துல பாத்து ரசிக்கிறதெல்லாம் பாத்துக்கிட்டுதான் இருக்கேன்.ஒழுங்கா கல்யாணம் பண்ணி குட்டியை போடுற வேலையை பாரு...

நான் : இனி இவர்களிடம் பேசி பயன் இல்லை (மனதுக்குள்)

அப்பா : நீ  டவுன் போய் வேலை செஞ்சி கிழிக்க வேணாம். நீ பசங்களுக்கு படிப்பு சொல்லி கொடுத்து சம்பாதிச்சதும் போதும். உன் மாமன் மகன் பக்கிரிசாமியை கட்டிக்கிட்டு அவனுக்கு பொங்கி போட்டுக்கிட்டு வச வசன்னு புள்ளை குட்டியை பெத்து போடுற வழியை பாரு... 
மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தார் ... அப்பா!

தீரா காதல் கொண்ட பெண் ஒருத்திக்கு, வீட்டில் அவள் காதலுக்கு அனுமதி தரவில்லை என்றால், தான் கொண்ட காதலுக்காக வீட்டை விட்டு ஓடுவதுதானே முறை?!

நான் வேலை மீது கொண்ட தீரா காதல் வெற்றி அடைய வீட்டை விட்டு ஓடினேன்.

டியூஷன் எடுத்து சம்பாதித்த பணத்தை எடுத்து கொண்டு சென்னை பஸ் ஏறி.. நள்ளிரவு சென்னை வந்தடைந்தேன்.

வந்ததோடு சரி.
எங்கு செல்வது?
எங்கு தங்குவது?
யாரை பார்ப்பது?
எதுவும் தெரியவில்லை, புரியவும் இல்லை.

அவசரப்பட்டு எதுவும் யோசிக்காமல் ஒரு வேகத்தில் வந்துவிட்டோமோ? என என் தவறை உணர்ந்தேன்.
படிச்ச முட்டாள் ஆகிவிட்டோமோ?

சென்னை எனும் பெரிய மாநகரத்தில் நள்ளிரவில் தனியாக.. தன்னந்தனியாக.. ஒரு வயசு பெண் திக்கற்று நின்றாள்.. பார்ப்பவர்கள் எண்ணம் எப்படி இருக்கும்? எப்படி யோசிக்கும்?

நள்ளிரவு... பனி விழும் இரவு ...
குளிரில் உடல் உதறியது.

என்னை நோக்கி முக்காடு போட்ட ஒரு பெண் வந்தார். அத்தகைய‌ முக்காடு உடை இன்றுதான் பரிட்சயம்.

அந்த பெண் பார்க்க சாந்தமாக .. ஒரு பெண் சாமியார் போல இருந்தாள்.

வந்தவள்.. யாருமா நீ?
இந்த நேரத்தில் ஏன் தனியாக நிற்க்கிறாய்?

திலகா : அந்த பெண்ணை நம்பி உண்மையை சொல்லலாமா? சொன்னால் உதவுவாளா? அல்லது ஊருக்கு புதுசு. தனியா வந்துருக்கா என ஏமாற்றி விடுவாளா? ஏகப்பட்ட யோசனை.

ஆனாலும் யாரையாவது நம்பித்தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம் எனக்கு.
இங்கு இருப்பவர்களில் என்னை கவனித்து இந்த கேள்வியை கேட்டது இந்த பெண்தான். அதனால் கொஞ்சம் பயமும் கூட..

பரவாயில்லை ... உண்மையை சொல்லுவோம். கொஞ்சம் கவனமாகவும் இருக்கனும்.

நான் சென்னை வந்த கதையையும் ... இங்கு வந்து வாழ வழி தேடும் கதையையும் சொன்னேன்.

அந்த முக்காடு போட்ட பெண் யோசித்தாள். சரி என்னுடன் வா... ஆட்டோவை அழைத்தாள். ஆட்டோ வந்தது. ஏறினோம். அவள் வழி சொல்ல ஆட்டோ சென்றது.
ஆட்டோவில் தன்னை அறிமுகம் செய்து கொண்டாள்.

நான் மதர் மெர்சி.
கருனை இல்லம்னு ஒரு அநாதை இல்லம் நடத்துறேன்.ஆதரவில்லாத குழந்தைகள் இருக்கும் இடமது...

சொல்லி கொண்டு இருக்கும் போதே இறங்க வேண்டிய இடம் வந்தது.

இறங்கினோம். பெரிய பில்டிங். உள்ளே சென்றோம்.
கருப்பாக குண்டாக ஒரு பெண் வந்தாள்.

வாங்க மதர் .. இந்த நேரத்துல...

மதர் : இந்த பாரு வேலம்மா .இந்த பொண்ணு பேரு திலகா. இங்க தங்க ஒரு ரூம் வேண்டும்.

வேலம்மா : மதர் .. ஹாஸ்டல் ஃபுள். தனி ரூம் இல்லை. ஏற்கனவே தங்கி இருக்கும் பெண்களோடு சேர்ந்து தங்கினால்தான் உண்டு.
ஆனால் யாரும் சேர்ந்து தங்க முன் வரமாட்டார்கள்.

மதர் : ப்ளீஸ் வேலம்மா.. ஒரு வாரம் போதும். அதுக்குள்ள வேற இடம் இவளுக்கு நான் ரெடி பன்னிடுறேன்.

வேலம்மாள்: ஐயோ மதர். இங்க யாரும் கூட சேத்துக்க மாட்டாங்க....(சொல்லி கொண்டு இருக்கும் போதே...)

என் ரூம்ல தங்கிக்கட்டும்.(ஒரு பெண்ணின் குரல்!)

திரும்பி பார்த்தால் அந்த இரவு நேரத்திலும் பிரகாசமாய் ஜொலிக்கும் அழகு தேவதை.
பெண்களே ஆசைப்பட கூடிய அளவு பேரழகி.
இப்படி ஒரு கலரில் இப்படி ஒரு வனப்பில் , தங்கத்தால் செதுக்கப்பட்ட சிலை போல வளைவு நெளிவுகளுடன் வெள்ளை சுடிதாரில் தலையில் கருப்பு துண்டு அணிந்து கொண்டு எங்களை நெருங்கினாள் அந்த தேவதை!

தேவதை : வேலம்மாள்... இந்த ராத்திரியில் இந்த பெண் எங்கு போவா? என் கூடவே தங்கிக்கட்டும்.

வேலம்மாள் : அது இல்லை நசீரா கண்ணு... நீங்க VIP ரூம்க்கு பணம் கட்டிருக்கீங்க. அதுல கெஸ்ட் தங்க வைக்கலாமா?

(வேலம்மாள் நசீரா என்று அழைத்ததில் அந்த தேவதை பெயர் நசீரா என புரிந்து கொண்டேன்.)

நசீரா : அதெல்லாம் நான் பாத்துக்குறேன் வேலம்மாள். மதர் நீங்கள் கவலைப்படாமல் போங்க. இந்த பொண்ணு எத்தனை நாள் விரும்புதோ அத்தனை நாளும் என் கூடவே இருக்கட்டும். நீ வாம்மா...
சொன்ன நசீரா என்னை அவள் அறைக்கு அழைத்து செல்ல... மதருக்கு நன்றி சொல்லி நசீராவுடன் அவள் அறைக்கு சென்றேன்.

"திக்கற்று நின்ற இந்து பெண் என்னை அக்கறையுடன் லேடிஸ் ஹாஸ்டலுக்கு அழைத்து சென்று, எனக்காக ரூம் கேட்டு கெஞ்சிய மெர்சி ஒரு கிருஸ்த்தவ மதர்! 

ரூம் இல்லை என வேலம்மாள் சொல்லியதும், தனது VIP அறையில் என்னை தங்க வைக்க உதவிய நசீமா ஒரு முஸ்லிம் தேவதை!!

ச்சே... என்ன ஒரு நாடு இது... மதம் கடந்து மனிதம் காப்பது நம் இந்திய நாட்டில் மட்டும் தான் சாத்தியமோ? என மெய் சிலிர்த்தவாரே நசீராவின் VIP அறைக்குள் வலது காலை எடுத்து வைத்து உள்ளே சென்றேன்.

-தொடரும்.
Like Reply


Messages In This Thread
RE: கருப்பு தினம்! - by Ishitha - 21-09-2022, 02:25 PM



Users browsing this thread: 2 Guest(s)