26-12-2018, 11:13 AM
''நாங்க ஆரம்பத்துல குடிசை வீட்டுல தான் இருந்தோம். அதுக்கப்புறம் குடிசை மாற்று வாரியம் மூலமா அரசாங்கத்திலிருந்து வீடுகட்டிக் கொடுத்தாங்க. அந்த வீடு பெட்டி சைஸ்ல தான் இருக்கும். எனக்குன்னு தனி பெட்ரூம் வசதியெல்லாம் கிடையாது. நான் காலேஜ் படிக்கும்போது என் ஃப்ரெண்ட்ஸ் வீட்டுக்குலாம் போகும்போது அவங்களுடைய பெட்ரூம்ல உட்கார்ந்து கதை பேசியிருக்கேன். என் ஃப்ரெண்ட்ஸ் எங்க வீட்டுக்கு வர்றேன்னு சொன்னாங்கன்னா கொஞ்சம் சங்கடமா இருக்கும். ஆரம்பத்திலிருந்தே எனக்காக என் அம்மா, அப்பா ரொம்ப கஷ்டப்பட்டிருக்காங்க. அவங்களை ராஜா, ராணி மாதிரி பார்த்துக்கணும்னு ஆசை இருந்துச்சு. ரொம்ப ஹார்ட்ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். கிடைக்கிற பணத்தை குருவி சேர்க்கிற மாதிரி சேத்து வைச்சேன். எந்த ஈவண்ட்டிற்கு கூப்பிட்டாலும் பேசப் போயிடுவேன். இது சின்ன நிகழ்ச்சி நாம இப்போ ஹீரோயின் இங்கெல்லாம் போகக்கூடாதுன்னுலாம் யோசிக்க மாட்டேன். ராத்திரி. பகலா வேலைப் பார்த்து காசு சேமிச்சேன். முதல்ல சொந்தமா கார் வாங்கினேன். அந்த காரிலேயே மதுரை வரைக்கும் கூட டிரைவ் பண்ணிட்டு ஈவண்ட் பண்ணப் போயிருக்கேன். டிரைவர் வெச்சா காசு செலவாகும். நாமே ஓட்டிட்டுப் போயிடலாம்னுலாம் சிக்கனமா இருந்துருக்கேன். இப்படி மூணு வருஷம் சேமிச்சு இப்போ எங்க அம்மா, அப்பாவுக்காக ஒரு வீடுகட்டிக் கொடுத்திருக்கேன்.
தனி வீடா இருந்தா அவங்க மட்டும்தான் இருக்க முடியும். அவங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே இரண்டு சின்ன வீடு கட்டினேன். அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு அவங்க உட்கார்ந்து சாப்பிட வழி ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ என்னைப் பெண் பிள்ளையா பெத்ததுக்கு என் அம்மாவும், அப்பாவும் பெருமைப்பட்டுட்டு இருக்காங்க.
தனி வீடா இருந்தா அவங்க மட்டும்தான் இருக்க முடியும். அவங்க வீட்டிலிருந்தே சம்பாதிக்கிற மாதிரி எங்க வீட்டுக்கு பக்கத்துலேயே இரண்டு சின்ன வீடு கட்டினேன். அந்த வீடுகளை வாடகைக்கு விட்டுட்டு அதில் கிடைக்கிற பணத்தை வைச்சு அவங்க உட்கார்ந்து சாப்பிட வழி ஏற்பாடு பண்ணிட்டேன். இப்போ என்னைப் பெண் பிள்ளையா பெத்ததுக்கு என் அம்மாவும், அப்பாவும் பெருமைப்பட்டுட்டு இருக்காங்க.