11-09-2022, 11:47 AM
26.
3 வருடங்கள் ஆகியிருந்தது! ரம்யாவும், ப்ரியாவும் ஒன்று என்பது போல் மாறியிருந்தார்கள். பார்ட் டைம் வேலை தேடி வந்த ப்ரியா, வேலைக்குச் செல்லும் அவசியமே வரவில்லை! அவளின் எல்லாத் தேவைகளும், ரம்யாவால் தீர்க்கப்பட்டது!
ஆரம்பத்தில், இதற்காக மறுகிய ப்ரியா, இப்போதெல்லாம், அம்மா, இன்னைக்கு கடைக்கு போலாமா என்று கேட்கும் அளவிற்க்கு அந்த வீட்டில் ஒன்றியிருந்தாள். இது எத்தனை நாள் நீடிக்க முடியும், ப்ரியா அந்த வீட்டின் நிர்வாகியா, உறவா, என்ன மாதிரியான பிணைப்பு என்று யாரும் யோசிக்கவேயில்லை!
இன்னமும் வழக்கிற்கு தீர்ப்பு வரவில்லை என்றாலும், வழக்கில் ப்ரியா ஜெய்ப்பாள் என்பது உறுதியாகியிருந்தது. அதை விட முக்கியம், இந்த வழக்கு தனக்கு ஒன்றுமேயில்லை என்று ப்ரியா மாறியிருந்தாள். இப்படியாக 3 வருடங்கள் ஓடியிருந்தது!
இடைப்பட்ட காலங்களில், ரம்யா, ப்ரியாவின் நெருக்கம், ராமிற்கே பொறாமையை வரவழைத்தது!
ரம்யாவின் காதுகளில், ப்ரியா ரகசியம் பேசினாள்! ரம்யாம்மா, உங்க பாய்ஃபிரண்டு, என்னை முறைக்கிறாரு?!
ஏய், என்னடி சொல்ற?
![[Image: 1439916844-kn-stills-ramya-krishnan-hot-...ishnan.jpg]](https://media.indiatimes.in/media/content/itimes/photo/2015/Aug/18/1439916844-kn-stills-ramya-krishnan-hot-latest-photo-gallery-ramya-krishnan.jpg)
ம்ம், இந்நேரம், அவரு தோள்ல சாஞ்சி, கதை பேசிட்டிருந்திருப்பீங்க, அது நடக்காம, அவரு கேர்ள்ஃபிரண்டை நான் கடத்திட்டு வந்துட்டேன்ல! அதான் முறைக்கிறாரு!
ஏய், என் பையனையே ஓட்டுறியா? வாயாடி!
ஓட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டா, பையன் என்னா, பேரன் என்னா? சரி, சரி, இதுக்கு மேல உங்களை புடிச்சு வெச்சா, அவரு பார்வையிலியே என்னை எரிச்சிடுவாரு! நான் போயி, என் பாய்ஃபிரண்டை கொஞ்சுறேன்! நீங்க, உங்க பாய் ஃபிரண்டுகிட்ட போங்க… இருந்தாலும் கடைசியா, அவரைச் சீண்டனுமே என்று சொன்ன ப்ரியா, ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்!
ஏய், உனக்கு வாலு அதிகமாயிட்டே போகுது! ஒரு நாள் வாங்கப் போற இரு! சரி, அது யாருடி உன் பாய்ஃபிரண்டு, புதுசா?
ம்ம்… மிஸ்டர் கணேசன் தான்! நேத்து, என் கையை புடிச்சிகிட்டு, இந்த முறை, சென்னைக்கு போறதுக்கு மனசே இல்லைன்னு எவ்ளோ ஃபீல் பண்ணாரு தெரியுமா? உங்ககிட்ட இதுவரைக்கும், அதுமாதிரி சொல்லியிருக்காரா? இல்லீல்ல? இப்ப தெரிஞ்சிக்கோங்க, இந்த ப்ரியாவோட பவரை என்று கண்ணைச் சிமிட்டியவாறே சொல்லிவிட்டுச் சென்றாள்!
ராமின் தோள்களில் சாய்ந்தாலும், அவளது பார்வை, ப்ரியாவின் மேலேயே இருந்தது.
என்னம்மா அவளையே பாத்துட்டு இருக்கீங்க?!
என்னை மாதிரியே இருக்காடா! என்று ரம்யா ஒரு பெருமூச்சு விட்டாள்!
ரம்யாவின் வார்த்தைகளை விட, அவளது பார்வையும், பெருமூச்சும் ஏதோ உணர்த்துவது போல் இருந்தது ராமிற்க்கு!
ஒரு நாள்!
ராம் உடன் படித்தவன், கல்யாணம் என்று பத்திரிக்கை வைத்திருந்தான்! ராம், அதையேக் கையில் வைத்து, யோசித்துக் கொண்டிருந்தான். ப்ரியா, ரம்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
அங்க பாருங்க, உங்க பாய்ஃபிரண்ட், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்களேன்னு ஃபீல் பண்ணிட்டிருக்காரு!
ஏய் வாயாடி, உன் வீரமெல்லாம் என்கிட்டதான். ஆனா, அவனைக் கண்டாலே பம்முவ! இவ்ளோ பேசுறியே, தைரியமா அவன்கிட்ட போயி அவன் பேரைச் சொல்லி கூப்பிடு பாக்கலாம்! இன்னமும் சார் நு தானே கூப்பிடுற? 24 வயசெல்லாம் கல்யாணம் பண்ற வயசா?!
ஆங்… இந்தக் கதைதானே வேணாங்கிறது! உங்களுக்கு பயம், புதுசா வர்றவ, உங்க பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு…
![[Image: 329-3299673_richa-gangopadhyay-in-salwar...adhyay.jpg]](https://www.teahub.io/photos/full/329-3299673_richa-gangopadhyay-in-salwar-actress-richa-gangopadhyay.jpg)
உன்னை என்று ப்ரியாவின் காதைத் திருகி ரம்யா விளையாடிய போது, ராம் சொன்னான்!
ப்ரியா சொன்னது சரிதாம்மா! நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னுதான் யோசிச்சிட்டிருந்தேன்!
(அய்யோ, நான் சொல்றதைக் கேட்டுட்டா இருந்தாரு! போச்சு!)
என்ன ராம் சொல்ற? உண்மையாவா?
ஆமாம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்! அவளுக்காக, நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்!
அவளுக்காக இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணனுங்கிற! என்கிட்ட ஒரு வார்த்தை உன் லவ்வைப் பத்திச் சொல்லலியேடா? அவ்ளோதானா? தன்னிடம் சொல்லாததிற்க்காக மிகவும் ஃபீல் பண்ணினாள் ரம்யா!
சிரித்தவாறே அருகில் வந்து ரம்யாவை தோளோடு சேர்த்து இழுத்தவன், ரொம்ப ஃபீல் பண்ணாத கேர்ள் ஃபிரண்டு! எத்தனை லவ்வர் வந்தாலும், நீதான் என் கேர்ள் ஃபிரண்டு! ஓகேவா!
போடா, வெறும் வாய்லதான். என்கிட்ட சொல்லலீல்ல நீ?!
அவசரப்படாதீங்க! நான் இன்னும் அந்தப் பொண்ணுகிட்டயே லவ்வைச் சொல்லலை! சொன்னாலும், அவ உடனே ஒத்துக்குவாளான்னும் தெரியாது! ஆனா, சீக்கிரம் கல்யாணம் நடக்கனும். அதான் யோசிக்கிறேன்!
என்ன ராம் சொல்ற? யாரு அந்தப் பொண்ணு? அப்டி என்ன பிரச்சினை? உன்னை வேணாம்னு சொல்லிடுவாளா? நீ யாருன்னு காமி? நான் பேசுறேன் அவகிட்ட!
உண்மையாவாம்மா?! என்ன ப்ரியா, நீயும் எனக்காக பேசுவியா?
கண்டிப்பா சார்! உங்களை வேணாம்னு சொல்ற பொண்ணு இருக்க முடியுமா? யாருங்க சார் அந்தப் பொண்ணூ? நானும் பேசுறேன் சார்!
நீதான் ப்ரியா அந்தப் பொண்ணு! உன்னைதான் லவ் பண்றேன்! என்றவன் ரம்யாவிடம் திரும்பி, நீங்க பேசி சம்மதம் வாங்குங்கம்மா என்றான்!
ப்ரியா, பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்!
நீ உண்மையாத்தான் சொல்றியா ராம்?
இந்த விஷயத்துல யாராவது விளையாடுவாங்களாம்மா? உங்களுக்கு சம்மதம்மாம்மா?
சம்மதமா??? எனக்கு, ரொம்ப ரொம்ப சந்தோஷம் ராம்! ப்ரியா நீ என்ன என்று திரும்பிய போதுதான் ரம்யா உணர்ந்தாள், ப்ரியா இன்னும் பிரம்மை பிடித்தவாறே இருந்ததை! அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன…
நான்…. கல்யாணமா…
’ப்ரியா’ என்ற ரம்யாவின் அதட்டலில் சுய நினைவு திரும்பியவள், கோபமாக ராமைப் பார்த்து கேட்டாள்!
பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்குறீங்களா சார்?
பரிதாபப்படுற அளவுக்கு உன்கிட்ட என்ன குறை ப்ரியா?
ஆங்… என்று விழித்தாள் ப்ரியா? பின் சுதாரித்தவள், எ… எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை சார்!
ஸ்ஸ்… நீ என்னை கல்யாணம் பண்றியோ, பண்ணலையோ, முதல்ல இந்த சாரைக் கட் பண்ணு! என்னம்மா, என்னை எந்தப் பொண்ணும் வேணாம்னு சொல்லாதுன்னு சொன்னீங்க?! உங்க கூட இருக்கிற பொண்ணுக்கே என்னை புடிக்கலியே?!
இல்ல சார்… நீங்க வேற நல்லப் பொண்ணாப் பாத்து… என்று பேசியவளை ராமின் கோபப்பார்வை நிறுத்தியது!
சரி ப்ரியா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம். ஆனா, உன் மனசைத் தொட்டுச் சொல்லு. நீ உன் வாழ்க்கைல கல்யாணம் பண்ணுவியா மாட்டியா?
கல்யாணாமா? நானா என்று வாய் பிளந்து நின்றாள் ப்ரியா!
தன்னையறியாமல் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த ரம்யா, என்ன சொல்ற ராம்? அவ கல்யாணம் பண்ணாம என்ன பண்ணப் போறா?
அதை அவளைச் சொல்லச் சொல்லுமா?
உ… உங்களுக்கு எப்டி தெரியும் சார்???
டாக்டர் சார்மிளா!
அப்போதுதான் ப்ரியாவிற்கும், ரம்யாவிற்க்கும் ஞாபகம் வந்தது!
3 வருடங்கள் ஆகியிருந்தது! ரம்யாவும், ப்ரியாவும் ஒன்று என்பது போல் மாறியிருந்தார்கள். பார்ட் டைம் வேலை தேடி வந்த ப்ரியா, வேலைக்குச் செல்லும் அவசியமே வரவில்லை! அவளின் எல்லாத் தேவைகளும், ரம்யாவால் தீர்க்கப்பட்டது!
ஆரம்பத்தில், இதற்காக மறுகிய ப்ரியா, இப்போதெல்லாம், அம்மா, இன்னைக்கு கடைக்கு போலாமா என்று கேட்கும் அளவிற்க்கு அந்த வீட்டில் ஒன்றியிருந்தாள். இது எத்தனை நாள் நீடிக்க முடியும், ப்ரியா அந்த வீட்டின் நிர்வாகியா, உறவா, என்ன மாதிரியான பிணைப்பு என்று யாரும் யோசிக்கவேயில்லை!
இன்னமும் வழக்கிற்கு தீர்ப்பு வரவில்லை என்றாலும், வழக்கில் ப்ரியா ஜெய்ப்பாள் என்பது உறுதியாகியிருந்தது. அதை விட முக்கியம், இந்த வழக்கு தனக்கு ஒன்றுமேயில்லை என்று ப்ரியா மாறியிருந்தாள். இப்படியாக 3 வருடங்கள் ஓடியிருந்தது!
இடைப்பட்ட காலங்களில், ரம்யா, ப்ரியாவின் நெருக்கம், ராமிற்கே பொறாமையை வரவழைத்தது!
ரம்யாவின் காதுகளில், ப்ரியா ரகசியம் பேசினாள்! ரம்யாம்மா, உங்க பாய்ஃபிரண்டு, என்னை முறைக்கிறாரு?!
ஏய், என்னடி சொல்ற?
![[Image: 1439916844-kn-stills-ramya-krishnan-hot-...ishnan.jpg]](https://media.indiatimes.in/media/content/itimes/photo/2015/Aug/18/1439916844-kn-stills-ramya-krishnan-hot-latest-photo-gallery-ramya-krishnan.jpg)
ம்ம், இந்நேரம், அவரு தோள்ல சாஞ்சி, கதை பேசிட்டிருந்திருப்பீங்க, அது நடக்காம, அவரு கேர்ள்ஃபிரண்டை நான் கடத்திட்டு வந்துட்டேன்ல! அதான் முறைக்கிறாரு!
ஏய், என் பையனையே ஓட்டுறியா? வாயாடி!
ஓட்டுறதுன்னு முடிவு பண்ணிட்டா, பையன் என்னா, பேரன் என்னா? சரி, சரி, இதுக்கு மேல உங்களை புடிச்சு வெச்சா, அவரு பார்வையிலியே என்னை எரிச்சிடுவாரு! நான் போயி, என் பாய்ஃபிரண்டை கொஞ்சுறேன்! நீங்க, உங்க பாய் ஃபிரண்டுகிட்ட போங்க… இருந்தாலும் கடைசியா, அவரைச் சீண்டனுமே என்று சொன்ன ப்ரியா, ரம்யாவின் கன்னத்தில் முத்தமிட்டாள்!
ஏய், உனக்கு வாலு அதிகமாயிட்டே போகுது! ஒரு நாள் வாங்கப் போற இரு! சரி, அது யாருடி உன் பாய்ஃபிரண்டு, புதுசா?
ம்ம்… மிஸ்டர் கணேசன் தான்! நேத்து, என் கையை புடிச்சிகிட்டு, இந்த முறை, சென்னைக்கு போறதுக்கு மனசே இல்லைன்னு எவ்ளோ ஃபீல் பண்ணாரு தெரியுமா? உங்ககிட்ட இதுவரைக்கும், அதுமாதிரி சொல்லியிருக்காரா? இல்லீல்ல? இப்ப தெரிஞ்சிக்கோங்க, இந்த ப்ரியாவோட பவரை என்று கண்ணைச் சிமிட்டியவாறே சொல்லிவிட்டுச் சென்றாள்!
ராமின் தோள்களில் சாய்ந்தாலும், அவளது பார்வை, ப்ரியாவின் மேலேயே இருந்தது.
என்னம்மா அவளையே பாத்துட்டு இருக்கீங்க?!
என்னை மாதிரியே இருக்காடா! என்று ரம்யா ஒரு பெருமூச்சு விட்டாள்!
ரம்யாவின் வார்த்தைகளை விட, அவளது பார்வையும், பெருமூச்சும் ஏதோ உணர்த்துவது போல் இருந்தது ராமிற்க்கு!
ஒரு நாள்!
ராம் உடன் படித்தவன், கல்யாணம் என்று பத்திரிக்கை வைத்திருந்தான்! ராம், அதையேக் கையில் வைத்து, யோசித்துக் கொண்டிருந்தான். ப்ரியா, ரம்யாவின் காதுகளில் கிசுகிசுத்தாள்.
அங்க பாருங்க, உங்க பாய்ஃபிரண்ட், எனக்கு கல்யாணம் பண்ணி வைக்க மாட்டேங்குறாங்களேன்னு ஃபீல் பண்ணிட்டிருக்காரு!
ஏய் வாயாடி, உன் வீரமெல்லாம் என்கிட்டதான். ஆனா, அவனைக் கண்டாலே பம்முவ! இவ்ளோ பேசுறியே, தைரியமா அவன்கிட்ட போயி அவன் பேரைச் சொல்லி கூப்பிடு பாக்கலாம்! இன்னமும் சார் நு தானே கூப்பிடுற? 24 வயசெல்லாம் கல்யாணம் பண்ற வயசா?!
ஆங்… இந்தக் கதைதானே வேணாங்கிறது! உங்களுக்கு பயம், புதுசா வர்றவ, உங்க பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு…
![[Image: 329-3299673_richa-gangopadhyay-in-salwar...adhyay.jpg]](https://www.teahub.io/photos/full/329-3299673_richa-gangopadhyay-in-salwar-actress-richa-gangopadhyay.jpg)
உன்னை என்று ப்ரியாவின் காதைத் திருகி ரம்யா விளையாடிய போது, ராம் சொன்னான்!
ப்ரியா சொன்னது சரிதாம்மா! நான் கல்யாணம் பண்ணிக்கலாமான்னுதான் யோசிச்சிட்டிருந்தேன்!
(அய்யோ, நான் சொல்றதைக் கேட்டுட்டா இருந்தாரு! போச்சு!)
என்ன ராம் சொல்ற? உண்மையாவா?
ஆமாம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்ணுறேன்! அவளுக்காக, நான் சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கனும்னு நினைக்கிறேன்!
அவளுக்காக இவ்ளோ சீக்கிரமா கல்யாணம் பண்ணனுங்கிற! என்கிட்ட ஒரு வார்த்தை உன் லவ்வைப் பத்திச் சொல்லலியேடா? அவ்ளோதானா? தன்னிடம் சொல்லாததிற்க்காக மிகவும் ஃபீல் பண்ணினாள் ரம்யா!
சிரித்தவாறே அருகில் வந்து ரம்யாவை தோளோடு சேர்த்து இழுத்தவன், ரொம்ப ஃபீல் பண்ணாத கேர்ள் ஃபிரண்டு! எத்தனை லவ்வர் வந்தாலும், நீதான் என் கேர்ள் ஃபிரண்டு! ஓகேவா!
போடா, வெறும் வாய்லதான். என்கிட்ட சொல்லலீல்ல நீ?!
அவசரப்படாதீங்க! நான் இன்னும் அந்தப் பொண்ணுகிட்டயே லவ்வைச் சொல்லலை! சொன்னாலும், அவ உடனே ஒத்துக்குவாளான்னும் தெரியாது! ஆனா, சீக்கிரம் கல்யாணம் நடக்கனும். அதான் யோசிக்கிறேன்!
என்ன ராம் சொல்ற? யாரு அந்தப் பொண்ணு? அப்டி என்ன பிரச்சினை? உன்னை வேணாம்னு சொல்லிடுவாளா? நீ யாருன்னு காமி? நான் பேசுறேன் அவகிட்ட!
உண்மையாவாம்மா?! என்ன ப்ரியா, நீயும் எனக்காக பேசுவியா?
கண்டிப்பா சார்! உங்களை வேணாம்னு சொல்ற பொண்ணு இருக்க முடியுமா? யாருங்க சார் அந்தப் பொண்ணூ? நானும் பேசுறேன் சார்!
நீதான் ப்ரியா அந்தப் பொண்ணு! உன்னைதான் லவ் பண்றேன்! என்றவன் ரம்யாவிடம் திரும்பி, நீங்க பேசி சம்மதம் வாங்குங்கம்மா என்றான்!
ப்ரியா, பிரம்மை பிடித்து நின்றிருந்தாள்!
நீ உண்மையாத்தான் சொல்றியா ராம்?
இந்த விஷயத்துல யாராவது விளையாடுவாங்களாம்மா? உங்களுக்கு சம்மதம்மாம்மா?
சம்மதமா??? எனக்கு, ரொம்ப ரொம்ப சந்தோஷம் ராம்! ப்ரியா நீ என்ன என்று திரும்பிய போதுதான் ரம்யா உணர்ந்தாள், ப்ரியா இன்னும் பிரம்மை பிடித்தவாறே இருந்ததை! அவள் உதடுகள் முணுமுணுத்துக் கொண்டிருந்தன…
நான்…. கல்யாணமா…
’ப்ரியா’ என்ற ரம்யாவின் அதட்டலில் சுய நினைவு திரும்பியவள், கோபமாக ராமைப் பார்த்து கேட்டாள்!
பரிதாபப்பட்டு வாழ்க்கை கொடுக்குறீங்களா சார்?
பரிதாபப்படுற அளவுக்கு உன்கிட்ட என்ன குறை ப்ரியா?
ஆங்… என்று விழித்தாள் ப்ரியா? பின் சுதாரித்தவள், எ… எனக்கு கல்யாணத்துல இஷ்டம் இல்லை சார்!
ஸ்ஸ்… நீ என்னை கல்யாணம் பண்றியோ, பண்ணலையோ, முதல்ல இந்த சாரைக் கட் பண்ணு! என்னம்மா, என்னை எந்தப் பொண்ணும் வேணாம்னு சொல்லாதுன்னு சொன்னீங்க?! உங்க கூட இருக்கிற பொண்ணுக்கே என்னை புடிக்கலியே?!
இல்ல சார்… நீங்க வேற நல்லப் பொண்ணாப் பாத்து… என்று பேசியவளை ராமின் கோபப்பார்வை நிறுத்தியது!
சரி ப்ரியா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க வேணாம். ஆனா, உன் மனசைத் தொட்டுச் சொல்லு. நீ உன் வாழ்க்கைல கல்யாணம் பண்ணுவியா மாட்டியா?
கல்யாணாமா? நானா என்று வாய் பிளந்து நின்றாள் ப்ரியா!
தன்னையறியாமல் ஏதோ நடக்கிறது என்பதை உணர்ந்த ரம்யா, என்ன சொல்ற ராம்? அவ கல்யாணம் பண்ணாம என்ன பண்ணப் போறா?
அதை அவளைச் சொல்லச் சொல்லுமா?
உ… உங்களுக்கு எப்டி தெரியும் சார்???
டாக்டர் சார்மிளா!
அப்போதுதான் ப்ரியாவிற்கும், ரம்யாவிற்க்கும் ஞாபகம் வந்தது!