27-08-2022, 01:37 PM
21.
இந்தக் கதையை, ராமிடம் கணேசன் சொல்லும் போது, ராமின் வயது 16.
உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ரம்யா, ராமின் 5 வயது வரை மட்டுமே, அவனுடன் மிக நெருக்கமாக இருந்தாள். அதன் பின், பாசம் இருந்த அளவிற்கு, கண்டிப்பும் இருந்தது.
ராமிற்கு தாயும், தந்தையுமாக ரம்யா இருந்ததால், எந்த குழந்தைக்கும் 15, 16 வயதில் வரும் அப்பாவின் மீதான கோபம், தன் சுதந்திரம் பறிக்கப்படுவதாக வரும் எண்ணம், ராமிற்கு வந்த பொழுது, அதற்கு காரணம் ரம்யாதான் என்று எண்ணினான்.
இடைப்பட்ட காலங்களில் ரம்யா, படிப்பை முடித்திருந்தாள். கோவையின் தொழிலதிபர் ஆகியிருந்தாள். அவள் அழகையும், நிலையையும் நினைத்து, அவளை அணுக முயன்றவர்களிடம், அவள் நெருப்பு என்று நிரூபித்திருந்தாள்.
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/Ckk7b2qMBFs/maxresdefault.jpg)
நேரடியாக வெல்ல முடியாவிட்டால், அவர்களைப் பற்றி கிசுகிசுக்களையும், அவதூறுகளையும் பரப்பும் கூட்டம், ஒரு பெண், அதுவும் அழகான பெண் ஜெயிக்கிறாள் என்றால் சும்மா இருக்குமா?
ஆனால், எந்தப் பேச்சுக்களும், அவளுடைய வெற்றியை பாதிக்கவேயில்லை! அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளவும் இல்லை! ரம்யா ஒரு ஐகானாக மாறியிருந்தாள்.
கணேசனோ, அரசியலில் இன்னும் செல்வாக்கு பெற்றிருந்தார். ரம்யாவிற்கு துணையாக இருக்க, அரசியலில் இருந்து ஒதுங்க நினைத்தவரை, ரம்யாதான் விடவில்லை! இப்போது மாநில அரசியலில் இருந்து, மத்திய அரசியலுக்கு சென்றிருந்தார். கோவையின் சில தொகுதிகளில் இவர் நினைப்பவர்தான் சட்டமன்ற உறுப்பினர்.
எந்தக் குழந்தைக்கும் முதலில் வரும், அப்பாவின் மீதான ஏக்கம் ராமிற்கும் வந்தது. உள்ளுக்குள் எவ்வளவு அன்பு இருந்தாலும், முழுதாக காட்டாத ரம்யாவின் பாசத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் ராமிற்கு வரவில்லை. அவனது தனிமை உணர்வு, அவனுக்குள் கொஞ்சம் கோபமாக மாறியது.
பதின்ம வயதுகளில் வரும் தடுமாற்றம், கண் முன்னே இருக்கும் காசு, அதிகாரம் கொடுக்கும் திமிர், அதே பணக்காரத் திமிரில் வளைய வரும் கூட்டத்தின் நட்பு, இவை எல்லாவற்றையும் தாண்டி அப்பா மீதான ஏக்கமும், அவரையும், ரம்யாவையும் பற்றி வெளியே பேசும் சில பேச்சுக்களும் இவன் காதில் விழ, இவனது கோபமும், பிடிவாதமும், அந்த வயதிற்குரிய தடுமாற்றமும் சேர்ந்து இவனை, லேசாகத் தடம் மாற வைத்தது.
தன்னுடைய 16வது பிறந்த நாளுக்கு வெளியே சென்றவன், திரும்பி வரும் போது குடித்திருந்தான்! அதை விட முக்கியம், இதுல என்ன தப்பு என்று ரம்யாவிடம் கேட்டதுதான்!
தன் மகனுடைய செயலைக் கண்டு வெகுண்டவள், முதன் முதலாக அவனை அறைந்தாள். அவள் அறைந்த பின் தான், ராமிற்கு ஒன்று உறைத்தது! அது,
பாசமே காமிக்கவில்லை என்று குற்றம் சொன்ன தன் அம்மா, இதுவரை நினைவு தெரிந்து, தன்னை அடித்ததேயில்லை என்று?!
அடித்ததானால் முதலில் அவனுக்கு கோபம் வந்தது. பின் அவனுக்கு அவமானமாய் இருந்தது. ஆனால் நிதானமடைந்து பார்க்கையில்தான் அவனுக்கு இன்னொன்றும் புரிந்தது. அது,
அவ்வளவு கோபத்திலும், வேலைக்காரர்கள் முன்னிலையில் அடிக்காமல், ராமின் அறைக்கு கூட்டி வந்து அடித்தாள் என்பதும், அடித்த பின்பும், ரம்யாவின் கண்களில் இன்னும் கண்ணீர் மீதமிருந்ததையும்!
அவள் இடையில் புலம்பியது ஒன்றுதான்.
நீயும் என்னை ஏமாத்துறியேடா?!
![[Image: AAHVANAM.jpg]](http://chaibisket.com/wp-content/uploads/2017/09/AAHVANAM.jpg)
அவளது அடி கொடுக்காத வலியை, அவளது சொற்களும், கண்ணீரும் கொடுத்தது. ராம், ரம்யாவின் வளர்ப்பு என்பதால், உடனே சுதாரித்துக் கொண்டான். தவறு தன்னுடையது என்று புரிந்தவன், நேராகச் சென்று நின்றது, தாத்தா கணேசனிடம்!
ஆனால் அவரோ, ரம்யா அழுததைக் கேட்டு, மிகவும் சந்தோஷமடைந்தார்!
என்ன தாத்தா, நான் தப்பு பண்ணிட்டேன்னு சொன்னதுக்கு, கோபப்பட மாட்டேங்குறீங்க? அம்மா அழுததுக்கு சந்தோஷப்படுறீங்க?
இல்லடா கண்ணா, மனுஷன்னா சிரிக்கனும், அழனும், தப்பு பண்ணனும், செஞ்ச தப்பை உணரணும், அதுலருந்து பாடம் கத்துக்கனும்.
எப்ப நான் தப்பு பண்ணிட்டேன்னு நீயா வந்து சொன்னியோ, அதுவே எனக்கு சந்தோஷம்! உன் வயசுக்கு, செஞ்ச தப்பை ஒத்துகிட்டது ரொம்பப் பெரிய விஷயம்!
ஆனா, உங்க அம்மா, அழுதோ, சிரிச்சோ, சந்தோசம், துக்கம் எதையும் வெளிகாட்டியோ இந்தப் 16 வருஷமா பாத்ததேயில்லை!
நீ குழந்தையா இருக்குறப்ப, அவளும் குழந்தையா உன் கூட விளையாடுனா! உனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சதுக்கப்புறம் அதையும் குறைச்சுகிட்டா! என் காது படவே என்னென்னமோ பேசுற கூட்டம், உங்க அம்மா காது பட, என்னென்ன பேசியிருப்பாங்க?! அதுவே, அவளை பாதிச்சிருக்கும்! எல்லாத்துக்கும் ஒரே மாதிரி இருக்க பழகிட்டா!
இந்த வயசுல உனக்கு, உன் அப்பாவைப் பத்தி பேச்சு கேக்குறதே கஷ்டம்னா, அவ என்னென்ன கேட்டிருப்பா? உன்னை வயத்துல சுமந்தப்ப, அவளுக்கு உன்னை விட வயசு கம்மிடா! என்னதான் என் பதவி, செல்வாக்கு அவளுக்கு துணையா இருந்தாலும், கருவை அழிக்க மாட்டேன்னு அவ முடிவு எடுத்தப்ப, கல்யாணமும் நடக்கலை, என்னோட சப்போர்ட் கிடைக்குமான்ன்னும் அவளுக்கு தெரியாது! அவ வாழ்க்கைல ஃபேஸ் பண்ண கஷ்டத்தை விடவா, நீ ஃபேஸ் பண்ணிட்ட?
இந்தக் கஷ்டமே தாங்க முடியலைன்னு நீ குடிக்கிறன்னா, உங்க அம்மாதாண்டா நிறைய குடிக்கனும்!
எல்லாத்துக்கும் அமைதியா இருந்தவ, இன்னிக்கு அழுதான்னா, அதுதாண்டா உன் மேல வெச்சிருக்கிற பாசம்! இப்பிடியே உணர்ச்சியை அடக்கி, அடக்கி, அவளுக்கு ஏதாவது ஆயிருமோன்னு கூட பயந்திருக்கேன்!
உன் மேல இருக்கிறது வெறும் பாசம் மட்டுமில்லை! முழு நம்பிக்கை! அதை நீ காப்பாத்துனாலே போதுண்டா! அவ, சந்தோஷமா இருப்பா! நீதாண்டா அவளுக்கு சந்தோஷத்தைத் தரணும்!
தாத்தாவின் பேச்சு, அன்று ராமை முழுக்க மாற்றியிருந்தது. இதுவரை அவனுக்கு அவமானமாய் இருந்த விஷயம், இப்போது மிகவும் பெருமையாய் மாறியிருந்தது! ரம்யாவின் மீதான அவன் பாசம், பன் மடங்கு உயர்ந்திருந்தது!
இயல்பிலேயே மிகவும் புத்திசாலியான, நல்லவனான ராம் இன்னொன்றும் கவனித்திருந்தான். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ரம்யாவிடம், வெறும் அன்பு சாதிக்காததை, அன்பு கலந்த அதட்டல் எப்போழுதும் சாதிக்கும்!
ராம் மீண்டும் போய், பாசத்தை மட்டும் காட்டியிருந்தால், ரம்யாவும், தன் கூட்டுக்குள் சென்றிருப்பாள். ஆனால் ராம் காட்டியது பாசம் மட்டுமல்ல! Man of the House என்று சொல்லப்படும், அன்பையும், அதிகாரத்தையும் காட்டினான்!
அவனை அறைந்த பின், அடுத்த நாள் முழுதும் அவனிடம் பேசாதவள், உள்ளுக்குள் வருத்தத்துடனும், கோபத்துடனும் இருந்த சமயத்தில்தான், ராம் அந்தச் செயலை செய்தான்!
குளித்து முடித்து, சோஃபாவில் அவளருகே சென்று அமர்ந்தவன், அவளது தோள்களைச் சுற்றி கைகளைப் போட்டு, அவளைத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டான்! அதுவும் பட்டப் பகலில், நடு ஹாலில்!
ராமின் செயலைக் கண்டு அவள் விலக நினைத்தாலும், அவனது பிடி அவளை விடவேயில்லை! அவளைப் போலவே, அவனும் வெளிப்படையாக அன்பு காட்டியதில்லை! அப்படியிருக்கையில்….
என்ன பண்ற ராம்?
என் அம்மாகிட்ட சாரி கேக்குறேன்! இனி இப்டி நடக்காதுன்னு சொல்லுறேன்! என் அம்மா இவ்ளோ ஃபீல் பண்ண வேணாம்னு சொல்றேன்! இனி எங்க அம்மாவுக்கு நான் இருக்கேன்னு சொல்றேன்! அவளை நான் பாத்துக்குவேன்னு சொல்றேன்!
இவ்வளவு நேரம் வருத்தத்தில் இருந்தவளின் மனம் பூரித்தது. ராமையே பார்த்தாள். தன்னையறியாமல் அவனது தோள்களில் சாய்ந்தாள்!
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/iddQkqR4F3k/maxresdefault.jpg)
எப்பேர்பட்ட தைரியசாலியும், தனியாக எதையும் சந்தித்து விட முடியாது! திருமணம் என்ற பந்தமே, இந்த நம்பிக்கையைத்தான் கொடுக்கிறது! வலிமையான ஆணுக்கு, மென்மையான பெண்ணின் மார்புகளுக்கிடையில் கிடைக்கும் நம்பிக்கையும், மென்மையான பெண்ணுக்கு, உறுதியான ஆணின் கைப்பிடிக்குள், அவனது தோள்களில் சாயும் போது கிடைக்கும் நம்பிக்கையும் ஒன்றே!
என்னதான் வெளியில் மிகவும் திடமாக இருந்தாலும், அவளும் என்றாவது ஓய்ந்து சாயும் போது, தோள்கள் இல்லையே என்று உள்ளுக்குள் ஏங்கியிருக்கிறாள்!
அன்பாய், ஆறுதலாய், சமயங்களில் அதிகாரமாய் ஒரு பெண்ணை அணைக்கும், ஆணின் தோள்களை விட சுகமான தூக்கத்தை, எந்தப் படுக்கையும் கொடுத்து விடாது.
அந்த நாளிலிருந்து, ராம், அந்த வீட்டின் தலைவனாக மாறினான்! எந்த இடத்திலும் ரம்யாவின் முக்கியத்துவத்தைக் குறைக்காதவன், ரம்யாவே, உள்ளுக்குள் களைப்பாகவும், பலவீனமாகவும் உணரும் சமயத்தில், அவளைத் தோள் தாங்கினான்.
என்னதான் உணர்வுகளை வெளிக்காட்டாவிட்டாலும், என்னை எப்படி புரிந்து கொள்கிறான் என்று ரம்யாவிற்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது!
அவனது முடிவுகள் தெளிவாக இருந்தன. ரம்யாவின் மீதான அன்பு மிகவும் வெளிப்படையாக இருந்தது. ரம்யாவிற்கு இருந்த அதே பக்குவம், இவனுக்கும் வந்திருந்தது!
சமயங்களில் ரம்யாவே, மிகவும் குழப்பமாகவோ, வருத்தமாகவோ இருக்கும் சமயங்களில் அவனுக்கு அழைப்பாள். அவனிடம் சும்மா பேசுவதே, அவளுக்கு தெளிவைக் கொடுத்தது. அவளது குரலை வைத்தே, அவளுடைய மனநிலையை அவன் புரிந்து கொள்வான். அதற்கேற்றார் போல், இலகுவாகவோ, கிண்டலாகவோ பேசி அவளது மனநிலையை மாற்றுவான்!
மிகச் சில சமயங்களில், அவளது குரலைக் கேட்டவுடன், அவனுக்கு புரிந்து விடும். அவள் சாய்ந்து கொள்ள அவன் தோள்கள் தேவை என்று! அடுத்த நிமிடம், அவன் ரம்யாவின் அருகில் இருப்பான்! அவனது கைகள், அவளது தோள்களைச் சுற்றி இருக்கும்!
ஆனாலும் ராமிற்கும் ஒரு குறை இருக்கும்! என்னதான் தன் தோள்களில் மட்டும் அவள் நிம்மதியைக் கண்டாலும், தன்னுடைய அன்பை அவள் பெரிதும் விரும்புகிறாள் என்றாலும், அவள் இன்னும் மனதைப் பூட்டிதான் வைத்திருக்கிறாள் என்ற வருத்தம்தான் அது!
ரம்யாவின், பூட்டி வைக்கப்பட்ட மனக்கதவுகளின் பூட்டை உடைத்தது ராம் என்றால், அந்தக் கதவுகளை, முழுக்கத் திறந்து விட்டது ப்ரியாதான்! ப்ரியா, ஒருவகையில், இன்னொரு ரம்யா!
இந்தக் கதையை, ராமிடம் கணேசன் சொல்லும் போது, ராமின் வயது 16.
உணர்வுகளை அதிகம் வெளிக்காட்டாத ரம்யா, ராமின் 5 வயது வரை மட்டுமே, அவனுடன் மிக நெருக்கமாக இருந்தாள். அதன் பின், பாசம் இருந்த அளவிற்கு, கண்டிப்பும் இருந்தது.
ராமிற்கு தாயும், தந்தையுமாக ரம்யா இருந்ததால், எந்த குழந்தைக்கும் 15, 16 வயதில் வரும் அப்பாவின் மீதான கோபம், தன் சுதந்திரம் பறிக்கப்படுவதாக வரும் எண்ணம், ராமிற்கு வந்த பொழுது, அதற்கு காரணம் ரம்யாதான் என்று எண்ணினான்.
இடைப்பட்ட காலங்களில் ரம்யா, படிப்பை முடித்திருந்தாள். கோவையின் தொழிலதிபர் ஆகியிருந்தாள். அவள் அழகையும், நிலையையும் நினைத்து, அவளை அணுக முயன்றவர்களிடம், அவள் நெருப்பு என்று நிரூபித்திருந்தாள்.
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/Ckk7b2qMBFs/maxresdefault.jpg)
நேரடியாக வெல்ல முடியாவிட்டால், அவர்களைப் பற்றி கிசுகிசுக்களையும், அவதூறுகளையும் பரப்பும் கூட்டம், ஒரு பெண், அதுவும் அழகான பெண் ஜெயிக்கிறாள் என்றால் சும்மா இருக்குமா?
ஆனால், எந்தப் பேச்சுக்களும், அவளுடைய வெற்றியை பாதிக்கவேயில்லை! அவள் எதற்கும் அலட்டிக் கொள்ளவும் இல்லை! ரம்யா ஒரு ஐகானாக மாறியிருந்தாள்.
கணேசனோ, அரசியலில் இன்னும் செல்வாக்கு பெற்றிருந்தார். ரம்யாவிற்கு துணையாக இருக்க, அரசியலில் இருந்து ஒதுங்க நினைத்தவரை, ரம்யாதான் விடவில்லை! இப்போது மாநில அரசியலில் இருந்து, மத்திய அரசியலுக்கு சென்றிருந்தார். கோவையின் சில தொகுதிகளில் இவர் நினைப்பவர்தான் சட்டமன்ற உறுப்பினர்.
எந்தக் குழந்தைக்கும் முதலில் வரும், அப்பாவின் மீதான ஏக்கம் ராமிற்கும் வந்தது. உள்ளுக்குள் எவ்வளவு அன்பு இருந்தாலும், முழுதாக காட்டாத ரம்யாவின் பாசத்தை புரிந்து கொள்ளும் பக்குவம் ராமிற்கு வரவில்லை. அவனது தனிமை உணர்வு, அவனுக்குள் கொஞ்சம் கோபமாக மாறியது.
பதின்ம வயதுகளில் வரும் தடுமாற்றம், கண் முன்னே இருக்கும் காசு, அதிகாரம் கொடுக்கும் திமிர், அதே பணக்காரத் திமிரில் வளைய வரும் கூட்டத்தின் நட்பு, இவை எல்லாவற்றையும் தாண்டி அப்பா மீதான ஏக்கமும், அவரையும், ரம்யாவையும் பற்றி வெளியே பேசும் சில பேச்சுக்களும் இவன் காதில் விழ, இவனது கோபமும், பிடிவாதமும், அந்த வயதிற்குரிய தடுமாற்றமும் சேர்ந்து இவனை, லேசாகத் தடம் மாற வைத்தது.
தன்னுடைய 16வது பிறந்த நாளுக்கு வெளியே சென்றவன், திரும்பி வரும் போது குடித்திருந்தான்! அதை விட முக்கியம், இதுல என்ன தப்பு என்று ரம்யாவிடம் கேட்டதுதான்!
தன் மகனுடைய செயலைக் கண்டு வெகுண்டவள், முதன் முதலாக அவனை அறைந்தாள். அவள் அறைந்த பின் தான், ராமிற்கு ஒன்று உறைத்தது! அது,
பாசமே காமிக்கவில்லை என்று குற்றம் சொன்ன தன் அம்மா, இதுவரை நினைவு தெரிந்து, தன்னை அடித்ததேயில்லை என்று?!
அடித்ததானால் முதலில் அவனுக்கு கோபம் வந்தது. பின் அவனுக்கு அவமானமாய் இருந்தது. ஆனால் நிதானமடைந்து பார்க்கையில்தான் அவனுக்கு இன்னொன்றும் புரிந்தது. அது,
அவ்வளவு கோபத்திலும், வேலைக்காரர்கள் முன்னிலையில் அடிக்காமல், ராமின் அறைக்கு கூட்டி வந்து அடித்தாள் என்பதும், அடித்த பின்பும், ரம்யாவின் கண்களில் இன்னும் கண்ணீர் மீதமிருந்ததையும்!
அவள் இடையில் புலம்பியது ஒன்றுதான்.
நீயும் என்னை ஏமாத்துறியேடா?!
![[Image: AAHVANAM.jpg]](http://chaibisket.com/wp-content/uploads/2017/09/AAHVANAM.jpg)
அவளது அடி கொடுக்காத வலியை, அவளது சொற்களும், கண்ணீரும் கொடுத்தது. ராம், ரம்யாவின் வளர்ப்பு என்பதால், உடனே சுதாரித்துக் கொண்டான். தவறு தன்னுடையது என்று புரிந்தவன், நேராகச் சென்று நின்றது, தாத்தா கணேசனிடம்!
ஆனால் அவரோ, ரம்யா அழுததைக் கேட்டு, மிகவும் சந்தோஷமடைந்தார்!
என்ன தாத்தா, நான் தப்பு பண்ணிட்டேன்னு சொன்னதுக்கு, கோபப்பட மாட்டேங்குறீங்க? அம்மா அழுததுக்கு சந்தோஷப்படுறீங்க?
இல்லடா கண்ணா, மனுஷன்னா சிரிக்கனும், அழனும், தப்பு பண்ணனும், செஞ்ச தப்பை உணரணும், அதுலருந்து பாடம் கத்துக்கனும்.
எப்ப நான் தப்பு பண்ணிட்டேன்னு நீயா வந்து சொன்னியோ, அதுவே எனக்கு சந்தோஷம்! உன் வயசுக்கு, செஞ்ச தப்பை ஒத்துகிட்டது ரொம்பப் பெரிய விஷயம்!
ஆனா, உங்க அம்மா, அழுதோ, சிரிச்சோ, சந்தோசம், துக்கம் எதையும் வெளிகாட்டியோ இந்தப் 16 வருஷமா பாத்ததேயில்லை!
நீ குழந்தையா இருக்குறப்ப, அவளும் குழந்தையா உன் கூட விளையாடுனா! உனக்கு விவரம் தெரிய ஆரம்பிச்சதுக்கப்புறம் அதையும் குறைச்சுகிட்டா! என் காது படவே என்னென்னமோ பேசுற கூட்டம், உங்க அம்மா காது பட, என்னென்ன பேசியிருப்பாங்க?! அதுவே, அவளை பாதிச்சிருக்கும்! எல்லாத்துக்கும் ஒரே மாதிரி இருக்க பழகிட்டா!
இந்த வயசுல உனக்கு, உன் அப்பாவைப் பத்தி பேச்சு கேக்குறதே கஷ்டம்னா, அவ என்னென்ன கேட்டிருப்பா? உன்னை வயத்துல சுமந்தப்ப, அவளுக்கு உன்னை விட வயசு கம்மிடா! என்னதான் என் பதவி, செல்வாக்கு அவளுக்கு துணையா இருந்தாலும், கருவை அழிக்க மாட்டேன்னு அவ முடிவு எடுத்தப்ப, கல்யாணமும் நடக்கலை, என்னோட சப்போர்ட் கிடைக்குமான்ன்னும் அவளுக்கு தெரியாது! அவ வாழ்க்கைல ஃபேஸ் பண்ண கஷ்டத்தை விடவா, நீ ஃபேஸ் பண்ணிட்ட?
இந்தக் கஷ்டமே தாங்க முடியலைன்னு நீ குடிக்கிறன்னா, உங்க அம்மாதாண்டா நிறைய குடிக்கனும்!
எல்லாத்துக்கும் அமைதியா இருந்தவ, இன்னிக்கு அழுதான்னா, அதுதாண்டா உன் மேல வெச்சிருக்கிற பாசம்! இப்பிடியே உணர்ச்சியை அடக்கி, அடக்கி, அவளுக்கு ஏதாவது ஆயிருமோன்னு கூட பயந்திருக்கேன்!
உன் மேல இருக்கிறது வெறும் பாசம் மட்டுமில்லை! முழு நம்பிக்கை! அதை நீ காப்பாத்துனாலே போதுண்டா! அவ, சந்தோஷமா இருப்பா! நீதாண்டா அவளுக்கு சந்தோஷத்தைத் தரணும்!
தாத்தாவின் பேச்சு, அன்று ராமை முழுக்க மாற்றியிருந்தது. இதுவரை அவனுக்கு அவமானமாய் இருந்த விஷயம், இப்போது மிகவும் பெருமையாய் மாறியிருந்தது! ரம்யாவின் மீதான அவன் பாசம், பன் மடங்கு உயர்ந்திருந்தது!
இயல்பிலேயே மிகவும் புத்திசாலியான, நல்லவனான ராம் இன்னொன்றும் கவனித்திருந்தான். உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத ரம்யாவிடம், வெறும் அன்பு சாதிக்காததை, அன்பு கலந்த அதட்டல் எப்போழுதும் சாதிக்கும்!
ராம் மீண்டும் போய், பாசத்தை மட்டும் காட்டியிருந்தால், ரம்யாவும், தன் கூட்டுக்குள் சென்றிருப்பாள். ஆனால் ராம் காட்டியது பாசம் மட்டுமல்ல! Man of the House என்று சொல்லப்படும், அன்பையும், அதிகாரத்தையும் காட்டினான்!
அவனை அறைந்த பின், அடுத்த நாள் முழுதும் அவனிடம் பேசாதவள், உள்ளுக்குள் வருத்தத்துடனும், கோபத்துடனும் இருந்த சமயத்தில்தான், ராம் அந்தச் செயலை செய்தான்!
குளித்து முடித்து, சோஃபாவில் அவளருகே சென்று அமர்ந்தவன், அவளது தோள்களைச் சுற்றி கைகளைப் போட்டு, அவளைத் தன் தோள்களில் சாய்த்துக் கொண்டான்! அதுவும் பட்டப் பகலில், நடு ஹாலில்!
ராமின் செயலைக் கண்டு அவள் விலக நினைத்தாலும், அவனது பிடி அவளை விடவேயில்லை! அவளைப் போலவே, அவனும் வெளிப்படையாக அன்பு காட்டியதில்லை! அப்படியிருக்கையில்….
என்ன பண்ற ராம்?
என் அம்மாகிட்ட சாரி கேக்குறேன்! இனி இப்டி நடக்காதுன்னு சொல்லுறேன்! என் அம்மா இவ்ளோ ஃபீல் பண்ண வேணாம்னு சொல்றேன்! இனி எங்க அம்மாவுக்கு நான் இருக்கேன்னு சொல்றேன்! அவளை நான் பாத்துக்குவேன்னு சொல்றேன்!
இவ்வளவு நேரம் வருத்தத்தில் இருந்தவளின் மனம் பூரித்தது. ராமையே பார்த்தாள். தன்னையறியாமல் அவனது தோள்களில் சாய்ந்தாள்!
![[Image: maxresdefault.jpg]](https://i.ytimg.com/vi/iddQkqR4F3k/maxresdefault.jpg)
எப்பேர்பட்ட தைரியசாலியும், தனியாக எதையும் சந்தித்து விட முடியாது! திருமணம் என்ற பந்தமே, இந்த நம்பிக்கையைத்தான் கொடுக்கிறது! வலிமையான ஆணுக்கு, மென்மையான பெண்ணின் மார்புகளுக்கிடையில் கிடைக்கும் நம்பிக்கையும், மென்மையான பெண்ணுக்கு, உறுதியான ஆணின் கைப்பிடிக்குள், அவனது தோள்களில் சாயும் போது கிடைக்கும் நம்பிக்கையும் ஒன்றே!
என்னதான் வெளியில் மிகவும் திடமாக இருந்தாலும், அவளும் என்றாவது ஓய்ந்து சாயும் போது, தோள்கள் இல்லையே என்று உள்ளுக்குள் ஏங்கியிருக்கிறாள்!
அன்பாய், ஆறுதலாய், சமயங்களில் அதிகாரமாய் ஒரு பெண்ணை அணைக்கும், ஆணின் தோள்களை விட சுகமான தூக்கத்தை, எந்தப் படுக்கையும் கொடுத்து விடாது.
அந்த நாளிலிருந்து, ராம், அந்த வீட்டின் தலைவனாக மாறினான்! எந்த இடத்திலும் ரம்யாவின் முக்கியத்துவத்தைக் குறைக்காதவன், ரம்யாவே, உள்ளுக்குள் களைப்பாகவும், பலவீனமாகவும் உணரும் சமயத்தில், அவளைத் தோள் தாங்கினான்.
என்னதான் உணர்வுகளை வெளிக்காட்டாவிட்டாலும், என்னை எப்படி புரிந்து கொள்கிறான் என்று ரம்யாவிற்கு ஆச்சரியமாகவும், பெருமையாகவும் இருந்தது!
அவனது முடிவுகள் தெளிவாக இருந்தன. ரம்யாவின் மீதான அன்பு மிகவும் வெளிப்படையாக இருந்தது. ரம்யாவிற்கு இருந்த அதே பக்குவம், இவனுக்கும் வந்திருந்தது!
சமயங்களில் ரம்யாவே, மிகவும் குழப்பமாகவோ, வருத்தமாகவோ இருக்கும் சமயங்களில் அவனுக்கு அழைப்பாள். அவனிடம் சும்மா பேசுவதே, அவளுக்கு தெளிவைக் கொடுத்தது. அவளது குரலை வைத்தே, அவளுடைய மனநிலையை அவன் புரிந்து கொள்வான். அதற்கேற்றார் போல், இலகுவாகவோ, கிண்டலாகவோ பேசி அவளது மனநிலையை மாற்றுவான்!
மிகச் சில சமயங்களில், அவளது குரலைக் கேட்டவுடன், அவனுக்கு புரிந்து விடும். அவள் சாய்ந்து கொள்ள அவன் தோள்கள் தேவை என்று! அடுத்த நிமிடம், அவன் ரம்யாவின் அருகில் இருப்பான்! அவனது கைகள், அவளது தோள்களைச் சுற்றி இருக்கும்!
ஆனாலும் ராமிற்கும் ஒரு குறை இருக்கும்! என்னதான் தன் தோள்களில் மட்டும் அவள் நிம்மதியைக் கண்டாலும், தன்னுடைய அன்பை அவள் பெரிதும் விரும்புகிறாள் என்றாலும், அவள் இன்னும் மனதைப் பூட்டிதான் வைத்திருக்கிறாள் என்ற வருத்தம்தான் அது!
ரம்யாவின், பூட்டி வைக்கப்பட்ட மனக்கதவுகளின் பூட்டை உடைத்தது ராம் என்றால், அந்தக் கதவுகளை, முழுக்கத் திறந்து விட்டது ப்ரியாதான்! ப்ரியா, ஒருவகையில், இன்னொரு ரம்யா!