Thriller அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா
#9
ராக்கியின் கணவன் செல்வம் தீபாவின் கணவன் முருகன் இருவருமே அனைத்திந்திய மக்கள் கலகத்தின் தொண்டர்கள். தேர்தல் சமயங்களில் அந்தந்த ஏரியா மக்களுக்கு பணம் தரும் பொறுப்பை முருகன் இந்த முறை செம்மையாக செய்திருந்தான். அதனால்தான் எம்எல்ஏவாக சிவநேசன் இருக்கிறார். முருகனுக்காக என்றால் எம்எல்ஏ பணம் தருவார் என செல்வத்திற்கு தோன்றியது.

"ராக்கி.. தீபாவ எம்எல்ஏ கிட்ட கூட்டியிட்டு போயி உதவி கேட்டு வரலாமா"
"என்னய்யா நம்மலையெல்லாம் எம்எல்ஏ பார்ப்பாரைய்யா?"
"நமக்கு வேற கதி ஏதும் இருக்கா சொல்லு" என திருப்பி கேள்வி கேட்டான். ராக்கி தலையை சொறிந்து கொண்டாள்.
"நீ தீபாவாண்டையே கேட்டுக்கோ." என விலகி..

"அடியே தீபா.. செல்வம் அண்ணன் மரத்தாண்ட கூப்பிடுது போ" என்று தாட்டிவிட்டு அவள் குழந்தையை தோளில் தூக்கி செல்வதையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.

"ஏன்னாண்ணா கூப்பிடியா?" என தீபா வர..
"ஐந்து லட்சம் ஆவுமுனு டாக்டர் சொல்லி அனுப்பறாங்களே.. புரட்ட வழி ஏதாச்சும் யோசிச்சியா?" என்றான்.
"ம்.. என்கிட்ட என்னான்ணா இருக்கு. உனக்கு தெரியாததா?." என எதிர் கேள்வி கேட்டாள்.

"ஏம்மா முருகன் காசு, நகைனு வீட்டுல வைச்சிருக்கானா.."
"ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லைன்ணா. தாலியவே பாரு.. மஞ்சள் போட்டுதான் கட்டிபோட்டிருக்கேன்" என கழுத்து கயிறை நீட்டினாள்.

“பணமா ஏதாவது ?”
“இல்லைன்ணே ஒரு ருபாய் கூட இல்லை.”
“இப்போ என்ன செய்ய போற? எப்படி உன் புருசன காப்பாத்த போற?”
“தெரியலைன்ணே... அவர் செத்தா நாங்களும் செத்துருவோம். எங்களுக்குனு வேற யாரு இருக்கா. ” என தீபா குழந்தையை கட்டிக்கொண்டு அழுதாள்.

“சரிம்மா அழுவாத. என்கிட்ட ஒரு யோசனை இருக்கு. சொல்றேன் கேக்குறியா”? என்றான் செல்வம்.
“என்னானு சொல்லுங்கன்ணே.”
"எம்எல்ஏ சிவநேசன்கிட்ட போவோம். அவரோட இந்த வெற்றிக்கு உழைச்சவங்கள நம்ம முருகனும் ஒருத்தன். அவரு நினைச்சா உதவலாம்."
"சரிண்ணே போவோம். அவர்கிட்ட காலுல விழுந்து கெஞ்சியாச்சும் நான் காசோட வாரேன்".
செல்வத்திற்கும் தெம்பு வந்தது. ராக்கியை பார்த்து கையாட்டினான்.
"அடியே முருகனை பார்த்துக்கோ. நானும் தீபாவும் எம்எல்ஏவை பார்த்துட்டு வந்திடறோம்‌." என கத்தினான்.
"சரி" என‌ ராக்கி தலையை மட்டும் ஆட்டிவிட்டு உட்காந்து இருந்தாள்.

***

செல்வம், குழந்தையுடன் தீபாவை வண்டியில் வைத்தே எம்எல்ஏ பங்களாவுக்கு அழைத்து வந்துவிட்டான். ஆனால் எம்எல்ஏ பங்களா கேட் பூட்டி இருந்தது. அங்கிலிருந்த செக்கியூரிட்டியிடம்..
"எம்எல்ஏவை அவசரமா பார்க்கனும்" என்று சொன்னான்.
"யோவ் நேரம் என்னையா ஆவுது. இந்நேரத்துல போய் எம்எல்ஏவை பார்க்கனுமுனு. போ.. போயிட்டு நாளைக்கு காலையில வா" என்றான்.

"என்னைய அவருக்கு நல்லா தெரியும்யா." என்றான் செல்வம்.
"அட‌... போய்யா.. இங்க வரவன் எல்லாம் இதையேதான் சொல்லறான். உன்னையெல்லாம் அவருக்கு தெரியுமுனா.. நீ வரதை சொல்லி அவரே விட சொல்லுவாரு. அப்ப விடறேன். இப்ப போ" என விரட்டினான்.

"நம்ம கட்சி தொண்டன் முருகன் சாக கிடக்கிறாய்யா. அவரு எம்எம்ஏ ஆகா தேர்தல் நேரத்துல நாயா உழைச்சவன்ய்யா. இதை சொன்னா அவரே வந்திடுவாரு. நீ போய் சொல்லி பாரு. அவரே வருவாரு" என செல்வம் கெஞ்சினான். ஆனால் செக்யூரிட்டி அசைந்து கொடுக்கவில்லை. அப்போது கேட்டிற்கு பக்கத்திலிருந்து செல்வமுத்து பேச்சு சத்தம் கேட்டது.

"அண்ணா.. செல்வமுத்துண்ணா.. திடீர்குப்பம் செல்வம் வந்திருக்கேன்ணா.. முருகன் உசிருக்கு போராடிக்கிட்டு இருக்காண்ணா.." என செல்வம் கேட்டருகே வந்து கத்தினான். வானுயர இருந்த கருப்பு இரும்பு கேட்டிற்கு அந்தப்பக்கம் செல்வமுத்து காதிலும் இது விழுந்தது. செக்யூரிட்டி பதறினான்.
"யோவ் என் வேலைக்கு உலை வைச்சிடாதய்யா. போய்யா" என தள்ளிவிட்டான்.

செல்வம் தடுமாறி விழ.. தீபா ஓடி வந்து பிடித்தாள். அப்போது குழந்தை சிணுங்க தொடங்கியது. அதன் சிணுங்கள் ஓசையை கேட்டு செல்வமுத்து கண்கள் விரிந்தன. கேட்டிற்கு அந்தப்பக்கம் ஓடிப்போய் யாரென பார்த்தான். தலைவிரி கோலத்தில் முருகன் மனைவி குழந்தையோடு செல்வத்தை பிடித்துக் கொண்டிருந்தாள்.

"எலேய்.. செக்யூரிட்டி.. யாரு எவருனு தெரியாம.. போடா அங்கிட்டு" என செக்யூரிட்டியை விலக்கிவிட்டு..

"என்னாச்சு செல்வம்?" என கேட்டான் செல்வமுத்து. நடந்த கதையை பேசிக்கொண்டே மூவரும் பங்களாவுக்குள் நுழைந்தார்கள். ஹாலில் இருந்த சோபாவில் அவர்களை உட்கார வைத்து செல்வமுத்து சேரில் உட்கார்ந்து எல்லாவற்றையும் கேட்டுக்கொண்டார்..

பெருமூச்சு விட்டு தீபாவை பார்த்து "இதோ பாரும்மா. எம்எல்ஏவுக்கு ஏகப்பட்ட வேலை கிடக்கு. கோடிகணக்குல அவர் கையெழுத்துக்கு கொட்டிதர கம்பேனிகாரங்க காத்திருக்காங்க. இருந்தாலும் நம்ம முருகனுக்காக அவர்கிட்ட பேசறேன்." என செல்வமுத்து சொல்ல.. செல்வமும், தீபாவும் கையெடுத்து கும்பிட்டார்கள். செல்வமுத்து அங்கிருந்த வேலைக்காரியிடம் ஏதாவது அவங்களுக்கு தா என கட்டளையிட்டுவிட்டு உள்ளே சென்றான்.‌

***

வேலைக்காரி இரண்டு பெரிய கண்ணாடி டம்ளரில் ஜூசை எடுத்துவந்து வைத்தாள். இருவரும் குடித்தனர். தீபாவின் மடியில் இருந்த குழந்தை பசிக்கு அழத்தொடங்க.. எங்கு சென்று பால் தருவது என இங்கும் அங்கும் தீபா கண்களால் மறைவிடம் தேடினாள். அதைப் பார்த்து.. "குழந்தை கொஞ்சம் அழுதாலும் பரவாயில்லை தீபா. மொதல நீ ஜூசை குடி. காலையிலிருந்து ஒன்னுமில்லாம இருக்க. நீ தெம்பா இருந்தாதானே.. " என செல்வம் சொல்ல.. படபடவென ஜூசை குடித்தாள் தீபா.

"அம்மா தீபா.. உன்னை எம்எல்ஏ கூப்பிடறாரு.. உள்ளவா" என செல்வமுத்து சொல்ல..
"குழந்தை பசிக்கு அழுவுதுண்ணா.. பசியாத்திட்டு வந்திடறேன்" என மெதுவான குரலில் தீபா சொன்னாள்.
"என்னாம்மா.. நேரம்காலம் தெரியாம.. " என புலம்பிக் கொண்டு வேலைக்காரியை பார்த்தான்.
"ஏய்.. கமலா.. குழந்தையை வாங்கிட்டு போய் பசும்பாலை ஆத்தி கொடு. "
"செல்வம் குழந்தையை வாங்கி பார்த்துக்கோ" என அவனையும் வேலைக்காரியையும் குழந்தையோடு சமையல்கட்டிற்கு அனுப்பிவிட்டு செல்வமுத்து தீபாவை அழைத்து சென்றான்.

எம்எல்ஏ அறையை நெருங்கியதும்..
"தீபா.. நம்ம எம்எல்ஏ கிட்ட எல்லாம் சொல்லிட்டேன். உன் புருசன் முருகனுக்காக பணம்தரேனு சொல்லிட்டாரு.. ஆனா.." என‌தயங்கி நிறுத்தி தொடர்ந்தான். தீபா அவன் முகத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள்.
"மனுசன் கொஞ்சம் சபல ஆளு. ஏதாவது கேட்டா கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ. இந்த சமயத்துல லட்ச கணக்கான பணத்தை எம்எல்ஏ வை தவிர யாரும் தரமாட்டாங்க. அவர் மனசு நோகாம நடந்து பணத்தை வாங்கிற வழியை பாரு" என மேலோட்டமாக சொல்லி கதவை திறந்து உள்ளே தள்ளிவிட்டான்.
***
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா - by sagotharan - 09-08-2022, 08:47 AM



Users browsing this thread: 2 Guest(s)