Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#60
♨️

முத்து சென்று கூறியதை வைத்து
இளைய மகன் வந்துவிட்டதை
அறிந்து பூபதியும் தெய்வாவும் வாசலுக்கு ஓடிவர
அவர்களுக்குப் பின்னாலேயே சரசூ பாட்டியும் பொம்மியும் வந்தார்கள் ....

♨️


மூன்று படிகள் ஏறியிருந்தவனை 4அம் படிகள் இறங்கி வந்து " ஏவே சத்யா ....."
என்று அணைத்துக் கொண்ட பூபதி
" ஏன்ய்யா ராசு ....
இத்தனை மணிக்கு வர்றேன்னு சொல்லிருந்தா
நான் காரை எடுத்துக்கிட்டு
திருநெல்வேலிக்கே வந்திருப்பேனே?" என்றார் ...

♨️


" என்னது காரா? .... யப்பா அதை காருன்னு வெளிய சொல்லாதீங்க ....
அதை விட நம்ம மாட்டு வண்டியே தேவலை"
 என்று பின்னாலிருந்து கேலி செய்தாள் பொம்மி ...

♨️


அவ்வளவு நேரம் இருந்த மனநிலை மாறி சந்தோஷம் வந்து ஒட்டிக் கொள்ள... " 
ய் வாலு ? வளர்ந்துட்டயே ?"
என்று தங்கையிடம் கூறியவன்
தனது அம்மாவின் காலைத் தொட்டு கண்களில் ஒற்றிக் கொண்டவன் " எப்படிம்மா இருக்க ?"
என்று கேட்டான் ..

♨️



மகனைப் பார்த்த சந்தோஷத்தில் விழிகள் குளமாக .... " எனக்கென்னய்யா ராசு ..
. நல்லாருக்கேன் ...
நீதான் ரொம்ப இளைச்சுப் போயிருக்க
" என்று மகனின் குழிந்த தாடையை வருடியபடி தாயாய் கலங்கினாள் ...

♨️



" ம்ம் ,, சாப்பிட நேரமில்லாதபடி 
டிக்கிற வேலை அதிகம்மா ...
இனி ஒரு மாசத்துக்கு இங்கதான்..
உன் கையால சாப்பிட்டு உடம்பை தேத்திக்கிட்டுப் போக வேண்டியதுதான் "
 என்றான்


♨️

" இதென்னடி கூத்து? 
ந்த புள்ளைய வெளியவே நிறுத்திப் பேசிக்கிட்டு ?
வீட்டுக்குள்ள வர்ற மாதிரி யோசனையில்லையா?"
சரசூ பாட்டியின் குரல் உச்சத்தில் கேட்கவும்
அத்தனை பேரும் அவசரமாக வீட்டுக்குள் நுழைந்தனர் .

♨️..

By. Zinu♨️❤
thanks
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 28-04-2022, 11:57 PM



Users browsing this thread: