Romance ♨️ மரணமில்லா உணர்வுகள்♨️ stopped no more update♨️
#5
♨️♨️♨️

பரம ஏழை என்று யாரும் இல்லாதளவிற்கு
சற்று செழிப்பான ஊர்தான்....
உழைத்தால் ஊதியம்
என்று
அத்தனை பேரும்
 ஏதாவது ஒரு தொழிலை கைவசம் வைத்திருந்தனர் .... விவசாயத்தின்
செழுமையும்

♨️♨️♨️

அந்த கிராமத்தை வாடிவிடாமல் புத்துணர்வோடு வைத்திருந்தது ....

♨️♨️♨️

ஊர் மத்தியில் மாகாளியம்மன் கோயில் ..
. கோயிலைச் சுற்றிலும்
 இரண்டு அடுக்காக
 நான்கு வழி வீதிகள்
கொண்ட எட்டுத் தெருக்கள் ..

. எட்டுத் தெருக்களிலும் சிறியதும் பெரியதுமாக மொத்தமாக அறுநூற்றம்பது வீடுகள் .....

♨️♨️♨️

ஊரக வளர்ச்சியில்
 எத்தனையோ  வீடுகள் சிமிண்ட் தளம் போடப்பட்ட மச்சு வீடுகளாக மாறிவிட்டாலும்
 ஒரேயொரு வீடு மட்டுமே ஊர் மக்கள் மச்சுவீடு என்று குறிப்பிட்டு அழைக்கும் பாக்கியம் பெற்றிருந்தது .
... காரணம்
ஊரில்
முதன் முதலாக சிமின்ட் தளம் போட்டுக் கட்டப்பட்ட வீடு என்பதால் இன்றும் அப்பெயரே நிலைத்து விட்டிருந்தது ...

♨️♨️♨️.


அந்த வீட்டு உறுப்பினர்கள் யாரை அழைத்தாலும் "
 மச்சு வீடு "
என்ற அடைமொழி சேர்ந்தே வரும் ...
 அது பல்லு போன பாட்டனாக இருந்தாலும்
 சரி ... நேற்று பிறந்த குழந்தையானாலும்
 சரி .... அதே அடைமொழி தான் ...

♨️♨️♨️
Like Reply


Messages In This Thread
RE: ♨️♨️ மரணமில்லா உணர்வுகள்♨️♨️ - by Iamzinu - 23-04-2022, 03:33 PM



Users browsing this thread: