Thread Rating:
  • 1 Vote(s) - 2 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விருந்து [waiting for update]
#10
கையில் இருக்கும் பொருளுக்கு என்றும் மதிப்புஇல்லை என்பார்கள், அது நம்மைவிட்டுப் போன பிறகுதான் அதன் அருமை புரியும்.அப்படிதான் என் கைகளில் இருந்த அந்த கண்ணீர்துளிகளின் அருமை அப்போது எனக்கு தெரியவில்லை. அது என் கைகளிலே உலர்ந்து போனது.
ப்ரியா ஏன் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை என தெரியவில்லை,அவள் அழுகைக்கான காரணமும் தெரியவில்லை.இந்த நாளை நான் எப்படி மறக்கபோகிறேன். மே-29 இன்றுதான்.
நான் அவள் அம்மாவிடம் சென்று” அக்கா , ஏன் ப்ரியா அழுதுக்கொண்டே போகிறாள்?” எனக் கேட்டேன்.அதற்கு அவள்” அவள் இனிமேல் படிக்கமாட்டேன் என்று அடம்பிடித்தாள், அதுக்குதான் மாமா அவளை படிக்க வேண்டும் என்று திட்டி அனுப்பினார், அந்தக் கோபத்தில்தான் அவள் உன்னிடம்க்கூட சொல்லாமல் செல்லுகிறாள், அவள் மிகவும் கோபக்காரி,வீண் பிடிவாதக்காரி” என்று அவளைப் பற்றி அவள் அம்மா சொன்னது எதுவும் என் காதில் விழவில்லை. அவளைப்பற்றி எனக்கு நன்றாகதெரியும், அவள் மிகவும் அன்பானவள்,கோபமே படமாட்டாள்.எதை நம்புவது எனக்கு தெரியவில்லை.
மீண்டும் நான் தனிமைப்பட்டது போல் ஒரு உணர்வு ஏற்பட்டது.
அவள் காலாண்டு விடுமுறைக்கு வருவாள், அப்போது அவளிடம் கேட்டுக்கொள்லாம் என அறிவு சொன்னது, ஆனால் மனதுக்கு அது புரியவில்லை.
எங்கோ படித்தது” ம்ம்ம் அணுஅணுவாய் சாவது என முடிவு எடுத்துவிட்டாள், காதல் சரியான வழிதான்”.
எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. யாரும் என்னை ஏன் என்று கூட கேட்கவில்லை. நாலைந்து நாட்களாய் சாப்பிடகூட வில்லை. இல்லை சாப்பிடதோணாவில்லை. ஏதோ டீக்கடை வைத்து இருந்தால் என்னவோ டீயை மட்டும் குடித்துகொண்டு இருந்தேன்.
அடுத்த நாள் காலை 8.30 மணி இருக்கும். நான் கடையில் இருந்தேன், அன்று கல்யாண முகூர்த்தம் போல பஸ் ஸ்டாப்பில் கூட்டம் அதிகமாவே இருந்தது.ஊரில் உள்ள லோடுவேனில்கூட ஆட்கள் ஏறி வெளியூர்ச் சென்றுக்கொண்டு இருந்தனர்.
எங்கள் கடையின் எதிர்புறம் மாணிக்கத்தின் மாமா [அதுதான் எங்கூட சண்டை போட்டானே அவந்தான் நின்றுக்கொண்டு இருந்தான்.] வெள்ளைக் கலரில் பேண்ட்டும்.,நல்ல வெளீர் சிகப்புக்கலரில் சில்க் சட்டையும் போட்டு இருந்தான்.ஊரில் மைனர் குஞ்சாம் அப்படிதான் ட்ரெஸ் போடுவார்களாம், எனக்கு சிரிப்புதான் வந்தது. ஒரு கால் மணி நேரத்தில் ஒரு டாடா சுமோகார் வந்தது, அதிலிருந்து மாணிக்கம் இறங்கினான் . அவனை நான் கேள்விக்குறியுடன் பார்த்தேன்.அவனுக்கு புரிந்தது போல’ கல்லூரி நண்பர்களுடன் கூர்க் போவதாகச் சொன்னான். அப்படியா? என்றேன். அங்கே எங்களுக்கு ஒரு காஃபி எஸ்டேட் இருக்கிறது. நண்பர்களுடன் 10 நாள் தங்கப்போகிறேன் நீயும் வருகிறாயா? என்றேன். அது எனக்கு ஆறுதலாகதான் இருக்கும் இருந்தாலும் எனக்கு இப்போது தனிமைதான் வேண்டும் என்று இருந்தது. அதனால் அவனிடம் இல்லை நான் வரவில்லை என்றேன். ஏண்டா ட்ல்லாக இருகிறாய்? என்றான். அப்படியேல்லாம் ஒன்றுமில்லை, தொடர்ந்து முன்று நாட்களாக நைட் ஷிப்ட் அதுதான் டல்லாகத் தெரிகிறேன், என்றென்,’சரிடா , நான் கிளம்புகிறேன் வர ஒரு வாரம் இல்லை பத்து நாட்கள் ஆகும் என்று நினைக்கிறேன் “ என்றான்.” அப்பா எங்கேடா இருக்கிறார் ?’என்றேன். ‘’அவரும் கூர்க்கில்தான் இருக்கிறார் , வரும்போது சேர்ந்து வருவோம் “ என்றான்.
“சரிடா , வருகிறேன்” என்றான்.
நானும்” ம்ம்ம்ம்ம். சரிடா “ என்றேன்.
கடையில் எல்லாரும் இருந்தார்கள், அதனால் நான் கடையிலிருந்து வெளியே வந்தேன். எங்கே போவது எனத்தெரியவில்லை.ஊரை நோக்கி நடந்துக்கொண்டு இருந்தேன், வீட்டிற்கு இல்லை.அப்போதுதான் எனக்கு அந்த யோசனைப்பட்டது, நாங்கள் குத்தகைக்கு வாங்கி இருந்தோமே அந்த கரும்புத் தோட்டத்திற்கு போகலாம் எனப்பட்டது. தனிமை தனிமை தனிமை அதுதான் எனக்கு இப்போது வேண்டும் அதற்கு அங்குதான் சரியான இடம். கரும்புதோட்டத்தின் மத்தியில் போய் படுத்துக்கொள்வோம் என்று கிளம்பினேன்.
வழியில் தான் மாணிக்கத்தின் வீடு உள்ளது. அந்த வழியே செல்லும்போது மாணிக்கத்தின் அம்மா என்னைப் பார்த்துவிட்டார்கள்,’
‘’ ஏய், ராஜ்’’ ‘ என்னைத்தான் நாகரிமாய் உச்சரித்து கூப்பிட்டார்கள்.
‘ என்னங்கம்மா”- என்றேன்.
“டேய், நீ மாணிக்கத்தோட கூர்க் போகலையா?- என்றார்கள்.
“இல்லையம்மா, காலேஜ்ஜில் ஒரு வேலை இருக்கு அதுதான் போகலை” என்றேன்.
“ நீ என்னடா காலேஜ்ஜில் போய் வேலைப் பார்க்கபோற? “ என்றார்கள்.
நான் சிரித்தேன். அவர்களும் கல்லூரி இளம்கலை பட்டபடிப்பு முடித்தவர்கள்தான்.
“சரிடா கொஞ்சம் இரு, ஹார்லிக்ஸ்ப் போட்டுத் தருகிறேன் ‘’என்றார்கள்.
நான் வேண்டாம் என்று சொல்லுவதற்குள்ளேயே அவர்கள் உள்ளே போய் வ்ட்டார்கள். நான் வெளி ஹாலில் உட்கார்ந்து இருந்தேன்.கொஞ்ச்ச நேரத்தில்மாணிக்கதின் அம்மா கையில் ஹார்லிக்ஸ் க்ளாஸ்ஸுடன் வந்தார்கள்.
“இந்தாடா , சாப்பிடு என்றார்கள்.
[ எனக்கு அவர்களைப் பார்த்தால் பெருமையாக இருந்தது,மகனுடைய நண்பன் நான், இப்போது,இங்கே அவன் இல்லாத போதும் என்னை கூப்பிட்டு உபசாரிக்கிறார்கள்.]
“எங்கடா இந்த பக்கம்?”
“தோட்டத்திற்கு அம்மா “ என்று நான் சொல்லி முடிப்பதற்குள். மாணிக்கத்தின் தோட்டதிற்கு தண்ணீர் பாய்ச்சுகிறவர் உள்ளே வந்தார்.
அவர்தான் எங்கள் தோட்டத்திற்கும் தண்ணீர் பாய்ச்சுகிறவர்.


எல்லாம் மாணிக்கத்தின் ஏற்பாடுதான் அவர்கள் அம்மா சொல்லிதான் செய்தாகச் சொன்னான். நாங்கள் தனியாக தோட்டத்தில் இருந்தால் அவனுடைய மாமா ஏதாவது தகராறு செய்வான் என அவன் அம்மா அவர்க்ள் தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுகிறவரையே ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவர் அவர்களுக்கு சித்தப்பா முறை வேண்டும் அதனால் அவரிடம் எந்த சண்டையும் போட மாட்டான் அவன் மாமா.
விவசாயத்திற்காக காலை கரண்டு அன்று, அதாவது காலை 6.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை 3 பேஸ் கரண்டு வரும், அப்போதுதான் மோட்டார் போட முடியும்.
அவருக்கு அவர் பேரனுக்கு ஏதோ சர்ட்பிகேட் வாங்க வேண்டும் அதனால் வெலியெ செல்வதாகக் கூறினார். மோட்டார் ஒடுவதாகவும்கூறினார். எங்கள் வயலில் கிணற்றுக்கு மேல்புறம் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்வதற்கும்,
அவர்கள் வயலுக்கு 1.5 ஹெக்டேர் வயலில் தண்ணீர் பாய்வதற்கும் ஏற்பாடு செய்து இருப்பாக கூறினார். அதாவது வயலின் நான்கு புறமும் அடைத்துவிட்டு, மோட்டாரை போட்டுவிட்டு வந்து விடுவார்கள். மதியம் 12.00 மணிக்கு கரண்டு 3 பேஸ்ஸிலிந்து சிங்கிள் பேஸ்ஸுக்கு மாறும் போது மோட்டார் அதுவாக நின்றுவிடும்.
“ அப்புறம் என்னப்பா நீ தோட்டத்திற்கு போய்கிட்டு அதுதான் சித்தப்பாவே ஏற்பாடு பண்ணிட்டாரே” என்றார்கள் மாணிக்கத்தின் அம்மா.
“ சரிமா நான் வீட்டுக்கு போகிறேன்” என்றேன்.
நாணும் , அவரும் சேர்ந்துதான் வீட்டு போவதாக கூறிகொண்டுச் சென்றேன்.
அவர் அவர்வீட்டுப்பக்கம் சென்று விட்டார். நான் என் வீட்டு அருகே செல்லும்போதுதான் எனக்கு ஞாபகம் வந்தது. நாம என்ன தண்ணீர் பாய்ச்சுவதற்கா தோட்டத்திற்கு போனோம் கொஞ்சம் தனிமையில் இருக்கதானே என்று திரும்பினேன்.
தண்ணீர் பாய்ச்சுகிறவர் அவர் வீட்டுப்பக்கம் போய்விட்டார்.


நான் தோட்ட்த்தை நோக்கிப் போக ஆரம்பித்தேன் , நல்லவேளை மாணிக்கத்தின் அம்மா உள்ளே போய் விட்டார்கள்.
[மாணிக்கத்திம் தோட்டமும் எங்கள்தோட்டமும் அடுத்து அடுத்து இருக்கும். அவர்கள் வயல் அதே இட்த்தில் 20 ஏக்கர் இருக்கும்.எங்கள் வயல் 3 ஏக்கர்தான் இருந்த்து. இரண்டுபேருக்கும் கரும்புத்தோட்டம் என்பதால் சுமார் 23 ஏக்கரில் கரும்பு என்பது மிக பெரிதாகவே இருக்கும். 1.5ஹெக்டேர் வயல் என்பது 1.5 ஹெக்டெர் நிலமும் ஒரே வயலாக அமைந்து இருக்கும். அது அவர்களின் தோட்ட்த்தின் மத்தியில் இருக்கும்.]
நான் எங்கள் தோட்ட்த்திற்கு சென்றேன், மோட்டார் ஒடிக்கொண்டு இருந்த்து.
நான் கிணற்றுக்கு கிழ்புறம் சென்று கரும்பு வயலின் பெரிய பாத்திகளுக்கு நடுவில் சென்று படுத்துக்கொண்டேன். கொஞ்சம் தள்ளியே போய் படுத்துக்கொண்டேன். அப்பதான் யாருக்கும் தெரியாது என்று.
ஒரு கால் மணி நேரம் இருக்கும். நான் ப்ரியாவை ன நினைத்துக்கொண்டு ஏதோ ஒரு சிந்தனையில் இருந்தேன். அப்போது மோட்டார் தண்ணிரில் யாரோ காலை அலம்புவது போல் சத்தம் கேட்ட்து.நான் எழுந்திரிக்காமல் ஊர்ந்துகொண்டே வந்து யார் என்றுப் பார்த்தேன், ‘மைனர் குஞ்சு’
அட இவன் காலை இந்த மைனர் ட்ரெஸ்ஸைப்போட்டுகிட்டு பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டு இருந்தானே என்று யோசிப்பதற்குள், அவன் மாணிக்கத்தின் வயல்பக்கம் போனான்.இந்த வழியே போனால் பக்கத்து ஊருக்கு நடந்து போகலாம். ஆனால் பஸ் ஸ்டாப் போய்விட்டால், ரோடுபக்கம்தான் ஈஸி, இவன் ஏன் இந்தப்பக்கம்? தெரியவில்லை.
இருந்தாலும் அவன் எங்கே போகிறான் என்று பார்க்க ஒரு ஆர்வம் என்னை எழுந்திரிக்க வைத்த்து.
மெதுவாக அவன் சென்ற திசையில் பார்த்துக்கொண்டு இருந்தேன்.கொஞ்ச தூரம் போனவன் தண்ணீர் பாய்ந்துக்கொண்டு இருந்த வயலின் அடைப்பை காலால் ஏத்தி எடுத்துவிட்டுப் போனான்.அதை ப்பார்த்த எனக்கு கோபம்வந்த்து. அவனைதிட்டலாம் என வாய் எடுத்தேன், ஆனால் அது எனக்கு சரியாக படவில்லை என அமைதியாக இருந்துவிட்டேன்.சரி அவன் எடுத்துவிட்ட அடைப்பை கையால் அடைத்துவிடுவோம் என்று போனேன்.
அந்த இட்த்திற்குப் போன நான் அவனைப் பார்த்தேன். அவன் நேராகச் செல்லாமல் மாணிக்கத்தின் தோட்ட்த்தினுள் சென்றான். நேராகச் சென்றால்தானே பக்கத்து ஊருக்குச் செல்ல முடியும் இவன் ஏன் கரும்புத்தோட்ட்த்திற்குள் செல்கிறான்.? ஆஹா மைனர்குஞ்சு மைனர் வேலையை காட்டப் போகிறனா?பஸ் ஸ்டாப்பில் எவளுக்கோ சிக்னல் கொடுத்து கிளியை கூப்பிட்டுகிட்டு வந்து இருக்கான். சரி யார்? என்று பார்போம்.


சட்டு என்று நமக்குள் இருந்த ஜேம்ஸ் பாண்டு விழித்துக்கொண்டான். அவன் மாணிக்கத்தின் தோட்ட்த்தின் 1.5 ஹேக்டெர் வயலின் வடக்கு கரையில் போய் இருந்தான். நான் கொஞ்சம் நிதானித்து 5 நிமிடம் கழித்தே அந்த 1.5ஹெக்டெரின் தெற்கு கரையில் மெதுவாக நடந்தேன்.கரும்பு பட்டம் கட்டவில்லை,, அதனால் ஒழுக்கமில்லாமல் அனைத்து பக்கமும் சிதறி கிடந்த்து. நான் சத்தம் கேட்கமால் ஒவ்வோரு தோகையாக எடுத்துக்கொண்டு முன்னேறினேன்.1.5 ஹெக்டெர் வயல்வந்த்து. நான் மெதுவாக முன்னேறினேன். தண்ணீர் பாய்ந்திருந்த வயலில் ஒரு வடக்கு தெற்கு பாத்தி அடைக்கப்பட்டு இருந்த்து. அதில் கொஞ்ச தூரம்தான் தண்ணீர் பாய்ந்து இருந்த்து. பிறகு ஏன் அடைப்பட்டு இருந்த்து...அந்த கொஞ்சதூரம் தண்ணீர் பாய்ந்திருந்த பகுதியில் இருந்த சகதியில் இரண்டு காலடிதடம் பதிந்து இருந்த்து. ஒ அவர்கள் இந்த பாத்தியில்தான் இருக்கிறார்கள்நான் மெதுவாக பின்னோக்கி அடுத்த பாத்தியில் இறங்கி போனேன்.
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: விருந்து [waiting for update] - by M.Gopal - 21-05-2019, 01:29 PM



Users browsing this thread: 1 Guest(s)