Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
இருவரும் செய்த சேட்டைகள் அனேகம் உண்டு. அவர்கள் செய்த சேட்டைகளின் பலனாக ஒரு மாதம் கழித்து வேலைக்கு செல்லும் முன் பவித்ரா மயக்கமடைந்து கீழே தலைசுற்றி விழப்போனாள் ....

ராஜா ஓடிவந்து அவளை தாங்கி கொண்டு அவளை தூக்கி அருகில் இருந்த அறையில் கட்டிலில் கிடத்தினான்....



 கற்பகமும் பதட்டத்தோடு ஓடி வந்தார் அவர் சிறிது தண்ணீரை எடுத்து பவித்ராவின் முகத்தைக் கழுவினார் ....



பவித்ரா மெதுவாக கண்ணை திறந்தாள்.கற்பகம் அம்மாடி உனக்கு என்ன ஆயிற்று என்று கேட்டார்....



 அப்பொழுதுதான் பவித்ரா தனக்கு நாட்கள் தள்ளிப் போய் இருப்பதை மனதில் நினைவு கொண்டாள் ...பவித்ரா மெதுவாக ராஜாவின் கையை எடுத்து தன்னுடைய வயிற்றில் வைத்தாள் ....



கற்பகம் மற்றும் ராஜாவுக்கும் புரிந்து போயிற்று .ராஜா அவளை கட்டி அணைத்து அழுதான்.... கற்பகம் உடனே அவனை தட்டிக் கொடுத்து அழக்கூடாது கண்ணா.... 


கடவுள் நமக்கு கண்ணை திறந்து விட்டார் இனி நான் பேரப்பிள்ளைகள் எடுத்த கொஞ்சுவேன்....



குறைந்த பட்சமாக 4 குழந்தைகளாவது பெற்றுக்கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார் ...பவித்ரா வெட்கத்துடன் ராஜாவின் தோளில் முகத்தை புதைத்துக் கொண்டாள்... 

அதன் பிறகு ராஜா அவளை குழந்தை போல தாங்கினான்...




 கற்பகத்துக்கு சொல்ல வேண்டியதில்லை. பவித்ராவை பாடாய் படுத்தி அதை சாப்பிடாதே இதை சாப்பிடு என்று சொல்லி அவளை ஒரு வழியாக்கி விட்டார் ....அவளை மூன்று மாதம் ஹாஸ்பிடல் செல்ல வேண்டாம் என்று கூறிவிட்டனர்...

 ராஜாவின் தந்தையும் பழங்களை மூட்டை மூட்டையாக கொண்டு வந்து கொட்டுவார் கற்பகத்துக்கு அதையெல்லாம் ஜூஸாக பொழிந்து பவித்ராவுக்கு கொடுப்பது மட்டுமே வேலை....

மூன்று மாதம் முடியும் நிலையில் ஒருநாள் கற்பகம் பவித்ராவிற்கு உணவு ஊட்டி கொண்டிருக்கும் பொழுது இன்னொரு கரமும் அவளுடைய வாய்க்கு உணவைக் கொண்டுவந்தது.... அவள் தன்னுடைய முகத்தை தூக்கி பார்த்தாள்....



அவளுக்கு தன்னுடைய தந்தை ராணியை திருமணம்்  செய்தது தெரியாது .ராஜா அவளுக்கு அதை சொல்லவில்லை. பவித்ரா நீங்கள் யார் என்று கேட்டாள்....

 அதற்கு ராணி நான்தான் உன்னுடைய அம்மா என்று சொன்னாள் ....அதற்கு பவித்ரா என்னுடைய அம்மா என்னை விட்டுப் போய் பல வருடங்கள் ஆகிவிட்டது... எனக்கு அம்மா இல்லை அத்தை தான் இருக்கிறார்கள் என்று சொல்லிவிட்டாள். 



அப்பொழுது ராணி தனக்கும் கிருஷ்ணனுக்குமான உறவை பற்றி சொன்னாள் ....உடனே பவித்ரா பழைய பொண்டாட்டி போன உடனே அவர் புது பொண்டாட்டி தேடி கொண்டாரா என்று கேலி செய்தாள்... 

கற்பகத்க்கும் அவள் கூறியது சங்கடத்தைக் கொடுத்தது.... ராணி மௌனமாகக் கண்ணீர் வடித்தார் ...



பிறகு தன்னைத் தேற்றிக் கொண்டு நான் உன்னிடம் ஒரு பத்து நிமிடம் மட்டும் பேச வேண்டும் என்னிடம் பேசுவாயா என்று கேட்டார் ....


பவித்ராவுக்கு அவருடைய முகத்தை அந்தப் பரிதாபமான தோற்றத்தைக் கண்டு அவளால் அவரை புறக்கணிக்க முடியவில்லை ....சரி என்பதாாக தலையாட்டினாள் ...

இருவரும் பக்கத்தில் உள்ள அறைக்கு சென்றார்கள் .அங்கே ராணி தன்னுடைய கடந்தகால வாழ்க்கையை பற்றி அனைத்தையும் முதலில் தன்னுடைய குழந்தை இறந்தது பிறகு தன்னுடைய கணவன் இறந்தது பிறகு தன்னுடைய வாழ்க்கை எப்படி சென்றது அவருடைய உறவுகள் ஏமாற்றியது பிறகு பல காலம் ஆசிரமத்து வாழ்க்கை அனைத்தையும் சொன்னாள்...



அவளுடைய வாழ்க்கையைை பற்றி கேட்டதும் பவித்ராவால் அவரை புறக்கணிக்க முடியவில்லை... நான் உனக்கு ஒரு நல்ல தாயாக இருப்பேன். என்னுடைய இறந்து போன குழந்தை இப்போது உயிரோடு இருந்தால் உன்னுடைய வயது தான் இருக்கும்... 

என்னுடைய இறந்த குழந்தைக்கு பதிலாக நீ என் குழந்தையாக இருப்பாயா என்று அழுது கொண்டே கேட்டார் .... அந்த அன்பான முகத்தில் பிறரை ஏமாற்றும் சாயல் இல்லை... உண்மை  மட்டுமே இருந்தது அதனால் சரி  ஏற்றுக் கொள்கிறேன் ...ஆனால் உங்களுடைய கணவனை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது அதற்காக என்னை மன்னித்து விடுங்கள் என்றாள் ...



அதற்கு ராணி பரவாயில்லை நீ என்னை அம்மாவாக ஏற்றுக்கொண்டது போதும் ...அவரும் தூரத்தில் இருந்து கொண்டே உன்னைப் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி தான் எடுத்துவந்த புளி சாதத்தை ஊட்டி விட்டாள்..


 அது அவளுக்கு பிடித்து இருந்ததால் சற்று அதிகமாகவே சாப்பிட்டாள்..
அவள் சாப்பிட்டு முடித்ததும் தண்ணீீரை கொடுத்து அவள் வாயை தன் முந்தானையால் துடைத்து கட்டியணைத்து முத்தமிட்டு நான் போய் வருகிறேன் ...சீக்கிரமாக உன்னுடன் தங்கும்படி வந்து விடுவேன் என்று சொல்லிி முத்தமிட்டு சென்றுவிட்டார்...
[+] 5 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்) - by Ananthakumar - 17-02-2022, 07:44 PM



Users browsing this thread: 3 Guest(s)