Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
மறுநாள் காலையில் திவ்யா தன்னுடைய தாயை காண தன்னுடைய வீட்டிற்கு சென்றாள்....


அங்கே கிருஷ்ணன் தன்னுடைய கம்பெனிக்கு கிளம்பி கொண்டிருந்தார்.... ராணி அவருக்கு உதவியாக அவருக்கு தேவையானதை எடுத்துக்கொள்ள உதவி செய்து கொண்டிருந்தாள்....



திவ்யா பத்து நாளில் தன் தாய் வருவதாக சொல்லி இருந்தாள் .எனவே அவள் வந்திருப்பாள் என்று நினைத்து வீட்டிற்கு வந்திருந்தாள்... அங்கே தன் தாய்க்கு பதிலாக மிகவும் அழகான ஒரு பெண் தன்னுடைய தந்தைக்கு உதவி செய்வதை பார்த்து ,அப்பா இவங்க யார் என்று கேட்டாள்...அதற்கு கிருஷ்ணன் அவள் என் மனைவி என்றார்....




திவ்யாவிற்கு அதிர்ச்சியாக இருந்தது தன்னுடைய தாயும் தந்தையும் காதலித்து திருமணம் செய்தவர்கள் .இருவரும் ஒருவருக்கொருவர் அவ்வளவு அன்யோன்யமாக இருந்தவர்கள்.


அப்படிப்பட்ட தன் தந்தை தன்னுடைய தாயை விட்டு விட்டு இந்த வயதிலும் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்தார் என்பதை அவளால் ஜீரணிக்க முடியவில்லை ....



தர்ஷன் திவ்யாவுடன் அங்கு வந்திருந்தான்....


இந்த செய்தி அவனுக்கும் பேரதிர்ச்சியாக இருந்தது ....


அப்படியானால் காவியா எங்கே ,..ஊருக்கு செல்வதாக கூறி சென்றவள் இன்னும் வரவில்லையே என்று திகிலுடன் மாதவனை பார்த்துக்  கொண்டிருந்தான் ....



அப்பா நீங்க என்ன சொல்றீங்க. எங்களுடைய அம்மா எங்கே. இந்தப் பெண்ணை ஏன் எங்கள் அம்மா என்கிறீர்கள் என்று கேட்டாள்....


அதற்கு கிருஷ்ணன் நீ உன்னுடைய அம்மாவை எங்கே என்று அவளுடன் போனில் பேசி தெரிந்துகொள் .எனக்கும் அவளுக்கும் இனி எந்த சம்பந்தமும் இல்லை ....



அவள் இனிமேல் இங்கே வர மாட்டாள். உனக்கு இன்னும் ஏதாவது கேள்வி இருந்தால் நீ அவளிடமே கேட்டுக் கொள். அதே போல் நீயும் என்னுடைய மகள் என்று சொல்லி உரிமை கொண்டாடி இங்கே வர வேண்டாம்....



என்னைப்பொருத்தவரை உன்னுடைய அம்மாவும் நீயும் ஒன்றுதான். எனவே நீயும் இங்கே வர வேண்டாம் இன்று வந்ததே கடைசியாக இருக்கட்டும்....



எனக்கு ஒரு மகள்தான் அது பவித்ரா தான் ....பவித்ரா தான் என்னுடைய சொத்துக்கள் அனைத்துக்கும் வாரிசு ....

என்னுடைய சொத்துக்கள் அனைத்தும் நான் சுயமாக சம்பாதித்து வைத்தது.... எனவே அதை யாருக்கு வேண்டுமென்றாலும் எழுதிவைக்க எனக்கு உரிமை உள்ளது....


எனவே எங்கள் இருவருக்கும் பிறகு அவளுக்கு முழு உரிமை உள்ளது ....



நீயும் உன்னுடைய அம்மாவும் அவளுக்கு செய்த பாவத்திற்கு உங்களுக்கான தண்டனை இது என்று கூறினார் ....



திவ்யா நான் என்ன தவறு செய்தேன். எனக்கு எதற்கு இந்த தண்டனை என்று கேட்டாள் ...அதற்கு கிருஷ்ணன் நீ உன் சகோதரிக்கு துரோகம் செய்து அவளுடைய வாழ்க்கையை அழித்தது மட்டுமல்லாமல் அவளை இதுவரை கேவலமாக நடத்தி இருக்கிறாய் அதற்கான தண்டனை தான் இது என்றார்....



என் அம்மாவுக்கு இந்த தண்டனை ஏன் அவர் இப்பொழுது எங்கே என்று கேட்டாள்....



அதற்கு கிருஷ்ணன் அவளுக்கான தண்டனை எதற்கு என்று நீ அவளிடமே கேட்டுக் கொள் .இல்லையென்றால் உன் புருஷனிடம் கேட்டுக்கொள் இருவருக்கும் தெரியும் ....



உன்னுடைய அம்மா உன்னுடைய மாமாவின் ஊரில் உள்ள அனாதை ஆசிரமத்தில் இருக்கிறாள். வேண்டுமென்றால் உன்னுடனேயே உன்னுடைய வீட்டில் உன்னுடைய அம்மாவையும் நீ சேர்த்துக்கொள். உன்னுடைய புருஷனுக்கு அது மிகவும் உதவியாக இருக்கும் என்றார் ....



ஆனால் இருவரும் எந்த உறவு முறையும் சொல்லிக்கொண்டு என் வீட்டுப்பக்கம் வராதீர்கள் என்று திட்டி அனுப்பிவிட்டார் ...





வெளியே வந்த திவ்யா தர்ஷன் இடம் என்னுடைய அம்மா அங்கே இருப்பதற்கு உனக்கும் எங்கள் அம்மாவுக்கும் காரணம் தெரியும் என்று சொன்னாரே அது என்ன என்று கேட்டாள்.







தர்ஷனுக்கு மேல்நாக்கு ஒட்டிக்கொண்டது.வாய் உலறத் தொடங்கியது .அவன் உங்க அப்பா என்ன காரணத்திற்காக சொன்னார் என்று எனக்குத் தெரியாது .


நான் உங்கள் அம்மாவிடம் ஒரு மகன் போல தான் பழகினேன்
 நீயும் தான் பார்த்திருப்பாயே .வேறு எதற்காக என் மேல் வன்மம் என்று தெரியவில்லை என்று நடித்தான் ....



வேறு வழி இல்லாததால் திவ்யா தன் தாய்க்கு கால் செய்தாள் .காவியா போனை அட்டென்ட் செய்தாள்....



திவ்யா காவியாவிடம் அம்மா நீ எங்கே இருக்கிறாய் எங்கே அப்பா வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்திருக்கிறார் உனக்கு தெரியுமா என்று கேட்டாள்....


அதற்கு காவியா எனக்கு நன்றாக தெரியும் நான் அவருக்கு உண்மையாக இருக்கவில்லை அதை மட்டும் தான் என்னால் இப்பொழுது கூற முடியும்..
. வேறு எதுவும் என்னை கேட்காதே என்னால் இப்பொழுது அதற்கு பதில் சொல்ல முடியாது நீயும் எங்கே என்னை பார்க்க வராதே உன்னுடைய முகத்தை பார்த்து என்னால் பதில் சொல்ல முடியாது ....



ஒருவேளை காலம் நான் செய்த பாவத்திற்கு மன்னிப்பு கொடுத்தால் நான் உன்னை சந்திக்கிறேன் இல்லையென்றால் ஒரு உதவி மட்டும் செய் உன்னுடைய பையனை என் சாவிற்கு கொல்லி மட்டும் வைக்கச் சொல் ....எனக்கு அந்த பாக்கியம் மட்டும் போதும் ஏனென்றால் நான் செய்த பாவத்திற்கு கிருஷ்ணன் எனக்கு கொள்ளி வைக்க மாட்டார் ....வைக்கவும் கூடாது....




அப்படி செய்தால் என்னுடைய பாவம் கூட என்னை மன்னிக்காது நீ இனி ஜாக்கிரதையா இருந்து உன்னை பார்த்துக் கொள் ....



எங்கே இருந்தாலும் நான் உன்னையும் பவித்ராவும் நான் காதலித்த என்னுடைய கிருஷ்ணனையும் சுற்றியே என் ஆத்மா இருக்கும் என்று கூறினால் ....




மேலும் நான் என்னுடைய கழுத்தில் இருந்த தாலியை உனக்கு அனுப்பி வைத்திருக்கிறேன் அது உனக்கு சொந்தமானது அதை நீயே வைத்துக்கொள் என்று கூறிய அழுதபடியே போனை வைத்துவிட்டாள் ....




இவை அனைத்தையும் லவுட் ஸ்பீக்கரில் தர்ஷன் கேட்டுக்கொண்டிருந்தான் அவனுக்கு அதிர்ச்சியாகவும் அவமானமாகவும் இருந்தது ..
.



திவ்யாவிற்கு இவை அனைத்தும் புரியாத புதிராகவே இருந்தது ஆனாலும் தன் தாய் கூறியபடி தன் வாழ்க்கையை பார்த்துக் கொள்ள வேண்டும் என்று முடிவு செய்து மறுநாளிலிருந்து தான் வேலை செய்த கல்லூரிக்கு விண்ணப்பித்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாள்....



தர்ஷன் தன்னுடைய கம்பெனியை பார்க்க ஆரம்பித்தான் இனி வேறு பெண்களுடன் சென்றால் அவமானம் மட்டுமே நேரும் என்பதை மனதில் கொண்டு தன்னுடைய வேலையில் கவனம் வைக்க ஆரம்பித்தான்...
[+] 5 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்) - by Ananthakumar - 16-02-2022, 06:32 PM



Users browsing this thread: 3 Guest(s)