Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
மறுநாள் காலையில் பவித்ரா வேலைக்கு செல்லும்போது பவி நாளைக்கு விடுமுறை எடுத்து விடு ...உன்னுடன் கொஞ்சம் பேச வேண்டும் என்று கற்பகம் கூறினார்.அவளும் சரி அத்தை என்று கூறி வேலைக்கு சென்று விட்டாள் ...


ராஜா சாப்பிட அமர்ந்தான் ...கற்பகம் அவன் தலையை வருடியவாறு பரிமாறி ஊட்டி விட ஆரம்பித்தாள்... ராஜாவுக்கு தன்னுடைய தாயின் நினைவாக கண்கள் கலங்கியது... அவன் அவள் வயிற்றில் கட்டி அணைத்துக்கொண்டான்...


அவள் கண்ணீரை துடைத்து விட்டு மறுபடியும் அவனுக்கு ஊட்டி விட்டாள் ...சாப்பிட்டு முடித்தவுடன் ராஜா கம்பெனிக்கு கிளம்பினான்.குமரேசனும் அவனுடன் கிளம்பிச் சென்றார்...


ஆம் குமரேசனும் ராஜாவும் சேர்ந்து இருவருடைய கம்பெனியையும் பார்த்துக் கொள்கிறார்கள் ...இருவரும் கிளம்பும்போது கற்பகம் ராஜா நாளைக்கு ஒரு மணி நேரம் தாமதமாக கிளம்பவேண்டும் பார்த்துக்கொள். அதற்கு ஏற்ப வேலைகளை பிளான் செய்து கொள் என்று கூறினாள்.... அவன் சரி அம்மா என்று கூறி புறப்பட்டு சென்றான்...


மறுநாள் காலை அனைவரும் சாப்பிட்டுவிட்டு ஹாலில் இருக்கும் பொழுது கற்பகம் பவித்ராவை நோக்கி உன்னுடைய வேலை தான் இங்கு முடிந்துவிட்டதே இன்னும் எவ்வளவு காலம் இங்கு இருப்பதாக உத்தேசம் ...நாங்கள் எங்கள் மகனை பார்த்துக் கொள்கிறோம் ...


நீ என்ன காரணத்திற்காக எங்கே இருக்கிறாய்
... நீ இருப்பதால் எங்கள் மகனுக்கு அவப்பெயர் வருவதற்கு வாய்ப்பு உள்ளது... நீ என்ன கூறுகிறாய் என்று பவித்ரா அறியாத வண்ணம் ராஜாவை நோக்கி கண்ணடித்து கூறினாள் ... ராஜா தன்னுடைய தாய் பவித்ராவை ஓட்ட ஆரம்பித்து விட்டார் என்று நினைத்துக்கொண்டான் ...

அவனும் அம்மா நீங்கள் சொல்வது சரிதான். என்ன செய்யலாம் என்று அவள் கூறினாள் சரியாக இருக்கும் என்று அவருக்கு ஒத்து ஊத தொடங்கினான் ...அதைக் கேட்ட பவித்ராவிற்கு கண்களில் இருந்து கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது ..

அவள் நான் இங்கு இருப்பது தவறு தான் அத்தை.நான் இன்று ஏதாவது ஒரு ஹாஸ்டலில் போய் தங்கிக் கொள்கிறேன் மன்னித்துவிடுங்கள் என்று கூறினாள் ...அதற்கு கற்பகம் எவ்வளவு நெஞ்சழுத்தம் இருந்தால் நீ இவ்வாறு கூறுவாய்... "ஆமாம் ராஜாவிடம் நீ தர்சன்  உடனான விவாகரத்து நோட்டீஸில் கையெழுத்திடும் போது ,...ஏதோ ஒரு தாய்க்கு வாக்கு கொடுத்து இருப்பதாக கூறியதாக சொன்னான்... 

அந்தத் தாயிடம் நான் உங்களுடைய பிள்ளையுடன் வாழ்ந்து பிள்ளைகள் பெற்று அவரையும் தாயாகத் தாங்குவேன் ...குடும்பமாக உங்களையும் உங்களையும் இந்த பூமிக்கு வர வைத்து பார்த்துக் கொள்வேன் என்று சத்தியம் செய்ததாக கூறினானே ...யாருக்கு யாருக்கு சத்தியம் செய்து கொடுத்தாய் இப்பொழுதே சொல் என்று கூறினார் ....


பவித்ராவுக்கு நெஞ்சை அடைப்பது போலிருந்தது.ஏனென்றால் அவள் சத்தியம் செய்து கொடுத்திருப்பது ராஜாவின் தாய் தேவிக்கு தான்.

இதை எப்படி ராஜா இருக்கும்பொழுது கற்பகத்திடம் கூறுவது என்று குழம்பிப் போயிருந்தாள்.... மீண்டும் கற்பகம் என்ன சொல்லுவதற்கு ஏதேனும் ஐடியா உண்டா இல்லையென்றால் சொல்லாமல் கொள்ளாமல் இடத்தை காலி பண்ணுவதற்கு தீர்மானித்து இருக்கிறாயா என்று கேட்டார் ...

அதற்கு குமரேசன் பாவம் நம்முடைய மருமகப் பிள்ளை ,ஏன் இப்படி படுத்துகிறாய் என்று கேட்டார் ...அதற்கு கற்பகம் நீங்கள் பேசாமல் இருங்கள்.இது எனக்கும் என்னுடைய பிள்ளைக்கும் தேவையான விஷயம் நீங்கள் பேசாமல் இருங்கள் என்று சொல்லிவிட்டார் ...

குமரேசனும் தன்னுடைய மனைவி ஏதோ திட்டம் தீட்டி விட்டாள்.அவள் திட்டம் தீட்டினால் நன்மையாக தான் முடியும் என்று நினைத்து வாயை மூடிக் கொண்டார் ...


தனக்கு இருந்த ஒரு வாய்ப்பும் அடைக்கப்பட்டதை உணர்ந்த பவித்ரா திருதிருவென திருட்டு  முழி முழித்தாள் ...மறுபடியும் கற்பகம் என்ன திருட்டு முழி முழிக்கிற சொல்வதை சொல்கிறாயா இல்லையா என்று அதட்டி கேட்டார்...

அதற்கு பவித்ரா மெதுவாக சொல்லி விடுகிறேன் அத்தை என்றாள்.. கற்பகமும் அப்படி என்றால் சொல் என்றார்.. பவித்ரா மெதுவாக ராஜாவை நோக்கி கையை நீட்டி இவரின் அம்மாவுக்கு தான் நான் வாக்குக் கொடுத்திருந்தேன்... அவர்தான் சாகும் தருவாயில் என்னிடம் சத்தியம் வாங்கி விட்டு இறந்து போனார் என்று கூறி அழ ஆரம்பித்தாள்....

உடனே கற்பகம் மூச் சத்தம் போடக்கூடாது இப்பொழுது என்ன நடந்துவிட்டது என்று அழுகிறாய்... ஒரு காலத்தில் ராஜாவை காதலித்தவள் தானே ஏன் அதை இப்பொழுது கூறினால் உன்னுடைய வாயில் இருந்து முத்து உதிர்ந்து விடுமோ என்று அதட்டி கூறினார் ... பவித்ரா இது எல்லாம் இவருக்கு எப்படி தெரியும் என்று நினைத்து அவரை நோக்கி திருட்டு முழி முழித்தாள்... அதற்கு கற்பகம் எல்லாம் எனக்கு தெரியும் என்று கூறிவிட்டார் .

நீ ராஜாவை காதலிப்பதை உன் வாயால் கூறினால் வாயிலிருந்து முத்து வந்துவிடுமோ என்று அதட்டலாக கூறினார் ...பவித்ரா இப்பொழுது கற்பகத்தை நோக்கினாள்.அவர் பேசிய பேச்சுக்கு மாறாக அவருடைய முகம் புன்னகை முகமாக இருந்தது ...

அவள் ஓடிச்சென்று கற்பகத்தை அணைத்துக்கொண்டாள்.அத்தை என்று கூறி கற்பகம் அவளுடைய தலையை ஆதரவாக வருடி ஏன் என்னிடம் சொல்லவில்லை... நான் உன்னிடம் அப்படியா பழகுகிறேன்.இல்லை என்னுடைய பையனை தான் உனக்கு பிடிக்கவில்லையா என்று கேட்டார்.பவித்ரா அவரின் தோளில் சாய்ந்தவாறு வெட்கத்துடன் மெதுவாக ராஜாவை நோக்கி பார்த்தால்.... ராஜா அவளை பார்த்து கண்ணடித்தான் ...


பவித்ரா மீண்டும் வெட்கத்துடன் கற்பகத்தின் தோளில் தன் முகம் முழுவதையும் மறைத்துக் கொண்டாள்... கற்பகம் தன் கணவனை நோக்கி என்னங்க இதுக்கு மேல தாங்காது நாளைக்கு நல்ல முகூர்த்தம் இருக்கிறது ...


இருவருக்கும் திருமணத்தை முடித்து வைத்து விடலாம் நமக்கும் பேரன் பேத்திகளை எடுத்து கொஞ்ச வேண்டும் நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று கேட்டார் ...அதற்கு குமரேசன் முடித்துவிடலாம் ...வீட்டிலேயே திருமணத்தை முடித்து பத்திரிக்கையில் ஒரு விளம்பரம் செய்து விடலாம் ...பிறகு வேண்டியவர்களுக்கு மட்டும் சிறிய பார்ட்டி ஒன்றை அரேஞ்ச் பண்ணிக் கொள்ளலாம்... பக்கத்தில் உள்ள ஆசிரமத்திற்கு மூன்று வேளையும் உணவும் கொடுத்து விடலாம் என்று கூறினார் ...


உடனே கற்பகம் பவித்ரா உனக்கு சம்மதம் தானே.உன்னுடைய உடல் நிலை அதற்கு ஒத்துக் கொள்ளும் தானே என்று மெதுவாக கேட்டார் ...அதற்கு பவித்ரா எனக்கு சம்மதம்தான் அத்தை.நீங்கள் எது செய்தாலும் என்னுடைய நன்மைக்காகத்தான் செய்வீர்கள் எனக்கு பரிபூரண சம்மதம் என்று தன்னுடைய சம்மதத்தை கூறினாள்...


உடனே ராஜா அது என்ன காதலை கூட என்னுடைய அம்மாவிடம் தான் கூறுவாயா.ஏன் காதலனிடம் கூற மாட்டாயா என்று கேலி செய்தான் ...உடனே பவித்ரா வெட்கப்பட்டுக் கொண்டே தன்னுடைய அறைக்கு ஓடிவிட்டாள் 

அதன்பிறகு ராஜாவும் வேலைக்குக் கிளம்பினான். குமரேசன் எனக்கு திருமண வேலைகள் இருக்கிறது.

அதனால் நான் இன்று வரவில்லை நீ போய் வா ராஜா என்று கூறிவிட்டார்.அவனும் சரி அப்பா போய் வருகிறேன் என்று அவரிடம் கூறிவிட்டு அம்மா நான் போய் வருகிறேன் என்று கூறி விடைபெற்று கம்பெனிக்கு சென்று விட்டான் ...


மறுநாள் ராஜா தன்னுடைய தாய் தந்தையாகிய கற்பக மற்றும் குமரேசனை சாட்சியாக வைத்து தன்னுடைய தெய்வமாகிய போன பெற்றோரின் படத்தின் முன்பு தன்னுடைய தாய் தேவியின் தாலியை பவித்ராவின் கழுத்தில் கட்டினான் ...பின்பு இருவரும் குமரேசன் மற்றும் கற்பகம் இருவரின் காலிலும் விழுந்து வணங்கினார்கள்... பிறகு ராஜாவின் பெற்றோர் புகைப்பட முன்பு விழுந்து வணங்கினார்கள் ...


குமரேசன் தான் ஏற்கனவே சொன்னபடி இருவரின் திருமணத்தையும் செய்தித்தாள் மூலம் தெரியப்படுத்தினார்... இருவருக்கும் பல்வேறு இடங்களில் இருந்து வாழ்த்துக்கள் வந்த வண்ணமாக இருந்தது... அவை அனைத்தையும் ஏற்று குமரேசன் என்று பதிலளித்தார்.அழைப்பு இல்லாமலேயே சில பெருந்தலைகள் ராஜாவை தேடி வந்தனர்... குமரேசனும் முன்னேற்பாடாக சில ஏற்பாடுகளை செய்திருந்தார்.எனவே வந்தவர்களை சிறப்பாக கவனித்து அனுப்பிவைத்தனர்...


பவித்ரா ராஜாவின் உயரத்தை கண்டு பிரமித்தாள் ...ராஜாவின் கரத்தை இறுக்கமாக பிடித்துக்கொண்டாள் ...ராஜா அவளுக்கு இருக்கும் பயத்தை உணர்ந்து தன்னுடைய இன்னொரு கையால் அவளுடைய கரத்தை தட்டிக் கொடுத்தான்... பவித்ரா சற்று நிம்மதி அடைந்தாள் ...குமரேசன் சொன்னது போல அவர்களுடைய பிசினஸ் பார்ட்னர்களுக்காக பார்ட்டி அரேஞ்ச் பண்ணப்பட்டது...

அதுபோலவே பக்கத்திலிருந்த ஆசிரமத்திற்கு மூன்று வேளையும் உணவு கொடுக்கப்பட்டது ...மதிய வேளையில் ராஜா தன் குடும்பத்தோடு அங்கு சென்று குடும்பமாக பரிமாறினார்கள் ....


ராஜா ஒரு பெருந்தொகையை நன்கொடையாக விளங்கினான்.எல்லாம் முடிந்த பிறகு வீட்டிற்கு வந்து அன்றைய தினம் அலைச்சல் காரணமாக சிறிது ஓய்வு எடுத்தார்கள்... கற்பகம் இருவரையும் ஒன்றாக வரவழைத்து இன்றைக்கு நாள் அவ்வளவு சரியில்லை ஐயர் நாளைக்கு தான் முகூர்த்த நாளை குறித்துக் கொடுத்து இருக்கிறார் ...அதனால் பவித்ரா நீ இன்று மட்டும் என்னுடன் தங்கி விடு என்று கூறினாள் ....


பவித்ரா ஏக்கமாக ராஜாவை பார்த்தாள்.. ராஜாவும் இன்று ஒரு நாள் தானே நான் எங்கும் செல்ல மாட்டேன். நாளைக்கு பார்த்துக் கொள்ளலாம் உடம்பையும் மனதையும் தயாராகிக் கொள் என்று அவளுடைய காதில் ரகசியமாக கூறிவிட்டு போய்விட்டான் ...பவித்ராவிற்கு வெட்கத்தில் முகம் குப்பென்று சிவந்தது அவள் தன் வெட்கத்தை கைகளை கொண்டு மறைத்துக் கொண்டால் ...பின்பு கற்பகம் தங்கியிருந்த அறைக்குள் சென்று மறைந்தாள் ...


நண்பர்களே நாளை ராஜா மற்றும் பவித்ராவின் முதலிரவில் சந்திக்கலாம்...
[+] 3 users Like Ananthakumar's post
Like Reply


Messages In This Thread
RE: காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்) - by Ananthakumar - 14-02-2022, 07:37 PM



Users browsing this thread: 3 Guest(s)