Adultery காதலும் அது தந்த பரிசும்( துக்கமும் ,சந்தோஷமும்)- நிறைவுற்றது
#42
திட்டமிட்டபடியே அடுத்து வந்த 15 நாட்களில் பவித்ராவின் திருமணம் தர்ஷன் உடன் நடந்தது... பவித்ராவுக்கு திருமணத்தில் பெரிதாக ஒன்றும் ஆர்வமில்லை இருந்தாலும் தனது பழைய காதலை மறப்பதற்கு அது உதவும் மற்றும் அவளுடைய புதிய உறவுகளான மாமியாரையும் மாமனாரையும் அவளுக்கு மிகவும் பிடித்து இருந்த காரணத்தினால் சந்தோசமாக உடன்பட்டால்... திவ்யாவும் ராஜாவும் அவனுடைய அம்மாவும் கூட திருமணத்திற்கு வந்திருந்தனர்...

திவ்யா மூன்றாம் மாதத்தின் துவக்கத்தில் இருந்தால்... அதனால் அவளுடைய வயிறு லேசாக மேடிட்டிருந்தது... ராஜாவை அங்கு கண்ட பொழுது அவளுக்கு துக்கமாக இருந்தது இருப்பினும் அவள் ஒருபோதும் தன்னுடைய மனதை யாரிடமும் வெளிப்படுத்தியதில்லை ...


சிறுவயதிலிருந்தே அவ்வாறு பழகிவிட்டால் அதனால் இப்போது தன்னுடைய மனதை மறைப்பது அவளுக்கு புதிதாக ஒன்றும் தெரியவில்லை ...அதனால் இயல்பாக இருப்பது போல நடித்தாள் ...



சிலருடைய  வெறுப்பிற்கு இடையேயும் சிலருடைய நல்ல ஆசீர்வாதங்கள்க்கு இடையையும பவித்ராவின் திருமணம் சிறப்பாக நடைபெற்றது ...பவித்ராவும் திருமணம் முடிந்து நடைபெறும் ஒவ்வொரு சடங்கிலும் ஆர்வமாக இருப்பது போல பங்கேற்று சிறப்பாக நடித்தாள் ...

திருமணம் முடிந்து தனது மாமியார் வீட்டிற்கு புறப்பட்டால் இயல்பாகவே எல்லாப் பெண்களும் மாமியார் வீட்டிற்கு கிளம்பும் போது கண்ணீர் விட்டு புலம்புவது வழக்கம் ...ஏனெனில் அவர்கள் முதன்முறையாக பெற்றோரை பிரிந்து செல்கிறார்கள்....


 ஆனால் இங்கு அப்படி ஒரு சம்பவம் நடைபெறவில்லை அவள் இயல்பாக கிளம்பிச் சென்றால்... இவர்களும் தொல்லை விட்டது என்பதுபோல நடந்துகொண்டார்கள் ... மாமியார் வீட்டை அடைந்ததும் அவளுடைய மாமியார் சுசீலா ஆரத்தி எடுத்து அவளை உச்சி முகர்ந்து வரவேற்றாள் ...

பவித்ராவும் தனது வலது காலை எடுத்து வைத்து வீட்டிற்குள்ளே நுழைந்தாள்...
Like Reply


Messages In This Thread
காதலும் அது தந்த பரிசும் - (துரோகமும் ,மகிழ்ச்சியும்) - by Ananthakumar - 06-02-2022, 05:26 PM



Users browsing this thread: 10 Guest(s)