Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதையும் தாண்டி புனிதமானது!!! [waiting for update]
#19
ராம், அவளுக்கு யாதுமாகி நிற்கிறான் என்பதை அவள் பிரமிப்புடன் உணர்ந்தாள்! பிரமிப்புடன் அவனைப் பார்த்தவாறே விலகியவள், பின் மீண்டும் திரும்பி, அவனது கன்னத்தில் எம்பி, ஒரு முத்தமிட்டு,

தாங்க்ஸ் ராம்! தாங்க் யூ சோ மச்! என்றாள்!


35.
அடுத்த இரு வாரங்களும் இப்படியே தொடர்ந்தது! ஆரம்பத்தில் ராமின் அருகாமையில் மிகவும் தவிப்பாய் உணர்ந்தவள், கொஞ்சம் கொஞ்சமாய் அவனுடைய தாபங்களை ரசிக்கத் தொடங்கினாள்! சமயங்களில் அதை எதிர்நோக்கவும் ஆரம்பித்திருந்தாள்.

எவ்வளவு பெரிய புத்திசாலி பெண்ணையும், தன்னுடைய பார்வைக்காக, தன்னுடைய காதலுக்காக, ஒரு ஆண் காத்திருக்கிறான் என்பது கொஞ்சம் கர்வமடைய வைக்கும்! அதிலும் ராமைப் போன்ற ஒருவன், தன்னை, அவனுடையவளாக மாற்றச் செய்யும் ஒவ்வொரு செயலும், கொஞ்சம் கொஞ்சமாக ப்ரியாவை ராமிற்கு அடிமையாகவே மாற்ற ஆரம்பித்திருந்தது!

காதலும், பெண்ணும் ஒரு மக்கு ஆணைக் கூட, மிகவும் கிரியேட்டிவாகவும், தைரியமானவானாகவும் மாற்ற முடியும் என்றால், ராம் இதிலெல்லாம் சும்மாவே அடித்து ஆடும் ஆள் என்பதால், சொல்லவா வேண்டும்?

சமயங்களில் அவனது திறமைகளைக் கண்டு, அவளை மடக்கும் விதங்களைக் கண்டு திகைத்து நின்றாள்! உள்ளுக்குள் எவ்வளவு அற்புதமான ஒரு திருமண வாழ்க்கை நம் கண் முன்னே காத்திருக்கிறது என்று புரிய ஆரம்பித்த தருணத்தில் மிகவும் பரவசமாய் உணர்ந்தாள்! ஆனாலும், எல்லா உணர்வுகளையும் அவனிடம் மறைத்தாள்!

இடைப்பட்ட காலத்தில் ஒரு நாள் இரவு,

அப்புறம் ப்ரியா, கல்யாணம் ஆகி ஒன்றரை மாசத்துக்கும் மேல ஆயிடுச்சி! நீ கேட்ட டைம்ல, பாதி தாண்டிடுச்சி. என்ன புரிஞ்சிகிட்ட என்னைப் பத்தி, இது வரைக்கும்?!

முன்பு போல் இந்தக் கேள்வி, இப்போது அவளைத் தடுமாற வைக்கவில்லை! மாறாக அவனது சீண்டலை ரசிக்க ஆரம்பித்திருந்தது!



திருடன், இன்னிக்கு என் இடுப்பைத் தடவிப் பார்க்கனும்னு ஆசைப்படுறான்! அதை நேராக் கேக்க முடியாம, இப்டி கேக்குறான்! அப்டி என்னத்தை கண்டானோ என் இடுப்புல? ஒரு பக்கம் மட்டும் தெரியுறப்பவே, இப்புடி தடவுறான், இன்னும் முழுசா தெரிஞ்சா அவ்ளோதான் போல! (ச்சே, என்ன என் நினைப்பு இப்டி போகுது! அவனை விட நாந்தான், அவன் என் இடுப்பைத் தடவனும்னு விரும்புறேனோ?)

யோசனைகளில் மூழ்கியிருந்த ப்ரியாவை ராமின் கேள்வி மீண்டும் களைத்தது!

ஹலோ மேடம்…

ஆங்… என்ன கேட்டீங்க?

ம்ம்ம்… உன் வெயிட்டு என்னன்னு கேட்டேன்?

வெயிட்டா கேட்டீங்க நீங்க? என்ன புரிஞ்சிகிட்டேன்னுதானே கேட்டீங்க?

அப்ப நான் கேட்டது என்னான்னு உனக்கு தெரியும்! அப்டித்தானே? அப்டி என்ன யோசிச்சிட்டிருந்த?

ம்ம்ம்… ஒ… ஒண்ணுமில்லை!

ப்ரியாவையே புன்சிரிப்புடன் பார்த்த ராம், பொய் சொன்னா நான் என்ன பண்ணுவேன்னு உனக்கு தெரியுமில்ல ப்ரியா?

ஆங்.. இ… இல்ல வேணாம்!

அப்ப உண்மையைச் சொல்லு!

தடுமாறினாலும், அவனுக்கு பதில் சொன்னாள்! இ… இல்ல… இன்னிக்கு எ… என்னைத் த.. தடவி பாக்கனும்னு ஆசைப்படுறீங்களோன்னு யோசிச்சேன்!

ப்ரியாவின் பதிலும் அவளது சங்கடமும், வெட்கத்தில் சிவந்த முகமும், ராமைத் தூண்டியது! தாபமுடன் அவளைப் பார்த்தவன், நெருங்கி அவளை அருகே இழுத்தான்.

இலேசாக வியார்த்திருந்த அவளது முகம், துடிக்கும் உதடுகளுடன், அவன் உதடுகளுக்கு மிக அருகில் இருந்தது. அவனது பார்வையின் வீச்சை தாங்க முடியாத ப்ரியா, தலை குனிந்து கொண்டாள்! அவனது மெல்லிய சூடான மூச்சுக்காற்று தன் மீது படருவதை அவளால் உணர முடிந்தது.

கிசுகிசுப்பாக ஒலித்தாலும், அவனது காதுகளுக்கு மிக அருகில் ஒலித்ததால், அவனைப் போலவே, அவனது குரலும் மிகவும் கம்பீரமாக இருப்பது போல் பட்டது அவளுக்கு!

இதுவரைக்கும் உன் இடுப்பைத் தவிர வேறெங்கியாச்சும் தொட்டிருக்கேனா ப்ரியா?

இ… இல்ல?

அப்புறம், உன் இடுப்பை மட்டும்னு சொல்லாம, உன்னைத் தடவி பாக்கனும்னு நினைச்சதா சொல்ற? தப்பே பண்ணாதவன் மேல, இவ்ளோ பெரிய குற்றச்சாட்டு வெக்கலாமா ப்ரியா?

அப்பாவி போன்ற அவனது பேச்சு அவளுக்கே சிரிப்பை வரவைத்தது. குறுஞ்சிரிப்புடன் நிமிர்ந்தவளது உதடுகள் புன்னகையில் விரிந்திருந்தது. மெல்லிய கேலியுடன் அவனைப் பார்த்தாள்.



அவளது கிண்டல் பார்வை ராமுக்கு புரிந்திருந்தாலும், அவள் தலை நிமிர்ந்தது, அவனுக்கு வசதியாக மாறியது.

அவளை இன்னும் அருகே இழுத்தவன், வலது ஆட்காட்டி விரலால், அவளது நெற்றியில் இருந்து ஊர்வலம் வர ஆரம்பித்தான். நெற்றி, மூக்கு, உதடுகளைச் சுற்றி கன்னம், பின் காது மடல்கள் என அவனது விரல்கள் ஊர்வலம் செல்லுகையில், அவளது கேலியான புன்னகை மறைந்து, தவிப்பும், லேசான அச்சமும் அவளுக்கும் எழுந்தது.

எ… என்ன பண்றீங்க ராம்?

எனக்குதான் பொய் சொன்னா பிடிக்காதே ப்ரியா?

அ… அதுக்கு?

அப்பேர்பட்ட என் மேல, நினைக்காத ஒண்ணை நினைச்சதா சொல்லிட்டியே? அதான் பொய்யை உண்மையாக்கிடலாம்னு நினைக்கிறேன்… நீ என்ன நினைக்கிற ப்ரியா?

வே… வேணாம் ராம்!

நீ என்னைப்பத்திச் சொன்னது தப்புதானே?

ஆ… ஆமா!

அப்ப குடு?!

எ… என்னத்தை?!

தப்பு பண்ணா எனக்கு தர்றேன்னு சொன்னதை!

ரா… ராம்!

ரொம்பக் கஷ்டமா இருந்தா விட்டுடு ப்ரியா… அதுக்கு பதிலா, பொய்யை உண்மையாக்கிடாலாம்! சொன்னதோடு நிற்காத அவனது கைகள், காதுகளில் இருந்து கழுத்தின் வழியே, தோள்பட்டைகளுக்கு பயணிக்க ஆரம்பித்தது!

இல்ல… வே… வேணாம்! நானே கொடுத்துடுறேன்!

சரி கொடு என்று சொல்லி கண்ணை மூடி நின்ற ராமின் இதழ்கள் புன்னகையில் விரிந்திருந்தது.

வேறுவழியின்றி தவித்தவள், டக்கென்று எம்பி ராமின் இரு கன்னங்களிலும் இதழ்களைப் பதித்தாள்.

மிக மிக விரைவான முத்தமாக இருந்தாலும் அதுவே ப்ரியாவை மிகவும் வெட்கமடைய வைத்தது.

எப்படியோ, ராமிடமிருந்து தப்பிவிட்டோம் என்று ஆசுவாசப்பட்டவளை (?), கண் திறந்து கேட்ட ராமின் கேள்வி, வாயைப் பிளக்க வைத்தது!

முத்தம் கொடுக்குறேன்னு சொன்னியே ப்ரியா?

ரா… ராம்…. நா… நான் இப்ப தானே கொடுத்தேன்?

எது இதுக்கு பேரு முத்தமா? வயசுப் பொண்ணு மாதிரியா பேசுற? நீ சினிமால்லாம் பாக்க மாட்டியா?

ரா… ராம்!

ப்ரியாவை மிகவும் நெருங்கியவன், அவனுடைய விரலால் அவளுடைய இதழ்களை இழுத்தான்!



முத்தம்னு சொன்னா மட்டும் இல்லை ப்ரியா, முத்தம் கொடுத்தாலும், உதடுகள் ஒண்ணு சேரணும் புரியுதா?

ஆங் என்று கண்ணை விரித்து நின்றப் ப்ரியாவை பார்க்க பார்க்க ராமுக்கு கொஞ்சம் போதையே ஏறியது!

வாலிபத்தின் வனப்பு அவள் உடலெங்கும் அள்ளித் தெறித்தது. அவளது இளமையின் மேடு பள்ளங்கள் சலனமூட்டிக் கொடிருந்தன. எல்லாவற்றையும் தாண்டி, கொஞ்சம் அறியாமை, கொஞ்சம் காதல், கொஞ்சம் மிரட்சி, கொஞ்சம் தாபம் என்று எல்லா உணர்ச்சிகளை வெளிப்படுத்திக் கொண்டிருந்த அவளது கண்கள், ராமைத் தூண்டில் போட்டு இழுத்தன.

திருமணமான ஒவ்வொரு ஆணும், அந்தப் பார்வையை தன்னுடைய முதலிரவில் சந்தித்திருப்பான்!

அந்தக் கண்கள் சொல்லும் செய்தி செய்தி ஒன்றுதான்! அது,

நான் விருப்பமில்லாதது போல் நின்றாலும், என்னை எடுத்துக் கொள்!
என்னுடைய திமிறல்களை அடக்கி, உன் ஆண்மைத் திமிரை நிரூபித்துக் கொள்!
எனக்கு ஒன்றுமே தெரியாது என்கிற நடிப்புடன், உனக்கு எல்லாமே தெரியும் என்றும் நடிப்பும் சேர்ந்து, மெதுவாய் இருவரும் கற்றுக் கொள்ளலாம் வா!
வாயால் சொல்ல முடியாததை, என் கண்களால் சொல்கிறேன்! என்னை எடுத்துக் கொள்!

அந்தப் பார்வையைத்தான் ப்ரியா பார்த்துக் கொண்டிருந்தாள்! ஆனால் ஒரே வித்தியாசம். மற்ற பெண்களை விட, அவள் கண்களில் எதிர்பார்ப்பை விட மிரட்சி அதிகம் இருந்தது!

ஒரு பெருமூச்சு விட்டவன், பின் அவளை விடுவித்தான்!

குட் நைட் ப்ரியா!

அவனையே பிரமிப்புடன் பார்த்தவள், பின் மெதுவாகக் கேட்டாள்!

ராம்!

சொல்லு ப்ரியா?

நான் உங்களைப் பத்தி என்ன புரிஞ்சிகிட்டேன்னு கேட்டீங்க? பதில் வேணாமா?

ப்ரியாவையே ஒரு நொடி பார்த்தவன், பின் சொன்னான்!

தேவையில்லை ப்ரியா! நீ என்னைப் பத்தி நல்லா புரிஞ்சுவெச்சிருக்கன்னு எனக்குத் தெரியுது! தவிர, நீ டைம் கேட்டது, என்னைப் பத்தி புரிஞ்சிக்கிறதுக்காக இல்லைன்னு எனக்குத் தெரியும்! குட் நைட்!


ப்ரியாவையே ஒரு நொடி பார்த்தவன், பின் சொன்னான்!

தேவையில்லை ப்ரியா! நீ என்னைப் பத்தி நல்லா புரிஞ்சுவெச்சிருக்கன்னு எனக்குத் தெரியுது! தவிர, நீ டைம் கேட்டது, என்னைப் பத்தி புரிஞ்சிக்கிறதுக்காக இல்லைன்னு எனக்குத் தெரியும்! குட் நைட்!

36.

ஒருக்களித்து திரும்பி படுத்தவனையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் ப்ரியா!

தன்னை அவன் முழுக்க புரிந்திருக்கிறான் என்பதை, அவனுடைய வார்த்தைகள் அவளுக்கு தெளிவாகச் சொல்லியது. அவன் தன் ரகசியங்களை தெரிந்தது மட்டுமில்லாமல், அதைப் புரிந்து நடந்து கொள்வது, அவன் மேலான பிரமிப்பை பல மடங்கு கூட்டியது.

அவள் மனதில் தோன்றிய பல உணர்ச்சிகள், அவன் மேல் பாய்ந்து, அவனை இறுக்கி அணைத்துக் கொள்ளச் சொல்லி அவளைத் தூண்டியது.


ராமைத் திருமணம் செய்ய வேண்டாம் என்று சொன்ன போதெல்லாம், அவன் ரம்யாவின் மகன் என்பதாலும், இயல்பிலேயே மிக நல்லவன் என்ற கரிசனம் மட்டுமே, ராமின் மேல் அவளுக்கு இருந்தது.

ஆனால் இப்பொழுது தோன்றும் உணர்வோ, முழுக்க வேறு விதம்! எப்பேர்பட்ட ஆண்மகன், என் ராம் என்கிற பூரிப்பும், பெருமிதமும்!

ஆணுக்கு வேண்டுமானால் எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் காமமாகத் தோன்றலாம்! ஆனால் ஒரு பெண்ணுக்கு, ஒரு ஆணைப் பார்த்து காமம் ஏற்பட, உணர்வின் ஏதோ ஒரு புள்ளியில், அந்த ஆண் அவளை மயக்கியிருக்க வேண்டும்!

நகரத்தில், பெண்கள், ஜிம்முக்கு போகும் ஆண்களின் மேல், காமம் வருவதாகச் சொல்வது முழுக்க பியர் பிரஷரால் வருவது! அப்படி இருந்தால்தான் நம்மையும் இந்தக் கூட்டத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்பதனால் சொல்வது! ஆனால், இயல்பில், ஒரு ஆணின் உடலை மட்டும் பார்த்து, பெண்ணுக்கு காமம் பெரும்பாலும் ஏற்படுவதில்லை!

பெண்களின் உடலை மட்டுமே பார்க்கும் ஆண்களுக்கு மத்தியில், கட்டிய மனைவியையே, அவள் விருப்பமில்லாமல் தொட விரும்பாத ராமின் செயல், ப்ரியாவிற்கு அவன் மேல் கட்டுக்கடங்கா காதலைக் கொண்டு வந்தது!

அவனையே ஆசையாகப் பார்த்தவாறு எண்ணங்களில் மூழ்கியிருந்தவளை, ராமின் குரல் கலைத்தது!

ரொம்ப யோசிக்காத ப்ரியா! கம்முன்னு படுத்து தூங்கு!

ஆங்! இவன் எப்ப திரும்பி படுத்தான்? எவ்ளோ நேரமா என்னைப் பாத்திட்டிருக்கான்?

திரும்ப யோசிக்க ஆரம்பிக்காத! வாழ்க்கையை அது போற போக்குல எடுத்துக்க பழகு. சின்னச் சின்ன விஷயத்தைக் கூட ரொம்ப பெருசா யோசிச்சு, பெரிய விஷயத்துல கோட்டை விட்டுடக் கூடாது! ஓகேயா? பேசாம தூங்கு! குட் நைட்!

அன்றிரவு ப்ரியா தூங்கிய பொழுது, இதுநாள்வரை இல்லாத மகிழ்ச்சியும், நிம்மதியும் அவளுள் வந்திருந்தது!

அடுத்த இரு நாட்களில் ராம் பிசினஸ் ட்ரிப் சென்றிருந்தான். இது ஏறக்குறைய ஒரு மாத கால ட்ரிப்!

ராம் அருகில் இருந்த பொழுது தெரியாத அவனது அருமை, அவன் இல்லாத சமயத்தில் ப்ரியாவுக்கு புரிய ஆரம்பித்திருந்தது. அறை முழுக்க அவனது வாசத்தை ப்ரியா உணர்ந்தாள்.

புடவை அணியும் ஒவ்வொரு தருணங்களிலும் அவளது கை தன்னிச்சையாக, அவன் வருடும் இடுப்பினை தடவிக் கொடுத்தது. இரவில், ராம் அவளை மடக்கும் விதங்களையும், அதில் மாட்டிக் கொண்டு அவள் முழிக்கும் காட்சிகளையும் நினைத்து, உள்ளுக்குள் அவனை ரசித்து கனவு காண ஆரம்பித்திருந்தாள்! மீண்டும், அதே போல் அவன் தன்னை மடக்க வேண்டும் என்று அவளது மனம் ஆசைப்பட்டது.

10 நாட்கள் கடந்திருந்தது!
ப்ரியா வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வரும் போது ரம்யா ஃபோனில் பேசி முடிக்கும் தருணத்தில் இருந்தாள்!

சரி, உடம்பைப் பாத்துக்கோ! நல்லா சாப்டு! ஓகே! பை!

யாரும்மா ஃபோன்ல?

ராம்தான் ப்ரியா?



அவரா? எப்டி இருக்காராம்? நல்லா இருக்காரா? ஃபுட்டெல்லாம் பிரச்சினை இல்லையே? ஏன் ஃபோனே பண்ணலியாம்? வேலை நிறையவா???

தொடர்ச்சியாய் அவள் கேட்ட கேள்விகளே, அவள் எந்தளவு ராமைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று சொன்னது!

என்ன சொல்ற ப்ரியா? ராம், டெய்லி என் கூட பேசிகிட்டுதானே இருக்கான்? 10 நாளாவா உனக்கு கால் பண்ணலை?

ரம்யாவின் கேள்வி ப்ரியாவுக்கு அதிர்ச்சியையும், கொஞ்சம் கோபத்தையும் கொடுத்தது. அதே சமயம் ராமை அவளால், ரம்யாவிடமே விட்டுக் கொடுக்க முடியவில்லை!

இ… இல்லம்மா! இன்னிக்குதான் அவர் ஃபோன் பண்ணலை. ஒரு வேளை அப்புறம் பண்ணுவாரா இருக்கும் என்று சமாளித்தாள்!

ரம்யாவிற்கு அவள் சமாளிப்பது புரிந்தாலும், உள்ளுக்கும் ராம் ஏன் இப்படி செய்கிறான் என்று வருத்தப்பட்டாலும், அவர்களுக்கிடையே அவள் உள்ளே நுழைய விரும்பவில்லை!

இப்படியே அடுத்த 10 நாட்கள் சென்றது. ப்ரியாவிற்கு, ராம் தினமும் ரம்யாவிடம் பேசுவது தெரிந்து விட்டபடியால், இயல்பாய் கேட்பது போல் ரம்யாவிடம், ராமைப் பற்றி விசாரித்துக் கொள்வாள்!

அவளது மனநிலையைப் புரிந்த ரம்யாவும், எல்லாவற்றையும் சொல்வாள்!

20 நாள் கழித்தும் ஃபோன் செய்யாததால் பொறுக்க முடியாத ப்ரியா, அன்றிரவு ப்ரியாவே, அவனுக்கு அழைத்தாள்!

ஹாய் ப்ரியா! வாட் அ சர்ப்ரைஸ்! எப்டியிருக்க?

------------

ஹலோ, ப்ரியா? ஹலோ?

இ… இருக்கேன்!

சொல்லு ப்ரியா? ஃபோன் பண்ணிட்டு பேசாம இருக்க?

ஏன் எனக்கு ஃபோன் பண்ணவே இல்லை? அடக்கிய குரலில் அவள் கேட்ட கேள்வியில், கோபமும் வருத்தமும் கலந்திருந்தது!

ஹா ஹா! அதான் கோபமா?

பதில் சொல்லுங்க!

ஏன் ப்ரியா, இதுவரைக்கும் சாதாரண பேச்சைத் தவிர, நீயா என்கிட்ட வந்து ஏதாச்சும் பேசியிருக்கியா?

இ… இல்ல!

நான் பக்கத்துல இருந்தாலே, என்னைக் கண்டு ஓடுவ! நானா இழுத்து வெச்சு உன்கிட்ட கேள்வி கேட்டாதான் பதில் சொல்லுவ! அப்புறம், ஏன் இங்க வந்தும் உன்னை டிஸ்டர்ப் பண்ணுவானேன்னுதான் கம்முன்னு இருந்துட்டேன்! தவிர நான் உன்கிட்ட நடந்துக்குற முறை உனக்கு புடிக்காதுன்னு நினைச்சுகிட்டேன்! அதான் ஃபோன் பண்ணலை!

என்னதான் ராம் சொல்லுவது உண்மைதான் என்றாலும், அதற்காக ஃபோனே செய்யவில்லை என்பதை அவளால் ஒத்துக் கொள்ளவேமுடியவில்லை! அதே கோபத்தில் வெடித்தாள்!

அதுக்காக ஃபோன் கூட பண்ண மாட்டீங்களா? என்னிக்காச்சும் நீங்க கேட்டு நான் ஏதாச்சும் மறுத்து சொல்லியிருக்கேனா? எல்லாத்துக்கும் ஓகேதானே சொல்லியிருக்கேன்?



அப்டி நான் என்ன கேட்டதுக்கு நீ ஓகே சொன்ன ப்ரியா?

ஆங்…. கோபமாய் வெடித்துக் கொண்டிருந்த ப்ரியா, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் மலைத்து நின்றாள்! ராமோ, விடாமல் அவளைச் சீண்டிக் கொண்டிருந்தான்!

இன்னிக்கு சாரி கட்டிருக்கியா ப்ரியா?

-----

ம்ம்ம்… நான் அங்க இருந்திருந்தா நல்லாயிருந்திருக்கும்!

ப்ரியாவின் கை அவளையறியாமல், அவளது இடுப்பிற்குச் சென்றது! மனதில் இருந்த கோபம் காணாமல் போய், இதழ்களில் புன் சிரிப்பு அமர்ந்திருந்தது! (திருடன், டக்குன்னு பேச்சை மாத்திட்டானே? எப்படின்னாலும், இந்த இடத்துக்கு வந்து நின்னுடுவான்!).

என்னதான் கோபம் மறைந்திருந்தாலும், அதை அவனிடம் வெளிக்காட்டாமல், பொய்யாய் நடித்தாள்!

பேச்சை மாத்தாதீங்க! ஏன் ஃபோன் பண்ணலை?!

எனக்கு ஒரு டவுட்டு இருந்துது ப்ரியா! அதைக் க்ளியர் பண்ணிக்கதான் ஃபோன் பண்ணலை!

எ… என்ன டவுட்டு!

இல்ல, நாந்தான் மாஞ்சு மாஞ்சு என் பொண்டாட்டி பின்னாடி சுத்துறேனோ? என் பொண்டாட்டிக்கு என் மேல ஒரு ஃபீலுமே இல்லியோன்னு நினைச்சேன்! அதைத் தெரிஞ்சிக்கதான் ஃபோனே பண்ணலை! பரவாயில்லை, என் பொண்டாட்டிக்கும் கொஞ்சம் என் மேல ஃபீலீங்க்ஸ் இருக்குதான் போல!

அதெல்லாம் நிறையவே இருக்கு! ஒழுங்கா சாப்பிடுங்க! உடம்பைப் பாத்துக்கோங்க என்று வெட்கத்துடன் சொல்லி ப்ரியா ஃபோனை வைத்த பொழுது, அவளையறியாமலேயே, அவள் ராமின் காதலியாய் மாறியிருந்தாள்!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அதையும் தாண்டி புனிதமானது!!! [waiting for update] - by M.Gopal - 17-05-2019, 08:59 PM



Users browsing this thread: 1 Guest(s)