Thread Rating:
  • 2 Vote(s) - 1.5 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அதையும் தாண்டி புனிதமானது!!! [waiting for update]
#15
எல்லாரையும் ஏமாத்தலாம். ஆனா, என்னை ஏமாத்த முடியாது! நான் சொல்றதை சொல்லிட்டேன், அப்புறம் உன் இஷ்டம்! என்று சொல்லிவிட்டு நகர்ந்தான்!

ராமின் வார்த்தைகளும், அவன் பேசும் போது, அவளை ஆழமாகப் பார்த்த அவன் கண்களும் சொன்னது, ராம், அவளின் அடி மனதை படித்திருக்கிறான் என்று!

ரம்யாவிடம் கூட அவள் மூடி மறைத்திருக்கும் சில விஷயங்களை, அவன் தெரிந்திருக்கிறான் என்று! எந்தளவு தெரிந்திருக்கிறானோ என்று மலைத்து நின்றாள்!

28.

மலைத்து நின்ற ப்ரியாவையே அன்பாய் பார்த்தாள் ரம்யா! தானும் கூட கண்டு கொள்ளாத ஒரு விஷயத்தில், தனியாக போராடியிருக்கிறாள் ப்ரியா. தனக்காக, வெளிக்காட்டாமல் இருந்திருக்கிறாள் என்றதும் ரம்யாவுக்குள் ஒரு இனம் புரியாத உணர்வு! மெல்ல அவளை அசைத்தாள் ரம்யா!

ப்ரியா!

தன்னை அசைத்த ரம்யாவிடம் திரும்பிய ப்ரியா, உணர்ச்சி தாங்காமல் அவளது மடியிலேயே சாய்ந்தாள்!

என்ன ப்ரியா குழப்பம்? ராமை பிடிக்கலியா? அவன் மேல நம்பிக்கை இல்லியா? என்ன பிரச்சினை?

அவளது அன்பில் தெம்படைந்தவள், கண்டிப்பா கல்யாணம் பண்ணிக்கனுமாம்மா? நானும், உங்களை மாதிரியே இருந்துடுறேனே?! ப்ளீஸ்!

ப்ரியா! என்று கோபத்தில் கத்தினாள் ரம்யா!

அவளது கோபத்தில் ப்ரியாவே அதிர்ந்து நின்றாள்!




இங்க பாரு, நீ ராமைக் கல்யாணம் பண்றியோ, பண்ணலியோ, ஆனா, என்னை மாதிரியான ஒரு வாழ்க்கை உனக்கு வேணாம்? உனக்கு என்னடி தெரியும் என்னைப் பத்தி?

ரம்யாம்மா…

எத்தனை நாள், நான், தனியா ஃபீல் பண்ணியிருக்கேன்னு உனக்கு தெரியுமா? துள்ளி குதிக்குற வயசுலியே, எல்லாப் பொறுப்பையும் எடுத்துகிட்டு, திகைச்சு நின்னது எனக்குதான் தெரியும்! எல்லாத்தையும் மீறி சாதிச்சாலும், யார் கூட சேர்ந்து சந்தோஷப்படுறதுன்னு கூடத் தெரியாம, தனியா உக்காந்து சிரிச்சது தெரியுமாடி?

நான் அதட்டி வேலை வாங்க ஆயிரம் பேர் இருக்காங்க! ஆனா என்னை அதட்டி, இந்த வேலையைச் செய்னு அன்பா சொல்ல ஒருத்தரும் இல்லை! மனசுக்கு நெருக்கமானவிங்க, இதைச் செய்னு உரிமையா சொல்றப்ப கிடைக்கிற சந்தோசம் வேறெதுலியும் இல்லடி! ஆனா, எல்லாரும் என்கிட்ட தள்ளியேதான் நின்னாங்க!

பல வருஷம் கழிச்சு ராம் வர்ற வரைக்கும், மனசுக்கு நெருக்கமா யாருமே இல்லாம புழுங்கினது தெரியுமா? உள்ளுக்குள்ள இருக்குற சின்னச் சின்ன அல்பத்தனமான ஆசையைக் கூட நிறைவேத்திக்க முடியாம, என் அந்தஸ்த்து, சமூகம், பணம் இதுக்காக பாத்து பாத்து எதையும் நிறைவேத்திக்க முடியாம தவிச்சது தெரியுமா?
அன்னிக்குச் சொன்னியே, வேற ஒருத்தி மருமகளா வந்தா, என் பாய்ஃபிரண்டை கொத்திட்டு போயிருவான்னு. உண்மையாலுமே, ராமுக்கு கல்யாணம் ஆனதுக்கப்புறம், நான் யார் தோள்ல சாய்வேன், வர்றவ, எங்களை நல்லாப் புரிஞ்சிக்கனுமேன்னு நான் தினமும் பயந்துட்டிருக்குறது உனக்கு தெரியுமா?

எல்லாத்தையும் தாண்டி, என்னதான் ராமோட தோள்ல நான் சாய்ஞ்சாலும், நைட்டு தனியா படுக்குறப்ப, அந்த நேரம் சாஞ்சுக்க ஒரு தோள் இல்லைன்னு நினைக்கிறப்ப வர்ற ஏக்கம், துக்கம், வெறி இதெல்லாம் உனக்கு தெரியுமா? 25 வருஷமா தனியாவே தூங்கிட்டு இருக்குறேண்டி! அது கொடுக்குற வலி என்னான்னு தெரியுமா உனக்கு?

என்கிட்ட நெருங்கிறவங்களை அடிச்சு விரட்டுனாலும், எவ்ளோ சுயக் கட்டுப்பாட்டுல நான் இருந்தாலும், என் வைராக்கியத்துக்கும், இளமை உணர்ச்சிக்கும் நடுவுல நான் போராடுனது உனக்கு தெரியுமாடி?

எத்தனை நாள் சலனப்பட்டிருப்பேன், அதைச் சொல்லி டிஸ்கஸ் பண்ணவோ, சஜசன் கேக்கவோ கூட யாரும் இல்லாம, எ… என்னதான் இ…இருக்குன்னு ஒரு தடவை பாத்துடலாமான்னு நினைச்சு, உள்ளுக்குள்ள தடுமாறி, அதையும் மீறி, இன்னமும் இவ்ளோ வைராக்கியமா இருந்திருக்கேன்னா, அது ராமுக்காக மட்டும் தாண்டி!

நான் ஏங்குனது வெறும் செக்சுக்காக இல்லடி!



என் மேல தப்பு இருந்தாலும், நான் வீம்பு புடிச்சு நிக்கனும். அப்ப, என்கிட்ட வந்து என்னை ஒருத்தரு சமாதானப்படுத்தனும்! என் மேல எந்த தப்பே இல்லன்னாலும், இன்னொருத்தருகிட்ட போயி சாரிங்க, என்னை மன்னிச்சிருங்க, என்கிட்ட பேசுங்கன்னு, நான் வெக்கத்தை விட்டுக் கெஞ்சனும்! நான் ஒருத்தருகிட்ட குழந்தைத் தனமா நடந்துக்கனும்! என் மனசுக்கு புடிச்சவரு டயர்டா நிக்குறப்ப, ஒரு தாயா அவரைத் தாங்கனும்!

எல்லாத்தையும் தாண்டி, ஆயிரம் சண்டை போட்டாலும், கோபத்துல பேசாம நின்னாலும், நைட்டு, பக்கத்துல படுத்தி சமாதானப்படுத்திட்டு, அவருக்காக நானும், எனக்காக அவரும் உருகி, ஒரே ஒரு ஆழமான முத்தம் கொடுக்குறதுல இருக்குற சந்தோஷம், எந்தக் காசும், பெருமையும், அந்தஸ்த்தும் தந்துடாதுடி!

வெக்கத்தை விட்டுச் சொல்றேண்டி… ராம் மாதிரி ஒருத்தன் வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கறீங்களான்னு கேட்டிருந்தா, கால்ல உழுந்துருப்பேண்டி! வந்தவன் எல்லாம் படுக்கறதுக்கும், காசுக்காகவும் தான் பாத்தானுங்க! நல்லதை சொல்லிக் கொடுத்து வளர்த்த எங்க அப்பா அம்மா, கொஞ்சம் சுயமரியாதை, தன்மானத்தையும் சேத்து சொல்லிக் கொடுத்து தொலைச்சிட்டாங்களே! எப்டி ஒத்துக்குவேன்? கேவலம் உடம்பு சுகத்துக்காக வந்தவன்னு என்னை பாக்க மாட்டான்? ம்ம்ம்?

என் பையன்கிறதுக்காச் சொல்லலடி! ராம் மாதிரி ஒருத்தனை உட்டுட்டு, அவன் கூட சேந்து சாதிக்கிறதை விட்டுட்டு, வேற என்னத்தைடி பெருசா, தனியா சாதிச்சிடப் போற பைத்தியக்காரி?

நான் இவ்ளோ ஃபீல் பண்ணியிருக்கேன்னு தெரிஞ்சா, ராமே தாங்க மாட்டான்! அவன்கிட்ட கூட நான் இதெல்லாம் சொன்னதில்லை! உன்கிட்ட மட்டும்தான் என்னைப் பத்தி சொல்லியிருக்கேன். இது தெரியாம, என்னை மாதிரி வாழ்க்கை வாழுறாளாம்! பெருசா பேச வந்துட்டா! அறிவு கெட்டவ!



கோபமாக ஆரம்பித்தாலும், பேசப்பேச உணர்ச்சி தாங்காது, லேசான கண்ணீருடன் வெடித்த ரம்யாவின் உணர்வுகள் புரிய ஆரம்பித்த நொடியில், ப்ரியாவின் கண்களில் கண்ணீர் பயங்கரமாக வர ஆரம்பித்தது!

அவள் பேசி முடித்த உடன், ரம்யாவின் மடியிலேயே படுத்து, சாரிம்மா… சாரிம்மா… ஏம்மா, என்கிட்ட சொல்லவே இல்லை! சாரிம்மா! ரொம்ப கஷ்டப்பட்டீங்களா?! என்று புலம்பினாள்! ரம்யாவின் கஷ்டங்கள் எல்லாமே, தன்னால்தான் என்பது போல் உருகினாள்! ஆனால் அவளையறியாமல், ரம்யாம்மா, அம்மாவாக மாறியிருந்தது.

வெடித்தது என்னமோ ரம்யாதான் என்றாலும், அவள் கடந்து வந்த உணர்ச்சிப் போராட்டங்களுக்காக பெரிதும் உருகியது ப்ரியாதான்!

அப்பொழுதும் ரம்யாவின் உணர்வுகளை மிகச் சரியா ப்ரியா உள்வாங்கியிருந்தாள்! வேறு யாராவது இருந்திருந்தால், அதைச் சரியாக உணர்ந்திருப்பார்களா என்பது சந்தேகமே? அதை ஒரு உடல் தேவையாக மட்டுமே பார்த்திருப்பார்கள்! ப்ரியாவால்தான், இதையும் புரிந்து கொள்ள முடிந்தது!

இவ்வளவு நாள் அடைத்து வைத்திருந்த உணர்வுகள், அத்தனையையும் கொட்டியதில், ரம்யாவிற்க்கும் மனம் கொஞ்சம் நிம்மதி அடைந்திருந்தது! சிறிது நேரம் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருந்தார்கள்!

பின் கண்களைத் துடைத்தவாறே நிமிர்ந்த ப்ரியா, நான் கல்யாணத்துக்கு ஒத்துக்குறேம்மா!

ப்ரியா இப்பியும் சொல்றேன். நீ ராமைத்தான் கல்யாணம் பண்ணிக்கனும்னு அவசியமில்லை! வேற யாரா வேணா இருக்கலாம். ஆனா, கல்யாணம் பண்ணிக்கனும். பொறுமையா கூட பண்ணிக்கோ. நல்லா யோசிச்சு முடிவெடு! நான் சொன்னது எல்லாமே, என் பையனைக் கல்யாணம் பண்ணிக்கனுங்கிறதுக்காக இல்லை! புரியுதா?

உங்க பையன் மாதிரி ஒருத்தரை கல்யாணம் பண்ணிக்க, நான் கொடுத்து வெச்சிருக்கனும்மா! அதுவும் என் நிலை தெரிஞ்சும், அவர் லவ் பண்றாருண்ணா….

நான் தயங்கினது வேற காரணம்மா! அதை விடுங்க, அதை நான் பாத்துக்குறேன்! முழு மனசா சொல்றேன்! எனக்கு சம்மதம்! வாழ்நாள் முழுக்க, இந்தக் குடும்பத்தோடத்தான், அதுவும் உங்களோடத்தான் இருப்பேங்கிறது எனக்கு எவ்ளோ பெரிய சந்தோஷம் தெரியுமா?!

ஆனா ஒரு கண்டிஷன்!

என்ன?

இனிமே இப்டி உள்ளுக்குள்ளியே ஏதாவது நினைச்சி ஃபீல் பண்ணீங்க, அப்புறம் நான் அம்மான்னு கூட பார்க்க மாட்டேன்! நீங்கதானே சொன்னீங்க, அன்பா அதட்ட ஆளில்லைன்னு! ஏண்டா சொன்னோம்னு நீங்க ஃபீல் பண்ற அளவுக்கு திட்டிபுடுவேன்! ஓகேயா?! நல்லா யோசிச்சுக்கோங்க! உங்க வீட்டுக்கே வந்து, உங்களேயே அதட்டுற, என்னை மாதிரி ஒரு மருமக உங்களுக்கு வேணுமான்னு?! அப்புறம் நாளைக்கு ஃபீல் பண்ணீங்கன்னா, பிரயோஜனமேயில்லை! உங்களுக்கு கடைசி சான்ஸ் தர்றேன்! என்னச் சொல்றீங்க?

அன்பான, வெகுளித்தனமான, உரிமையான, தன்னைத் தேற்றப் பேசிய ப்ரியாவின் பேச்சிலும், சிரிப்பிலும், ரம்யாவின் மனமும் நிறைந்தது!

ஏய் வாயாடி என்று ப்ரியாவோடு சேர்ந்து ரம்யாவும் சிரித்தாலும், இருவரது மனதும் நிறைந்திருந்தது!

அடுத்த நாள், மாலை தோட்டத்தில்!

ரம்யாம்மா, அதான் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டேன்ல?! அப்புறம் ஏன் அவசரமா கல்யாணம் பண்ணனும்? நானும் படிப்பை முடிச்சுடுறேன்! வயசும் கம்மிதானே? கேஸ் தீர்ப்பும் வந்துடட்டுமே?! ரெண்டு, மூணு வருஷம் போகட்டுமே?

ப்ரியா சொல்றதும் சரிதானே ராம்?

அம்மா, நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு, அன்னிக்கு பேச்செடுத்ததுக்கு காரணமே, கேஸ் தீர்ப்பு வர்றதுக்குள்ள, கல்யாணம் நடக்கனும்னுதாம்மா!

ஏன் ராம், கேஸ் நமக்கு சாதகமா தீர்ப்பு வராதுன்னு நினைக்கிறியா?

இல்லம்மா, கண்டிப்பா நாமதான் ஜெயிப்போம்! அதுல எனக்கு டவுட்டே இல்லை. அதுனாலதான் சொல்றேன், தீர்ப்புக்கு முன்னாடியே, கல்யாணம் நடக்கனும்னு!

குழப்புற ராம்!

அம்மா, நான் ப்ரியாவும் உங்களை மாதிரியே, எல்லாருக்கும் முன்னுதாரணமா இருக்கனும்னு நினைக்கிறேன். தீர்ப்பு சாதகமா வந்த பின்னாடி நடக்குற கல்யாணம், கொஞ்சம் சாதாரணம்தான்!

இந்தக் கல்யாணம், தீர்ப்பு வந்தப்புறம், ப்ரியா தன்னை ப்ரூவ் பண்ண பின்னாடி, நடக்குற கல்யாணமாவோ, இல்லை பரிதாபத்துல நடக்குற கல்யாணமாவோ இருக்கக் கூடாது!

தீர்ப்புக்கு முன்னாடியே நடக்குற கல்யாணம், ப்ரியாங்கிற தனிப்பட்ட கேரக்டருக்காக, அவ நல்ல மனசுக்காக மட்டுமே நடக்குற கல்யாணம்!

எல்லாத்தையும் தாண்டி, இந்த மாதிரி சம்பவங்களைத் தாண்டி, வாழ்க்கை இருக்குங்கிறதையும், இது பெண்களுக்கு அசிங்கமில்லைங்கிறதுக்கும், ப்ரியா முன்னுதாரணமா இருக்கனும்னு நான் விரும்புறேன். ஓகேயா?

ஆரம்பத்தில் ப்ரியா புலம்பிய, இது எனக்கு எப்டிப்பா அசிங்கம் என்ற கேள்விக்கான பதிலை, எல்லாருக்கும் சொல்லவேண்டும் என்று நினைக்கும், ராமை நினைத்து, ரம்யா, ப்ரியா இருவருமே மலைத்து நின்றனர்!

ரொ… ரொம்ப ரொம்ப பெருமையா இருக்கு ராம்! உன்னை என் பையன்னு நினைக்கிறப்ப, ரொம்ப சந்தோஷமா இருக்குடா! தாங்க்ஸ்டா! என்று ரம்யாவே உணர்ச்சி வயப்பட்டாள்! அவனை கன்னத்தோடு முத்தமிட்டாள்!



ஆனால் ப்ரியாவோ, உள்ளுக்குள் ஆயிரம் உணர்ச்சிகள் கரை புரண்டோடினாலும், உனக்கு நான் வேணாண்டா என்று கதறலோடு, அவன் தோள் சாய்ந்து, அவனை ஆவேசமாக முத்தமிட வேண்டும் என்று ஆவேசமடைந்தாலும், அதை முழுக்க காட்டாமல், ராமையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள்!

ரம்யா சென்றவுடன், ப்ரியாவின் அருகில் சென்ற ராம்,

ஏய் கண்ணைத் துடைடி, சும்மாச் சும்மா செண்டிமெண்ட்டா ஃபீல் பண்ணிகிட்டு! லவ் பண்றேன்னு சொல்றேன், ஒரு ரொமாண்டிக் லுக் விடுவன்னு பாத்தா, கண்ல தண்ணி விட்டுட்டிருக்கா?!

ஆக்சுவலா நீ கொடுக்க வேண்டிய முத்தத்தை, என் கேர்ள்ஃபிரண்டு கொடுத்திட்டு போயாச்சு! நீ என்னான்னா…

உள்ளுக்குள் ஆசை இருந்தாலும், அவன் சீண்டலிலும், டி என்ற அழைப்பிலும் கோபம் அடைந்தது போல், வெவ்வெவ்வே, ரொம்பத்தான்… என்று பழிப்பு காட்டி விட்டுச் சென்றாள்!

அதன் பின் காரியங்கள் துரிதமாயின! கணேசன் மட்டும், என்னை லவ் பண்ணிட்டு, அவனை கல்யாணம் பண்ணிக்குறியேம்மா என்று ப்ரியாவை சீண்டினார்! ப்ரியா மீண்டும் ஒரு முன்னுதாரணமாக மாற, ராம் நினைத்ததையே, அனைவரும் பேச, ஒரு நல்ல நாளில், ராமின் மனைவியாக, ப்ரியா மாறினாள்!

இத்தனை நடந்திருந்தாலும், ப்ரியாவின் மனதுக்குள் ஓடும் சில எண்ணங்களை, அவளின் சில தவிப்புகளையும் அவள் மறைத்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை அறிந்திருந்த ராமும், அமைதியாகவே இருந்தான்!


இத்தனை நடந்திருந்தாலும், ப்ரியாவின் மனதுக்குள் ஓடும் சில எண்ணங்களை, அவளின் சில தவிப்புகளையும் அவள் மறைத்தாலும், ஆரம்பத்திலிருந்தே அதை அறிந்திருந்த ராமும், அமைதியாகவே இருந்தான்!

29.
நிகழ்காலம்!

ரம்யாவின் மனது, நடந்தச் சம்பவங்களை அசைபோட்டவாறு, தூங்க ஆரம்பித்த பொழுது நள்ளிரவைத் தாண்டியிருந்தது! என்னதான் ப்ரியா, தன்னை உரிமையாய் அறைக்குள் அழைத்து வந்து, தூங்கவைக்க முயற்சி செய்தாலும், அவளால் உடனே தூங்க முடியவில்லை!

தூங்க ஆரம்பிக்கும் முன், அத்தனை குழப்பங்களுக்கு மத்தியில், அவள் மனதில் இருந்த ஒரு முக்கியக் கேள்வி…

கல்யாணத்துக்கு ஒத்துகிட்ட பின்னாடியும், ராம் ஏன் ப்ரியாவை, ஃபோர்ஸ் பண்ணான்? இவளுக்கு வேற ஏதாவது பிரச்சினையா? என்கிட்ட ஏன் சொல்லலை? என்பதுதான்!

மனம், குழப்பத்தில் இருப்பதாலும், தூக்கம் கெட்டதாலும், அடுத்த நாளும் அதே போன்று தனிமையிலும், அமைதியிலுமே உழன்றாள் ரம்யா! அவளது, உணர்வுகளைப் புரிந்து கொண்ட ப்ரியா, அந்த வீட்டின் பொறுப்புகளை, தானாக எடுத்துக் கொண்டாள்!



இத்தனை வருடங்களாக, ரம்யா, ப்ரியாவிற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும், அந்த வீட்டிற்கு முதன்மை ரம்யாதான். அலுவலகத்திலும், அவள்தான் முக்கிய இடத்தில்.

ஆனால் இப்பொழுதோ, ப்ரியாவே முன்வந்து, அம்மாவுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அவிங்களை டிஸ்டர்ப் பண்ணாதீங்க என்று பொறுப்பெடுத்துக் கொண்டவள், பம்பரமாய் சுழன்றாள். அதே சமயம், ரம்யாதான் எல்லாம் என்பதையும், எந்த இடத்திலும் விட்டுக் கொடுக்காமல் இருந்தாள்.

ரம்யா விரும்பிய தனிமையை, ப்ரியா அவளுக்குக் கொடுத்தாலும், தள்ளி நின்று ப்ரியாவும், ரம்யாவும், ஒருவரையொருவர் கவனித்துக் கொண்டே இருந்தனர்.

தன் பின்னே, குழந்தைத் தனமாய் சுற்றிக் கொண்டிருக்கும் ப்ரியாவின் ஆளுமை, அவளது செயல்களிலும், பொறுப்புகளை முடிப்பதிலும், தெளிவாய் தெரிந்தது! அதில் ரம்யாவுக்கும் கொஞ்சம் பெருமைதான்!

அடுத்த நாள் மாலை வரை இப்படியே கடந்தது. பகலில் ரம்யாவுக்கான தனிமையைக் கொடுத்த ப்ரியா, இரவில், ரம்யா உடன் தான் இருந்தாள். அன்று இரவும், ரம்யாவின் முதுகை தடவிக் கொடுத்து அவளை உறங்க வைத்தாள்.

ஏனோ முந்தைய நாளின் குழப்பங்கள் இன்றி, ரம்யா அன்றிரவு மிக விரைவில் தூங்கினாள்! அடுத்த நாள் எழுந்த போது, அவள் மனதும் கொஞ்சம் தெளிவாய் இருந்தது! ஆனாலும், அன்றும் அமைதியாக இருந்த ரம்யாவின் முன்பு, ப்ரியா வந்து நின்றாள்!

கோவிலுக்குப் போலாமாம்மா?

உண்மையாலுமே தானும் கோவிலுக்குப் போகலாமா என்று நினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் ப்ரியாவே வந்து கேட்டது, அவள் மேலான அன்பை மேலும் அதிகப்படுத்தியது! தன் உணர்வுகளைச் சொல்லாமலேயே புரிந்து கொள்பவர்களை வெறுக்க முடியுமா என்ன?

ம்ம்ம்…

எந்தக் கோவில் என்று ரம்யா சொல்லாமலேயே, ப்ரியா முடிவு செய்தாள்! ரம்யாவிற்குப் பிடித்த மருதமலை!

கோவிலிலும் ப்ரியாவே, ரம்யாவிற்கு பிரசாதத்தை நெற்றியில் வைத்தவள், அவள் கைகளைப் பிடித்தவாறே வழக்கமாக ரம்யா செய்யும் செயல்களை செய்தாள்! பின் அவளை கூட்டிக் கொண்டு வந்து, வழக்கமாக உட்காரும் இடத்திற்கு வந்தமர்ந்தாள்.



மாலை நேரம், கோவையின் குளுமையும், மலைச்சாரலில் வீசும் தென்றலும், கோவிலின் அமைதியுடன் கலந்து முகத்தில் மோதும் போது, மனதின் எந்தக் குழப்பமும் கொஞ்சம் கொஞ்சமாக, நீங்கவேச் செய்யும்!

ப்ரியா ஒரு வேளை, அடுத்த நாளே, நடந்து கொண்டதற்கு விளக்கம் அளிக்கவோ, அதைப் பற்றி பேசவோ முயற்ச்சித்திருந்தால் கூட, ரம்யாவிற்கு தெளிவு கிடைத்திருக்குமா என்று தெரியாது!

ஆனால், அமைதியாக, அடுத்த 3 நாட்களும், ப்ரியாவுக்கான தனிமையைக் கொடுத்து, அவளது முக்கியத்துவத்தைக் குறைக்காமல், மாறாக, இன்னும் அவளை மிகவும் ஆதரவுடன் தாங்கி, அன்பு செலுத்தும் போது, அவளது குழப்பங்களைத் தாண்டி ஒரு நம்பிக்கை, தெளிவு அவளது அடிமனதில் வந்தது!

அப்பொழுதுதான் ப்ரியா சொன்னாள்!

முன்னல்லாம், மருதமலை வரணும்ன்னா ரொம்ப வெறுப்பா இருக்கும்மா! ஆனா இப்ப, உங்களை மாதிரியே எனக்கும் இது ரொம்ப பிடிச்ச இடம்மா மாறிடுச்சி! என்ன இருந்தாலும், என் வாழ்க்கைல நீங்களும், ராமும் வர்றதுக்கு காரணமே இந்த இடம்தானே?!

ப்ரியாவின் வார்த்தைகள் ரம்யாவிற்கு இன்னமும் தெளிவையும், மகிழ்ச்சியையும் கொடுத்தது!

அந்தத் தெளிவான மனதுடன், காரில் திரும்பும் போதுதான், ரம்யாவின் மனதில் பளீரென்று மின்னல் போல் அந்தக் கேள்வி எழுந்தது!

அந்த எண்ணம் தோன்றிய வினாடி முதல், அவள் ப்ரியாவையே ஆழமாய் பார்த்துக் கொண்டிருந்தாள்! ரம்யாவின் மனது சில்லென்று இருந்தது! ஒரு வித பிரமிப்பும், ஆச்சரியமும், கொஞ்சம் கோபமும், பயமும் கூட கலந்த கலவையான உணர்வு அது!

இரவு வரை, ப்ரியாவை, பார்வையாலேயே ஆராய்ந்து கொண்டிருந்தாள் ரம்யா!

ரம்யாவின் ஆராய்ச்சிப் பார்வையை ப்ரியாவும் உணர்ந்திருந்தாள். உள்ளுக்குள் கொஞ்சம் பயமும், சங்கடமாய் உணர்ந்தாலும், அதை எதிர்கொண்டுதான் ஆக வேண்டிய அவசியத்தை உணர்ந்தவள், அன்றிரவும், ரம்யாவின் அறைக்குள் சென்றாள்!

எதிர்பார்த்தபடியே, அவளது வரவை நோக்கி ரம்யா காத்துக் கொண்டிருந்தாள். ப்ரியா உள் நுழைந்த பின் அந்தக் கேள்வியைக் கேட்டாள். அது,

அன்னிக்கு நடந்தது முழுக்க, உன்னோட ஏற்பாடுதானே? ராமையும் இதுக்கு ஒத்துக்கச் சொல்லி கன்வின்ஸ் பண்ணது கூட நீதானே? அவன் ஆரம்பத்துல ஒத்துக்கலைதானே?

அம்மா…

சொல்லு ப்ரியா! எ…எனக்கு உண்மை தெரியனும்!

ஆ… ஆமாம்மா!

கோபமும், பிரமிப்பும் கலந்த உணர்வில், தன்னுடைய யூகம் சரியானதில், ஆவேசமாய் கேட்டாள்!

அறிவிருக்காடி உனக்கு? பொண்ணாடி நீ? கட்டின புருஷனையே, இன்னொருத்திக்கு பங்கு போட, நீயே ப்ளான் பண்ணியிருக்க? ஏண்டி இப்டி பண்ண?

யாரோ ஒருத்திக்கா கொடுத்தேன்?! உங்களுக்குதானே? தவிர, நான் பங்குல்லாம் போட்டுக்கலை! இதென்ன சொத்தா? பங்கு போட்டா குறையுறதுக்கு?!

ராம் என்னை லவ் பண்ணதுனால, உங்க மேல வெச்சிருக்கிற அன்பு குறைஞ்சிடுச்சா? இல்ல, கூட வெச்சு பாத்துகிட்ட என்னை, மருமகளாக்கி அழகு பாத்தீங்களே, அப்ப நீங்க என் மேலியோ, ராம் மேலியோ காட்டுற அன்பு குறைஞ்சிடுச்சா என்ன? சரியா புரிஞ்சுகிட்டா, அன்பு என்னிக்குமே அதிகமாகுமே ஒழிய, குறையாதும்மா!

தன் கேள்விக்கு, மிக அநாயசமாய் பதிலளித்த ப்ரியாவைக் கண்டு, கடும் ஆச்சரியமாய் இருந்தது ரம்யாவுக்கு! எந்தப் பெண்ணிற்க்கும் இருக்கும் பொசசிவ் உணர்ச்சியைத் தாண்டி, அவளே அப்படி ஒரு முடிவுக்கு ராமைத் தூண்டியிருக்கிறாள்! அதுவும், ராம், ப்ரியா இருவரும், எந்தளவு ஒருவர் மேல் ஒருவர் உயிராய் இருக்கிறர்கள் என்பதையும், அன்றிரவு அவளே பார்த்திருந்தாள். அப்படியிருக்கையில் இந்தச் செயலைச் செய்ய எவ்வளவு துணிச்சலும், மன உறுதியும் வேண்டும்! ரம்யாவிற்குத் தெரியும், ராம் இதற்கு உடனடியாக ஒத்துக் கொண்டிருக்க மாட்டான் என்று. யோசிக்க யோசிக்க பிரமிப்பாய் இருந்தது ரம்யாவுக்கு!

ஏன் ப்ரியா இப்டி பண்ண?

இவ்வளவு நேரம் அமைதியாய் தலை குனிந்திருந்த ப்ரியா, இப்பொழுது தலை நிமிர்ந்து ரம்யாவின் கண்களையேப் பார்த்தாள்! பின் சொன்னாள்!




நீங்கதாம்மா காரணம்!

நானா?

ம்ம்ம்… ராமைத் தவிர, வேற யாராச்சும், இதைச் செய்ய நீங்க விட்டிருப்பீங்களாம்மா? இல்ல, இந்த வயசுல உங்களுக்கு ஒரு கல்யாணம் செஞ்சு, ஒரு ஆணோட துணையோட, இனிமே நீங்க இருக்கனும்னு நாங்க முயற்சி எடுத்திருந்தா, ஒத்துட்டு இருந்திருப்பீங்களா???

தன்னையறியாமல் ரம்யா முடியாது என்று தலையசைத்தாள்!

யாரோ ஒருத்தன், பணத்திமிர்ல பண்ண தப்புக்கு, காலம் முழுக்க நீங்க தண்டனை அனுபவிக்கனுமாம்மா? நீங்க என்ன தப்பும்மா பண்ணீங்க? இருக்குற இந்த ஒத்த வாழ்க்கையையும், துறவி மாதிரி வாழ்ந்துட்டு போகனுமா? என்னாத்துக்கு?

வெளில வேணா யாராவது கை தட்டி பாராட்டலாம்! ஆனா, உங்களை முழுக்க புரிஞ்சுகிட்ட நானும் அப்படியே அமைதியா இருந்தா, உங்களை அம்மான்னு கூப்பிடுறதுல என்ன அர்த்தம் இருக்கு?! எ… எல்லாத்துக்கும் மேல, உங்களோட தவிப்புக்கு நா… நாங்களும்தானே முக்கியக் காரணம்? ம்ம்ம்?

ப்… ப்ரியா?!

எனக்கு எல்லாம் தெரியும்மா? அன்னைக்கு நீங்க சீக்கிரம் வந்தது, எங்களைப் பாத்தது, அதுக்கப்புறம் நீங்க தவிச்சது, உங்களுக்குள்ள எல்லாம் வெச்சுகிட்டது எல்லாம் தெரியும்மா!

ப்...ப்ரியா!

சாரிம்மா!

நீ ஏண்டி சாரி சொல்ற?! என்னடி தப்பு பண்ண?

இ... இல்ல, இதை, நான் முன்னமே பண்ணியிருந்திருக்கனும்! இந்த சந்தோஷத்தை உங்களுக்கு இவ்ளோ லேட்டாக் கொடுத்தது என் தப்புதான்! எனக்கும் இது முன்னாடியே தோணலீல்ல? அது தப்புதானே?!

ப்ரியா இதை தப்பு என்று ஏற்றுக் கொள்ளவில்லை! மாறாக இதுவே காலதாமதம் என்று பேசுகின்றாள் என்றால், அவளது அன்பை என்னச் சொல்வது?!

இ... இது தப்பில்லையா ப்ரியா?

சம்பந்தப்பட்ட மூணு பேருக்கும் இதுல சம்மதம்ன்னா, வெளில இருக்கிறவங்க யாரும்மா இதுல சரி, தப்புன்னு சொல்றதுக்கு??

வெளில இருக்கிறவங்களுக்கு, இது வெறும் செக்ஸ்தான்மா! ஆனா என்னைப் பொறுத்த வரை, இது செக்ஸ் மட்டும் இல்ல! என் ரம்யாம்மாவுக்கு, ரொம்ப நாள் கழிச்சி கிடைக்கிற ஒரு மகிழ்ச்சி! ஒரு முழுமையான இல்லறம் எப்படியிருக்கும்னு புரிஞ்சிக்கிற அனுபவம்!

சின்ன வயசுல இருந்து, அடக்கி அடக்கி வெச்ச சில உணர்வுகளை, சம்பந்தமே இல்லாத யாரோ சிலர், ஏதாச்சும் சொல்லிடுவாங்களோன்னு பாக்காம, துணிஞ்சு, என்ன இருக்குதுன்னு, எங்கம்மாவுக்கு காட்டுற விஷயம்!

எல்லாத்துக்கும் மேல, நைட்டு எந்தக் குழப்பம் வந்தாலும், எந்த உணர்ச்சி வந்தாலும், யாருகிட்ட காட்டுறது, எப்டி சமாளிக்கிறது, யார் தோள்ல சாயுறதுன்னு தெரியாம எங்க ரம்யாம்மா தவிக்கக் கூடாதுன்னு சொல்ற முயற்சிம்மா இது!

ப்… ப்ரியா!

நாங்க இருக்கோம்மா உங்களுக்கு! உங்களோட எல்லா உணர்ச்சிக்கும் வடிகாலா, நாங்க இருப்போம்!

சூழ்நிலையின் கனம், எவ்வளாவு திடமாகப் பேசினாலும், ப்ரியாவின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்திருந்தது!

ப்ரியா ராமை விட்டுக் கொடுத்ததே ரம்யாவிற்கு பிரமிப்பாய் இருந்தது என்றால், அதன் பின் அவள் சொல்லிய காரணங்களும், கடைசியாக அவளுக்கு ஊட்டிய தைரியமும் அவளை மலைக்கவே வைத்தது. மெல்லிய கண்ணீருடன், ப்ரியாவையே விழியகலப் பார்த்தாள்.

ப்.. ப்ரியா… என்று ரம்யா விசும்பினாள்!

மெல்ல படுக்கையில் சாய்ந்த ப்ரியா, தன் மார்பில், ரம்யாவைச் சாய்த்துக் கொண்டு, அவள் முதுகையும், முகத்தையும் வருடிக் கொடுத்தவாறு, அவளை மெல்லத் தூங்க வைத்தாள்!

ப்ரியாவின் சொற்களிலும், செயலிலும் முழு நிம்மதியடைந்த ரம்யா, இததனை வருடங்களாக தான் தவித்த தவிப்புகளுக்கான தீர்வு ப்ரியாதான் என்று உணர்ந்தாற் போலவோ என்னமோ, ப்ரியாவின் அணைப்புக்குள், மார்புக்குள் அடைக்கலாமாகி, உறங்க ஆரம்பித்தாள்!

இத்தனை நாட்களாக ப்ரியாவைத் தாங்கிய ரம்யா, அன்று ப்ரியாவாக மாறினாள்!
எப்பொழுதும் ரம்யாவின் மடி தேடும் ப்ரியா, அன்று ரம்யாவாய் மாறினாள்!
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அதையும் தாண்டி புனிதமானது!!! [waiting for update] - by M.Gopal - 17-05-2019, 08:57 PM



Users browsing this thread: 1 Guest(s)