Thread Rating:
  • 4 Vote(s) - 2.25 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update]
#26
அம்மா மறுபடியும் அவளோட தாடைய பிடிச்சு மெல்ல தூக்கி “உன்

பேரு என்னம்மா?” னு கேக்க, அவளும் தனக்கு கிடைச்ச பாராட்டுலே

வெக்கப்பட்டு பதில் சொன்னா “ என் பேரு குமுதா...ஆண்டி....”




“நல்ல பேரு....அழகா இருக்கு.....உன்னை மாதிரியே” னு அம்மா விடாம

புகழவும், அவளுக்கு வெக்கம் தாங்க முடியாம தலைய குனிஞ்சுகிட்டு அவளோட

துப்பட்டா நுனிய கைவிரல்லே சுத்தறதும் இழுக்கறதுமா இருக்க, என் அக்கா

“ஹேய்......ரொம்ப வெக்கப்பட்டு துப்பட்டாவை கிழிச்சுடாதே பா...” னு அவள

வம்புக்கு இழுக்கவும், அம்மா உடனே “ச்சூ....கொஞ்சம் சும்மாவே இருக்க

மாட்டியா?....வீட்டுக்கு வந்த விருந்தாளிய இப்படியா கிண்டல் பண்றது?” னு


அதட்டிட்டு “நீ எதுவும் வித்தியாசமா நெனைக்காதே மா.....உன்ன எனக்கு

ரொம்ப பிடிச்சு போச்சு.....நீயும் எங்க வீட்டு பொண்ணு மாதிரி தான்...இனிமே

எப்போ வேணும்னா எங்க வீட்டுக்கு வா.....இருங்க...எல்லாருக்கும் காபி போட்டு

எடுத்துட்டு வர்றேன்....” னு உள்ளே போனாங்க.....அக்கா உடனே “ஹேய்

குமுதா...அன்னிக்கு நம்ம ஆபீஸ்க்கு என்னை கொண்டு வந்து விட்டது இது

தான்......எங்க வீட்டு வாலு...அதுவும் பெரிய்ய்ய்ய வாலு...பேரு மோகன்” னு

என்னை பாத்து கிண்டலா சிரிக்கவும், நான் அவள முறைச்சுட்டு இவ பக்கம்

திரும்பி “ஹாய்” னு கைய நீட்டவும், அவ மென்மையா சிரிச்சுட்டு கை

ரெண்டையும் கூப்பி “வணக்கம்” னு சொல்லவும், அக்கா விழுந்து விழுந்து

சிரிச்சா....”நல்லா பல்பு வாங்கினியா?” னு.....




அம்மா எல்லாருக்கும் காபி கொண்டு வந்து குடுத்த உடனே “தாங்க்ஸ் ஆண்டி”

னு வாங்கிட்டு ஒரு வாய் குடிச்சுட்டு ”ஹ்ம்ம்.....காபி சூப்பரா இருக்கு ஆண்டி” னு

பாராட்டவும் அம்மாவுக்கு பெருமை தாங்க முடியலே....வாயெல்லாம் பல்லா

“உனக்கு தெரியுது....முதல் தடவ சாப்பிட்ட உனக்கே பிடிச்சிருக்கு.....ஆனா

இங்கே இருக்கறதுங்களுக்கு தினமும் வடிச்சு வடிச்சு கொட்டறேன்...ஒரு

நாளாச்சும் நல்லா இருக்கு னு சொல்லியிருக்குங்களா?” னு எங்கள பாத்து

முறைக்கவும் நானும் என் அக்காவும் ஒருத்தர ஒருத்தர் பாத்து தலைய

ஆட்டிகிட்டோம் “எல்லாம் நம்ம நேரம்” னு......அந்த நேரம் பாத்து எங்க

அப்பாவும் உள்ளே நுழைஞ்சார்...அவர பாத்ததும் குமுதா படக் னு எழுந்து

நிக்கவும், அக்கா சிரிச்சுகிட்டே “அய்யோ..எதுக்கு இப்படி பயப்படுறே?.....இது

எங்க அப்பா” னு சொல்லிட்டு “அப்பா....இது என் கூட வேலை செய்ற பொண்ணு

பா....பேரு குமுதா....என்னோட நெருங்கிய தோழி” னு அறிமுகப்படுத்தவும்,

குமுதா உடனே கை கூப்பி “வணக்கம் அங்கிள்” னு சொல்லவும், அப்பா

புன்முறுவலோட “நல்லா இருக்கியா மா?...உன்னை பத்தி இவ அடிக்கடி

பேசுவா.....உக்காரு மா....”னு சொல்லிட்டு தன்னோட அறைக்கு

போயிட்டார்....அக்கா எழுந்து “சரி வா..எங்க வீட்ட சுத்தி காட்டுறேன்” னு அவள

கூட்டிட்டு ஒவ்வொரு அறையா காட்டி கடைசியா மேல் மாடிக்கு போய் நின்னு

கொஞ்ச நேரம் பேசிட்டு கீழே வந்தாங்க....




கீழே வந்ததும் குமுதா “சரி நான் கெளம்பறேன் பா” னு சொல்லவும்

ஹேய்....அதுக்குள்ளே என்ன அவசரம்?” னு தடுக்க அம்மா உடனே ”என்னது

கெளம்பறதாவது?...அதெல்லாம் முடியாது...முதல் தடவ வந்திருக்கே....நீயும்

எங்க வீட்டு பொண்ணு மாதிரி தான்....அதனாலே சாப்பிட்டுட்டு தான்

போகணும்.....” னு உரிமையா சொல்லவும், அவ ஒரு நிமிஷம் சிரிச்சுட்டு “சரி

ஆண்டி” னு ஒத்துகிட்டா...”சரி நீங்க பேசிட்டிருங்க...நான் சமையல

கவனிக்கிறேன்” னு அம்மா சமையலறைக்குள்ளே போகவும் குமுதாவும் கூடவே

போனா....”என்னம்மா...ஏதும் வேணுமா?” னு கேக்க, “ஆண்டி...நானும் இந்த

வீட்டு பொண்ணு னு சொன்னீங்க இல்லே...அதனால இன்னிக்கு நாந்தான்

சமைக்க போறேன்” னு சொல்லவும், அம்மா “உனக்கேன் மா இந்த கஷ்டம்? நீ

பாட்டுக்கு அவங்களோட பேசிகிட்டிரு...நான் பாத்துக்குறேன்” னு சொன்னாலும்

அவ பிடிவாதமா “ஹ்ம்ம்...முடியாது...இது என்னோட அன்புக்கட்டளை” னு

சொல்லவும் அம்மா சிரிச்சுகிட்டே “நீ நல்லா பேசியே சமாளிச்சுடுவே போல

இருக்கே” னு சொல்லி, “சரி சரி நீ தனியா கஷ்டப்பட வேணாம்...நாம சேர்ந்தே

சமைக்கலாம்” னு வேலைய ஆரம்பிச்சாங்க.....கொஞ்ச நேரத்துலே வாசனை

கம கம னு வீட்டையே மணக்க வெச்சுடுச்சு...




நானும் என் அக்காவும் சமையலறைக்குள்ளே எட்டி எட்டி

பாத்துட்டிருந்தோம்.....எல்லாரும் சாப்பிட உக்காந்தோம்....அப்பா

”ஆஹா....இன்னிக்கு எல்லாமே வித்தியாசமா இருக்கு ஆனா நல்லா இருக்கு”

னு ரசிச்சு சாப்பிட்டார்......அம்மா ”இன்னிக்கு எல்லாமே குமுதாவோட

கைவண்ணம் தான்” னு பெருமையா சொல்லவும், “ஆண்டி, நான் வெறும்

கூடமாட உதவி தான் செஞ்சேன்” னு பணிவா சொல்லவும், “இல்லே

இல்லே....உண்மைய ஒத்துக்கணும்....உன் கைப்பக்குவம் ரொம்ப நல்லா

இருக்கு....எனக்கும் உன் சமையல் பிடிச்சிருக்கு” னு அம்மாவும்

பாராட்டினாங்க.....சாப்பிட்டு முடிச்சதும் “நான் கெளம்பறேன்

ஆண்டி.....போயிட்டு வர்றேன் அங்கிள்......வர்றேன் மோகன்” னு சொல்லிட்டு

கெளம்பினா.....அம்மா அவ கைய பிடிச்சுகிட்டு “நீ அடிக்கடி இங்கே வரணும்

மா...போயிட்டு வா” னு சொன்னாங்க...அக்கா வாசல் வரை போய்

வழியனுப்பிட்டு வந்தா....அக்கா திரும்பி வந்ததும் எல்லாரும் வழக்கம் போல

உக்காந்தோம்....அப்பா “அந்த பொண்ணு எங்கே மா தங்கியிருக்கு?...அப்பா

அம்மா கூட பிறந்தவங்க லாம் எங்கே இருக்காங்க? என்ன பண்றாங்க?” னு

விசாரிக்கவும், அக்கா கொஞ்சம் சோகமாகி போனா...”அப்பா....குமுதா பாவம்

பா....அவங்க வீட்டுலே ஒரே பொண்ணு....அவங்க அப்பா ஒரு காலத்துலே நல்ல

வசதியா இருந்தவர்.....சூரத்லே இருந்து மொத்தமா ஜவுளி வாங்கிட்டு வந்து

இங்கே இருக்கிற சிறுவியாபாரிகளுக்கு சப்ளை பண்ணிட்டு இருந்தார்....அவங்க

அப்பாவுக்கு ஒரு தம்பி...தான் கொண்டு வர்ற ஜவுளிய எல்லாருக்கும்

பட்டுவாடா பண்ற வேலைய பாத்துகிட்டு, அவங்ககிட்டேர்ந்து பணம் வசூல்

பண்ற வேலைய தன தம்பிய நம்பி ஒப்படைச்சிருந்தார்.....இவர் ரெகுலரா

ஜவுளி வாங்கறவர் ன்றதாலே சூரத்லே இருக்கிற பெரிய வியாபாரிங்க

முன்பணம் கூட வாங்காம இவர நம்பி ஜவுளி குடுத்திருக்காங்க....இத

தெரிஞ்சுகிட்ட அவரோட தம்பி, ஒரு தடவ இவங்க அப்பா பெரிய ஆர்டர் ஒன்னு

கொண்டு வந்ததும் அத இங்கே இருக்கிற வியாபாரிகள்கிட்டே குடுத்து

அவங்ககிட்டே இருந்து அவ்வளோ பணத்தையும் வாங்கிகிட்டு இதுக்கு முன்னாடி

இவருக்கு சேர வேண்டிய பணத்தையும் எடுத்துகிட்டு எங்கேயோ ஓடி

போயிட்டாராம்....இந்த விஷயம் தெரிய வந்தப்போ இவங்க அப்பா சூரத்லே

இருந்திருக்கார்....இவர் தன்னோட நிலைமைய அங்கே இருக்கிற

வியாபரிகள்கிட்டே சொல்ல, ஆனா அவங்க இவர நம்பாம, அங்கேயே பிடிச்சு

வெச்சுகிட்டாங்க....கடைசிலே எல்லா சொத்தையும் வித்து தான் வெளியே

வந்திருக்கார்.....இந்த பிரச்சினையிலே அவங்க அம்மா மனசு வேதனைப்பட்டு

இறந்து போயிட்டாங்க.....எந்த சொந்தக்காரங்களும் எட்டி கூட பாக்கவே

இல்லேயாம்....இவங்க அப்பாவோ கஷ்டப்பட்டு செஞ்ச வியாபாரமும் போச்சு,

கூட பிறந்த தம்பியே ஏமாத்திட்டான், இப்போ மனைவியும் போயிட்டாளே னு

பக்க வாதத்துலே படுத்துட்டார்...




அப்போ இவ காலேஜ் படிச்சிட்டு இருந்திருக்கா....இவளோட படிப்பு செலவுக்கு

கூட பணம் இல்லாம தவிச்சப்போ ஒரு பாதிரியார் தான் உதவி

செஞ்சிருக்கார்...படிச்சு முடிச்சதும் இவ தன்னோட அப்பாவை கூட்டிட்டு இங்கே

வந்துட்டா....கொஞ்ச காலம் ஒரு ஆசிரமத்துலே தான் தங்கி

இருந்திருக்காங்க.....இப்போ கடவுள் புண்ணியத்துலே இவளுக்கு இந்த வேலை

கிடைச்சதும் தான் ஒரு வீட்ட வாடகைக்கு எடுத்து தனியா தங்கி

இருக்காங்க..பொதுவா யார் கூடவும் அதிகம் பேச மாட்டா...என்னோட தான்

கொஞ்சம் பழகுறா...” னு சொல்லி முடிக்கவும் அம்மா தாங்க முடியாம “பாவம்டி

அந்த பொண்ணு.....நம்மகிட்டே உரிமையா சிரிச்சு சிரிச்சு பேசுச்சு...ஆனா அந்த

சிரிப்புக்குள்ளே இவ்வளோ பெரிய வேதனை இருக்கா?” னு கண்

கலங்கிட்டாங்க....ஆனா அப்பா வித்தியாசமா யோசிச்சார்...”இல்லே மா...இது

பரிதாபப்பட வேண்டிய விஷயம் இல்லே...தனியா போராடி தன்னையும்

காப்பாத்திகிட்டு தன் அப்பாவையும் கைவிடாம பாத்துக்குறா

பார்..உண்மையிலே அந்த பொண்ண நெனைச்சா பெருமையா இருக்கு....இந்த

மாதிரி மனுஷங்க கூட இருந்த நமக்கும் தன்னம்பிக்கை கிடைக்கும்....நல்ல

பொண்ண தான் தோழியா வெச்சிருக்கே” னு அக்காவோட தலைய தடவி

குடுக்கவும், அக்காவுக்கு பெரும தாங்க முடியலே.....பிறகு எல்லாரும் கலைஞ்சு

போனோம்.....




அக்காவோட குமுதா அடுத்த தடவ வந்தப்போ அம்மா அவள பக்கத்துலே

உக்கார வெச்சு “இதோ பாரு மா.....உன்ன பத்தி என் பொண்ணு எல்லாம்

சொன்னா....இனிமே உனக்கு யாரும் இல்லே ன்ற நெனைப்பே

வரக்கூடாது...உனக்கு நாங்க இருக்கோம் புரியுதா?” னு சொல்லவும் அவ அம்மா

தோள்லே சாய்ஞ்சு அழுதுட்டா..... அம்மா உடனே பதறிப்போய் “அட என்னமா

நீ?...அழக்கூடாது...சரி விடு...நாந்தான் முதல்லே

உணர்ச்சிவசப்பட்டுட்டேன்....அன்னிக்கு நீ வெஜிடபிள் குருமா ஒன்னு

பண்ணினியே..அது எப்படி செய்றது னு சொல்லி குடு” னு அவள கைய பிடிச்சு

சமையலறைக்குள் கூட்டிட்டு போக, என் அக்கா ”ஆஹா...அம்மா.....உன் கூட

வேலை செய்றதுக்கு சரியான ஆள பிடிச்சுட்டே போல” னு கண்ணடிக்க, அம்மா

“நீ என்னிக்காச்சும் என் கூட வந்து உதவி செஞ்சிருக்கியா டி?..பெருசா பேசறா”

னு திட்டவும், நான் “ஹாஹாஹா...இன்னிக்கு நீ வாங்கினியா பல்பு?” னு

விழுந்து விழுந்து சிரிக்கவும், என்னை அடிக்கறதுக்கு என் மேல அக்கா பாய,

நான் குடு குடு னு என் அறைக்குள்ளே ஓடி போறத பாத்து சிரிச்சுகிட்டே கண்ண

தொடைச்சுகிட்டு குமுதா சமையலறைக்குள்ளே போனா....அதுக்கப்புறம் குமுதா

அடிக்கடி எங்க வீட்டுக்கு வர ஆரம்பிச்சா..... என் அக்காவும் அப்பப்போ

அவளோட வீட்டுக்கு போய் இருந்துட்டு வர ஆரம்பிச்சா..... கிட்டத்தட்ட எங்க

வீட்டுலே எல்லாருக்கும் அவள பிடிச்சு போச்சு....வீட்டுக்கு வந்த உடனே அம்மா

கூட சேர்ந்துகிட்டு சமையலறையிலே எல்லா வேலையும் இழுத்து

போட்டுக்கிட்டு செய்வா....வீட்டுலே ஒழுங்கில்லாம இருக்கற விஷயங்கள

தானாவே சரி செஞ்சுடுவா.... இப்படி தான் ஒரு சனிக்கிழமை அப்பா மது

அருந்துற நேரத்துலே கூட முகம் சுளிக்காம எங்க கூடவே

உக்காந்துகிட்டா....எங்க அப்பா இதான் சாக்கு னு அவர் பழைய கதையை

எல்லாம் எடுத்து விட பொறுமையா கேட்டுட்டு இருந்தா....அதுலேர்ந்து

அப்பாவும் அவளோட இயல்பா பேச ஆரம்பிச்சார்.......எங்க அண்ணன் வீட்டுலே

இருக்குபோதும் சில சமயம் குமுதா வந்திருக்கா ஆனா ரெண்டு பேரும் ஒருத்தர

ஒருத்தர் நேரா பாத்துகிட்டது கூட கிடையாது....வழக்கமா எங்க அண்ணன்

சாப்பாட்டுலே விருப்பம் காட்டவே மாட்டான்....மூணு வேளையும் ஒரே மாதிரி

சமைச்சு போட்டாலும் அவனுக்கு வித்தியாசமே தெரியாது.....குமுதா ஒரு தடவ

எங்க வீட்டுலே சமைச்சத சாப்பிட்டுட்டு “இன்னிக்கு நல்லா

சமைச்சிருக்கீங்கம்மா” னு அம்மாவை பாத்து சொல்லவும் அம்மா “இது நான்

செஞ்சது இல்லேடா....நம்ம குமுதா சமைச்சது” னு அவள கைகாட்டவும்,

“ஓ....எனக்கு பிடிச்சிருக்கு....நல்லா சமைக்கிறீங்க” னு பாராட்டவும், குமுதா

“தாங்க்ஸ்” னு சொல்லிட்டு அம்மா பின்னாடி போய் நின்னுகிட்டா....குமுதா

கிளம்பி போனதுக்கப்புறம் அண்ணனை தவிர்த்த எங்க வீட்டின் நால்வரணி

கூடுச்சு.......மகளிரணித்தலைவி எங்க அம்மா “என்னங்க....குமுதாவ

பாத்தீங்களா?....எவ்வளோ பொறுப்பா இருக்கா...அவ நம்ம வீட்டுக்கு வந்தா

என்னை எந்த வேலையும் செய்ய விடுறதில்லே.........நம்ம வீட்டு தண்டங்க

கலைச்சு போடறதையும் ஒழுங்கு பண்ணறா......நம்ம பெரியவன் என்னிக்கும்

இல்லாம இன்னிக்கு அவளோட சமையல் நல்லா இருக்கு னு வாய் விட்டு

சொல்றான்....நான் என்ன சொல்ல வர்றேன்னா” னு இழுக்கவும் அப்பா உடனே

“ம்ம்ம்....ம்ம்ம்...எனக்கு புரிஞ்சுடுச்சு” னு அம்மாவை பாத்து கண்ணடிக்க, நாங்க

“ஹோ” னு கத்த அம்மா வெக்கப்பட்டுகிட்டே “ச்சீ...கழுதைங்களா.....போய்

படுங்க” னு சொல்லி அவங்க அறைக்கு போகவும், நாங்களும் எங்க அறைக்கு

போயிட்டோம்....
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: அண்ணி அமைவதெல்லாம்........ [waiting for update] - by M.Gopal - 02-05-2019, 08:47 PM



Users browsing this thread: