Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடந்தது நடந்தபடி... [waiting for update]
#3
ஒரு நாலு நாள் போயிருக்கும். எனக்குள்ள ஒரு பயம் மட்டும் இருந்துச்சு.
வருத்தம்னு கூட சொல்லலாம். ஏன்னா நான் எப்பவுமே அவங்கள தப்பா பார்த்ததில்லை..
அன்னைக்கு சொன்னது கூட ஒரு விளையாட்டு போக்கு தான். ஆனாலும் சொன்னது
தப்புதானே? மன்னிப்பு கேட்கணும்னு தோணுச்சு. ஆனா எப்படி ஆரம்பிக்க?
யோசனையிலேயே இருந்தேன்.
அன்னிக்கி ராத்திரி சாப்டுட்டு விமலாவோட பேசிட்டு இருந்தேன். டக்குனு அவளுக்கு
போன் வந்தது, பார்த்தா அத்தைதான்.
மனசுக்குள்ள ஒரு பீதி இருந்தாலும் காட்டிக்கல.
கொஞ்ச நேரம் விமலா பேசிட்டு அப்டியே போன எங்கிட்ட குடுத்தா..
விமலா-இந்தாங்க, அம்மா பேசறாங்க.
நான்-இல்லடி நீயே பேசிட்டு வெச்சுடு.
விமலா-உங்கள மதிச்சு பேசுறதே பெருசு, இதுல ஓவரா பண்றது வேற. மூடிட்டு பேசுங்க
னு சன்னமா சொன்னா.
(என் நேரம்...இவை வேற வெவஸ்த கெட்டவ)
நான்-ஹலோ..
அத்தை-ஹலோ......எப்படி இருக்கீங்க மாப்ள..
நான்-நல்ல..நல்லா இருக்கேன் அத்தை...
அத்தை-சரி மாப்ள, நான் வெச்சுடறேன்...
நான்-ஓகே அத்தை....
அன்னிக்கு அப்டியே படுத்துட்டு தூங்கிட்டேன்...
அதுக்கப்புறம் பெரிய விஷயம் ஏதும் நடக்கல. நான் பாட்டுக்கு என் வேலை
அலைச்சல்னு இருந்துட்டேன்.ரெண்டு மூணு மாசம் நல்ல போய்ட்டு இருந்துச்சு. இந்த
சமயம் பார்த்து எனக்கு கொஞ்சம் பணத்தேவை இருந்துச்சு. காரணம் வீடு விஷயமா
ஒருத்தர்கிட்ட பேசி அட்வான்ஸ் எல்லாம் சொல்லி வெச்சுருந்தேன். ஒரு அஞ்சு
லட்சம் தேவைப்பட்ட நிலைமைல என்ன செய்றதுன்னு தெரியாம மாமனாருக்கு போன போட்டேன்.
நான்-மாமா எப்படி இருக்கீங்க?
மாமா-இருக்கேன் மாப்ள சொல்லுங்க.
நான்-ஒண்ணுமில்ல, புரோக்கர் ஒருத்தர்கிட்ட பேசி வெச்சுருந்தேன், அட்வான்ஸ்
கொஞ்சம் தேவைப்பட்டுச்சு... அதான்..
மாமா- அட நீங்க இன்னுமா அந்த பணத்தை வாங்கல? அத அவ தம்பிகிட்ட கொடுக்கட்டுமானு
வேற கேட்டுகிட்டு இருந்தா.. (விமலாவோட தாய்மாமா).. எதுக்கும் நீங்க அத்தைகிட்ட
ஒரு போன போடு கேளுங்க...நான் கொஞ்சம் வேலையா வெளில வந்துருக்கேன்..
நான்-(என்னடா இது ...பணம் அம்பேல்?...இருந்த நம்பிக்கைல இந்தாளு கல்ல தூக்கி
போடறாரே..) சரி மாமா, நான் பேசிக்கிறேன்... வெச்சுடறேன்...
கொஞ்ச நேரம் யோசிச்சேன்...போன் போட்டு கேக்கறது அவ்வளவு சரியாய் இருக்குமான்னு
தெரில, முப்பது கிலோமீட்டர்தான், பைக்கை ஒரு அலுத்து அலுத்துனா நேராவே போயி
கேட்டுட்டு வந்துடலாம்னு மனசு சொன்னுச்சு.. கெளம்புனேன்....


கொஞ்சம் யோசனையோடதான் காலிங்பெல்ல அடிச்சேன். அத்தைதான் தொறந்தாங்க. முகத்துல
ஒரு ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சி. விமலாவும் வந்துருக்காளான்னு ஒரு சின்ன
பார்வை. டக்குனு சுதாரிச்சுக்கிட்டே, வாங்க மாப்ள, வாங்க..என்ன திடீர்னு ?
கேட்டுகிட்டே சேர எடுத்து போட்டாங்க..
நான்-ஒண்ணுமில்ல அத்த, இந்த பக்கம் ஒரு வேலையா வந்தேன்..அதான் அப்டியே
பார்த்துட்டு போலாம்னு...
அத்தை-ஹ்ம்ம்.. ஒரு நிமிஷம் மாப்ள னு சொல்லிகிட்டே கிட்சனுக்குள்ள
நுழைஞ்சாங்க..கண்டிப்பா காபியோடு பஜ்ஜி கிஜ்ஜியும் வரும்னு எனக்கு தெரியும்...
நான்-அத்த அதெல்லாம் ஏதும் வேணாம்..நான் இந்த பணம் விஷயமா கேட்கலாம்னு
வந்தேன்...மாமா எதுவும் சொல்லலியா உங்ககிட்ட?
அத்தை- சொன்னார் சொன்னாரு.. நீங்க தப்பா நெனைக்கலன்னா, ஒரு சின்ன சிக்கல்...
நான்- சொல்ல்லுங்கத்த பரவால்ல..
அத்தை- என் தம்பி கொஞ்சம் பணத்தேவைனு சொல்லிக்கிட்டு இருந்தான்... ஒரு மூணு
லட்சம் குடுக்க வேண்டியதா போச்சு... பாக்கி ஏழு தான் இருக்கு...அதான்...
நான்- அட அவ்ளோதானே, நான் கேக்க வந்தது அஞ்சு லட்சம்தான்...ஒன்னும் பிரச்சனை
இல்ல. இன்னும் சொல்லப்போனா எனக்குதான் கூச்சமா இருந்துச்சு எப்படி
கேக்கறதுனு...
அத்தை-எங்கிட்ட என்ன தம்பி கூச்சம்.. நீங்க எனக்கு புள்ள மாதிரி.
நான்-ஹ்ம்ம்.. உங்க மாதிரி எனக்கு அம்மாவும் கிடைக்கல, பொண்டாட்டியும்
கிடைக்கல. ஆனா நீங்க மாமியாரா கெடச்சது கண்டிப்பா என் பாக்கியம்..
சந்தோஷத்தோட பணத்தை வாங்கிட்டு கிளம்பினேன் நான். புரோக்கர் கிட்ட
குடுத்துட்டு வீட்டுக்கு நடையை கட்டினேன்.
அங்கே...
என்னங்க ரொம்ப சிரிப்பும் சிந்தனையுமா இருக்குற மாதிரி தெரியுது? ஆபீஸ்ல ஏதும்
ப்ரோமோஷன் கெடச்சுதா இல்ல லாட்டரி ஏதும் விழுந்துச்சா? னு கேட்டுகிட்டே
வரவேற்றா என் பொண்டாட்டி.
நம்ம வாய்தான் நாற வாய் ஆச்சே.. பாருங்க என்ன ஆச்சுன்னு...
நான்- இன்னும் கொஞ்ச நாள்ல என் பொண்டாட்டி ஒரு வீட்டுக்கு சொந்தக்காரி
ஆகபோறா.. அந்த சந்தோசம்தான்..
விமலா- அடடே.. எப்படிங்க?
நான்-இப்போதான் ப்ரோகேர்கிட்ட சுளையா அஞ்சு லட்சம் குடுத்துட்டு வர்றேன்...
விமலா - (முகம் மாறியது) எப்புடி வந்துச்சு அஞ்சு லட்சம்?
நான்- அதெல்லாம் டாப் சீக்ரட்.. உனக்கென்ன? சந்தோசமா இல்லையா?
விமலா- மரியாதையா சொல்லுங்க. இல்ல நடக்கறதே வேற///
நான்- இல்லடி ஆபீஸ் ல லோன் போட்ருக்கேன்..
விமலா-யோவ்..அறிவு இருக்க உனக்கு? சோறுதானே ஆக்கி போடுறேன்.. அதைத்தானே
திங்குற? படிச்சு


படிச்சு சொல்லியும் பணம் கடன் வாங்கி உனக்கு என்ன அப்டி ஒரு
வீடு வேண்டி கெடக்கு.
நான்- என்னடி இப்புடி பச்சை பச்சயா திட்டுற... நீ சந்தோசப்படுவேன்னு நெனச்சா...
விமலா- எவன்கிட்ட அந்த பணத்தை குடுத்தியோ திருப்பி வாங்கி ஆஃபீசிலே
குடுத்துட்டு அப்புறமா பேசு. அதுவரை நான் பேசறதா இல்ல!!
நான்-விமலா..விமலா...
இதுதான் பிரச்சனையே...நாம ஒன்னு நெனைக்க, தெய்வம் வேற ஒன்னு கொடுக்குது
பதிலுக்கு.. என்ன கருமம்டா இதுனு நொந்துக்கிட்டே உக்காந்திருந்தேன்...
மறுநாள் ப்ரோக்கேர்கிட்ட பச்சை பச்சயா அசிங்கமா திட்டு வாங்கி அந்த பணத்தை
திருப்பி வாங்குறதுக்குள்ள...அது எனக்குத்தான் தெரியும்.
அடுத்தநாள்..
இந்தாடி, நான் வாங்குன பணம். இன்னைக்கு மதியமே ஆபீஸ்ல விட்டு எறிஞ்சுடறேன்
போதுமா? ஒரு ஆம்பள சுயமா சிந்திச்சு ஒரு முடிவு கூட எடுக்க முடியாம ஏன்தான்
இப்டி கொடும படுத்துறீங்க? அப்படி என்னடி தப்பு பண்ணேன் நான்? ஒரு லோன்
போட்டேன். அது தப்பா.. ஊர்ல இருக்க மத்தவன் மாதிரி தண்ணி அடிச்சேனா இல்ல ஊர
சுத்துனேனா? சொந்த வீடு கட்ட ஆசைப்பட்டு பணம் ஏற்பாடு பண்ணேன்... அது தப்பா?
(இப்படி கேட்டதும்தான் எனக்கு மனசு கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு. ஆனா அந்த
நிம்மதி அடுத்த செகண்ட்ல காலி..கடன்காரி..)
ஒரு அஞ்சு நிமிஷம் என்னையும் அந்த பணப்பையும் பார்த்துகிட்டே இருந்தா என்
பொண்டாட்டி. அவ மூஞ்சி போன போக்கு எனக்கே பயமா இருந்துச்சு...
விமலா- உண்மையா சொல்லுங்க.. இந்த பணம் ஆபீஸ்ல வாங்குனதா?
நான்- ஆமா. ஏன்? (கொஞ்சம் தயக்கம் இருக்கத்தான் செஞ்சுது)
விமலா- அப்புறம் எப்புடி எங்கம்மா வீட்டு மஞ்சப்பைல பணம் இருக்கும்?
நான்- (அடப்பாவி மண்டைய மாத்தினேன் கொண்டைய மறந்துட்டேனே)
விமலா-சொல்லுங்க. கேக்கறேன்ல...
நான்- இல்ல விமலா...அது வந்து...உங்கம்மா தான்...பணம் இருக்குன்னு..கடனா...
விமலா- இன்னும் அரை மணி நேரம் உங்களுக்கு டைம்.. என்ன பண்ணனும்னு தெரியும்ல?
நான்- பணம் உங்க வீட்ல இருக்கும். போதுமா? ஆள விடு...
அடுத்த கொஞ்ச நேரத்துல நான் என் மாமியார் வீட்டு முன்னாடி நின்னேனு உங்களுக்கு
சொல்ல வேண்டிய அவசியமே இல்ல...ஆனா நான் அங்க போயி சேர்றதுக்குள்ள என்
பொண்டாட்டி என் மாமியாரை போட்டு வறுத்து எடுத்துருக்கானு எனக்கு தெரியாம
போச்சே...
மாமாதான் வந்தார்.. - வாங்க தம்பி. சந்தோசமா?
நான்- இல்ல மாமா .. அது வந்து...
அத்தை- என்னங்க... ஏதும் பேசாதீங்க.. பணத்தை வாங்குங்க முதல்ல. சொல்லிட்டு
விருட்டுனு
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நடந்தது நடந்தபடி... [waiting for update] - by M.Gopal - 02-05-2019, 09:34 AM



Users browsing this thread: 2 Guest(s)