Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
நடந்தது நடந்தபடி... [waiting for update]
#2
அப்புறம் நாங்க கெளம்பி வந்துட்டோம். ஒரு நாலு வாரம் இருக்கும். மாமனார்கிட்ட இருந்து போன். அதுவும் மத்தியான வேலைல.. மாமா-மாப்ள, பிசியா இருக்கீங்களா? நான்- சொல்லுங்க மாமா.. மாமா- இல்ல...உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்... நான்-இதுல என்ன மாமா...ஒரு பஸ் புடிசீங்கன்னா உங்க பொண்ணு வீட்ல இருக்கலாம்..இதுக்கெல்லாம் போயி கேட்கணுமா? மாமா- அது இல்ல மாப்ள..நீங்க இங்க வந்தா நல்ல இருக்கும்...அதான்... நான்-- ஐயோ வேலை இருக்கே மாமா... நான் இந்த வாரம் விமலாவை கூட்டிட்டு வர்றேன் கண்டிப்பா.. அப்போ பேசலாம்.. மாமா- சரி கண்டிப்பா வந்துடுங்க...விமலாகிட்ட ஏதும் சொல்லிக்க வேணாம்... ஒரு குழப்ப ரேகையோடயே போன் வெச்சுட்டேன் நான்.. ஒரு அரை மணி நேரம் இருக்கும்...மீண்டும் போன்.. மாமாகிட்ட இருந்து... ஆனா பேசுனது அத்தை..* அத்தை-மாப்ள இவுரு இப்போதான் விஷயத்தை சொன்னாரு...நான்தான் கொஞ்சம் அவசரமா பேசணும்னு போன் பண்ண சொல்லிருந்தேன்... அந்த லோன் விஷயமா பேசுனோமே அத பத்தி...அதான் விமலாகிட்ட கூட சொல்ல வேணாம்னு சொல்லிருந்தேன்... முடிஞ்சா சாயந்திரம் வாங்க... இல்லனாலும் ஒன்னும் பிரச்சனை இல்ல... நான்- ஐயோ உங்களுக்கு ஏன் இந்த தேவை இல்லாத சிரமம்... அதெல்லாம் ஒன்னும் வேணாம் அத்தை... நீங்க உங்க வேலைய பாருங்க.. ஒன்னும் பிரச்சனை இல்ல. பொறுமையா பணத்தை நானே ஏற்பாடு பண்ணிக்கிறேன். அத்தை- மனசு கேக்கல..ஒரு எட்டு வந்துட்டு போயிடுங்க.. தெளிவா பேசி அவளை சமாதான படுத்த நான் பார்த்துக்கறேன்... நேர்ல பேசிக்கலாமே? சரி இனி போன்ல விளக்கம் சொன்னா வேலைக்காகாது னு புரிஞ்சுபோச்சு எனக்கு..* நான்- சரி ஒரு அஞ்சு மணி போல வரேன் அத்தை. ஆனா அன்னிக்கு என்னால போக முடியல... கொஞ்ச வேலை இருந்ததால் அத அப்டியே மறந்து போனேன் நான்.. நான் வேணும்னே பண்றதா நெனச்சு அவங்களும் என்னய கூப்பிடல...ஒரு மாசம் ஆகிருக்கும்...* அப்பா போன் பண்ணிருந்தார்...என்னமா எங்களையெல்லாம் மாப்பிள்ளை மறந்துட்டாரான்னு கேக்கறாருனு என் மனைவி சிரிச்சுக்கிட்டேய் சொல்ல, அப்பத்தான் சுரீர்னு ஓரச்சுது எனக்கு. அடடா...மறந்தே போனோமே அன்னைக்கே வர சொன்னாங்க போகாம விட்டுட்டோம் *நம்மள பத்தி என்ன நினைப்பாங்க னு... அன்னிக்கு சாயந்தரம் ஆபீஸ்ல வேலை னு பொய் சொல்லிட்டு நேர வண்டிய மாமனார் வீட்டுக்கு விட்டேன்.. காலிங்பெல்ல அடிச்சதும் ஒரு படபடப்பு.. என்ன சொல்வார்களோ என்ன நெனைப்பாங்களோனு... நெனச்சா மாதிரியே கதவை தொறந்ததும் மாமியார் ஒரு மாதிரி முறைப்பா பார்த்தாங்க... ஆனா கோவம் இல்லனு தெரிஞ்சுது... நான்-அத்த..மாமா இல்லையா?* அத்தை-அவுரு வெளிய போயிருக்காரு.. ஏன் மாப்ள எங்க மேல ஏதும் கோவமா பணம் குடுக்கறோம்னு சொன்னதுல? அன்னைக்கு வரலானாலும் அதுக்கப்புறம் கூட ஒரு போன் இல்ல.* நான்- ஐயோ அப்டிலாம் இல்ல அத்த...அன்னைக்கு ஏதோ வேலை...அதான் வர முடில... அத்தை-சேரி விடுங்க... பணத்துக்கு இவுரு ஒருத்தர்கிட்ட சொல்லிருக்காரு... நீங்க கொஞ்சம் யோசிங்க... யோசிச்சு சொல்லுங்க... முடிவு உங்க கைலதான்.. நான்- சொல்றதுக்கு என்ன அத்தை இருக்கு? உங்கள கஷ்டப்படுத்துறதுல எனக்கு விருப்பம் இல்ல.* அத்தை- நீங்க எங்களுக்கு மருமகன் இல்ல. மகன் மாதிரி.. என் பொண்ண அவ்ளோ நல்லா பார்த்துக்குறீங்க...உங்களுக்கு ஒரு உதவி செய்றதுல என்ன தப்பு? அவரும் இதயேதான் சொன்னாரு...


நான்- பெரிய வார்த்தைலாம் சொல்றீங்க.* அத்தை- இல்ல. இருங்க அவரே வந்துடுவார் இப்போ.. பேசிக்கலாம்.. (சொல்லிகிட்டே சமையல்கட்டுக்குள்ள நொழஞ்சுட்டங்க) நான்- அத்த, எனக்கு நேரமாகுது...விமலாகிட்ட வேற ஆபீஸ் வேலைனு சொல்லிட்டு வந்துட்டேன்... சீக்கிரம் போகணும்..சமையல் லாம் ஏதும் பெருசா பண்ணிடாதீங்க... சிரிச்சுகிட்டே கைல காபி டம்பளரோட வந்தாங்க...மாமனாருக்கு போன் பண்ணி சொல்லிட்டாங்க போல... ஒரு அரை மணி நேரம் இருக்கும்....மாமனார் பைக்கை நிறுத்திட்டு உள்ள வர்ற சத்தம் கேட்டுச்சு...எனக்கு கொஞ்சம் நெர்வஸா இருந்துச்சு.. வரதட்சணை னு சொல்லி வாங்குற டைப் இல்ல நான்... ஆனா இன்னிக்கு பணத்துக்காக உக்காந்துருக்கோமோ னு ஒரு நெனப்பு வாட்டி வதைச்சுது.. உள்ள வந்தவர்.. வழக்கமான விசாரிப்புலாம் செஞ்சுட்டு... பார்வையிலேயே அத்தய கூப்பிட்டாரு... ராதா..(மாமியார் பேரு) அந்த ப்ளூ பைய எடுத்துட்டு வா... உடனே அவங்க போயி எடுத்துட்டு வந்தா...கண்டிப்பா இதுல பணம்தான் இருக்கும்னு எனக்கு தெளிவா தெரிஞ்சு போச்சு...அயய்யோஒ நம்மள சிக்கல்ல விட்றாங்களேன்னு எனக்கு ஒரு பதைபதைப்பு... நான்- மாமா... இதெல்லாம் வேணாம்.. நான் பார்த்துக்கறேன் விடுங்க. ஆனா அவரு ஒரு வார்த்தை பேசல... பைய வெச்சுட்டு உள்ள பாத்ரூம்கு போயிட்டாரு. எனக்கோ ஒரே குழப்பம்.... அத்தை வந்தாங்க.. எடுத்துக்குங்க மாப்ள... நான்- யோசிச்சுகிட்டே சொன்னேன்.. நீங்க ரொம்ப சொல்றதால இத எடுத்துக்கறேன்... ஆனா ரெண்டு கண்டிஷன்.. ஒன்னு- இப்போதைக்கு இது இங்கயே இருக்கட்டும்.. ஏன்னா வீட்டுக்கு எடுத்துப்போனா விமலாகிட்ட பதில் சொல்ல முடியாது...ரெண்டு, இது கடன்தான்.. திருப்பி கொடுத்துடுவேன்...சரியான எடுத்துக்கறேன்.. அத்தை-உங்க விருப்பம். உடனே கிளம்பிட்டேன் நான்...* அதுக்கப்புறம் ஒரு மூணு மாசம் கழிச்சு..மாமனார் வீட்டுக்கு போனேன்.. மனைவியோட.. வழக்கமான விசாரிப்புகள் எல்லாம் முடிஞ்சுது..*


மதியம் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் உட்காந்துருந்தோம்.மனைவிதான் பேச்சை
ஆரம்பித்தாள்.
என்னம்மா, மாமாவுக்கு (அவளது தாய்மாமா) நிலம் ஒன்னு ஏற்பாடு பண்றதா
சொல்லிருந்தீங்களே என்னாச்சு?
அத்தை-இல்லடி, இப்போதைக்கு கைல காசு இல்லை..அப்பா அங்க இங்க சொல்லி
பொரட்டிக்கிட்டு இருக்காரு..பார்ப்போம்.
(அப்போதான் எனக்கு ஓரச்சுது..ஒருவேளை அந்த காச தூக்கி நம்மகிட்ட
குடுத்துட்டாங்களோனு...)
மனைவி-இந்த வயசான காலத்துல ஏன் இப்டி கஷ்டப்படறாரு? உங்களுக்கும் அறிவு
கொஞ்சம் கூட கெடையாது.. அறுவது வயசு ஆச்சு..கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம்..
சும்மா பொழுதை போக்காம இப்டி ஏன் அலையனும்?
(அவள் கேட்க கேட்க எனக்குத்தான் ஊசி மாரி குத்தீட்டி இருந்துச்சு...சே என்ன
ஒரு காரியம் பண்ண பார்த்தோம்? அந்த பணம் அவங்ககிட்டயே இருக்கட்டும்... நாம
வாங்க வேணாம்னு முடிவு பண்ணேன்)
அத்தை-இந்தா, நீ ஏதும் பேசாத...நல்லது கெட்டது எங்களுக்கும் தெரியும்.
மனைவி-என்னமோ பண்ணி தொலைங்க.ம்ஹ்ம்..
அன்று சாயங்காலம் அவள் பக்கத்து கோவிலுக்கு நண்பி ஒருத்தியோடு போய்விட்டாள்.
இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து ஓடி போய் அத்தை காலில் விழுந்தேன்.
அத்தை- ஐயோ என்ன மாப்ள எட்ந்திரிங்க...
நான்-இல்லத்தை, நீங்க பண்ண காரியம் எனக்கு எப்படி சொல்றதுன்னே தெரில.. நீங்க
இவ்ளோ கஷ்டப்படறது எங்களுக்காகத்தானு நெனைக்கிறப்ப...
அத்தை-விடுங்க, என் பொண்ணு நல்லார்ந்த சரி...
நான்-உங்களுக்கு இருக்க பக்குவம் எண்ணம் அவளுக்கு இல்லையே...வெடுக்கு
வெடுக்குனு பேசுறா பாருங்க...
அத்தை- அது அவ குணம்.. மாத்த முடியாது மாப்ள.
நான்- அப்டி இல்ல..உங்க குணம் கொஞ்சமாவது இருக்கணுமே..
அத்தை-விடுங்க..இனி என்ன பண்ண முடியும்...
நான்-ஒருவேளை நீங்க பொண்ணா இருந்து அவ அம்மாவா இருக்க கூடாதா? உங்களையே
கல்யாணம் பண்ணிருப்பேன்...
அதுவரை சாந்தமா இருந்த ராதா முகம் அப்டியே மாறியது...அடடா என்ன இது வம்ப
போச்சு...நான் ஏதோ விளையாட்டு போக்க சொல்ல..இவங்க மூஞ்சி இப்டி மாறிடுச்சே னு
எனக்கு ஒரு பயம்.....
அடுத்த நாள் வரை எனக்கு ஒரே படபடப்பு..அவங்களும் செரியா முகம் குடுத்து
பேசல...என் பொண்டாட்டியோ ஊருக்கு கெளம்புற மும்முரத்துல இருந்தா...
பேசாம பொத்திகிட்டு கிளம்பிட்டேன்...
 
welcome   
[Image: xossip-signatore.png]

Convert from Tanglish to Tamil @ shorturl.at/ahsW1/

" I'm Not Story Writer, Just Posted my Backups. "

My Inbox is Full so Contact at
Hangouts : irr.usat[at]gmail[dot]com




Like Reply


Messages In This Thread
RE: நடந்தது நடந்தபடி... [waiting for update] - by M.Gopal - 02-05-2019, 09:34 AM



Users browsing this thread: 1 Guest(s)