08-08-2021, 09:57 PM
மாதங்கள் கடந்தன.
அபர்ணாவைப் பற்றிய கவலையில்... மோகனின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே போனது. அவர் அபர்னாவுக்கே தெரியாமல் அவளை trace பண்ணி தேடிக் கண்டுபிடித்தார். அபர்ணாவை, தூரத்திலிருந்து பார்த்து.. கண்கலங்கி அழுதார். நிஷாவின் தோழி காயத்ரிதான் என் மகளா?.... இறைவா... இறைவா... என்று கண்ணீர் மல்க கோயிலே கதி என்று கிடந்தார்.
காயத்ரி, சீனுவைத்தான் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும்....அவனால்தானே நிஷாவின் வாழ்க்கை அழியப்பார்த்தது. அவனைப்போய் எப்படி இப்போது மருமகனாக நினைப்பது என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தார்.
இந்தக் கவலைகளிருந்து அவரைக் காப்பாற்றிய ஒரே விஷயம்.. பேரக் குழந்தைகள். ராஜ்ஜின் மூத்த மகள் தமிழரசி இவரோடு நன்றாக செட் ஆகிவிட்டாள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவழித்தார். இருந்தாலும் தனிமைகளில்... அவருக்கு அபர்ணாவின் கால்களில் போய் விழவேண்டும் என்றிருந்தது. தன் மகள் காயத்ரியை கூட்டி வந்து அவளிடம் மன்னிப்பு கேட்டு வாரி அணைத்து கொஞ்சவேண்டும்போல் இருந்தது. ஆனால் இது தெரிந்து பத்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால்?????
அவர் தூங்க முடியாமல் கிடந்தார்.....
நிஷா.. கொஞ்ச நாள் என்கூட வந்து இருந்துட்டுப் போயேன்... என்று குரல் தழுதழுக்க அவளிடம் கேட்டார்.
நிஷா உடனே தன் குழந்தைகளோடு அப்பாவை பார்க்க வந்தாள். தன் இரு பிள்ளைகளையும் அவர் கொஞ்சுவதை பார்த்து ரசித்தாள்.
மோகன், பேச்சுவாக்கில், காயத்ரி எப்படியிருக்கிறாள், நீ போன் பண்ணினாயா? என்றெல்லாம் அவளிடம் அடிக்கடி கேட்டு தெரிந்துகொண்டார். நிஷாவின் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டு சந்தோஷமாக இருந்தார்.
ஆனால் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நிஷாவால் அதிக நாட்கள் அவரோடு இருக்க முடியவில்லை. வரேன்ப்பா. எதையும் நெனச்சி கவலைப்படாதீங்க. உடம்பை நல்லபடியா பார்த்துக்கோங்க.. என்று சொல்லிவிட்டு, அவள் கிளம்பினாள்.
நிஷா கிளம்பி சில மாதங்களிலேயே...நிம்மதியிழந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டுக் கிடந்தார் மோகன்.
பாரம் தாங்காமல்... அதற்கு மேலும் தாங்க முடியாமல்... தான் இத்தனை நாட்கள் தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த உண்மையை சொல்லிவிட்டார்.
பத்மா நிஷாவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும்போது தான் தன் கம்பெனியில் வேலை பார்த்த அபர்ணாவின் அழகில் மயங்கி... அவளை அணு அணுவாக அனுபவித்து... ருசித்து... பின் அவள் குழந்தை உண்டானதும்..... வீட்டுக்கும் சமூகத்துக்கும் பயந்து... நல்லவன் வேஷம் போட்டு...
நீ யாரோ நான் யாரோ என்று திட்டி, அவளை நோகடித்து, விரட்டிவிட்டதை.... அழுதுகொண்டே சொன்னார்.
நான் இல்லாம அவள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிச்சாளோ... நான் பாவி நான் பாவி என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார்.
அவர் அழுது அங்கே யாரும் பார்த்ததில்லை...
அதுவும் அவர் இப்படி அழுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை....
பத்மாவின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது
குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது
இதில் அதிர்ச்சியாகாத ஒரே ஆள் நிஷா மட்டும்தான். மகேஷ் காயத்ரியை ஏமாற்றி விட்டுவிட்டுப் போனதும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நிஷா காயத்ரி வீட்டுக்குப் போனபோது... அபர்ணா... தனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரே ஒரு உயிரை....நிஷாவை... கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்தபடியே தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி அழ... பல வருடங்களாக தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்ததையெல்லாம் கொட்டி அழ....
காயத்ரியை, அவள் தந்தையோடு சேர்த்து வைக்கலாமே என்று நிஷா, அது யார் என்று கேட்க....
அபர்ணா தான் வேலை பார்த்த கம்பெனி, முதலாளி மோகன், அவரோடு படுத்தது, விரட்டப்பட்டது, காயத்ரி பிறந்தது, எல்லாவற்றையும் சொல்ல.... நிஷாவால் நம்பவே முடியவில்லை.
அப்பாவா இப்படி?????????
அவள் திரும்பத் திரும்பக் கேட்டாள். அதே பதில்தான் வந்தது. நம்பும்படியாக பல விஷயங்களை அபர்ணா சொன்னாள். நிஷா நொந்துபோனாள்.
என் முதல் ஹீரோ.
ஒரு பெண்ணை... ஒரு கர்ப்பிணியை... ஏமாற்றி... தவிக்கவிட்டு.... அவர் மட்டும் தன் மனைவி மக்களோடு சொகுசு பங்களாவில்.....
ச்சே...
நிஷா இதை உடனே வீட்டில் சொல்லி அபர்ணாவையும் காயத்ரியையும் வீட்டில் சேர்த்துக்கொள்ள நினைத்தாள். ஆனால் அம்மா?? இது தாங்காமல் உயிரை விட்டுவிட்டால்.....
நீங்களும் காயத்ரியும் என்னோடவே வந்திடுங்கம்மா - நா தழுதழுக்க சொன்னாள்.
இல்ல நிஷாம்மா. என்னால உனக்கு எதுக்கு சிரமம்
ப்ளீஸ் சித்தி. வந்துடுங்க. நான் உங்களை நல்லா பார்த்துக்கறேன் - சொல்லக்கூட முடியாமல் நிஷா அழுதுவிட்டாள்.
இதெல்லாம் காயத்ரிக்கே தெரியாது.
அம்மா எப்படி நிஷாவோடு மதுரை வர ஒத்துக்கொண்டாள் என்று அவள் ஆச்சரியத்தோடே இருந்தாள். நிஷா அபர்ணாவை விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து... தான் கூட தன் அம்மாவை இந்தளவுக்கு பார்த்துக்கொண்டது கிடையாதே.... என்று நிஷாவை கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அபர்ணா, காயத்ரியிடம் இதுபற்றி எப்பொழுதுமே பேச மறுத்துவிடுவதால்.... இப்பொழுதும் மோகன்தான் தன் தந்தை என்பது தெரியாமல்தான் அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
இங்கே மோகன் உண்மையை சொன்னதிலிருந்து -
ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.... யாருக்கும் கிடைக்காத நல்ல கணவன் எனக்கு கிடைத்திருக்கிறான்... என்று வாழ்ந்துகொண்டிருந்த பத்மா அழுதுகொண்டு கிடக்க... ராஜ், தீபா, மலர், காமினி என்று எல்லாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
காயத்ரி என் தங்கையா? என்று தனக்குத்தானே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான் ராஜ். தான் காமினியை கைவிடாமல் அவளை தன்னோடு கூட்டிக்கொண்டு வந்து வாழ்ந்ததுதான் அப்பாவை இந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை அவன் யூகித்திருந்தான்....
காயத்ரி, மோகனுக்குப் பிறந்தவள் என்று தெரிந்ததும் கதிருக்கு அது பெரிய ஷாக் ஆக இருந்தது.
அப்போ சீனு, மோகனின் மருமகனா?
அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே... அது தர்மசங்கடமாய் இருக்குமே
இது தெரிந்திருந்தால் காயத்ரி அவனை கல்யாணம் பண்ணும்போதே தடுத்திருக்கலாமே ச்சே
அவன் மோகன் மேல் கோபமாக இருந்தான். அவரை நான் பார்க்கவே விரும்பவில்லை நிஷா என்றான்.
நிஷா அவனிடம் எதுவும் பேசமுடியாமல் வாயை மூடிக்கொண்டாள். அவளுடைய கவலை எல்லாம் பத்மாவின் மீதுதான் இருந்தது. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்றுதான் அவள் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் தன் மனதுக்குள்ளேயே வைத்து அழுந்திக்கொண்டிருந்தாள்.
அதேநேரம், காயத்ரிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்??? என்பதையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அம்மாவை சமாதானப்படுத்தி, அப்பாவே இதை ஊரறிய சொல்லட்டும் என்று நிஷா காத்திருந்தாள். இத்தனை வருடங்கள் ஆண் துணை இல்லாமல் கஷ்டப்பட்டு காயத்ரியை வளர்த்த அபர்ணா சித்தியின் முகத்தில்... சந்தோஷத்தைப் பார்க்க அவள் காத்திருந்தாள்.
அபர்ணாவைப் பற்றிய கவலையில்... மோகனின் உடல் நிலை மோசமாகிக்கொண்டே போனது. அவர் அபர்னாவுக்கே தெரியாமல் அவளை trace பண்ணி தேடிக் கண்டுபிடித்தார். அபர்ணாவை, தூரத்திலிருந்து பார்த்து.. கண்கலங்கி அழுதார். நிஷாவின் தோழி காயத்ரிதான் என் மகளா?.... இறைவா... இறைவா... என்று கண்ணீர் மல்க கோயிலே கதி என்று கிடந்தார்.
காயத்ரி, சீனுவைத்தான் கல்யாணம் செய்துகொண்டிருக்கிறாள் என்று தெரிந்ததும்....அவனால்தானே நிஷாவின் வாழ்க்கை அழியப்பார்த்தது. அவனைப்போய் எப்படி இப்போது மருமகனாக நினைப்பது என்று நினைத்து நினைத்து வேதனைப்பட்டுக்கொண்டிருந்தார்.
இந்தக் கவலைகளிருந்து அவரைக் காப்பாற்றிய ஒரே விஷயம்.. பேரக் குழந்தைகள். ராஜ்ஜின் மூத்த மகள் தமிழரசி இவரோடு நன்றாக செட் ஆகிவிட்டாள். குழந்தைகளோடு அதிக நேரம் செலவழித்தார். இருந்தாலும் தனிமைகளில்... அவருக்கு அபர்ணாவின் கால்களில் போய் விழவேண்டும் என்றிருந்தது. தன் மகள் காயத்ரியை கூட்டி வந்து அவளிடம் மன்னிப்பு கேட்டு வாரி அணைத்து கொஞ்சவேண்டும்போல் இருந்தது. ஆனால் இது தெரிந்து பத்மாவுக்கு ஏதாவது ஆகிவிட்டால்?????
அவர் தூங்க முடியாமல் கிடந்தார்.....
நிஷா.. கொஞ்ச நாள் என்கூட வந்து இருந்துட்டுப் போயேன்... என்று குரல் தழுதழுக்க அவளிடம் கேட்டார்.
நிஷா உடனே தன் குழந்தைகளோடு அப்பாவை பார்க்க வந்தாள். தன் இரு பிள்ளைகளையும் அவர் கொஞ்சுவதை பார்த்து ரசித்தாள்.
மோகன், பேச்சுவாக்கில், காயத்ரி எப்படியிருக்கிறாள், நீ போன் பண்ணினாயா? என்றெல்லாம் அவளிடம் அடிக்கடி கேட்டு தெரிந்துகொண்டார். நிஷாவின் குழந்தைகளோடு விளையாண்டுகொண்டு சந்தோஷமாக இருந்தார்.
ஆனால் ஸ்கூலுக்கு லீவு போட்டுவிட்டு நிஷாவால் அதிக நாட்கள் அவரோடு இருக்க முடியவில்லை. வரேன்ப்பா. எதையும் நெனச்சி கவலைப்படாதீங்க. உடம்பை நல்லபடியா பார்த்துக்கோங்க.. என்று சொல்லிவிட்டு, அவள் கிளம்பினாள்.
நிஷா கிளம்பி சில மாதங்களிலேயே...நிம்மதியிழந்து, உடல் நிலை பாதிக்கப்பட்டுக் கிடந்தார் மோகன்.
பாரம் தாங்காமல்... அதற்கு மேலும் தாங்க முடியாமல்... தான் இத்தனை நாட்கள் தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்த உண்மையை சொல்லிவிட்டார்.
பத்மா நிஷாவை வயிற்றில் சுமந்துகொண்டிருக்கும்போது தான் தன் கம்பெனியில் வேலை பார்த்த அபர்ணாவின் அழகில் மயங்கி... அவளை அணு அணுவாக அனுபவித்து... ருசித்து... பின் அவள் குழந்தை உண்டானதும்..... வீட்டுக்கும் சமூகத்துக்கும் பயந்து... நல்லவன் வேஷம் போட்டு...
நீ யாரோ நான் யாரோ என்று திட்டி, அவளை நோகடித்து, விரட்டிவிட்டதை.... அழுதுகொண்டே சொன்னார்.
நான் இல்லாம அவள் என்னென்ன கொடுமைகளை எல்லாம் அனுபவிச்சாளோ... நான் பாவி நான் பாவி என்று முகத்தில் அடித்துக்கொண்டு அழுதார்.
அவர் அழுது அங்கே யாரும் பார்த்ததில்லை...
அதுவும் அவர் இப்படி அழுவார் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை....
பத்மாவின் தலையில் இடிவிழுந்தது போலிருந்தது
குடும்பமே அதிர்ச்சியில் உறைந்தது
இதில் அதிர்ச்சியாகாத ஒரே ஆள் நிஷா மட்டும்தான். மகேஷ் காயத்ரியை ஏமாற்றி விட்டுவிட்டுப் போனதும், அவர்களுக்கு ஆறுதல் சொல்ல நிஷா காயத்ரி வீட்டுக்குப் போனபோது... அபர்ணா... தனக்கு ஆறுதல் சொல்ல வந்த ஒரே ஒரு உயிரை....நிஷாவை... கட்டிப்பிடித்துக்கொண்டு அழுது ஒப்பாரி வைத்தபடியே தன் மனதில் இருந்ததையெல்லாம் கொட்டி அழ... பல வருடங்களாக தன் மனதுக்குள் புதைத்து வைத்திருந்ததையெல்லாம் கொட்டி அழ....
காயத்ரியை, அவள் தந்தையோடு சேர்த்து வைக்கலாமே என்று நிஷா, அது யார் என்று கேட்க....
அபர்ணா தான் வேலை பார்த்த கம்பெனி, முதலாளி மோகன், அவரோடு படுத்தது, விரட்டப்பட்டது, காயத்ரி பிறந்தது, எல்லாவற்றையும் சொல்ல.... நிஷாவால் நம்பவே முடியவில்லை.
அப்பாவா இப்படி?????????
அவள் திரும்பத் திரும்பக் கேட்டாள். அதே பதில்தான் வந்தது. நம்பும்படியாக பல விஷயங்களை அபர்ணா சொன்னாள். நிஷா நொந்துபோனாள்.
என் முதல் ஹீரோ.
ஒரு பெண்ணை... ஒரு கர்ப்பிணியை... ஏமாற்றி... தவிக்கவிட்டு.... அவர் மட்டும் தன் மனைவி மக்களோடு சொகுசு பங்களாவில்.....
ச்சே...
நிஷா இதை உடனே வீட்டில் சொல்லி அபர்ணாவையும் காயத்ரியையும் வீட்டில் சேர்த்துக்கொள்ள நினைத்தாள். ஆனால் அம்மா?? இது தாங்காமல் உயிரை விட்டுவிட்டால்.....
நீங்களும் காயத்ரியும் என்னோடவே வந்திடுங்கம்மா - நா தழுதழுக்க சொன்னாள்.
இல்ல நிஷாம்மா. என்னால உனக்கு எதுக்கு சிரமம்
ப்ளீஸ் சித்தி. வந்துடுங்க. நான் உங்களை நல்லா பார்த்துக்கறேன் - சொல்லக்கூட முடியாமல் நிஷா அழுதுவிட்டாள்.
இதெல்லாம் காயத்ரிக்கே தெரியாது.
அம்மா எப்படி நிஷாவோடு மதுரை வர ஒத்துக்கொண்டாள் என்று அவள் ஆச்சரியத்தோடே இருந்தாள். நிஷா அபர்ணாவை விழுந்து விழுந்து கவனிப்பதை பார்த்து... தான் கூட தன் அம்மாவை இந்தளவுக்கு பார்த்துக்கொண்டது கிடையாதே.... என்று நிஷாவை கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டு இருந்தாள்.
அபர்ணா, காயத்ரியிடம் இதுபற்றி எப்பொழுதுமே பேச மறுத்துவிடுவதால்.... இப்பொழுதும் மோகன்தான் தன் தந்தை என்பது தெரியாமல்தான் அவள் வாழ்ந்துகொண்டிருக்கிறாள்.
இங்கே மோகன் உண்மையை சொன்னதிலிருந்து -
ஒரு நல்ல வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கிறேன்.... யாருக்கும் கிடைக்காத நல்ல கணவன் எனக்கு கிடைத்திருக்கிறான்... என்று வாழ்ந்துகொண்டிருந்த பத்மா அழுதுகொண்டு கிடக்க... ராஜ், தீபா, மலர், காமினி என்று எல்லாருமே அவளுக்கு ஆறுதல் சொல்லிக்கொண்டிருந்தார்கள்.
காயத்ரி என் தங்கையா? என்று தனக்குத்தானே திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருந்தான் ராஜ். தான் காமினியை கைவிடாமல் அவளை தன்னோடு கூட்டிக்கொண்டு வந்து வாழ்ந்ததுதான் அப்பாவை இந்தளவுக்கு மாற்றியிருக்கிறது என்பதை அவன் யூகித்திருந்தான்....
காயத்ரி, மோகனுக்குப் பிறந்தவள் என்று தெரிந்ததும் கதிருக்கு அது பெரிய ஷாக் ஆக இருந்தது.
அப்போ சீனு, மோகனின் மருமகனா?
அவனால் இதை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவன் இனி அடிக்கடி நிஷாவை பார்க்கவேண்டியிருக்குமே. அப்படி பார்க்கும்போது நிஷாவுக்கு பழசு எல்லாம் ஞாபகம் வருமே... அது தர்மசங்கடமாய் இருக்குமே
இது தெரிந்திருந்தால் காயத்ரி அவனை கல்யாணம் பண்ணும்போதே தடுத்திருக்கலாமே ச்சே
அவன் மோகன் மேல் கோபமாக இருந்தான். அவரை நான் பார்க்கவே விரும்பவில்லை நிஷா என்றான்.
நிஷா அவனிடம் எதுவும் பேசமுடியாமல் வாயை மூடிக்கொண்டாள். அவளுடைய கவலை எல்லாம் பத்மாவின் மீதுதான் இருந்தது. அம்மாவுக்கு எதுவும் ஆகிவிடக்கூடாது என்றுதான் அவள் இந்த விஷயத்தை யாருக்கும் சொல்லாமல் தன் மனதுக்குள்ளேயே வைத்து அழுந்திக்கொண்டிருந்தாள்.
அதேநேரம், காயத்ரிக்கு இந்த விஷயம் தெரிந்தால் எவ்வளவு சந்தோஷப்படுவாள்??? என்பதையும் அவளால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
அம்மாவை சமாதானப்படுத்தி, அப்பாவே இதை ஊரறிய சொல்லட்டும் என்று நிஷா காத்திருந்தாள். இத்தனை வருடங்கள் ஆண் துணை இல்லாமல் கஷ்டப்பட்டு காயத்ரியை வளர்த்த அபர்ணா சித்தியின் முகத்தில்... சந்தோஷத்தைப் பார்க்க அவள் காத்திருந்தாள்.