Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#7
விரைவிலேயே சகஜ நிலைக்கு திரும்பினாள் மீரா...பிரபு எப்போதும் போல அவனது போய்க்கொண்டிருந்தான் ...
ஜனவரி 7 மீராவின் பிறந்தநாள்...அவள் என்றுமே அதை பெரியதாக கொண்டாடியதில்லை..காலையிலேயே குளித்துவிட்டு கோயில் போய்விட்டு வந்தாள்...வீட்டில் கேசரி செய்தாள்.... குழந்தைகளை ஸ்கூலுக்கு தயராக்கினாள்...நான் முத்தம் தந்தேன்... சிரித்து கொண்டு வாங்கி கொண்டாள் ... நாள் இப்போதும் போல சாதரணமாகவே போனது...
மாலை நான் வீட்டிற்கு விரைவில் வந்தேன்..வீட்டில் பிரபு பிள்ளைகளோடு விளையாடிக்கொண்டிருந்தான்...
"என்னடா?" என்றேன் நட்புடன்
"ஏன்டா! மதனிக்கு பிறந்தநாள்ன்னு சொன்ன நான் என்ன பிரியாணியா கேக்க போறேன்?" என்றான்
"இல்லடா..எப்போவுமே பெருசா கொண்டாடமாட்டா " என்றேன்
மீரா காபியுடன் வெளியே வந்தாள்.., "ம்ம்ம்..பாருங்க சொல்ல சொல்ல கேக்காமல் ..புடவை செண்டுன்னு என்னென்னமோ வாங்கிகிட்டு வந்துருக்காங்க " என்றாள் இருவருக்கும் காபியை கொடுத்தபடி... "ஏண்டா இதெல்லாம் " என்றேன்
"போடா ..வீட்ல நமக்காக ஓடா தேயுறாங்க...அவங்களுக்கு இது கூட செய்யலைனா எப்படி? அதுவும் மதனியோட காபிக்கே ஏகப்பட்ட கடன் பாக்கி இருக்கு எனக்கு " என்றான் ..மீரா ஒரு சின்ன புன்னகையோடு போய்விட்டாள்...
நான் கைக்கால் அலம்ப போனேன் ..திரும்பும் போது நடுவீட்டில் ஒரே சோபாவில் அமர்ந்தபடி மீராவும் பிரபுவும் என்னவோ பேசிக்கொண்டிருந்தார்கள்...மீரா தலையில் கொத்தாக ஜாதி மல்லி இருந்தது..இப்போது பூக்காரம்மா வந்திருப்பாள்....
"என்னவாம் அவனுக்கு" என்றேன்....
"பாப்புவுக்கு கல்யாண ஜவுளி போடா மெட்ராஸ் போறாங்கலாம்" என்றாள்
"ஏன்டா? என் கடைல இல்லாததா..மெட்ராஸ்ல இருக்கு?"என்றேன்
"கேளுங்க ...நானும் அதைதான் கேட்டேன் " என்றாள்
"இல்ல டா ! மாபிள்ள வீட்ல மெட்ராஸ்ல தான்னு சொல்லிட்டாங்க" என்றான்..
கொஞ்ச நேரம் பேசிக்கொண்டு இருந்து விட்டு பிரபு கிளம்பினான் ... மீரா உள்ளே சென்றுவிட்டாள்...
நான் வெளியே கிளம்ப வண்டியை கிளப்பினேன்..வாசலில் பூக்காரம்மா "ம்ம்ம்மா ..பூம்ம்ம்மா " என்றாள்..நான் பூக்காரம்மாவையே பார்த்துக்கொண்டிருந்தேன் .....
என்னக்கு முதல் முதலாக எதோ உறுத்தியது..
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:49 AM



Users browsing this thread: 1 Guest(s)