Adultery ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984
#2
ஆஹா ஓஹோ என்று வாழ்ந்த என் தகப்பனார், நொடிந்து நூலாக போன சமயம்..கடைசியாக இருந்த வீட்டையும் விற்று என் சகோதிரியின் திருமணம் முடித்துவிட்டு...தோற்றுபோய் இந்த ஊரை விட்டு என் தகப்பனும் தாயும் போகையில் நான் அவர்கள் கையை பிடித்தபடி.. பிறந்த மண்ணை திரும்பி திரும்பி பார்த்தபடி போனபோது..எனக்கு 19 வயது...பட்டினத்தில் அகதியாக துவங்கியது எங்கள் வாழ்வு...என் தகப்பனார் வாழ்க்கையிடம் தோற்று பிணமாகினார்... தாய் மட்டும் துணை நிற்க... அதிபலசாளியான வாழ்க்கை எனும் வீரியமிக்க எதிரியை நான் துணிவுடன் எதிர் கொண்டேன் ....வாழ்க்கை என் முழு திறமையையும் சோதித்தது...23 வயதில் என்னை விட 3 மாதம் சிறிய மீராவை பெண் பார்க்க போனேன் ...மீராவின் குடும்பமும் ஒன்னும் பெரிய அளவில் வாழ்ந்துவிடவில்லை....ஆனால் பளிச்சென்ற வெயில் நிறமும்..படத்தில் காணும் பெண் தெய்வங்கள் போன்ற தோற்றம் கொண்ட மீரா என்னை சுண்டி இழுத்தாள். எனக்கு கிடைக்க மாட்டாள் என்று பூரண நம்பிக்கையோடு வந்த எனக்கு இன்ப அதிர்ச்சியாக அவர்கள் வீட்டிலிருந்து சம்மதம் வந்தது... மீரா என் படுக்கையை நிறைத்தாள். இரவுகளில் இன்பம் பொங்கியோடியது.... முதல் வருடத்திலேயே ஒரு பெண் குழந்தைக்கு அப்பனானேன் .....
வாழ்க்கையில் எத்தனை துக்கமிருந்தாலும்..அழகான குழந்தை..பேரழகான மணையாள்...அவற்றின் வீரியத்தை குன்ற செய்தனர்...அம்மாவை புற்று நோய் தனக்கு சொந்தமென்றது...கையில் காசில்லா நிலையில்..அவளை துள்ளத்துடிக்க பறிக்கொடுத்தேன்.
வாழ்க்கை மீண்டும் முழு பலத்துடன் என் மீது போர் தொடுத்தது... மீரா என் தேரின் சாரதியானாள்... என்னிடம் புடைவை வேண்டும்..நகை வேண்டுமென கேட்டதில்லை . தன் புன்னகையே நகையாய் அணிந்தாள்.. பழைய புடவை கூட அவள் உடுத்துகையில் புதிதாக தோன்றியது...நான் கொண்டுவந்ததை இறுகப்பிடித்து செலவு செய்தாள்.. பணம் சேர்ந்தது..மூன்றாம் வருடம் கட்டிலில் நானும் மீராவும் சுமூகமாக இருந்ததுக்கு சாட்சியாக மகனும் பிறந்தான் ...
நான்கு வருடத்தில் வெறும் கணவனாக இருந்த நான் தகப்பன் ஆனதில் என் போர் குணமும் அதிமாக இருந்தது..எதிரியாக இருந்த வாழ்க்கை நண்பனாகியது.. செல்வம் சேர்ந்தது ..
என் தகப்பன் தோற்று போன பூமிக்கு... வெல்ல நான் சென்றேன் ...எனக்கும் மீராவுக்கும் முப்பது வயது நான் பிறந்த மண்ணிற்கு சொந்த பூமியும் சொத்தும் வாங்கிக்கொண்டு நான் திரும்பும் போது...

ஆறு வயது அழுகு மகள்..நான்கு வயது அறிவு மகன் ...மகாலக்ஷ்மியாகவே காட்சியளிக்கும் மனைவியுடன் நான் ஊரில் நுழைந்த போது ..ஊர் வாய் பிளந்து பார்த்தது...என் அளவுக்கு செல்வந்தனும் எவனுமில்லை..என் போல் அழகிய குடும்பம் கொண்டவனும் எவனுமில்லை அந்த ஊரில்.
[+] 1 user Likes enjyxpy's post
Reply


Messages In This Thread
RE: ஏன் செய்தாள் துரோகம் ? By vidhya20071984 - by enjyxpy - 17-04-2019, 11:46 AM



Users browsing this thread: 2 Guest(s)