Adultery செவ்விதழ் மலர்.. !!
#80
மிக்க நன்றி நண்பா.. !!

உண்மைலயே நான் எழுத ஆரம்பித்தது 1997 ல. அப்ப நான் வாசக எழுத்தாளனா வார, மாச பத்திரிக்கைகள்ள வலம் வந்திட்டிருந்தேன். துணுக்கு ஜோக்கு கவிதை சிறுகதைனு எழுதிட்டிருந்தேன். அப்பப்போ பத்திரிக்கை்கைலருந்து ஒரு சின்ன தொகை வரும். தமழ் மக்கள் இருந்த நாடுகள்ள, மலேசியா சிங்கப்பூர் எல்லாம் நண்பர்கள். வாசக வட்டம். 
2. 2000, இருபத்தோராம் நூற்றாண்டின் துவக்கம். என் வாழ்க்கையையே புரட்டிப் போட்ட வருடம். மரண வீழ்ச்சி. உறவுகள், சமூகம் இன்னதென்று உணர வைத்த காலகட்டம். வாழ்க்கை மீதும் மனிதர்கள் மீதும் அத்தனை வெறுப்பு, கசப்பு. 

நூலகம் மட்டுமே என் ஆறுதல் என இருந்த நேரத்தில் அறிமுகமான குரு ஓஷோ. என் ஆன்மீக குரு. முதல் குரு. எல்லாம் நூல்கள் வழி மட்டுமே. அதன்பின் ஐந்து வருடங்கள் முழுக்க ஆன்மீகம்தான்.
மீளும்போது பிறந்த குழந்தை போலானேன். 
அப்போது சில ஆன்மீக கதைகள் எழுதினேன். ஓவியம், கவிதைகள் எல்லாம். அது  எல்லாம் கைப்பிரதிகள். அதில் பல நண்பர்கள் வாங்கிப் போனது திரும்ப வரவேயில்லை. மிஞ்சியது மிகச் சிலதே. அதில் ஒன்று 'மின்மினிப் புன்னகை' அதுவே "இப்படிக்கு நானே" கதை. ஒரு பெண் ஞானமடைய முடியும் என்பதை தர்க்க ரீதியாகச் சொன்ன கதை. அது இறுதியை தொட்டுவிட்டது. அப்போது அதில் காமம் இல்லை. 

அடுத்தது சௌமி கதை. அதுவும் பெரிய நாவல்தான். அதன் இரண்டு அத்தியாயங்கள்தான் "நீ இல்லா நேரம்" கௌரிகூட அதில் பெரிய கதாபாத்திரம். அவளுக்கும் தனிக்கதையே உண்டு. ஆனால் காலச் சூழ்நிலையால் அதை முடிக்க முடியவில்லை.
இன்னொரு கதை "கல்லறை நண்பன்" தத்துவமும், வாழ்வியலும் கலந்த அரசியல் சதுரங்க கதை. அதை எழுதினாலும் வெளியிட முடியாது என்பதால் பாதியில் கை விடும்படியானது. அதை நான் இன்னும் தொடவே இல்லை. பல பகுதிகள் கரையான் அரித்து விட்டது. 

 ஏழு வருட வாழ்வு என்னை மொத்தமாக மாற்றி விட்டது. பின்னர் 2014 ல் தமிழ்காமவெறில கதை எழுதியபோது காமம் சேர்த்து எழுதினேன். 

3. அப்பல்லாம் இணையம் இல்ல. எனக்கு கிடைத்த முதல் இணைய மேடை தமிழ் காமவெறி. அங்க ஆடினேன். அங்க காமம் தேவைன்றதால காமம் இணைக்கப்பட்டது. அப்படி வந்த கதைகளே இவைகள்.. !!


இதையெல்லாம் இங்க சொல்ல என்னை தூண்டியமைக்கு மிக்க நன்றி  இட்ஸ் மீ நண்பா.. !!


நான் பெரிய அப்பா டக்கர் எல்லாம் கிடையாது.  தாராளமா மனசுல பட்ட கருத்தை சொல்லலாம்.. !!

ஆன்லைன்ல எழுதினதால இடைல விட்டுப்போனதை இணைச்சிருக்கேன்.. !!


 - முகிலன்.. !!
[+] 2 users Like Niruthee's post
Like Reply


Messages In This Thread
RE: செவ்விதழ் மலர்.. !! - by Niruthee - 07-05-2021, 12:00 AM



Users browsing this thread: 9 Guest(s)