சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan)
#79
முதல் கேள்வி: கேட்பவர் மல்லிகா, வயது 37 ஆழ்வார்பேட்டை, சென்னை..

கணவன் மனைவி உறவுக்குள் பல சண்டைகள் வரும் போகும். ஆனால் எப்போதுமே நான் வைத்ததுதான் சட்டம் என்கிற வகையில் எதற்கெடுத்தாலும் சண்டை மட்டுமே போடுவேன் என்பதுபோல் கணவர்கள் நடந்துகொண்டால் ஒரு அளவுக்கு மீறி விட்டுக்குடுத்து போவதற்கு மணம் ஒத்துழைக்க வில்லை. பல முறை யோசித்து விட்டேன் என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு ரெண்டு குழந்தைகளும் உண்டு, வேலைக்கு சென்று குடும்பத்தை சரியாக கவனிக்க வேண்டிய பொறுப்பும் உண்டு. என் கணவருடன் நடக்கும் வாக்குவாதத்தில் மணம் அதிக உளைச்சலுக்கு ஆளாகிறது, உண்மையில் எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை.

பதில்: இது இந்திய பெண்களுக்கு, அதிலும் குறிப்பாக தமிழ் நாட்டு பெண்களுக்கு இன்னும் அதிகமாக வரக்கூடிய ப்பிரச்சினை தான், உங்களின் மணது குடும்பத்தில் அனைத்தையும் கட்டிக்காப்பாத்த வேண்டும், இல்லையென்றால் அனைத்தும் சரி இல்லாமல் போய்விடும் என்று சற்று அளவுக்கு அதிகமாகவே குடும்பம் மீது அக்கறை கொண்ட மணது. அதில் பயபக்தியுடன் செயல் படுவீர்கள். அதே சமயம் இதற்கு நேர்மாறாக வாழ்க்கையில் மிகவும் சௌகரியம் வேண்டும் என்று எண்ணும் மனது ஆணுக்கு. அடிப்படையில் இந்த இரு குணாதிசயம் தான் பலவிதமான பிரச்சினைகளுக்கு காரணம். அவ்வப்பொழுது சண்டை போடும் கணவனை குடும்ப பெண்களால் சமாளிக்க முடியும். எப்பொழுதுமே விட்டுக்குடுத்து போகும் மனைவியிடமும் சலிக்காமல் சண்டை போடுகிறார்கள் என்றாள் அதற்க்கு வேறு ஒரு முக்கிய காரணம் இருக்க வாய்பிருக்கிறது. அது வெளியில் மனைவியிடம் கூற விரும்பாமல் உள்ளுக்குள் வைத்து புழுங்கும் Inferiority complex ஆகவும் இருக்கலாம். தாழ்வு மனப்பான்மைக்கு காரணம் வளர்ப்பு முறை, அதை சீர்திருத்துவது உங்களுக்கு மிகவும் கடினமானது. சில பெண்கள் தங்களிடம் தான் ஏதோ குறை இருக்கிறதோ என்று எண்ணி தங்களை காரணமே இல்லாமல் கணவனுக்கு எப்பொழுதும் அடிமையாக வாழ்வதுதான் correct என்று எண்ணிக்கொள்வார்கள், ஆனால் அது தவறு. எப்போதுமே உங்களின் சுயகௌரவத்தை விட்டுக்குடுக்காமல் உங்களை நம்பி வாழ்வதுதான் நல்ல திடமான வாழ்க்கையை குடுக்கும். இப்படி எப்பொழுதுமே சண்டை மட்டுமே போட்டுக்கொண்டிருக்கும் கணவர்களுக்கு மணதினில் நீங்கள் இல்லையென்றால் எதுவும் நடக்காது என்கிற பயமும் இருக்கும்!! உங்களை ப் போன்ற பெண்கள் கணவன் கூறும் கடும் வார்த்தைகளை உள்வாங்கிக்கொண்டு மணதை அதிகம் அடக்கி வைக்காமல் மணதில் பட்டதை வார்த்தைகளாக உங்கள் கணவரிடம் வெடித்து விடுவதும் நல்லதே. ஏன் என்றால் அதிகம் அடக்கி வைப்பதன் மூலம் ரத்த அழுத்தம் குறையும் (Low blood pressure) வாய்ப்பிருக்கிறது. அப்படி நிகழ்ந்தால் எந்த நேரத்தில் எந்த இடத்தினில் நீங்கள் மயக்கம் போட்டு விழுவீர்கள் என்று சொல்ல முடியாது. மண அழுத்தம் (Depression) அதிகரிப்பதால் இது போன்ற அபாயங்கள் நிகழும். எனவே நீங்கள் நீங்களாகவே இருங்கள், உள்ளுக்குள் எழும் சிறு சிறு சந்தோஷங்களுக்கு இடம் குடுங்கள். எவ்வளவு சொல்லியும் திருத்த முடியவில்லை என்றால் இரு குழந்தைகளுடன் சேர்த்து மூன்றாவதாக மண வளர்ச்சி குன்றிய இன்னொரு குழந்தை உள்ளதென்று நினைத்து வாழ்கையை நடத்துங்கள். நன்றாக நியாபகம் வைத்துக்கொள்ளுங்கள், உங்கள் குழந்தைகளின் எதிர்காலம் முக்கியமென்றால், அதற்கு முதலில் அவர்களைப் பார்த்துக்கொள்ள உங்கள் உடல் ஆரோக்கியம் மிக முக்கியம். அதை சரியாக வைத்துக்கொள்ள உங்களின் மனதை நீங்கள் சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். All the best... - இந்த பதிலை படித்து முடித்த பிறகு தன் தோளில் லேசாக தட்டிக்கொண்டு "you are leading a correct life sangeetha...." என்று தனக்குத்தானே சொல்லிக்கொண்டாள்.


கேள்வி இரண்டு: கேட்பவர் சந்தோஷினி, வயது 34, மயிலாப்பூர்: சென்னை..

எனக்கு திருமணமாகி பத்து ஆண்டுகள் ஆகின்றது. கணவருடன் மனது அதிகம் ஒத்து போகவில்லை, வாக்கு வாதங்களும் கருத்து வேறுபாடும் அதிகம் ஆகி வருகிறது. நம்முடைய சமூக சூழ்நிலையில் என் கணவரை நான் விவாகரத்து செய்தால் பள்ளிக்கு சென்று படிக்கும் எனது குழந்தையின் எதிர்காலம் அதனால் பாதிக்கும் என்கிற எண்ணத்தில் என்னால் அந்த முடிவுக்கு வர முடியவில்லை. நான் ஒரு தனியார் கம்பெனியில் உயர் பதவியில் வகிக்கிறேன். எனக்கு வேலையின் காரணமாக சில மேல் அதிகாரிகளுடன் பழகும் தருணம் அதிகம் இருக்கும். அவர்களுடன் வெளியில் செல்ல வேண்டிய சூழ்நிலையும் அமையும். அப்போது கிட்டத்தட்ட கடந்த சில மாதங்களாக ஒரு நபருடன் என்னையும் அறியாது எனக்கு அவர் மீது ஒரு விதமான ஈர்ப்பு ஏற்ப்படுவதை உணர்ந்தேன். மனதுக்குள் எங்கே அது காதலாக மாறிவிடுமோ என்று ஒரு விதமான பயமும் வந்தது. இவரை ப் பார்க்க பார்க்க எனது கல்லூரி காலத்து காதலன் தான் நினைவுக்கு வருகிறான். இதனாலேயே சில நாட்கள் அவருடன் பேசுவதை நான் தவிர்த்து வந்தேன். ஆனால் அது ஒரு விதத்தில் எனது வேலையில் பாதிப்பை ஏற்படுத்தி விடுமோ என்கிற அச்சமும் எழுகிறது. அதே சமயம் அவர் மீது என் மனதில் எழும் ஈர்ப்பை நான் குறைக்க வேண்டும் என்று அதிகம் எண்ணும் போதுதான் அவருடைய சிந்தனைகள் என் மனதில் இன்னும் ஆழத்துக்கு செல்கிறது. என்னால் முடிந்த வரையில் முயற்சி செய்துவிட்டேன், ஒன்றும் பலன் அளிக்கவில்லை, இதற்கு என்னதான் வழி? - ( இந்த கேள்வியை படிக்க படிக்க சங்கீதாவின் மனதில் ரகாவின் முகம் நொடிக்கு ஒரு முறை ஓடிக்கொண்டே இருந்தது. )

பதில்: இந்த விஷயத்துக்கு நீங்கள் ஏன் இப்படி பயப்படனும்னு தெரியல. இது ரொம்ப சாதாரணமான விஷயம். ஒரு விதத்துல உங்களை பாராட்டனும். பத்து வருஷம் ஆகி உங்க மணசு ஒத்து போகாம இருந்தும் விவாகரத்து செய்யாமல் குழந்தைகளுக்காக அவருடன் இணைந்து இருக்கீங்க. இதுக்கு மத்தியில உங்க மனசுக்கு இதமாகவும், ஒத்து போகக்கூடியவராகவும் ஒருவர் உங்கள் வாழ்கையில் வருகிறார் என்றால் அவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டிய அவசியம் இல்லை. மனதை மிகவும் அடக்காதீர்கள். இதைத்தான் நான் உங்களுக்கு முன் கேள்வியை எழுப்பிய மல்லிகாவுக்கும் கூறி உள்ளேன். நீங்கள் சொன்னா நபருடன் பழகுவதால் உங்களுக்கு மண நிம்மதி கிடைக்கும் என்றால் அதை வரவேற்பதில் தவறில்லை. உலகளவில் இன்றைக்கு பெண்கள் எவ்வளவோ விஷயங்களை balanced ஆக செய்கிறார்கள். அதில் discreet relation எனப்படும் (ரகசிய உறவு) ம் ஒன்று. அதாவது, குடும்பம், வேலை, கணவன், குழந்தைகள் என்று இருக்கும்போது உங்களுடைய தனிப்பட்ட சந்தோஷங்கள், விருப்பு வெறுப்புகள் அனைத்துக்கும் முக்கியத்துவம் குடுப்பது அவசியம், அந்த வகையில் இன்றைக்கு இந்த வகையான Discreet relationship சற்று முதிர்ச்சி அடைந்த பெண்கள், தங்களுடைய இளம் வயதில் இழந்த சில சுகங்களை எண்ணி அதிக Regrets உடன் வாழும் போது மனோ தத்துவ ரீதியாக அது தேவைப்படுகிறது. அதிகமாக உங்கள் மண உணர்வுகளை அடக்கி வைப்பதன் காரணமாக நீங்கள் உங்களின் உண்மையான தனித்தன்மையை இழந்து உங்களையே உதாசீனப்படுத்துகிரீர்கள் என்று அர்த்தம். எந்த ஒரு உணர்வையும் அதிகம் அடக்குவதால் பிற்காலத்தில் பிரச்சினை தான் மிஞ்சும். எனவே நீங்கள் மனதளவில் ஒரு நபரை விரும்புகிறீர்கள் என்றால் அதை எண்ணி பயம் கொள்ளவேண்டாம். மனது ஈர்க்கப்படுவதும் அல்லது காதல் வயப்படுவதும் எந்த வயதிலும் யார் மீதும் வரலாம். வீட்டிலேயே புழங்கி இருக்கும் பெண்களுக்கு வெளியுலகில் மற்ற நபர்களுடன் பழகும் வாய்ப்புகள் கம்மி. அப்படிப்பட்ட மங்கைகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த சந்தர்ப்பம் அமைவதில்லை. ஆனால் நீங்கள் வேலைக்கு செல்கிறீர்கள், பலரை சந்திக்கிறீர்கள்,

அதில் உங்களின் மணம் ஈர்க்கப்படும் ஒருவரோடு காதல் வயப்பட்டால் அதில் தவறு ஏதும் இல்லை. இந்த உலகத்தில் நம் கண் முன் வாழ்பவர்கள் மட்டும் சந்தோஷமாக வாழ்வதை பார்க்க நாம் பிறக்க வில்லை, நாமும் சந்தோஷமாக வாழத்தான் பிறந்திருக்கிறோம். அதை மறந்து விடாதீர்கள். உங்களுக்கு சந்தோஷம் தரும் எந்த ஒரு விஷயத்தையும் தகுந்த safety measures உடன் செய்து அதே சமயம் அது உங்களுக்கு மண நிம்மதியும் தருமேயாயின் please go ahead. Dont give any second thoughts about it & start enjoying your life.- இது போன்ற கேள்வி பதில்களை இது வரையில் சங்கீதா அவ்வளவு முக்கியத்துவன் குடுத்து கூர்ந்து கவனித்து Femina இதழில் படித்ததில்லை. இன்றைக்கு ஏன் படித்தாள் என்றும் அவளுக்கு தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு எண்ணம் அவளது மனதில் இந்த க் கேள்விகளை படிக்க தூண்டியுள்ளது. படித்து முடித்த பிறகு சந்தோஷினிக்காக இந்த பதிலை மெளனமாக சங்கீதாவும் மணதில் அமோதித்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: சங்கீதா மேடம் - இடை அழகி (by madhavan) - by johnypowas - 03-04-2019, 10:55 AM



Users browsing this thread: 1 Guest(s)