03-04-2019, 10:38 AM
"நீ ரொம்ப நல்ல பொண்ணுடி.. நீ பொண்டாட்டியா கெடைக்க நான் குடுத்து வச்சிருக்கணும்..!! இனிமே இந்தமாதிரிலாம் உனக்கு எப்போவும் சந்தேகம் வரக்கூடாது.. சரியா..??"
"ம்ம்ம்.. சரித்தான்..!!" ஆதிரா அழுகையுடனே சொல்ல,
"லூசு..!!" என்றவாறு மீண்டும் அவளது நெற்றியில் முத்தம் பதித்தான் சிபி.
அடுத்தநாள் அதிகாலை..
ஆதிரா தங்கள் வீட்டின் மாடியறை ஜன்னலுக்கு முன்பாக நின்றிருந்தாள்.. தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்புறமாக வந்த சிபி.. மனைவியின் தோள்மீது கைபோட்டு அவளை அன்பாக அணைத்துக்கொண்டான்..!! கவனம் சிதறிய ஆதிரா.. தன்னை அணுகியது கணவன்தான் என்று புரிந்ததும்.. மெலிதாக புன்னகைத்தாள்.. அவனது அணைப்புக்குள் வசதியாக அடங்கிப்போனாள்..!! சிபி இப்போது அவளது கன்னத்தில் முத்தமிட்டவாறே கேட்டான்..!!
"ஹ்ம்ம்.. அப்படி என்னத்த இவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்குற..??"
"என் தங்கச்சி வாழ்ற வீட்டை பாத்துட்டு இருக்கேன்..!!"
"எது..?? அதுவா.. அந்த சிங்கமலையா..??" சிபி தூரத்தில் தெரிந்த சிங்கமலையை கைநீட்டி கேட்டான்.
"ம்ம்.. ஆமாம் அத்தான்.. அங்கதான தாமிரா வாழ்றா..??"
"ஹ்ம்ம்..!! அதுசரி.. உன் தங்கச்சி வாழ்ற வீடு இருக்கட்டும்.. நாம வாழப்போற வீட்டுக்கு எப்போ கெளம்புறது..??"
"ஹ்ஹ.. கெளம்ப வேண்டியதுதான்..!!"
"அப்போ ரெடியா..??"
"ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டா ரெடிதான்..!!"
"ஹாஹா..!!"
சிபி சிரித்துக்கொண்டே ஆதிராவை அணைக்க முற்பட.. அதேநேரம் அவனது முழங்கால் அவளது கால்க்காயத்தை இடிக்க..
"ஆஆஆஆ..!!" ஆதிரா வேதனையில் முனகினாள்.
"என்னாச்சு..??" பதறினான் சிபி.
"காலு.. இடிச்சுட்டிங்க.. வலிக்குது..!!" வேதனையை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள் ஆதிரா.
"ஓ.. ஸாரி ஸாரி..!!"
"ச்ச.. பரவாலத்தான்..!!"
"ம்ம்.. கால்வலின்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது..!! நான் இல்லாத இந்த ரெண்டுநாளும்.. டேப்ளட்ஸ்லாம் கரெக்டா சாப்டியா..??" கேட்டவன், உடனே நம்பிக்கை இல்லாமல்,
"சாப்பிட்டுருக்க மாட்டியே..??" என்று கேட்டான்.
"ம்ஹூம்..!! அதுலாம் சாப்பிடுற நெலமைலயா நான் இருந்தேன்..??"
"ஹ்ம்ம்ம்ம்.. ஓகே ஓகே..!! இனிமே எதை மறந்தாலும் மெடிசின்ஸ் மறக்கக்கூடாது.. சரியா..??"
"சரித்தான்..!!"
சிபியே அங்கிருந்து நகர்ந்து சென்று.. அலமாரியில் இருந்த பேக் திறந்து.. மாத்திரைப் பட்டைகளை கிழித்து.. ஆதிராவுக்கான அதிகாலை மருந்தினை எடுத்து வந்தான்.. கூடவே தண்ணீர் ஜாடியும்..!!
"ம்ம்.. சாப்பிடு..!!"
என்று உள்ளங்கையை விரித்தான்.. சின்ன சின்னதாய் ஏழெட்டு மாத்திரைகள்..!!
"எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம் அத்தான்..!!"
"என்ன..??"
"முன்னாடியே உங்ககிட்ட கேக்கனும்னு நெனைப்பேன்.. ஆனா கேக்கல..!! இப்போ என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டே கேக்குறேன்..!!"
"எ..என்னன்னு சொல்லு..!!"
"கால்ல இருக்குற அந்த சின்ன வெட்டுக்காயத்துக்கா இத்தனை மாத்திரை..??" ஆதிரா கேட்டுவிட்டு புன்னகைக்க, சிபி பட்டென்று அமைதியானான். அவனது அமைதியை பார்த்து அவளே மீண்டும்,
"காயத்துக்கு எத்தனை மாத்திரை அத்தான்..??" என்று கேட்க,
"ஒ..ஒன்னு..!!" பதில் சொன்னான் சிபி.
"மிச்ச மாத்திரைலாம் அந்த மென்ட்டல் இன்ஸ்டிட்யூஷன்ல ப்ரிஸ்க்ரைப் பண்ணினதா..??"
"ம்ம்..!!" அமைதியாக சொன்ன சிபி, இப்போது மனைவியை ஏறிட்டு பார்த்து,
"உ..உனக்கு ஒன்னும் இல்லடா.. இது சும்மா.. டாக்டர்ஸ் சொல்றதுக்காக.. இதுவும் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான்..!!" என்று தடுமாறினான்.
"ஹஹா.. பரவாலத்தான்.. எத்தனை வருஷம்னாலும் பரவால.. நீங்க என்கூட இருக்கிங்கல்ள்ல.. எனக்கு அது போதும்..!!"
அமர்த்தலாக சொல்லிவிட்டு மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்தாள் ஆதிரா.. அவளை அன்பும், ஆதரவுமாக அணைத்துக் கொண்டான் சிபி..!!
வேறு உடைக்கு மாறிய சிபியும் ஆதிராவும்.. ஆளுக்கொரு பேகை தூக்கிக்கொண்டு படியிறங்கி கீழே வந்தார்கள்..!! ஹாலில் அவர்களுக்காக நிறைய பேர் காத்திருந்தனர்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபுறம்.. முகிலன், நிலவன், அங்கையற்கண்ணி, யாழினி மறுபுறம்..!! எல்லோரிடமும் நின்று சிறிதுநேரம் பேசிவிட்டு.. மேற்கொள்ளப்போகிற பயணத்துக்கு ஆசிவாங்கிவிட்டு.. வீட்டைவிட்டு வெளியே வந்தனர் இருவரும்..!!
"ம்ம்ம்.. சரித்தான்..!!" ஆதிரா அழுகையுடனே சொல்ல,
"லூசு..!!" என்றவாறு மீண்டும் அவளது நெற்றியில் முத்தம் பதித்தான் சிபி.
அடுத்தநாள் அதிகாலை..
ஆதிரா தங்கள் வீட்டின் மாடியறை ஜன்னலுக்கு முன்பாக நின்றிருந்தாள்.. தூரத்தில் தெரிந்த எதையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்..!! அவளுக்கு பின்புறமாக வந்த சிபி.. மனைவியின் தோள்மீது கைபோட்டு அவளை அன்பாக அணைத்துக்கொண்டான்..!! கவனம் சிதறிய ஆதிரா.. தன்னை அணுகியது கணவன்தான் என்று புரிந்ததும்.. மெலிதாக புன்னகைத்தாள்.. அவனது அணைப்புக்குள் வசதியாக அடங்கிப்போனாள்..!! சிபி இப்போது அவளது கன்னத்தில் முத்தமிட்டவாறே கேட்டான்..!!
"ஹ்ம்ம்.. அப்படி என்னத்த இவ்வளவு சீரியஸா பாத்துட்டு இருக்குற..??"
"என் தங்கச்சி வாழ்ற வீட்டை பாத்துட்டு இருக்கேன்..!!"
"எது..?? அதுவா.. அந்த சிங்கமலையா..??" சிபி தூரத்தில் தெரிந்த சிங்கமலையை கைநீட்டி கேட்டான்.
"ம்ம்.. ஆமாம் அத்தான்.. அங்கதான தாமிரா வாழ்றா..??"
![[Image: krr63.jpg]](https://2.bp.blogspot.com/-PGYIMdILtgE/U4tnlprihrI/AAAAAAAABQY/ksFpLA8IolY/s1600/krr63.jpg)
"ஹ்ம்ம்..!! அதுசரி.. உன் தங்கச்சி வாழ்ற வீடு இருக்கட்டும்.. நாம வாழப்போற வீட்டுக்கு எப்போ கெளம்புறது..??"
"ஹ்ஹ.. கெளம்ப வேண்டியதுதான்..!!"
"அப்போ ரெடியா..??"
"ட்ரஸ் சேன்ஜ் பண்ணிட்டா ரெடிதான்..!!"
"ஹாஹா..!!"
சிபி சிரித்துக்கொண்டே ஆதிராவை அணைக்க முற்பட.. அதேநேரம் அவனது முழங்கால் அவளது கால்க்காயத்தை இடிக்க..
"ஆஆஆஆ..!!" ஆதிரா வேதனையில் முனகினாள்.
"என்னாச்சு..??" பதறினான் சிபி.
"காலு.. இடிச்சுட்டிங்க.. வலிக்குது..!!" வேதனையை மறைத்துக்கொண்டு புன்னகைத்தாள் ஆதிரா.
"ஓ.. ஸாரி ஸாரி..!!"
"ச்ச.. பரவாலத்தான்..!!"
"ம்ம்.. கால்வலின்னு சொன்னதும்தான் ஞாபகம் வருது..!! நான் இல்லாத இந்த ரெண்டுநாளும்.. டேப்ளட்ஸ்லாம் கரெக்டா சாப்டியா..??" கேட்டவன், உடனே நம்பிக்கை இல்லாமல்,
"சாப்பிட்டுருக்க மாட்டியே..??" என்று கேட்டான்.
"ம்ஹூம்..!! அதுலாம் சாப்பிடுற நெலமைலயா நான் இருந்தேன்..??"
"ஹ்ம்ம்ம்ம்.. ஓகே ஓகே..!! இனிமே எதை மறந்தாலும் மெடிசின்ஸ் மறக்கக்கூடாது.. சரியா..??"
"சரித்தான்..!!"
சிபியே அங்கிருந்து நகர்ந்து சென்று.. அலமாரியில் இருந்த பேக் திறந்து.. மாத்திரைப் பட்டைகளை கிழித்து.. ஆதிராவுக்கான அதிகாலை மருந்தினை எடுத்து வந்தான்.. கூடவே தண்ணீர் ஜாடியும்..!!
"ம்ம்.. சாப்பிடு..!!"
என்று உள்ளங்கையை விரித்தான்.. சின்ன சின்னதாய் ஏழெட்டு மாத்திரைகள்..!!
"எனக்கு ரொம்பநாளா ஒரு சந்தேகம் அத்தான்..!!"
"என்ன..??"
"முன்னாடியே உங்ககிட்ட கேக்கனும்னு நெனைப்பேன்.. ஆனா கேக்கல..!! இப்போ என்ன விஷயம்னு தெரிஞ்சுக்கிட்டே கேக்குறேன்..!!"
"எ..என்னன்னு சொல்லு..!!"
"கால்ல இருக்குற அந்த சின்ன வெட்டுக்காயத்துக்கா இத்தனை மாத்திரை..??" ஆதிரா கேட்டுவிட்டு புன்னகைக்க, சிபி பட்டென்று அமைதியானான். அவனது அமைதியை பார்த்து அவளே மீண்டும்,
"காயத்துக்கு எத்தனை மாத்திரை அத்தான்..??" என்று கேட்க,
"ஒ..ஒன்னு..!!" பதில் சொன்னான் சிபி.
"மிச்ச மாத்திரைலாம் அந்த மென்ட்டல் இன்ஸ்டிட்யூஷன்ல ப்ரிஸ்க்ரைப் பண்ணினதா..??"
"ம்ம்..!!" அமைதியாக சொன்ன சிபி, இப்போது மனைவியை ஏறிட்டு பார்த்து,
"உ..உனக்கு ஒன்னும் இல்லடா.. இது சும்மா.. டாக்டர்ஸ் சொல்றதுக்காக.. இதுவும் இன்னும் கொஞ்சநாளைக்குத்தான்..!!" என்று தடுமாறினான்.
"ஹஹா.. பரவாலத்தான்.. எத்தனை வருஷம்னாலும் பரவால.. நீங்க என்கூட இருக்கிங்கல்ள்ல.. எனக்கு அது போதும்..!!"
அமர்த்தலாக சொல்லிவிட்டு மாத்திரைகளை விழுங்க ஆரம்பித்தாள் ஆதிரா.. அவளை அன்பும், ஆதரவுமாக அணைத்துக் கொண்டான் சிபி..!!
வேறு உடைக்கு மாறிய சிபியும் ஆதிராவும்.. ஆளுக்கொரு பேகை தூக்கிக்கொண்டு படியிறங்கி கீழே வந்தார்கள்..!! ஹாலில் அவர்களுக்காக நிறைய பேர் காத்திருந்தனர்.. திரவியம், வனக்கொடி, கதிர், தென்றல் ஒருபுறம்.. முகிலன், நிலவன், அங்கையற்கண்ணி, யாழினி மறுபுறம்..!! எல்லோரிடமும் நின்று சிறிதுநேரம் பேசிவிட்டு.. மேற்கொள்ளப்போகிற பயணத்துக்கு ஆசிவாங்கிவிட்டு.. வீட்டைவிட்டு வெளியே வந்தனர் இருவரும்..!!


![[+]](https://xossipy.com/themes/sharepoint/collapse_collapsed.png)