Incest PDF STORIES - 18+ நாவல்கள், கதைகள் PDF+STORIES
#20
"நீ வேற எரிச்சலை கிளப்பாதே. எனக்கும்‌ ரத்தி படம்‌ பார்த்துட்டு வந்து சேர்‌.”

பதிலுக்கு காத்து இருக்காமல்‌ ரகுவீர்‌ கிளம்பி தியேட்டர்‌ வாசலுக்கு வற்றி "ஆட்டோ” என்று
கத்த, அவன்‌ குரலுக்கு நின்ற ஆட்டோவில்‌ ஏறி “வெஸ்ட்‌ மாம்பலம்‌, அயோத்யா மண்டபம்‌”
சொல்ல ஆட்டோ அவனை சுமந்து கொண்டு விரைந்தது. ரகு விட்டுக்குள்‌ சேர்வதற்குள்‌
அவன்‌ குடும்பத்தைப்‌ பற்றி தெரிந்து கொள்வோம்‌.

ரகுவீர்‌, அப்பா ராமநாதன்‌ வருமான வரி துறையில்‌ வேலை பார்த்து வருகிறார்‌. இந்தியாவில்‌
பல இடங்களில்‌ வேலை பார்த்து விட்டு இன்னும்‌ ரண்டு ஆண்டுகளில்‌ ஓய்வு பெற
இருப்பதால்‌ சென்னைக்கு மாற்றம்‌ கேட்டூ வந்து விட்டார்‌. ஆபீஸ்‌ இருப்பது
நுங்கம்பாக்கத்தில்‌.

அம்மா கோமளா, இசை ஆசிரியை. இசையில்‌ எம்‌ ஏ படித்தவர்‌. இல்லத்தரசி, ஓய்வாக

இருக்கும்‌ மாலை நேரத்தில்‌ பக்கத்தில்‌ இருக்கும்‌ குழந்தைகளுக்கு கர்நாடக சங்கீதம்‌ கற்று
கொடுப்பது வழக்கம்‌.

மூத்த மகன்‌ ராஜாராம்‌. வயது முப்பது திருமணமாகி நான்கு வருடமாகி விட்டது. அவன்‌
திருமணம்‌ காதல்‌ திருமணம்‌. இன்போசிஸ்‌ கம்பனியில்‌ டீம்‌ லீட்‌. கூட வேலை பார்த்து
வரும்‌ செளம்யாவை காதலித்து திருமணம்‌ செய்து கொண்டான்‌. ஆரம்பத்தில்‌ ஓரளவு
எதிர்ப்பு இருந்தாலும்‌, பிடிவாதமாக இருந்து, தம்பி ரகுவீர்‌ உதவியோடு, பெற்றோர்‌
சம்மதத்தோடு காதலித்த பெண்ணையே கைப்‌ பிடித்தான்‌. காதல்‌ வாழ்வுக்கு அடையாளமாக
மூன்று வயது பெண்‌ குழந்தை பூஜா. தாத்தாவின்‌ செல்லக்‌ குழந்தை. சித்தப்பா வரும்‌ வாரக்‌
கடைசி நாட்களில்‌ சித்தப்பாவோடு தான்‌ இருப்பாள்‌. அவன்‌ பைக்கை விட்டூ இறங்க
மாட்டாள்‌. இன்று ராஜாவின்‌ ஆபீஸ்‌ தோழனின்‌ திருமணம்‌ இருப்பதால்‌, ராஜா தனது
மனைவி குழந்தையோடூ காலை வெளியே கிளம்பி சென்று விட்டான்‌. மாலை தான்‌ திரும்ப
வருவான்‌.

விட்டின்‌ கடைக்‌ குட்டி, ரகுவீர்‌. வயது 28. அப்பா அம்மா இருவரின்‌ பேச்சை தட்டாத பிள்ளை.
கல்யாண விஷயத்தில்‌ ராஜாராம்‌ தாங்கள்‌ சொன்ன பேச்சை கேட்கவில்லை என்ற வருத்தம்‌
ராமநாதன்‌, கோமளா தம்பதிக்கு மனதளவில்‌ உண்டு என்பதை ரகு நன்றாக அறிவான்‌.
அதனால்‌ அவர்கள்‌ மனதை மேலும்‌ சங்கடப்படுத்த விருப்பம்‌ இல்லை. “அம்மா, உனக்கு யார்‌
பிடிக்குதோ அந்தப்‌ பெண்ணையே பார்த்து கல்யாணம்‌ பண்ணி வையுங்க. எனக்கு ஒன்னும்‌
பிரச்னை இல்லை. எனக்கு நல்ல பெண்ணா தான்‌ பார்பீங்கன்னு உங்க ரெண்டு பேர்‌ மேல
எனக்கு பூரண நம்பிக்கை இருக்கு.

படிப்பு அண்ணா பல்கலைக்கழகத்தில்‌ ஏரோஸ்பேஸ்‌ என்ஜினிபரிங்‌. முதல்‌ மாணவனாக
தேர்ச்சி. (580 (௪ 50506 19528100 ரெலி) நிறுவனத்தின்‌ தலைமை அலுவலகமான
பெங்களுரில்‌ வேலைக்கு சேர்ந்து 6 வருடங்கள்‌ ஓடி விட்டன.

ஊர்‌ முழுக்க சல்லடை போட்டும்‌ நல்ல பெண்‌ கிடைக்கவில்லை என்ற மனக்கவலை
கோமளார்வுக்கு அதிகமாகி ஏற்கனவே இருந்த பிபியை அதிகப்‌ படுத்தி விட்டன.

"என்னம்மா இது தேவை இல்லாம, நீயும்‌ டென்சனாகி எங்களையும்‌ டெண்சனாக்குற?".
"போடா, உனக்கு இதெல்லாம்‌ புரியாது. உனக்கு என்ன சின்ன வயசா. இருவத்தி எட்டு
வயசாச்சு. நல்ல பொண்ணு கிடைக்கலையேடா? உனக்கு வயசாகிட்டே போகுதேடா?"
"என்னம்மா புரியாத மா பேசுற? எனக்கு பொண்ணு இனிமேலா பிறக்கப்‌ போறா?
எங்கயாவ றந்து இருப்பா? கவலைப்படாம தேடுங்க? நான்‌ சொன்ன மாதிரி நீங்க
பார்க்கிற பொண்ணைத்தான்‌ கல்யாணம்‌ பண்ணிக்குவேன்‌. போதுமா?"

அப்போது நிம்மதியாக இருந்தாலும்‌, ரகு ஊருக்கு கிளம்பிய பிறகு திரும்ப தனது
மருமகளிடம்‌ திரும்ப புலம்பத்‌ தொடங்கி விடுவாள்‌. செளம்யாவும்‌ எதுக்கு அம்மா கவலைப்‌
படுறீங்க? என்னோட மச்சினன்‌ ஜெயம்‌ ரவி மாதிரி உயரமா, சூர்யா மாதிரி சுறுசுறுப்பா,
அஜித்‌ மாதிரி ஹான்ட்சம்மா இருக்கார்‌. அவருக்கு ஒரு நல்ல அழகி கிடைக்காம தான்‌
போய்டூவாளா என்ன? பார்க்கலாம்‌.” என்று சொல்லி வாயடைக்க வைத்து விடுவாள்‌.

அப்பா ராமனாதன்‌ எதையுமே கண்டு கொள்வதில்லை. தான்‌ உண்டு, தன்‌ வேலை உண்டு
என்று எதிலுமே பட்டூம்படாமல்‌ தனது வேலையை பார்த்துக்‌ கொண்டு இருந்தார்‌.


அயோத்யா மண்டபத்துக்கு எதிரே இருந்த ரோட்டில்‌ ஆட்டோ திரும்ப நான்கு வீடு தள்ளி,
ஆட்டோவை நிறுத்த சொல்லி இறங்கிக்‌ கொண்டான்‌ ரகுவீர்‌. ஆட்டோவுக்கு பைசா கொடுத்து
ட்டூ, விட்டுக்குள்‌ பரபரப்பாக நுழைந்த மகனைப்‌ பார்த்து குழம்பிப்‌ போனாள்‌ கோமளா.

என்னடா இது. இப்போதான்‌ பிரெண்ட்‌ கூட பைக்ல படத்துக்கு போறேன்னு கிளம்பிப்‌
போனான்‌. ஒரு மணி நேரம்‌ கூட ஆகலை, அதுக்குள்ள திரும்பி வந்துட்டானே. யோசித்துக்‌
கொண்டே, “டேய்‌ ரகு...” என்று ஆரம்பிக்க, “அம்மா இப்போ நீ என்ன கேக்கப்‌ போறேன்னு
எனக்கு தெரியும்‌. எனக்கு அவசர வேலை இருக்காம்‌. முக்கியமான வேலையாம்‌. உடனே
கிளம்பி சொல்லிட்டான்‌ அந்த முசுடூ. என்னம்மா செய்றது. நான்‌ இருக்கிறது சாதாரண
ப்ராஜெக்ட்‌ இல்லையே சந்திரயான்‌ ப்ராஜெக்ட்னா சும்மாவா?

"ஆமாண்டா, என்‌ அண்ணன்‌ பசங்க கூட, என்ன அத்தை ரகு சந்திர மண்டல ப்ராஜெக்ட்ல
இருக்கானா? பெரிய ஆள்தான்னு பொறாமையோட சொல்லுறாங்க. சரி வேற வழி
இல்லைன்னு சொல்ற. பரவாயில்ல நீ கிளம்பு. உனக்கு இந்த வாரத்துக்கு தேவையான
சாப்பாடு ஐடம்‌ எல்லாம்‌ மூட்டை கட்டி வச்சு இருக்கேன்‌."

"இங்கே பாரு பருப்புப்‌ பொடி, மாவடு ஊறுகாய்‌, தேங்காய்‌ பொடி, உளுந்து அப்பளம்‌, ரவா
இட்லி மிக்ஸ்‌, வீட்டில நெறிச்ச காபிப்‌ பொடி..." என்று அடுக்கி க்‌ கொண்டே போக, "அம்மா
பிளைட்ல போகப்‌ போறேன்‌. டக எனக்கு எதுக்கு அம்மா. நான்தான்‌ அங்கே வீட்டில்‌
ஒன்னும்‌ செஞ்சு சாப்பிடுறது இல்ல. தேவை இல்லாம எதுக்கு இதை எல்லாம்‌ சுமந்துட்டு.
போம்மா... நீ வேற...” என்று சிணுங்க, “சரிடா கண்ணு, இந்த பருப்பு பொடி மட்டுமாவது...”
என்று கெஞ்ச, 'சரி' என்று முகத்தை வெறுப்போடு வைத்துக்‌ கொண்டு "குடும்மா", என்று
வாங்கிக்‌ கொண்டு தனது லாப்டாப்‌ பேக்கில்‌ வைத்துக்‌ கொண்டான்‌.

"எப்படிடா போகப்‌ போற”...

"அம்மா... கால்‌ டாக்ஸி வரச்‌ சொல்லி இருக்கேன்‌. அப்பா எங்கே... "
"இப்போவாது அப்பா ஞாபகம்‌ வந்துச்சே" உள்ளே இருந்து குரல்‌...

இருவரும்‌ உள்ளே எட்டிப்‌ பார்க்க, அங்கே ஈசி சேரில்‌ இருந்து எழுந்து உட்கார்ந்து இருந்தார்‌
ராமநாதன்‌.

"ஏண்டி நீயும்‌ என்னை புருஷன்னு மதிக்கிறது இல்லை. இந்தப்‌ பயலும்‌ என்னை மதிச்சு ஒரு
விஷயம்‌ கூட சொல்றது இல்ல. என்னங்கடா... நான்‌ உங்களுக்கு சம்பாதிச்சு போடுறதுக்கு
மட்டும்‌ தானா... நான்‌ உனக்கு அப்பன்டா... ஞாபகம்‌ இருக்கட்டும்‌..." என்று உறும்‌, உள்ளே
வந்த கோமளா, “தம்பி நீ ஒண்ணும்‌ கவலைப்படாதே, அப்பாவுக்கு பஜ்ஜி சாப்பிடுற நேரம்‌
வந்திடுக்க்‌... அதனாலதான்‌ கோவமா இருக்கார்‌. நீ கிளம்பு. நான்‌ அவர்‌ வாயில்‌ பஜ்ஜியை
திணிக்கிறேன்‌..." என்று சொல்ல, ஹி ஹி என்று அசட்டுத்‌ தனமாக சிரித்துக்‌ கொண்டார்‌
ராமநாதன்‌.

"அம்மா பூஜாக்‌ குட்டியைப்‌ பார்க்காம போறேன்னு தான்‌ மனசுக்கு கொஞ்சம்‌ வருத்தமா
இருக்கு. சரி... நான்‌ அப்புறமா ஸ்கைப்‌ (6௩௮ ல பேசிக்கிறேன்‌..."

தனது லாப்டாப்‌ பேக்‌, சின்ன ஹோல்டால்‌ பேக்‌ இரண்டையும்‌ எடுத்துக்‌ கொள்ள, வாசலில்‌
கார்‌ ஹார்ன்‌ சத்தம்‌ கேட்க, “அம்மா கால்‌ டாக்ஸி வந்தாச்சு... நான்‌ கிளம்புறேன்‌. அப்பா...
பை... “சொல்ல, ராமநாதன்‌, கோமளா இருவரும்‌ வாசல்‌ வரை வந்து வழியனுப்பி வைக்க,
காரில்‌ ஏறி அமர்ந்து கொண்டான்‌ ரகுவீர்‌.

காமராஜ்‌ உள்நாட்டு விமான நிலையத்தின்‌ வாசலில்‌ இறங்கிக்‌ கொண்டு கடிகாரத்தைப்‌
பார்க்க, மணியோ நாலை நெருங்கிக்‌ கொண்டு இருந்தது.

டாக்ஸி டிரைவரிடம்‌ மீட்டர்‌ பார்த்து பணத்தை கொடுத்து விட்டூ, பில்லை வாங்கி தனது
பர்சுக்குள்‌ சொருகி விட்டு பேக்கை உருட்டிக்‌ கொண்டு நகர, ப்ளாக்‌ பெர்ரி திரும்ப
கணகணத்தது.

"கடி' ராம்‌ என்ற டிஸ்ப்ளே வர, போனை எடுத்தான்‌.

"என்ன ரகு, ஏர்போர்ட்‌ வந்தாச்சா?"
[Image: Vanilla-0-3s-261px.gif]
[+] 2 users Like jairockerszx's post
Like


Messages In This Thread
RE: மான்சி சத்யன் 29 நாவல் ZIP @ PDF. ஒரு காதல் சாம்ராஜ்யம் இனிஷியல் இல்லாதவர்கள் - by jairockerszx - 06-02-2021, 02:10 AM



Users browsing this thread: 19 Guest(s)