18-01-2021, 08:44 PM
தொடர்ச்சி......
**************
ஒரு சனிக்கிழமை மாலை நேரம், ஒரு திருமண வரவேற்பில் அமர்ந்து இருந்தான்.
மேடையில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஜினாலி ஜெயின். அருகிலேயே, மறுநாள் அவளுக்கு கணவனாகப் போகும் மார்வாடி பையன். சற்றுமுன், பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு, கிளம்பி விடலாம் என்று இருந்தவனை, முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று வலுக்கட்டாயமாக, காத்திருக்க சொல்லியிருந்தாள், ஜினாலி. மணி, மொபைலை நோண்டி கொண்டிருந்தான்.
"வெயிட் பண்ணதுக்கு தேங்க்ஸ்!!" என்ற ஜினாலியின் குரல் கேட்க, நிமிர்ந்து பார்த்தான்.
சிரித்துக்கண்டிருந்தாள், அருகிலேயே அவளது வருங்கால கணவனும். மணி, பதிலுக்கு இருவரையும் பார்த்து சிரித்தான்.
"இவர், யாருன்னு தெரியும்ல?" வருங்கால கணவனிடம் கேட்டாள், ஜினாலி. அவனும், தெரியும் என்பது போல் தலையசைத்தான்.
"சரி!! எனக்கு ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலி, மணியைப் பார்த்து, திடீர் என்று கூற ஆண்கள் இருவரும் திகைத்தனர்.
"வாட் இஸ் திஸ்?!!" ஆண்கள் இருவரும் ஒரே போல் குரல் எழுப்ப,
“வாட்?” என்று திருப்பிக்கக்கேட்டவள்,
"எனக்கு ரூட் போட!!, என் பின்னால கொஞ்சநாள் சுத்துன இல்ல?" வருங்கால கணவனின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல், மணியைப் பார்த்து சீரியஸாக கேட்டாள். மணி, ஆமோதிப்பாக தலையாட்டினான்.
"அப்ப ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலியின் சிரிப்பு கொடுத்த தைரியத்தில், அவளுக்கு ப்ரபோஸ் செய்தான், மணி. மணி புரோபோஸ் செய்ததும், தன் வருங்கால கணவனிடம் திரும்பிய ஜினாலி
"பாத்துக்க!! உனக்காக, இவன வேண்டாம்னு சொல்றேன்!! அதுக்கேத்த மாதிரி, என்ன பார்த்துக்கணும்!! பார்த்துக்குவியா?" அருகிலிருந்தவனை மிரட்டினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு எளிருகள் தெரிய சிரித்தான், மணி.
"இப்ப சரின்னு சொல்லிட்டு!!, அப்புறம் ஏதாவது ப்ராப்ளம் பண்ணுன........." மீண்டும் மிரட்டியவள், மணியிடம் திரும்பி
"நான் எப்ப வந்தாலும் என்ன அக்சப்ட் பண்ணிப்ப!! இல்ல?" என்று கேட்க, சிரித்தவாறே அதற்கும் ஆமோதிப்பாக தலையாட்டினான், மணி. இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் மைதாமாவிடம் சிக்கி சீர் அழியப்போக்கும் அந்த அப்பாவி. சிரித்தவள், மணியிடம் தேங்க்ஸ் என்றாள். இருவரிடமும் கை கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான், மணி. காரில் ஏறியதுமே, அவனது முகம் இருண்டது. அவன் முகத்தைப் பார்த்தவர்கள், சற்றுமுன் எளிருகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அரை மணி நேரம் கழித்து, ரெசிடென்சி ஹோட்டலின், அறை எண் 303ல், சோபாவில் அமர்ந்தவாறு, அருகில் இருந்த டேபிளில், அவனும், மதுவும், மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மனம் விட்டுச் சிரித்தால், நொடியே அவனது குற்ற உணர்ச்சியும், அவன் மனதின் ஏக்கமும், அவன் உயிரைப் பிடித்து குலுக்க ஆரம்பித்துவிடும். மது இல்லாமல் தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை, அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அல்லது அவள் இல்லாத மகிழ்ச்சி உலகத்துக்காக அவன் போடும் வேடமா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
*************
மணியின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள்.
குலதெய்வம் கோவிலிலும், அவனது பெரியப்பாவின் சமாதியிலும், வணங்கிவிட்டு, பழனி வீட்டில் இருந்தனர், அனைவரும். எப்பொழுதும் தனது பெரியப்பாவின் சமாதிக்குச் சென்றால், தனியாக இருந்து விட்டுவரும், மணிக்கு, இன்று அப்படி இருக்க தோன்றவில்லை. மொபைலை எடுத்து, நோண்டிக்கொண்டிருந்தான். ஒரு மனிதனின், முழு வாழ்க்கைக்குமான அனுபவங்களை, கடந்த ஏழு வருடங்களில் அவனுக்கு கிடைத்து விட்டதைப் போல தோன்றியது, அவனுக்கு. முன்புபோல் மனம் அலைபாய வில்லை, ஒருவாராக, வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து இருந்தான். இருந்தும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு, மதுவிடம் இருந்து ஒரு வாழ்த்து செய்தியோ? ஒரு அழைப்போ? வந்து விடாதா என்று. அப்படி வந்தால், அதன் பின் அவர்களுக்குள்ளான உறவு, எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம், அவன் யோசிக்க விரும்பவில்லை. தானே மதுவுக்கு அழைத்து பேசலாமா? என்றுகூட, ஒரு நொடி யோசித்து, பின் அந்த யோசனையை அரைநொடியில், நிராகரித்தான். அலைபேசியின் தொடுதிரையில், கழுத்தில் மாலையுடன், அவனும், மதுவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவனின் உதடுகளில், இதுபோதும் வாழ்க்கைக்கு என்பது போல், ஒரு திருப்தியான புன்னகை. கண்களை சில நொடிகள் மூடிமூச்சுவிட்டவன், மீண்டும் ஒருமுறை, அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தொடுதிரையை அனைத்து வைத்தான்.
அம்மா, தாத்தா, ஆச்சீ என்று மூவருடன், இரவு உணவை உண்டு முடித்தவன், சிறிது நேரம் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து, அவனது அறைக்கு வந்தான். கட்டிலில் படுத்திருந்தவன் மனது முழுவதும், அவனது பதினெட்டாவது பிறந்தநாளின் நினைவுகள். அது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்த அதே அளவு ஏக்கத்தையும் கொடுத்தது, எதேனும் ஒரு அதிசியம் நிகழ்ந்து, காலையில் விழித்து எழும் பொழுது, மதுவை ஆனத்துக் கொண்டு, பதினெட்டு வயது மணியாக, ரெஸிடெனஸியின், அறை என் 303 ல் விழிக்க மாட்டோமா என்று அவன் மனம் எங்கித்தவித்து. சுத்தமாக தூக்கம் வரவில்லை, இன்று தூக்க மாத்திரை உதவியுடன் தூங்குவதில்லை என்று, உறுதியாக இருந்தான். கதவு திறக்கும், சத்தம் கேட்டு திரும்ப, சுமா அவனைப் பார்த்து சிரித்தவாறு வந்தாள்.
"இன்னும் தூங்கலையா மா?" மகனை, அம்மா என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள். சிரித்தான்.
சுமாவின் மனதில், மகனின் கல்யாணத்தைக் குறித்து பேசவேண்டும் என்ற எண்ணம். அவன் கால்மாட்டில் உட்கார, தனது காலை நகர்த்தி, அவளுக்கு இடம் கொடுத்தான்.
"அதுக்குள்ள உனக்கு 25 வயசு ஆயிடுச்சு!!" என்று சொன்னவள், மகனைப் பார்த்து சிரித்தாள்.
தனது தாய் தன்னிடம் எதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன், எழுந்து அமர்ந்தான். ஏற்கனவே மகனின் கல்யாணத்தைக் குறித்து, தனது தந்தையிடம் பேசி இருந்தாள், அதற்கு அவர், இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று சொல்ல, அதில் உடன்பாடு இல்லை சுமாவுக்கு. இனியாவது, ஒரு தாயாக முடிந்த மட்டிலும் தன் மகனுக்கு செய்யவேண்டியதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற ஏக்கம் ஆவல் மனதில். ஆனால், அவளைக் காட்டிலும், மணியை சரியாக புரிந்து வைத்திருந்தார், அவனது தாத்தா. இருவரின் மனதிலும் ஏக்கம். சுமாவுக்கு மகனின் மானவாழ்வு குறித்த ஏக்கம் என்றால், அவனுக்கோ, அவனது பதினெட்டாவது பிறந்த நாளின் நினைவுகள் ஒருபுறம் என்றால், சுமா அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்தது அவனது மனதில், இதே போன்றதொரு இரவில் தூக்கத்தில் தவறிப்போன அவனது பெரிய ஆச்சீயின் நினைவுகள். மதுவும், அவனது பெரிய அச்சீயும் அவனது வாழ்வில் ஏற்படுத்திய வெற்றிடம், அந்த வெற்றிடம் கொடுத்திருந்த ஏக்கம். அந்த ஏக்கம் அன்னையின் மடியை வேண்டியது. தன் தாயின் மடியில் படுக்க வேண்டும் என்ற ஏக்கம், கண்டிப்பாக மறுக்க மாட்டாள் என்று அவன் உணர்ந்து இருந்தாலும், ஏனோ தயங்கினான். பின் என்ன நினைத்தானோ, சுமாவின் மடியில், அவளுக்கு முதுகு காட்டி, தலை வைத்துப் படுத்தான். கடந்த சில மாதங்களாக ஒருவருக்கொருவர் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாலும், தாய்க்கும், பிள்ளைக்குமான, முதல் நெருக்கம், இது, நெக்குருகிப் போனால் சுமா. அவள் பேசவேண்டும் என்று நினைத்தது எல்லாம், மொத்தமாக மறந்து போயிருந்தது. அனைத்தையும் மறந்தவள், மகனை தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.
***************
இன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன். நாக்பூரி ஒரு நட்சத்திர விடுதியில் அமர்ந்து இருந்தான், மணி.
"சார்!! எல்லாரும் வெயிட் பண்றாங்க!!" என்று அவனது உதவியாளர் சொல்ல, எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.
அன்று காலை, நிறுவனத்தின் சார்பில், இரண்டாவது சோலார் பவர் பிளான்ட்க்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்து முடிந்திருந்தது. மகாராஷ்டிராவின், வடகிழக்குப் பகுதி விதர்பா. தனி மாநிலம் கோரிக்கையின் பொருட்டு, அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பது வழக்கம். அடிக்கல் நாட்டு விழாவின் போது, அப்படி செயல்பட்ட அமைப்பு ஒன்று, பெரிய அளவில் போராட்டத்தை, அடிக்கல் நாட்டுவிழா நடந்த இடத்தில், நடத்தியது. அது சம்பந்தமாக பேசுவதற்கு தான், அந்த விழா நடத்தும் பொறுப்பேற்று நடத்திய ஆட்களை, கூட சொல்லியிருந்தான். அவன் அறைக்குள் நுழைந்ததுமே அதுவரை இருந்த சலசலப்புகள் அடங்கியது. காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவுடன், இன்று நடந்த விழாவிற்கு பொறுப்பானவர்களை, ஒருமுறை சுற்றி நோக்கினான்.
"சார்!! ஒரு வாரத்துக்கு முன்னாடியே, அவங்ககிட்ட பேசி, காம்பரமைஸ் பண்ணியாச்சு!!கைநீட்டி காசும் வாங்கிட்டாங்க!!"
"மூணு மாசத்துல ஆசெம்ப்லி எலக்சன், மூணு டிஸ்ட்ரிக்ட்ல, எப்படியும் ஒரு பத்து தொகுதிகளில், அந்த அமைப்பு, ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு!! அவங்கள கொஞ்சம் கவனமாததான் ஹாண்டில் பண்ணனும்!!"
"கூப்பிட்டு மறுபடியும் பேசலாம்!!"
"இந்த எலக்சன்ல, எதிர்க்கட்சி ஜெய்க்கிறதுக்குத் தான் அதிகமா வாய்ப்பு இருக்கு!!, ஆனால் இந்த தடவை கலெக்ஷன் பண்டஸ், எதிர்க்கட்சிக்கு அதிகமாக கொடுத்து!!, ஜெயிச்சதும் இவங்களா ஆஃப் பண்ணிரலாம்!!" என்று ஆளாளுக்கு, அவர்களுக்கு தோன்றிய யோசனைகளைச் சொன்னார்கள்.
"ஒருவேளை இந்த அமைப்பு ஒரு பத்து இடத்துல ஜெயிச்சா?" பொதுவாக கேட்டான் மணி.
"ஜெய்ச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு, காசு கொடுக்கலாம்!!" என்று ஒருவர் சொல்ல அவரை பார்த்து சிரித்தான்.
"எதிர்க்கட்சிக்கு ஃபண்ட் அதிகமா கொடுங்க, அந்த அமைப்பு ஒரு இடத்தில் கூட ஜெயிக்க கூடாது!!" என்றான் மணி.
"ஒருவேளை அதையும் மீறி அவங்க ஜெயிச்சா? ரொம்ப பிராப்ளம் பண்ணுவாங்க!!" தனது கருத்தை தெரிவித்தார் ஒருவர்.
"அப்ப அவங்க ஜெயிக்காம இருக்குறதுக்கு, என்னலாம் பண்ணுனுமோ, அத்தனையும் பண்ணுங்க!! காசு வாங்கிட்டு நாணயம் இல்லாம செயல் படுறவாங்க, கொள்கைனு வந்தாலும் நாணயம் இல்லாமத்தான் செயல் படுவாங்க!!" என்றான்.
தொழில் விஷயங்களில் அவனுக்குள் இருந்த நெருப்பின் கணல், சிறிதும் குறையாமல் இருந்தது.
*************
இரண்டு மாதம் கழித்து, நேத்ராவின் வீட்டில். நீண்ட நாட்களாக, இருவரும் மணியை, அவர்களது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்க, ஒருவழியாக இன்றுதான் முதன்முதலாக அவர்களது வீட்டிற்கு வந்திருந்தான். ஞாயிறு மதிய உணவை முடித்துக் கொண்டு, மூவரும் கதையை அடித்துக் கொண்டிருந்தனர்.
"டீ குடிக்கிறியா?" என்று கேட்ட,
நேத்ராவைப் பார்த்து, குடிக்கிறேன் என்று தலையசைத்தான், மணி. அவள் எழுந்து சென்றதும், மணி பார்த்து சிரித்த பிரதீப். பின், மணியை கூர்மையாக பார்த்தவாறு,
"நான்!!, ஒன்னு கேட்டா!! தப்பா, எடுத்துக்க மாட்டியே?" கேள்வியுடன் நிறுத்தியவன், பின்
"மன்னிக்க முடியாத தப்புனு!!, ஒன்னு இருக்கா டா?" சீரியஸாகவே கேட்டான் பிரதீப். அதற்கும் சிரித்தான், மணி.
"இல்ல!!, எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும்!! உன்ன அவளோ? இல்ல, அவள நீயோ? மன்னிக்க முடியாத தப்புனு ஒன்னு இருக்கா? என்ன?" மீண்டும் கேட்டான் பிரதீப். இந்த முறைகொஞ்சம் சத்தமாகவே சிரித்தான், மணி. அவனின் சிரிப்பின் போலித்தனத்தை உணர்ந்த பிரதீப்பும் விரத்தியாக சிரித்தான்.
"பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணிட்டு!! இப்ப திருந்திட்டேன்னு சொல்லிட்டா!!, அந்த அயோக்கியன், யோக்கியமாககிட முடியுமா?" என்று மணியின் சிரிப்பில் இருந்த வலி, பிரதீப்பை அதற்கு மேலும், அதைப்பற்றி பேச விடவில்லை.
“யாரு யோக்கியன்? யாரு அயோக்கியன்?” என்று கேட்டவாறு வந்த நெத்ராவிடம், ஜினாலியின் திருமானதிற்கு சென்ற கதையைச் சொல்ல, அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்.
*********
"எப்படி இருக்கா?" வீட்டை விட்டு வெளியேறி, அவனது காரின் அருகில் சென்றதும், திரும்பி வழியனுப்ப, வந்த நேத்ராவைப் பார்த்து கேட்டான்.
"நல்லா இருக்கா, யூஸ்ல இருக்கா!!"
"பேசினியா?" மதுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்டான்.
"பேஸ்புக்கில் போட்டோ பார்த்தேன்!! நானும் அவகிட்ட பேசி வருஷம் ஆச்சு!! கடைசியா அவ கல்யாணத் தன்னைக்கு பேசினாது தான். அவளும், அதுக்கப்புறம் பேசல, நான் ஒரு கோவத்துல விட்டுட்டேன்!!"
"முடிஞ்சா, எனக்காக ஒரு தடவை பேசு!!" என்றவனிடம்
"சரி நான் அவகிட்ட பேசுறேன்!! மாயா யாரு? அன்னைக்கு, நான், உன் ஆபீஸ் வந்தப்ப!!, கதவை திறந்திட்டு வந்தாளே, ஒரு பொண்ணு!!, அவதான் மாயா வா? என்று கேட்ட நேத்ராவிடம் இல்லை என்று தலையசைத்தவன்,
"அவ பேரு ஸ்ரீ!!" சிரித்தான்
"யார் அந்த பொண்ணு?" கண்களை குறுக்கி மணியைப் பார்த்து கேட்டாள், நேத்ரா.
"அது ஒரு பெரிய கதை!!, இன்னொரு நாள் சொல்றேன்!!' என்று சிரித்தான்.
"அப்ப மாயா?" குழப்பமாக கேட்டாள்.
"நேரம் வரும்போது கண்டிப்பா அவள காட்டுறேன்!! சிரித்தவன், அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றான்.
****************
நீகழ் காலம்.
மணியின் பெயர் அழைக்கப்பட, கலந்தாய்வு மேடையில் எறியதும், பலத்த கைதட்டல், சரித்தவன், ஏற்கனவே அமர்ந்திருந்த இருவரிடம் கைகுலுக்கிவிட்டு, தனக்கான இருக்கையில் அமர்ந்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து, காரில் பயணித்துக் கொண்டிருந்தான், பதட்டமாக இருந்தான், மணி. காதுக்கு அழைபேசியைக் கொடுத்திருந்தவன், அந்த அழைப்பு எடுக்கப்பட்டதும்,
“மது யுஸ்ல இருக்கானு சொன்ன?”
“அதுக்கு இப்போ என்ன?”
"அவ இங்க டெல்லில இருக்கா!! இப்போ!!” என்றவன் எதிர்முனையில் பேசியவரின் பதிலை எதிர்பார்க்காமல், அழைப்பை தூண்டித்தான்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சீகிரெட்டை எடுத்துப் பத்த வைத்தவன், புகையை உள்ளிலுத்தான், மூக்கின் வழியே, உள்ளிலுத்த புகையை வெளியேற்றினான்.
மது, மீண்டும் அவன் வாழ்வில் வந்தாள்.
*************
**************
ஒரு சனிக்கிழமை மாலை நேரம், ஒரு திருமண வரவேற்பில் அமர்ந்து இருந்தான்.
மேடையில் சந்தோஷமாக சிரித்துக் கொண்டு, புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார்கள் ஜினாலி ஜெயின். அருகிலேயே, மறுநாள் அவளுக்கு கணவனாகப் போகும் மார்வாடி பையன். சற்றுமுன், பரிசுப் பொருளைக் கொடுத்து விட்டு, கிளம்பி விடலாம் என்று இருந்தவனை, முக்கியமான ஒரு விஷயம் பேச வேண்டும் என்று வலுக்கட்டாயமாக, காத்திருக்க சொல்லியிருந்தாள், ஜினாலி. மணி, மொபைலை நோண்டி கொண்டிருந்தான்.
"வெயிட் பண்ணதுக்கு தேங்க்ஸ்!!" என்ற ஜினாலியின் குரல் கேட்க, நிமிர்ந்து பார்த்தான்.
சிரித்துக்கண்டிருந்தாள், அருகிலேயே அவளது வருங்கால கணவனும். மணி, பதிலுக்கு இருவரையும் பார்த்து சிரித்தான்.
"இவர், யாருன்னு தெரியும்ல?" வருங்கால கணவனிடம் கேட்டாள், ஜினாலி. அவனும், தெரியும் என்பது போல் தலையசைத்தான்.
"சரி!! எனக்கு ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலி, மணியைப் பார்த்து, திடீர் என்று கூற ஆண்கள் இருவரும் திகைத்தனர்.
"வாட் இஸ் திஸ்?!!" ஆண்கள் இருவரும் ஒரே போல் குரல் எழுப்ப,
“வாட்?” என்று திருப்பிக்கக்கேட்டவள்,
"எனக்கு ரூட் போட!!, என் பின்னால கொஞ்சநாள் சுத்துன இல்ல?" வருங்கால கணவனின் அதிர்ச்சியை கண்டுகொள்ளாமல், மணியைப் பார்த்து சீரியஸாக கேட்டாள். மணி, ஆமோதிப்பாக தலையாட்டினான்.
"அப்ப ப்ரொபோஸ் பண்ணு!!" ஜினாலியின் சிரிப்பு கொடுத்த தைரியத்தில், அவளுக்கு ப்ரபோஸ் செய்தான், மணி. மணி புரோபோஸ் செய்ததும், தன் வருங்கால கணவனிடம் திரும்பிய ஜினாலி
"பாத்துக்க!! உனக்காக, இவன வேண்டாம்னு சொல்றேன்!! அதுக்கேத்த மாதிரி, என்ன பார்த்துக்கணும்!! பார்த்துக்குவியா?" அருகிலிருந்தவனை மிரட்டினாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு எளிருகள் தெரிய சிரித்தான், மணி.
"இப்ப சரின்னு சொல்லிட்டு!!, அப்புறம் ஏதாவது ப்ராப்ளம் பண்ணுன........." மீண்டும் மிரட்டியவள், மணியிடம் திரும்பி
"நான் எப்ப வந்தாலும் என்ன அக்சப்ட் பண்ணிப்ப!! இல்ல?" என்று கேட்க, சிரித்தவாறே அதற்கும் ஆமோதிப்பாக தலையாட்டினான், மணி. இருவரையும் மாறி மாறிப் பார்த்தான் மைதாமாவிடம் சிக்கி சீர் அழியப்போக்கும் அந்த அப்பாவி. சிரித்தவள், மணியிடம் தேங்க்ஸ் என்றாள். இருவரிடமும் கை கொடுத்துவிட்டு, அங்கிருந்து கிளம்பினான், மணி. காரில் ஏறியதுமே, அவனது முகம் இருண்டது. அவன் முகத்தைப் பார்த்தவர்கள், சற்றுமுன் எளிருகள் தெரிய சிரித்துக் கொண்டிருந்தான் என்று சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள்.
அரை மணி நேரம் கழித்து, ரெசிடென்சி ஹோட்டலின், அறை எண் 303ல், சோபாவில் அமர்ந்தவாறு, அருகில் இருந்த டேபிளில், அவனும், மதுவும், மாலையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெறித்துக் கொண்டிருந்தான். மனம் விட்டுச் சிரித்தால், நொடியே அவனது குற்ற உணர்ச்சியும், அவன் மனதின் ஏக்கமும், அவன் உயிரைப் பிடித்து குலுக்க ஆரம்பித்துவிடும். மது இல்லாமல் தன்னால் மகிழ்ச்சியாக இருக்க முடியும் என்பதை, அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லையா? அல்லது அவள் இல்லாத மகிழ்ச்சி உலகத்துக்காக அவன் போடும் வேடமா? என்பதை அவன் மட்டுமே அறிவான்.
*************
மணியின் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள்.
குலதெய்வம் கோவிலிலும், அவனது பெரியப்பாவின் சமாதியிலும், வணங்கிவிட்டு, பழனி வீட்டில் இருந்தனர், அனைவரும். எப்பொழுதும் தனது பெரியப்பாவின் சமாதிக்குச் சென்றால், தனியாக இருந்து விட்டுவரும், மணிக்கு, இன்று அப்படி இருக்க தோன்றவில்லை. மொபைலை எடுத்து, நோண்டிக்கொண்டிருந்தான். ஒரு மனிதனின், முழு வாழ்க்கைக்குமான அனுபவங்களை, கடந்த ஏழு வருடங்களில் அவனுக்கு கிடைத்து விட்டதைப் போல தோன்றியது, அவனுக்கு. முன்புபோல் மனம் அலைபாய வில்லை, ஒருவாராக, வாழ்க்கையின் நிதர்சனத்தை உணர்ந்து இருந்தான். இருந்தும் ஒரு சின்ன எதிர்பார்ப்பு, மதுவிடம் இருந்து ஒரு வாழ்த்து செய்தியோ? ஒரு அழைப்போ? வந்து விடாதா என்று. அப்படி வந்தால், அதன் பின் அவர்களுக்குள்ளான உறவு, எப்படி இருக்கும் என்பதைப் பற்றியெல்லாம், அவன் யோசிக்க விரும்பவில்லை. தானே மதுவுக்கு அழைத்து பேசலாமா? என்றுகூட, ஒரு நொடி யோசித்து, பின் அந்த யோசனையை அரைநொடியில், நிராகரித்தான். அலைபேசியின் தொடுதிரையில், கழுத்தில் மாலையுடன், அவனும், மதுவும் இருக்கும் புகைப்படத்தை பார்த்தவனின் உதடுகளில், இதுபோதும் வாழ்க்கைக்கு என்பது போல், ஒரு திருப்தியான புன்னகை. கண்களை சில நொடிகள் மூடிமூச்சுவிட்டவன், மீண்டும் ஒருமுறை, அந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு, தொடுதிரையை அனைத்து வைத்தான்.
அம்மா, தாத்தா, ஆச்சீ என்று மூவருடன், இரவு உணவை உண்டு முடித்தவன், சிறிது நேரம் அவர்கள் பேசியதைக் கேட்டுக் கொண்டிருந்துவிட்டு, எழுந்து, அவனது அறைக்கு வந்தான். கட்டிலில் படுத்திருந்தவன் மனது முழுவதும், அவனது பதினெட்டாவது பிறந்தநாளின் நினைவுகள். அது அவனுக்கு மகிழ்ச்சியை கொடுத்த அதே அளவு ஏக்கத்தையும் கொடுத்தது, எதேனும் ஒரு அதிசியம் நிகழ்ந்து, காலையில் விழித்து எழும் பொழுது, மதுவை ஆனத்துக் கொண்டு, பதினெட்டு வயது மணியாக, ரெஸிடெனஸியின், அறை என் 303 ல் விழிக்க மாட்டோமா என்று அவன் மனம் எங்கித்தவித்து. சுத்தமாக தூக்கம் வரவில்லை, இன்று தூக்க மாத்திரை உதவியுடன் தூங்குவதில்லை என்று, உறுதியாக இருந்தான். கதவு திறக்கும், சத்தம் கேட்டு திரும்ப, சுமா அவனைப் பார்த்து சிரித்தவாறு வந்தாள்.
"இன்னும் தூங்கலையா மா?" மகனை, அம்மா என்று அழைக்கத் தொடங்கியிருந்தாள். சிரித்தான்.
சுமாவின் மனதில், மகனின் கல்யாணத்தைக் குறித்து பேசவேண்டும் என்ற எண்ணம். அவன் கால்மாட்டில் உட்கார, தனது காலை நகர்த்தி, அவளுக்கு இடம் கொடுத்தான்.
"அதுக்குள்ள உனக்கு 25 வயசு ஆயிடுச்சு!!" என்று சொன்னவள், மகனைப் பார்த்து சிரித்தாள்.
தனது தாய் தன்னிடம் எதோ பேச விரும்புகிறாள் என்று உணர்ந்தவன், எழுந்து அமர்ந்தான். ஏற்கனவே மகனின் கல்யாணத்தைக் குறித்து, தனது தந்தையிடம் பேசி இருந்தாள், அதற்கு அவர், இன்னும் இரண்டு வருடம் போகட்டும் என்று சொல்ல, அதில் உடன்பாடு இல்லை சுமாவுக்கு. இனியாவது, ஒரு தாயாக முடிந்த மட்டிலும் தன் மகனுக்கு செய்யவேண்டியதை சரியாக செய்துவிட வேண்டும் என்ற ஏக்கம் ஆவல் மனதில். ஆனால், அவளைக் காட்டிலும், மணியை சரியாக புரிந்து வைத்திருந்தார், அவனது தாத்தா. இருவரின் மனதிலும் ஏக்கம். சுமாவுக்கு மகனின் மானவாழ்வு குறித்த ஏக்கம் என்றால், அவனுக்கோ, அவனது பதினெட்டாவது பிறந்த நாளின் நினைவுகள் ஒருபுறம் என்றால், சுமா அந்த அறைக்குள் நுழைந்ததில் இருந்தது அவனது மனதில், இதே போன்றதொரு இரவில் தூக்கத்தில் தவறிப்போன அவனது பெரிய ஆச்சீயின் நினைவுகள். மதுவும், அவனது பெரிய அச்சீயும் அவனது வாழ்வில் ஏற்படுத்திய வெற்றிடம், அந்த வெற்றிடம் கொடுத்திருந்த ஏக்கம். அந்த ஏக்கம் அன்னையின் மடியை வேண்டியது. தன் தாயின் மடியில் படுக்க வேண்டும் என்ற ஏக்கம், கண்டிப்பாக மறுக்க மாட்டாள் என்று அவன் உணர்ந்து இருந்தாலும், ஏனோ தயங்கினான். பின் என்ன நினைத்தானோ, சுமாவின் மடியில், அவளுக்கு முதுகு காட்டி, தலை வைத்துப் படுத்தான். கடந்த சில மாதங்களாக ஒருவருக்கொருவர் சகஜமாக பேச ஆரம்பித்திருந்தாலும், தாய்க்கும், பிள்ளைக்குமான, முதல் நெருக்கம், இது, நெக்குருகிப் போனால் சுமா. அவள் பேசவேண்டும் என்று நினைத்தது எல்லாம், மொத்தமாக மறந்து போயிருந்தது. அனைத்தையும் மறந்தவள், மகனை தட்டிக்கொடுக்க ஆரம்பித்தாள்.
***************
இன்றிலிருந்து ஐந்து மாதங்களுக்கு முன். நாக்பூரி ஒரு நட்சத்திர விடுதியில் அமர்ந்து இருந்தான், மணி.
"சார்!! எல்லாரும் வெயிட் பண்றாங்க!!" என்று அவனது உதவியாளர் சொல்ல, எழுந்து அறையை விட்டு வெளியேறினான்.
அன்று காலை, நிறுவனத்தின் சார்பில், இரண்டாவது சோலார் பவர் பிளான்ட்க்கான அடிக்கல் நாட்டுவிழா நடந்து முடிந்திருந்தது. மகாராஷ்டிராவின், வடகிழக்குப் பகுதி விதர்பா. தனி மாநிலம் கோரிக்கையின் பொருட்டு, அவ்வப்போது போராட்டங்கள் வெடிப்பது வழக்கம். அடிக்கல் நாட்டு விழாவின் போது, அப்படி செயல்பட்ட அமைப்பு ஒன்று, பெரிய அளவில் போராட்டத்தை, அடிக்கல் நாட்டுவிழா நடந்த இடத்தில், நடத்தியது. அது சம்பந்தமாக பேசுவதற்கு தான், அந்த விழா நடத்தும் பொறுப்பேற்று நடத்திய ஆட்களை, கூட சொல்லியிருந்தான். அவன் அறைக்குள் நுழைந்ததுமே அதுவரை இருந்த சலசலப்புகள் அடங்கியது. காலியாக இருந்த இருக்கையில் அமர்ந்தவுடன், இன்று நடந்த விழாவிற்கு பொறுப்பானவர்களை, ஒருமுறை சுற்றி நோக்கினான்.
"சார்!! ஒரு வாரத்துக்கு முன்னாடியே, அவங்ககிட்ட பேசி, காம்பரமைஸ் பண்ணியாச்சு!!கைநீட்டி காசும் வாங்கிட்டாங்க!!"
"மூணு மாசத்துல ஆசெம்ப்லி எலக்சன், மூணு டிஸ்ட்ரிக்ட்ல, எப்படியும் ஒரு பத்து தொகுதிகளில், அந்த அமைப்பு, ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்கு!! அவங்கள கொஞ்சம் கவனமாததான் ஹாண்டில் பண்ணனும்!!"
"கூப்பிட்டு மறுபடியும் பேசலாம்!!"
"இந்த எலக்சன்ல, எதிர்க்கட்சி ஜெய்க்கிறதுக்குத் தான் அதிகமா வாய்ப்பு இருக்கு!!, ஆனால் இந்த தடவை கலெக்ஷன் பண்டஸ், எதிர்க்கட்சிக்கு அதிகமாக கொடுத்து!!, ஜெயிச்சதும் இவங்களா ஆஃப் பண்ணிரலாம்!!" என்று ஆளாளுக்கு, அவர்களுக்கு தோன்றிய யோசனைகளைச் சொன்னார்கள்.
"ஒருவேளை இந்த அமைப்பு ஒரு பத்து இடத்துல ஜெயிச்சா?" பொதுவாக கேட்டான் மணி.
"ஜெய்ச்சதுக்கு அப்புறம் அவங்களுக்கு, காசு கொடுக்கலாம்!!" என்று ஒருவர் சொல்ல அவரை பார்த்து சிரித்தான்.
"எதிர்க்கட்சிக்கு ஃபண்ட் அதிகமா கொடுங்க, அந்த அமைப்பு ஒரு இடத்தில் கூட ஜெயிக்க கூடாது!!" என்றான் மணி.
"ஒருவேளை அதையும் மீறி அவங்க ஜெயிச்சா? ரொம்ப பிராப்ளம் பண்ணுவாங்க!!" தனது கருத்தை தெரிவித்தார் ஒருவர்.
"அப்ப அவங்க ஜெயிக்காம இருக்குறதுக்கு, என்னலாம் பண்ணுனுமோ, அத்தனையும் பண்ணுங்க!! காசு வாங்கிட்டு நாணயம் இல்லாம செயல் படுறவாங்க, கொள்கைனு வந்தாலும் நாணயம் இல்லாமத்தான் செயல் படுவாங்க!!" என்றான்.
தொழில் விஷயங்களில் அவனுக்குள் இருந்த நெருப்பின் கணல், சிறிதும் குறையாமல் இருந்தது.
*************
இரண்டு மாதம் கழித்து, நேத்ராவின் வீட்டில். நீண்ட நாட்களாக, இருவரும் மணியை, அவர்களது வீட்டுக்கு வரச் சொல்லி அழைத்துக் கொண்டிருக்க, ஒருவழியாக இன்றுதான் முதன்முதலாக அவர்களது வீட்டிற்கு வந்திருந்தான். ஞாயிறு மதிய உணவை முடித்துக் கொண்டு, மூவரும் கதையை அடித்துக் கொண்டிருந்தனர்.
"டீ குடிக்கிறியா?" என்று கேட்ட,
நேத்ராவைப் பார்த்து, குடிக்கிறேன் என்று தலையசைத்தான், மணி. அவள் எழுந்து சென்றதும், மணி பார்த்து சிரித்த பிரதீப். பின், மணியை கூர்மையாக பார்த்தவாறு,
"நான்!!, ஒன்னு கேட்டா!! தப்பா, எடுத்துக்க மாட்டியே?" கேள்வியுடன் நிறுத்தியவன், பின்
"மன்னிக்க முடியாத தப்புனு!!, ஒன்னு இருக்கா டா?" சீரியஸாகவே கேட்டான் பிரதீப். அதற்கும் சிரித்தான், மணி.
"இல்ல!!, எவ்வளவு பெரிய தப்பா இருந்தாலும்!! உன்ன அவளோ? இல்ல, அவள நீயோ? மன்னிக்க முடியாத தப்புனு ஒன்னு இருக்கா? என்ன?" மீண்டும் கேட்டான் பிரதீப். இந்த முறைகொஞ்சம் சத்தமாகவே சிரித்தான், மணி. அவனின் சிரிப்பின் போலித்தனத்தை உணர்ந்த பிரதீப்பும் விரத்தியாக சிரித்தான்.
"பண்ற அயோக்கியத்தனம் எல்லாம் பண்ணிட்டு!! இப்ப திருந்திட்டேன்னு சொல்லிட்டா!!, அந்த அயோக்கியன், யோக்கியமாககிட முடியுமா?" என்று மணியின் சிரிப்பில் இருந்த வலி, பிரதீப்பை அதற்கு மேலும், அதைப்பற்றி பேச விடவில்லை.
“யாரு யோக்கியன்? யாரு அயோக்கியன்?” என்று கேட்டவாறு வந்த நெத்ராவிடம், ஜினாலியின் திருமானதிற்கு சென்ற கதையைச் சொல்ல, அவளும் விழுந்து விழுந்து சிரித்தாள்.
*********
"எப்படி இருக்கா?" வீட்டை விட்டு வெளியேறி, அவனது காரின் அருகில் சென்றதும், திரும்பி வழியனுப்ப, வந்த நேத்ராவைப் பார்த்து கேட்டான்.
"நல்லா இருக்கா, யூஸ்ல இருக்கா!!"
"பேசினியா?" மதுவைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலில் கேட்டான்.
"பேஸ்புக்கில் போட்டோ பார்த்தேன்!! நானும் அவகிட்ட பேசி வருஷம் ஆச்சு!! கடைசியா அவ கல்யாணத் தன்னைக்கு பேசினாது தான். அவளும், அதுக்கப்புறம் பேசல, நான் ஒரு கோவத்துல விட்டுட்டேன்!!"
"முடிஞ்சா, எனக்காக ஒரு தடவை பேசு!!" என்றவனிடம்
"சரி நான் அவகிட்ட பேசுறேன்!! மாயா யாரு? அன்னைக்கு, நான், உன் ஆபீஸ் வந்தப்ப!!, கதவை திறந்திட்டு வந்தாளே, ஒரு பொண்ணு!!, அவதான் மாயா வா? என்று கேட்ட நேத்ராவிடம் இல்லை என்று தலையசைத்தவன்,
"அவ பேரு ஸ்ரீ!!" சிரித்தான்
"யார் அந்த பொண்ணு?" கண்களை குறுக்கி மணியைப் பார்த்து கேட்டாள், நேத்ரா.
"அது ஒரு பெரிய கதை!!, இன்னொரு நாள் சொல்றேன்!!' என்று சிரித்தான்.
"அப்ப மாயா?" குழப்பமாக கேட்டாள்.
"நேரம் வரும்போது கண்டிப்பா அவள காட்டுறேன்!! சிரித்தவன், அவளிடமிருந்து விடை பெற்றுச் சென்றான்.
****************
நீகழ் காலம்.
மணியின் பெயர் அழைக்கப்பட, கலந்தாய்வு மேடையில் எறியதும், பலத்த கைதட்டல், சரித்தவன், ஏற்கனவே அமர்ந்திருந்த இருவரிடம் கைகுலுக்கிவிட்டு, தனக்கான இருக்கையில் அமர்ந்தான்.
இரண்டு மணி நேரம் கழித்து, காரில் பயணித்துக் கொண்டிருந்தான், பதட்டமாக இருந்தான், மணி. காதுக்கு அழைபேசியைக் கொடுத்திருந்தவன், அந்த அழைப்பு எடுக்கப்பட்டதும்,
“மது யுஸ்ல இருக்கானு சொன்ன?”
“அதுக்கு இப்போ என்ன?”
"அவ இங்க டெல்லில இருக்கா!! இப்போ!!” என்றவன் எதிர்முனையில் பேசியவரின் பதிலை எதிர்பார்க்காமல், அழைப்பை தூண்டித்தான்.
ஐந்து வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் சீகிரெட்டை எடுத்துப் பத்த வைத்தவன், புகையை உள்ளிலுத்தான், மூக்கின் வழியே, உள்ளிலுத்த புகையை வெளியேற்றினான்.
மது, மீண்டும் அவன் வாழ்வில் வந்தாள்.
*************