03-01-2021, 08:30 PM
(This post was last modified: 03-01-2021, 09:06 PM by Doyencamphor. Edited 1 time in total. Edited 1 time in total.)
தொடர்ச்சி......
மறுநாள் காலை,
"என்னோட பேக்!!" என்று பதறிக் கொண்டிருந்த சிவகாமியைத்தான், உள்ளே நுழைந்ததும் பார்த்தால், மது.
"என்கிட்ட தான், இருக்கு!!" என்ற மதுவின் சொற்களில் நிம்மதியடைந்தவள், தன் மகளை இரண்டு நொடிதான் பார்த்திருப்பாள், தலையை குனிந்து கொண்டாள், சிவகாமி.
அதிகாலையில், தனது அபார்ட்மெண்டுக்கு சென்ற மதுவிடம், வாயில் காவலர் ஒருவர் வந்து, தற்பொழுது, சிவகாமி பதறிக்கொண்டு கேட்ட பேக்கை கொடுத்திருந்தார்.
"ஏதாவது வேணும்னா நர்ஸ் சொல்லுங்க!! என்னோட ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் வந்து பார்க்கிறேன்!!" தன் தாயை பார்க்காமல், எங்கோ பார்த்து வெறித்துக்கொண்டு சொன்ன மது,
"நீ, போய் ரெஸ்ட் எடு!!" என்று ரஞ்சித்திடம், தன் வீட்டின் சாவியை கொடுத்தாள்.
அன்று மாலை 6 மணி,
"உன்னோட பிளைட் டிக்கெட், இன்னும் நாலு மணி நேரம் இருக்கு!! என்னோட ஃப்ரெண்ட் ரஞ்சித் ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணுவான்!!" பிளைட் டிக்கெட்டை, தன் தாயிடம் நீட்டியவள், மனப்பாடம் செய்ததைப் போல கடகடவென்று ஒப்பித்தாள், மது.
எப்பவும் சொல்லாத சிவகாமி, மது கொடுத்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டாள். சிவகாமி அதை வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டாள்.
"எனக்கு தெரியும்!!" என்று குரல் தழுதழுக்க சிவகாமி பேச, எனும் மது பெண் கால்கள் நகர மறுத்தது.
"எனக்குத் தெரியும், எனக்கு மன்னிப்பே கிடையாது!!. நான் பண்ணது பெரிய பாவம்!!" சிவகாமி விசும்ப ஆரம்பித்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"என்ன மன்னிக்கவே மாட்டியா? பானு மா!!" அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தால், சிவகாமி.
"உன்ன, ஆள் ஆகணும்னு மட்டும்தான் டா!! நான் உயிர் வாழ்ந்ததே!!” அழுகையின் ஊடே சொன்னவள், ரஞ்சித் அறையில் நுழைந்ததும், கண்களை துடைத்துக் கொண்டாள்.
உள்ளே வந்த ரஞ்சித், மதுவின் காதில் ஏதோ சொன்னான். அவனிடம், அவள் "தேங்க்ஸ்" என்றதும், அவன் அங்கிருந்து நகர்ந்தான். சிவகாமியிடம் திரும்பிய மது,
"டாக்ஸி வந்துருச்சு!!" என்றவளை, கெஞ்சும் விழிகளுடன் பார்த்தவாறு இருந்தாள், சிவகாமி. ஒரு பெருமூச்சு விட்ட மது.
"உடம்ப பாத்துக்க!!, ஊருக்குப் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு!!" என்று தனது விசிட்டிங் கார்டை தன் தாயிடம் நீட்டினாள். அதை அவள் பெற்றுக்கொண்ட அடுத்தகணம், அந்த அறையைவிட்டு வெளியேறினாள், மது.
*************
இன்று இரவு,
"என்னது இது?" ரஞ்சித்தை பார்த்து கேட்டாள் மது.
"இந்த பேக் உனக்கு குடுக்குறதுக்குத்தான் கொண்டு வந்தாங்களாம்!!" என்ற ரஞ்சித், சிவகாமி, வாங்க மறுத்த பையை மதுவிடம் நீட்டினான். அதை வாங்கி மது, அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல், கபோர்டு திறந்து, அதை, அதற்குள் வைத்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள், அது சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் என்பதால், ரஞ்சித்துக்கு ஹாலிலேயே படுக்கையை தயார் செய்தவாறே,
"சரி, இப்ப சொல்லு!! நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?" சிவகாமியின் எதிர்பாராத வரவால், ரஞ்சித்திடம் பேசுவதற்கு, இப்போதுதான் நேரம் கிடைத்தது மதுவுக்கு.
"நெக்ஸ்ட் வீக், பொண்ணு பார்க்கப் போறேன்!!" ரஞ்சித், சொன்ன செய்தியும், அவனது சிரிப்பும், மதுவை, சிவகாமியின் நினைவில் இருந்து மொத்தமாக ஒரு நொடியில் மீட்டுவிட்டது. பின்னர் அது தொடர்பான பேச்சிலேயே, அடுத்த அரை மணி நேரம் செல்ல, தூங்குவதற்காக எழுந்து தன் அறைக்கு சென்றாள், மது.
"மதி!!" மது, கதவை அடைக்கும்முன், அவள் பெயர் சொல்லி அழைத்தான், ரஞ்சித்.
"உனக்கும், உங்கம்மாக்கும், என்ன பிராப்ளம்னு தெரியல!!, பட், முடிஞ்சா, அவங்கள மன்னிச்சுரு!! Never Judge people on their worst mistakes!!" விரக்தியாக சிரித்த மது,
"உன்னால, வெண்ணிலாவை மன்னிக்க முடியுமா?" திருப்பி கேட்டாள். விரக்தியாக சிரிப்பது ரஞ்சித்தின் முறையானது.
"Ok, never mind!! good night!!" என்ற ரஞ்சித், போர்வையை இழுத்து முகத்துக்கு போர்த்திக் கொண்டான்.
**************
மற்ற உறவுகளை போல் அல்லாமல், பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும், நமக்கு கொடுக்கப்பட்ட உறவு, மற்றவை அனைத்தும் நியாயமாக தேர்ந்தெடுத்துக் கொள்வது. பிடித்திருக்கிறதோ, இல்லையோ, அவர்களுடன் சேர்ந்து இருக்கிறோமோ, இல்லையோ, சாகும் வரையில் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாத உறவு, அது. நான்கு வருடங்களுக்கு முன் பார்த்த தன் தாய்க்கும், அடையாளமே தெரியாத வகையில் கலை இழந்து, கசக்கிப் போட்ட பழைய துணியென கிடக்கும் தன் தாய்யைப் பார்த்ததும் மதுவின் உள்ளத்தில் ஈரம். அதுவரை, அவளிடமிருந்த வைராக்கியத்தை சோதனைக்கு உள்ளாக்கியது, காந்தல் துணியாய் கிடக்கு அவள் தாயின் நிலை. உறவுகளும், சமூகம் அண்ணார்ந்து பார்த்த, எப்பொழுதும் கம்பீரத்துடன் இருக்கும் தன் தாயிடம், அந்த கம்பீரம் அவள், எவ்வளவோ தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லை. காலத்தாலோ, விதியாலோ, இழந்த மதியாலோ, நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த மொத்தத்தையும் பறித்துக் கொண்டது.
துணை இல்லாமல், இச்சமூகத்தில் தனியாக வாழ்வது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை, கடந்த நான்கைந்து வருடங்களில், தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்திருந்தாள், மது. அப்படியான சூழலில் தன் தாய் இருபது வருடங்கள் துணை இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள் என்று புரிதல், முன்பு தாயின் செயலை ஈனத் தனம் என்று கருதிய எண்ணம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே மாறி இருந்தது. அந்த வார்த்தைகள் கூட, உடரலுறவில் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் என்ற அளவில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், அதைத் தன் தாயின் தவறாகக் கூட அவள் நினைக்காமல், அவளது பழக்கினாமாக இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள். சமூகத்தால் மதிக்கப்படும் வாழ்க்கை, குடும்பம் என்ற எல்லாவற்றையும் தாண்டி, வாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் உணர்ந்திருந்தால்.
அதே நேரத்தில், தன் தாயின் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், ாவாய் அனைத்தும் நியாயமானதாக இருந்தால் கூட, அதற்கு மது கொடுத்த விலை, அவளது வாழ்க்கை என்பதால், தன் தாயை மன்னிக்கும் மனநிலையை, தான் என்றுமே பெறப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள். இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்வை அவள் அவள் வாழாவிட்டாலும், குறுகிய காலமென்றாலும், உயிரல் கலந்துவிட்ட ஒருவனுடன், கொடுப்பினை போன்றதொரு வாழ்வை, மணியுடன் வாழ்ந்திருந்தாள், அவள். அனைத்தையும் தாண்டி, வாழ்வில் ஒருவரை மனதார ஏற்றுக் கொண்டபின், மற்றொருவரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க உண்மையிலேயே முடியுமா? அப்படி முடியும் என்றால்? தன் அப்பாவின் முக்கியத்துவம் தன் அம்மாவின் வாழ்வில் அவ்வளவு தானா? அவனின் வாழ்வில், தனது முக்கியத்துவம், அவ்வளவுதானா? அடுத்த ஜென்மத்துல எனக்கு அம்மாவா பிறப்பாயா என்று கேட்டவனுக்கு, எல்லாமுமாய் இருக்கிறேன் என்று தன்னையே கொடுத்தவளை, அவன் அவ்வளவு எளிதாக கடந்துவிட்டானா?, அவ்வளவுதானா நான்? என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரு கேள்விகளுக்கும் விடையை எண்ணி, எண்ணி, அவள் எத்தனை முறை கலங்கினாள், கண்ணீர் விட்டாள், என்பதை காலம் மட்டுமே அறியும். இது அனைத்திர்க்கும் காரணம் தன் தாய் என்பதால், அவளை தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை மதுவுக்கு.
**************
மும்பையில் நிகழ்ந்த அந்த செய்தியாளர் சந்திப்பிற்கு, இரண்டு வாரங்களுக்கு முன், மதுவின் வாழ்வில்
தலையில் பந்தடிபட்ட அந்தச் சிறுவனும், அவனது பெற்றோரும் எதிரே அமர்ந்து இருக்க, மது, அந்தச் சிறுவனுக்கு, அன்று காலை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை, ஆராய்ந்து கொண்டிருந்தாள். ஒன்றரை வருடத்தில் நன்றாக வளர்ந்திருந்தான், மது, என்ன சொல்லப் போகிறாளோ என்ற தவிப்பு மூவரின் முகத்திலும். அந்த தவிப்பை மதுவும் கவனித்திருந்தால். பெற்றோரின் தவிப்பை புரிந்துகொள்ள முடிந்த மதுவால், அந்தச் சிறுவனின் தவிப்பைப் பார்த்தவள்,
"ஒன்னும் இல்ல பயப்படாத" இளம் வயதிலேயே, உயிருக்கு பயப்படும் அவனை தெம்பூட்டும் விதமாக சொன்னாள்.
பின் தன் கவனத்தை, மருத்துவ பரிசோதனை முடிவுகளில் திருப்பினாள். அனைத்தையும் ஆராய்ந்து முடித்தவள் நிமிர்ந்து,
"உங்க பையன் நினைச்சதை விட வேகமாகவே ரெக்கவர் ஆயிட்டான்!! இனி நீங்க பயப்பட தேவையில்லை!! அவனுக்கு தலைசுத்தறது, மயக்கம், இந்த மாதிரி ஏதாவது சிம்டம்ஸ் இருந்தா, கெட் மெடிக்கல் ஹெல்ப்!! அவ்வளவுதான்!!" என்றதும், பெற்றோரின் முகத்தில் நிம்மதி. சிறுவனின் முகத்தில், அதே பரிதவிப்பு. அதைக் கண்ட மது, என்ன? என்பது போல், அந்த சிறுவனைப் பார்த்தாள்
"நான் திரும்பவும் கிரிக்கெட் விளையாடலாமா?" அவன் பரிதவித்தது உயிருக்கு பயந்து அல்ல, விளையாட முடியுமா? முடியாதா? என்றுதான் என்பதை உணர்ந்த மது, சிரித்து விட்டாள். அந்தச் சிறுவனின் பெற்றோரோ, அவனை எரித்து விடுவதுபோல், முறைத்துக் கொண்டிருந்தனர்.
"நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு!!" அந்தச் சிறுவனை அந்த அறையிலிருந்து வெளியேறினாள், மது.
ஏனோ அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, அவனுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்ற உணர்வை உண்டு பண்ணியது. அதுவும் இல்லாமல், ஒரு டாக்டராக, அந்த சிறுவன், முழுமையாக குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததாலும், அந்த சிறுவன், அறையிலிருந்து வெளியேறியதும், அவனின் பெற்றோரிடம் அந்தச் சிறுவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தவள், ஒருவாராக, அவனை விளையாட அனுமதிக்க சம்மதம் வாங்கி விட்டாள். அவர்கள் சம்மதித்ததும், மீண்டும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்தாள், இன்னும் அதே பரிதவிப்புடன் உள்ளே வந்தான் அந்த சிறுவன். மது அந்த சிறுவனின் தாயாரிடம் கண்களை காட்ட,
"ஹெல்மெட் போடாம விளையாடவே கூடாது!! பிராமிஸ் பண்ணு!!" என்று தன் மகனைப் பார்த்து அந்த அம்மா கை நீட்ட, தன் தாயை அட்டை போல ஒட்டிக்கொண்டு, அழ ஆரம்பித்துவிட்டான், அந்தச் சிறுவன். அவன் அழுகையை நிறுத்துவது, பெரும்பாடாய் போனது அந்தத் தாய்க்கு. சிறுவனின் மகிழ்ச்சியான அழுகையில், மது நெகிழ்ந்திருந்த வேலையில், பட்டென, அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான், அந்தச் சிறுவன். தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், வட இந்தியாவில், பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, வழக்கமான ஒன்றுதான் என்று மதுவுக்கு தெரிந்தாலும், அந்தச் சிறுவனின் செயலை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை, அவள். அந்தச் சிறுவனின் செயல் ஏதோ செய்தது அவளை.
*************
அன்று இரவு,
சாப்பிட்டு முடித்தவளுக்கு, அந்த சிறுவனின் நினைவே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது, மனதில். அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, திரும்பத், திரும்ப அவளது இதழ்களில் புன்னகையை கொண்டு வந்தது. சிறுவர்களின் உலகம்தான் எவ்வளவு அலாதியானது என்று நினைத்தவள் மனதில், இதேபோன்ற பரிதவிப்புடன், இன்னொரு சிறுவனின்முகம் வந்து நின்றது. அவள் இதழ்களில் இருந்த சிரிப்பு காணாமல் போக, முகம் வெளிறியது, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
***************
நிகழ்காலம்.
அந்த ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அவினாஷ் தாக்கறின், கிரீன் பவர் நிறுவனத்தை, கையகப்படுத்தியதற்கான அறிவிப்பு மின்னஞ்சலோடு, அதற்க்கு உழைத்த அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டி, ஒரு மின்னஞ்சல் அனுப்பினான், மணி. அவனது மொத்த குழுமமும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, அந்தக் கொண்டாட்டம் அவனுக்கு மூச்சுத் திணறலை கொடுத்தது. அடுத்த மூன்று நாட்களுக்கான அனைத்து, அப்பாயிண்ட்மெண்டுகளையும் கேன்சல் செய்தவன், டைகர் வேலி எஸ்டேட் சொல்லும் எண்ணத்துடன், தனது, அலுவலக அறையில் இருந்து வெளியேறினான்.
கதவை திறந்தவன், வாழ்வில் மீண்டும் நுழைந் தாள் மது!! இந்தமுறை அவள் அருகில் நேத்ரா.
*************
மறுநாள் காலை,
"என்னோட பேக்!!" என்று பதறிக் கொண்டிருந்த சிவகாமியைத்தான், உள்ளே நுழைந்ததும் பார்த்தால், மது.
"என்கிட்ட தான், இருக்கு!!" என்ற மதுவின் சொற்களில் நிம்மதியடைந்தவள், தன் மகளை இரண்டு நொடிதான் பார்த்திருப்பாள், தலையை குனிந்து கொண்டாள், சிவகாமி.
அதிகாலையில், தனது அபார்ட்மெண்டுக்கு சென்ற மதுவிடம், வாயில் காவலர் ஒருவர் வந்து, தற்பொழுது, சிவகாமி பதறிக்கொண்டு கேட்ட பேக்கை கொடுத்திருந்தார்.
"ஏதாவது வேணும்னா நர்ஸ் சொல்லுங்க!! என்னோட ரவுண்ட்ஸ் முடிஞ்சதும் வந்து பார்க்கிறேன்!!" தன் தாயை பார்க்காமல், எங்கோ பார்த்து வெறித்துக்கொண்டு சொன்ன மது,
"நீ, போய் ரெஸ்ட் எடு!!" என்று ரஞ்சித்திடம், தன் வீட்டின் சாவியை கொடுத்தாள்.
அன்று மாலை 6 மணி,
"உன்னோட பிளைட் டிக்கெட், இன்னும் நாலு மணி நேரம் இருக்கு!! என்னோட ஃப்ரெண்ட் ரஞ்சித் ஏர்போர்ட்ல ட்ராப் பண்ணுவான்!!" பிளைட் டிக்கெட்டை, தன் தாயிடம் நீட்டியவள், மனப்பாடம் செய்ததைப் போல கடகடவென்று ஒப்பித்தாள், மது.
எப்பவும் சொல்லாத சிவகாமி, மது கொடுத்த டிக்கெட்டை வாங்கிக் கொண்டாள். சிவகாமி அதை வாங்கிக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியேற முற்பட்டாள்.
"எனக்கு தெரியும்!!" என்று குரல் தழுதழுக்க சிவகாமி பேச, எனும் மது பெண் கால்கள் நகர மறுத்தது.
"எனக்குத் தெரியும், எனக்கு மன்னிப்பே கிடையாது!!. நான் பண்ணது பெரிய பாவம்!!" சிவகாமி விசும்ப ஆரம்பித்தாள். கண்களைத் துடைத்துக் கொண்டாள்.
"என்ன மன்னிக்கவே மாட்டியா? பானு மா!!" அடக்கமாட்டாமல் அழ ஆரம்பித்தால், சிவகாமி.
"உன்ன, ஆள் ஆகணும்னு மட்டும்தான் டா!! நான் உயிர் வாழ்ந்ததே!!” அழுகையின் ஊடே சொன்னவள், ரஞ்சித் அறையில் நுழைந்ததும், கண்களை துடைத்துக் கொண்டாள்.
உள்ளே வந்த ரஞ்சித், மதுவின் காதில் ஏதோ சொன்னான். அவனிடம், அவள் "தேங்க்ஸ்" என்றதும், அவன் அங்கிருந்து நகர்ந்தான். சிவகாமியிடம் திரும்பிய மது,
"டாக்ஸி வந்துருச்சு!!" என்றவளை, கெஞ்சும் விழிகளுடன் பார்த்தவாறு இருந்தாள், சிவகாமி. ஒரு பெருமூச்சு விட்ட மது.
"உடம்ப பாத்துக்க!!, ஊருக்குப் போனதும் எனக்கு மெசேஜ் பண்ணு!!" என்று தனது விசிட்டிங் கார்டை தன் தாயிடம் நீட்டினாள். அதை அவள் பெற்றுக்கொண்ட அடுத்தகணம், அந்த அறையைவிட்டு வெளியேறினாள், மது.
*************
இன்று இரவு,
"என்னது இது?" ரஞ்சித்தை பார்த்து கேட்டாள் மது.
"இந்த பேக் உனக்கு குடுக்குறதுக்குத்தான் கொண்டு வந்தாங்களாம்!!" என்ற ரஞ்சித், சிவகாமி, வாங்க மறுத்த பையை மதுவிடம் நீட்டினான். அதை வாங்கி மது, அதில் என்ன இருக்கிறது என்று கூட பார்க்காமல், கபோர்டு திறந்து, அதை, அதற்குள் வைத்தாள்.
இருவரும் சாப்பிட்டு முடித்தார்கள், அது சிங்கிள் பெட்ரூம் அப்பார்ட்மெண்ட் என்பதால், ரஞ்சித்துக்கு ஹாலிலேயே படுக்கையை தயார் செய்தவாறே,
"சரி, இப்ப சொல்லு!! நீ ஏதோ முக்கியமான விஷயம் பேசணும்னு சொன்ன?" சிவகாமியின் எதிர்பாராத வரவால், ரஞ்சித்திடம் பேசுவதற்கு, இப்போதுதான் நேரம் கிடைத்தது மதுவுக்கு.
"நெக்ஸ்ட் வீக், பொண்ணு பார்க்கப் போறேன்!!" ரஞ்சித், சொன்ன செய்தியும், அவனது சிரிப்பும், மதுவை, சிவகாமியின் நினைவில் இருந்து மொத்தமாக ஒரு நொடியில் மீட்டுவிட்டது. பின்னர் அது தொடர்பான பேச்சிலேயே, அடுத்த அரை மணி நேரம் செல்ல, தூங்குவதற்காக எழுந்து தன் அறைக்கு சென்றாள், மது.
"மதி!!" மது, கதவை அடைக்கும்முன், அவள் பெயர் சொல்லி அழைத்தான், ரஞ்சித்.
"உனக்கும், உங்கம்மாக்கும், என்ன பிராப்ளம்னு தெரியல!!, பட், முடிஞ்சா, அவங்கள மன்னிச்சுரு!! Never Judge people on their worst mistakes!!" விரக்தியாக சிரித்த மது,
"உன்னால, வெண்ணிலாவை மன்னிக்க முடியுமா?" திருப்பி கேட்டாள். விரக்தியாக சிரிப்பது ரஞ்சித்தின் முறையானது.
"Ok, never mind!! good night!!" என்ற ரஞ்சித், போர்வையை இழுத்து முகத்துக்கு போர்த்திக் கொண்டான்.
**************
மற்ற உறவுகளை போல் அல்லாமல், பெற்றவர்களும், உடன்பிறந்தவர்களும், நமக்கு கொடுக்கப்பட்ட உறவு, மற்றவை அனைத்தும் நியாயமாக தேர்ந்தெடுத்துக் கொள்வது. பிடித்திருக்கிறதோ, இல்லையோ, அவர்களுடன் சேர்ந்து இருக்கிறோமோ, இல்லையோ, சாகும் வரையில் நாமே நினைத்தாலும் மாற்றிக்கொள்ள முடியாத உறவு, அது. நான்கு வருடங்களுக்கு முன் பார்த்த தன் தாய்க்கும், அடையாளமே தெரியாத வகையில் கலை இழந்து, கசக்கிப் போட்ட பழைய துணியென கிடக்கும் தன் தாய்யைப் பார்த்ததும் மதுவின் உள்ளத்தில் ஈரம். அதுவரை, அவளிடமிருந்த வைராக்கியத்தை சோதனைக்கு உள்ளாக்கியது, காந்தல் துணியாய் கிடக்கு அவள் தாயின் நிலை. உறவுகளும், சமூகம் அண்ணார்ந்து பார்த்த, எப்பொழுதும் கம்பீரத்துடன் இருக்கும் தன் தாயிடம், அந்த கம்பீரம் அவள், எவ்வளவோ தேடிப்பார்த்தும் காணக் கிடைக்கவில்லை. காலத்தாலோ, விதியாலோ, இழந்த மதியாலோ, நிகழ்ந்த ஒரு நிகழ்வு, தாய்க்கும் மகளுக்கும் இடையே இருந்த மொத்தத்தையும் பறித்துக் கொண்டது.
துணை இல்லாமல், இச்சமூகத்தில் தனியாக வாழ்வது என்பது எவ்வளவு சவாலான காரியம் என்பதை, கடந்த நான்கைந்து வருடங்களில், தன் வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்களின் மூலம் உணர்ந்திருந்தாள், மது. அப்படியான சூழலில் தன் தாய் இருபது வருடங்கள் துணை இல்லாமல் வாழ்ந்திருக்கிறாள் என்று புரிதல், முன்பு தாயின் செயலை ஈனத் தனம் என்று கருதிய எண்ணம் ஓரிரு வருடங்களுக்கு முன்பே மாறி இருந்தது. அந்த வார்த்தைகள் கூட, உடரலுறவில் வெளிப்படுத்தும் வக்கிரங்கள் என்ற அளவில் அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. உண்மையைச் சொல்லப் போனால், அதைத் தன் தாயின் தவறாகக் கூட அவள் நினைக்காமல், அவளது பழக்கினாமாக இருக்கலாம் என்ற எண்ணத்திற்கு வந்திருந்தாள். சமூகத்தால் மதிக்கப்படும் வாழ்க்கை, குடும்பம் என்ற எல்லாவற்றையும் தாண்டி, வாழ்க்கையில் துணை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை அவள் உணர்ந்திருந்தால்.
அதே நேரத்தில், தன் தாயின் செயலுக்கு ஆயிரம் காரணங்கள் இருந்தாலும், ாவாய் அனைத்தும் நியாயமானதாக இருந்தால் கூட, அதற்கு மது கொடுத்த விலை, அவளது வாழ்க்கை என்பதால், தன் தாயை மன்னிக்கும் மனநிலையை, தான் என்றுமே பெறப் போவதில்லை என்பதையும் உணர்ந்திருந்தாள். இந்த சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்ட திருமண வாழ்வை அவள் அவள் வாழாவிட்டாலும், குறுகிய காலமென்றாலும், உயிரல் கலந்துவிட்ட ஒருவனுடன், கொடுப்பினை போன்றதொரு வாழ்வை, மணியுடன் வாழ்ந்திருந்தாள், அவள். அனைத்தையும் தாண்டி, வாழ்வில் ஒருவரை மனதார ஏற்றுக் கொண்டபின், மற்றொருவரை அந்த இடத்தில் வைத்துப் பார்க்க உண்மையிலேயே முடியுமா? அப்படி முடியும் என்றால்? தன் அப்பாவின் முக்கியத்துவம் தன் அம்மாவின் வாழ்வில் அவ்வளவு தானா? அவனின் வாழ்வில், தனது முக்கியத்துவம், அவ்வளவுதானா? அடுத்த ஜென்மத்துல எனக்கு அம்மாவா பிறப்பாயா என்று கேட்டவனுக்கு, எல்லாமுமாய் இருக்கிறேன் என்று தன்னையே கொடுத்தவளை, அவன் அவ்வளவு எளிதாக கடந்துவிட்டானா?, அவ்வளவுதானா நான்? என்பதை அவளால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இரு கேள்விகளுக்கும் விடையை எண்ணி, எண்ணி, அவள் எத்தனை முறை கலங்கினாள், கண்ணீர் விட்டாள், என்பதை காலம் மட்டுமே அறியும். இது அனைத்திர்க்கும் காரணம் தன் தாய் என்பதால், அவளை தன் வாழ்நாள் முழுவதும் மன்னிக்க முடியும் என்று தோன்றவில்லை மதுவுக்கு.
**************
மும்பையில் நிகழ்ந்த அந்த செய்தியாளர் சந்திப்பிற்கு, இரண்டு வாரங்களுக்கு முன், மதுவின் வாழ்வில்
தலையில் பந்தடிபட்ட அந்தச் சிறுவனும், அவனது பெற்றோரும் எதிரே அமர்ந்து இருக்க, மது, அந்தச் சிறுவனுக்கு, அன்று காலை செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனையின் முடிவுகளை, ஆராய்ந்து கொண்டிருந்தாள். ஒன்றரை வருடத்தில் நன்றாக வளர்ந்திருந்தான், மது, என்ன சொல்லப் போகிறாளோ என்ற தவிப்பு மூவரின் முகத்திலும். அந்த தவிப்பை மதுவும் கவனித்திருந்தால். பெற்றோரின் தவிப்பை புரிந்துகொள்ள முடிந்த மதுவால், அந்தச் சிறுவனின் தவிப்பைப் பார்த்தவள்,
"ஒன்னும் இல்ல பயப்படாத" இளம் வயதிலேயே, உயிருக்கு பயப்படும் அவனை தெம்பூட்டும் விதமாக சொன்னாள்.
பின் தன் கவனத்தை, மருத்துவ பரிசோதனை முடிவுகளில் திருப்பினாள். அனைத்தையும் ஆராய்ந்து முடித்தவள் நிமிர்ந்து,
"உங்க பையன் நினைச்சதை விட வேகமாகவே ரெக்கவர் ஆயிட்டான்!! இனி நீங்க பயப்பட தேவையில்லை!! அவனுக்கு தலைசுத்தறது, மயக்கம், இந்த மாதிரி ஏதாவது சிம்டம்ஸ் இருந்தா, கெட் மெடிக்கல் ஹெல்ப்!! அவ்வளவுதான்!!" என்றதும், பெற்றோரின் முகத்தில் நிம்மதி. சிறுவனின் முகத்தில், அதே பரிதவிப்பு. அதைக் கண்ட மது, என்ன? என்பது போல், அந்த சிறுவனைப் பார்த்தாள்
"நான் திரும்பவும் கிரிக்கெட் விளையாடலாமா?" அவன் பரிதவித்தது உயிருக்கு பயந்து அல்ல, விளையாட முடியுமா? முடியாதா? என்றுதான் என்பதை உணர்ந்த மது, சிரித்து விட்டாள். அந்தச் சிறுவனின் பெற்றோரோ, அவனை எரித்து விடுவதுபோல், முறைத்துக் கொண்டிருந்தனர்.
"நீ கொஞ்சம் வெளிய வெயிட் பண்ணு!!" அந்தச் சிறுவனை அந்த அறையிலிருந்து வெளியேறினாள், மது.
ஏனோ அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, அவனுக்காகப் பரிந்து பேச வேண்டும் என்ற உணர்வை உண்டு பண்ணியது. அதுவும் இல்லாமல், ஒரு டாக்டராக, அந்த சிறுவன், முழுமையாக குணமடைந்து விட்டான் என்று தெரிந்ததாலும், அந்த சிறுவன், அறையிலிருந்து வெளியேறியதும், அவனின் பெற்றோரிடம் அந்தச் சிறுவனுக்கு பரிந்து பேச ஆரம்பித்தவள், ஒருவாராக, அவனை விளையாட அனுமதிக்க சம்மதம் வாங்கி விட்டாள். அவர்கள் சம்மதித்ததும், மீண்டும் அந்தச் சிறுவனை உள்ளே அழைத்தாள், இன்னும் அதே பரிதவிப்புடன் உள்ளே வந்தான் அந்த சிறுவன். மது அந்த சிறுவனின் தாயாரிடம் கண்களை காட்ட,
"ஹெல்மெட் போடாம விளையாடவே கூடாது!! பிராமிஸ் பண்ணு!!" என்று தன் மகனைப் பார்த்து அந்த அம்மா கை நீட்ட, தன் தாயை அட்டை போல ஒட்டிக்கொண்டு, அழ ஆரம்பித்துவிட்டான், அந்தச் சிறுவன். அவன் அழுகையை நிறுத்துவது, பெரும்பாடாய் போனது அந்தத் தாய்க்கு. சிறுவனின் மகிழ்ச்சியான அழுகையில், மது நெகிழ்ந்திருந்த வேலையில், பட்டென, அவள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினான், அந்தச் சிறுவன். தமிழ்நாட்டைப் போல் அல்லாமல், வட இந்தியாவில், பெரியவர்களின் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்குவது, வழக்கமான ஒன்றுதான் என்று மதுவுக்கு தெரிந்தாலும், அந்தச் சிறுவனின் செயலை சுத்தமாக எதிர்பார்த்திருக்கவில்லை, அவள். அந்தச் சிறுவனின் செயல் ஏதோ செய்தது அவளை.
*************
அன்று இரவு,
சாப்பிட்டு முடித்தவளுக்கு, அந்த சிறுவனின் நினைவே திரும்பத் திரும்ப ஓடிக்கொண்டு இருந்தது, மனதில். அந்தச் சிறுவனின் பரிதவிப்பு, திரும்பத், திரும்ப அவளது இதழ்களில் புன்னகையை கொண்டு வந்தது. சிறுவர்களின் உலகம்தான் எவ்வளவு அலாதியானது என்று நினைத்தவள் மனதில், இதேபோன்ற பரிதவிப்புடன், இன்னொரு சிறுவனின்முகம் வந்து நின்றது. அவள் இதழ்களில் இருந்த சிரிப்பு காணாமல் போக, முகம் வெளிறியது, கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடியது.
***************
நிகழ்காலம்.
அந்த ஃப்யூச்சர் குரூப்ஸ்ஸின் அலுவலகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. அவினாஷ் தாக்கறின், கிரீன் பவர் நிறுவனத்தை, கையகப்படுத்தியதற்கான அறிவிப்பு மின்னஞ்சலோடு, அதற்க்கு உழைத்த அனைவரையும் குறிப்பிட்டு பாராட்டி, ஒரு மின்னஞ்சல் அனுப்பினான், மணி. அவனது மொத்த குழுமமும் கொண்டாட்டத்தில் திளைத்திருக்க, அந்தக் கொண்டாட்டம் அவனுக்கு மூச்சுத் திணறலை கொடுத்தது. அடுத்த மூன்று நாட்களுக்கான அனைத்து, அப்பாயிண்ட்மெண்டுகளையும் கேன்சல் செய்தவன், டைகர் வேலி எஸ்டேட் சொல்லும் எண்ணத்துடன், தனது, அலுவலக அறையில் இருந்து வெளியேறினான்.
கதவை திறந்தவன், வாழ்வில் மீண்டும் நுழைந் தாள் மது!! இந்தமுறை அவள் அருகில் நேத்ரா.
*************