Thread Rating:
  • 3 Vote(s) - 3.67 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
தற்போதைய செய்திகள்
[Image: p28c_1552983109.jpg]
உதகை நகர மக்கள் விழிப்பு உணர்வுச் சங்கத் தலைவர் ஜனார்த்தனன், “கோவையிலிருந்து ஊட்டிக்கு வருவதற்கு மேட்டுப்பாளையம் - குன்னூர் சாலை, மேட்டுப்பாளையம் - கோத்தகிரி சாலை இரண்டுமே நல்ல நிலையில் இருக்கின்றன. மூன்றாவது மாற்றுப்பாதைக்கு அவசியமே இல்லை. மக்களின் நலன் கருதி, மூன்றாவது மாற்றுப்பாதையைக் கொண்டு வருவதாகச் சொல்வது எல்லாம் ஏமாற்று வேலை. இதனால், மக்களுக்கு என்ன நன்மை ஏற்படப்போகிறது. சில நன்மைகள் இருப்பதாகச் சொன்னாலும் பாதிப்புகள் தான் அதிகம்’’ என்றார்.

வனத்துறை அதிகாரிகளிடம் பேசினோம். ‘‘வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள கெத்தை மலைப்பாதை, கோவையிலிருந்து ஊட்டிக்கான மூன்றாவது மாற்றுப்பாதையாகச் செயல்படுத்துவது, சாத்தியம் இல்லாதது. அதற்கான அனுமதியையும் தரமாட்டோம். தற்போது பயன்பாட்டிலிருக்கும் இந்தச் சாலையைப் பராமரிக்க மட்டுமே அனுமதி வழங்கியிருக்கிறோம். விரிவாக்கத்துக்கான எந்த அனுமதியும் வழங்கப்படவில்லை’’ என்றனர்.

நோட்டு கொடுத்து ஓட்டு வாங்கலாம்... ஆனால், எத்தனை கோடிகளைக் கொட்டினாலும் காட்டை உருவாக்க முடியாது
Like Reply


Messages In This Thread
RE: கரண்ட் affairs தமிழில் - by johnypowas - 21-03-2019, 05:30 PM



Users browsing this thread: