19-12-2020, 06:31 PM
(This post was last modified: 19-12-2020, 06:34 PM by singamuthupandi. Edited 1 time in total. Edited 1 time in total.)
ஒவ்வொரு ஆணின் வெற்றிக்கு பின்னும் ஒரு பெண் இருப்பாள். கண்ணனின் வெற்றிக்கு முழு காரணம் நிஷா மட்டுமே. அந்த முழு புகழும் அவளையே வந்து சேர்ந்து இருக்க வேண்டும். கண்ணன் புகழ் மூலம் மோகன் அவரது கம்பெனி யம் புகழ் பெற்று இருக்க வேண்டும். டோவோர்ஸ் அப்ளை பண்ணும் முன்பு கண்ணன் காவிய மீது காதல் கொள்ள வில்லை. எப்போது நிஷா இனிமேல் தனக்கு இல்லவே இல்லை என்று நிலைக்கு தள்ளப்பட்டாரோ அப்போது தான் அவன் காவியாவை தொட்டார். கண்ணனை திருமணம் செய்யும் முன்பே நிஷாவுக்கு கிடைக்க வேண்டிய புகழை காவியா அள்ளி கொண்டு போயி விட்டாள். இருந்தாலும் அவர் வாழ்நாள் முழுவதும் நிஷா அவர் மனதில் ஒரு ஓரத்தில் இருந்து கொண்டு தான் இருப்பாள். அதனால் தான் தன மனதில் இருந்த ஏக்கத்தை நிஷாவிடம் நீ என்னுடன் இல்லையே என்று சொல்வதன் மூலம் வெளிப்படுத்தினார் கண்ணன். தான் இன்னும் அவள் நினைவுடன் இருப்பதை ஹண்ட்கேற்சிப்பி கொண்டு உணர்த்தினார். ஏனென்றால் அவர் முதலில் தொட்ட பெண் அவள் தான். அதே நிலை தான் நிஷாவுக்கு. கண்ணன் கூட போகும் போது தான் நிஷா ஒரு முழுமையான பெண்ணாக உணர்வால். மதிக்கப்படுவாள். இதுவே கதிரோ அல்லது சீனுவோ நிஷா உடன் சென்றால் அவளால் அவர்கள் புகழ் பெறுவார்கள் ஒழிய அவளுக்கு எந்த புகழும் இல்லை. மோகன் குடும்பமும் தங்களிடம் அண்டி பிளக்கமல் இப்படி மருந்து கண்டு பிடித்து உலக புகழ் பெற்ற ஒருவன் தங்கள் மருமகன் என்று சொல்வதையே பெருமையாக கருதுவார்கள். நிஷாவோ அல்லது அவள் குழந்தைகளோ தங்கள் கணவன், தந்தை எப்பேர்பட்டவர் என்று பெருமிதம் கொள்வர். சீனுவுடனான உறவு தெரிந்தும் நிஷாவை சிறிது அழவைத்து பார்க்க தான் நினைத்தார் கண்ணன் அவளை வெறுக்கவில்லை, ஏனெனில் அவர் செய்த தவறு அவருக்கு தெரியும். அனால் அந்த ஒரு நாள் ஒரு சில நிமிட காமம் ஒருவர் வாழ்க்கையை எப்படி சிதைத்து விடுகிறது என்பதற்கு நிஷா ஒரு வருந்தத்தக்க உதாரணம். .தவறு செய்வது மனித மனம், அதை திருந்தி மீண்டும் செய்யாமல் வாழ்வதில் தான் ஒருவர் உயர்வு பெறுகிறார். கண்ணன் அதை செய்து விட்டார், நிஷா எப்படியோ.