அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 50


"செம கோபத்துல இருக்கான்!!" மித்ரா சொல்ல, ஏற்கனவே அவனின் மனநிலையை ஊகித்திருந்த மது,

"என்ன சொன்னான்!!" மதுவிற்கு, ஏனோ தன்னவனின் ஒவ்வொரு நடவடிக்கையும் தெரிந்து கொண்டே ஆக வேண்டும் போல் இருந்தது

மனதில் ஒரு பயம் எப்பழுதும் அப்பிக்கொண்டே இருந்தது மதுவிற்கு. தன் தொடர் நிராகரிப்பால் மணி ஏதேனும் முட்டாள் தானமாக செய்து கொள்வானோ என்ற பயமா? அல்லது தன் திட்டமிட்டு நடத்திய நாடம் நிறைவேறியதில், இனி உண்மையிலேயே அவன் இல்லாமல் தான் வாழவேண்டுமோ என்ற எண்ணம் கொடுத்த பயமா? என்பதில் அவளுக்கே தெளிவில்லை.

"பெருசா ஒன்னும் பேசல பா!! கொஞ்சம் பிஸியா இருக்கேன்!! அப்புறம் கூப்பிடுறேன்னு சொல்லிவிட்டு வச்சுட்டான்!!" நெத்ராவின் வார்த்தைகளில் தெரிந்த விரக்தியை உணர்ந்து கொண்டு, இன்னொரு சமயம் பேசுவதாக சொல்லி அழைப்பை துண்டித்துவிட்டார் மது.

மதுவின் பிரிதல் நாடகம் வெற்றிகரமாக நடந்து விட, அதுவரை இருந்த மன உறுதியை இழந்து இருந்தாள் மது. கோயம்புத்தூரில் இருந்து திரும்ப வந்ததும் ஒரு வாரம் தாக்குப் பிடித்தவள், அதற்கு மேலும் முடியாமல் போக, அவனது குரலையாவது கேட்கலாம் என்று, மணிக்கு தொலைபேசியில் அழைத்தாள். அவளது நம்பர் மணியால் பிளாக் செய்யப்பட்டு இருக்க, துடித்துப் போனாள்.என்னதான் அவனை நினைத்துக் கொண்டு மீதி வாழ்வை வாழ்ந்து விடலாம் என்று நினைத்து இருந்தாலும், அவனுடன் சேர்ந்து வாழும் வாழ்விற்கு, அது எந்த வகையிலும் ஈடாகாது என்பதை நினைத்தபோது மதுவின் உள்ளம் மருகி தவித்தது. ஏதேனும் அதிசயம் நிகழ்ந்து தங்கள் காதல் கைக்கூடி விடாதா என்று ஏங்கி தவித்த மனதை என்ன சொல்லித் தேற்றுவது என்று தெரியாமல் தவித்து நின்றாள். பின் எப்பொழுதும் போல், தனக்கு விதிக்க பட்ட விதியை நிணைத்து நொந்து கொண்டு நாட்களை நகர்த்தினாள்

***************

"ஹாய் பானுமதி!!" கையை ஆட்டி, வாயெல்லாம் பல்லாக சிரித்துக் கொண்டு, தன்னை நோக்கி வந்த ரஞ்சித்தை பார்த்ததும் மதுவின் மனதில் ஒரு சின்ன நெருடல், பெண்களுக்கு உண்டான எச்சரிக்கை உணர்வு அது.

கல்லூரி அருகில் உள்ள ஒரு ரெக்ரேஷன் கிளப்பில், கடந்த ஒரு மாதமாக தினமும் மாலை டென்னிஸ் விளையாடிக் கொண்டிருந்தாள் மது. டென்னிஸ் விளையாடுவது, ஏதோ ஒரு வகையில் மணியுடன் நெருக்கமாக இருக்கும் உணர்வை தந்து கொண்டிருந்தது அவளுக்கு, அதற்காகவே விளையாட ஆரம்பித்தாள். ஆனால் கடந்த ஒரு வாரமாக தனது உள்ளக் கொதிப்பை அடக்குவதற்காக, தன் உணர்வுகளை சமன் பிடித்துக்கொள்ள விளையாடிக் கொண்டிருக்கிறாள். எப்பொழுதும் போல் விளையாட கிளப்புக்குள் நுழைந்தவளை பார்க்கத்தான் கையை ஆட்டிக் கொண்டு வந்தான் ரஞ்சித்.

"ஹாய்!!" என்றவன், மீண்டும் ஒரு முறை அவளை பார்த்து கை காட்ட

"ஹாய்!!” என்றாள் கொஞ்சம் தயக்கமாகவே

முதல் முறையாக பேச ஆரம்பித்த பின், பார்க்கும் போதெல்லாம் சிறிதாக புன்னகைதாலும், பெரிதாக அவனுடன் பேச்சு வளர்க்கவில்லை மது. எப்பொழுதும்போல் எச்சரிக்கையான இடைவெளியுடன் பழகி வந்தாள். அப்படியிருக்க, திடீரென்று, கையில் டென்னிஸ் ராக்கெட்டுடன் அவன் வந்து நிற்க, எச்சரிக்கை உணர்வு கொடுத்த தயக்கத்துடனே பதில் சொன்னாள்.

"என்னாச்சு, உங்கள ஃபாலோ பண்ணிட்டு, இங்க வந்துட்டேன்னு நினைக்கிறீங்களா?" மதுவின் மனதை பிடித்தவன் போல் கேட்டான்.

"ச்சே!! ச்சே!!, அப்படி எல்லாம் இல்லை!!" தன் எண்ண ஓட்டத்திற்கு மாறாக பதில் சொன்ன மது, வழிந்து ஒரு புன்னகையை ஒட்டிக்கொண்டாள் உதடுகளில்.

"நீங்க நினைக்கிறது கரெக்ட் தான்!!, உங்களுக்காகத்தான் வந்தேன்!!" நக்கலாக சிரித்து கொண்டே அவன் பதில் சொல்ல, வழிந்து ஒட்டிக்கொண்ட அவளது புன்னகை நொடியில் மறைந்தது, இடத்தை காலி செய்ய முற்பட்டால்.

"ஒரு நிமிஷம்!! ஒரு நிமிஷம்!!" கை நீட்டி மறித்தவன்

"சும்மா!! சும்மா!!" பல்லிளித்தவனை முறைத்தாள் மது.

"நீங்க நினைக்கிற மாதிரி இல்ல!! உங்களுக்கு முன்னாடியே இந்த கிளப்பில் ஜாயின் பண்ணிட்டேன்!!, மார்னிங் விளையாடிட்டு இருந்தேன், ஒரு மாசத்துக்கு முன்னாலதான் நீங்க இங்க விளையாடுறது தெரிஞ்சது!! ஓகே ஒரு கம்பெனி கிடைக்கும்னு அப்போவே ஈவினிங் ஷெட்யூல் மாறனும்னு நினைச்சேன்!!, பட், அப்ப எல்லாம் நீங்க முகம் கொடுத்தே பேச மாட்டீங்க!!, இப்ப தான் நாம ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோமே, அந்த நன்னம்பிக்கையில் ஈவினிங் ஷெட்யூல் மாத்திகிட்டு வந்திட்டேன்!! ப்ளீஸ்!! நீங்க மறுபடியும் மூஞ்ச தூக்கி விட்டுட்டு போகாதீங்க!!, காலையில வர அவ்வளவு பேரும் கீழ போல்ட்டா இருக்காங்க!!" என்று சொன்னவனின் கண்களில் இருந்த உண்மையை நம்பிய மது, லேசாக சிரிக்க, பெரிதாய்ச் சிரித்தான் அவன்.

********************

"நான் UG படிக்கும்போது காலேஜ் டீமுக்கு விளையாடிருக்கேன்” சிரித்த முகத்துடன் மதுவை எச்சரித்தவாறு விளையாட ஆரம்பித்தவனின் முகம், பத்து நிமிடத்திலேயே இருண்டு விட்டது.

"நீங்க நல்லா விளையாடுறீங்க!!” மூன்று முறை மதுவிடம் தோற்றதற்கு, பின் வெளியே வரும்போது வழிந்து கொண்டே சொன்னவனிடம்

"நான் உங்கள மாதிரி காலேஜுக்கு எல்லாம் விளையாண்டது இல்லை!!, ஜூனியர் நேஷனல் தான் விளையாடி இருக்கேன்!!” மது மேலும் அவன் காலை வார, அசடு வந்தவனைப் பார்த்து அடக்க மாட்டாமல் சிரித்தாள் மது. அந்த சிரிப்பும் கூட சில நிமிடங்களுக்குள் காணாமல் போக, கேள்வியாக பார்த்த ரஞ்சித்திடம், விடைபெற்றுக் கொண்டு வேகமாக தனது அறைக்கு வந்தவள், அடக்க மாட்டாமல் அழுதாள். மணியின் மனவருத்தம் மட்டுமல்ல, அவன் இல்லாமல் தனக்கு கிடைக்கும் இன்பமும் வலி மிகுந்ததாகவே இருக்கும் என்று அவள் உணர்ந்துகொண்ட தருணம் அது.

***************

"எப்போ கிராஜுவேஷன் போற?" எப்பொழுதும் போல் விளையாடி விட்டு, கல்லூரி விடுதியை நோக்கி நடந்து கொண்டிருக்க மதுவிடம் கேட்டான் ரஞ்சித்.

"தெரியல ரஞ்சித், போகனுமா யோசிக்கிறேன்?" விரத்தியாக சொன்ன மதுவை பார்த்து, ஒரு பெருமூச்சு விட்டவன்

"மதி, ப்ளீஸ் ரஞ்சூனு கூப்பிடேன்!!" ஏக்கமாக கேட்டவனைப் பார்த்து, முடியாது என்பது போல் தலையை அசைத்து சிரித்தாள் மது.

ஆம், ரஞ்சித்தும் கொஞ்ச நாட்களாகவே மது, மணியிடம் கெஞ்சி இதைப்போல கெஞ்சிக் கொண்டிருக்கிறான் "ரஞ்சூ!!” என்று அழைக்கச் சொல்லி. தனக்கு நெருக்கமானவர்கள் அனைவரும், தன்னை அப்படித்தான் அழைக்க வேண்டும் என்பது அவனின் எதிர்பார்ப்பு. மதுவைத் தவிர அனைவருமே அவனை அப்படித்தான் அழைத்தும் வந்தார்கள். இவள் மட்டும்தான் அப்படி அழைக்க மறுத்து வந்தாள், இதற்கு முன்னரும் சில முறை அவன் நிர்ப்பந்தித்த போதெல்லாம், வேண்டுமென்றால் முழு பெயரைச் சொல்லி அழைக்கிறேன் "ரஞ்சித் சிங் ஜீ!!” என்று சொல்லியே அவன் வாயை அடைத்து வந்தால் மது. அதே போல் அவனும் மது எவ்வளவோ மறுத்தும், அவளை பானு என்று அழைக்காமல் "மதி" என்றே அழைத்தான். அதற்கு அவன் ஒரு விளக்கம் வைத்திருந்தான், "பானுமதி" தெலுங்கு பெயர் போல இருப்பதாகவும் "மதி"தான் தமிழ் பெயர் போல் இருப்பதாகவும், மேலும் தனக்கு நிலா என்றால் அவ்வளவு இஷ்டம் என்று காரணம் கூறினான். அவனது இந்த நடவடிக்கைகள் அவ்வப்பொது கொஞ்சம் நெருடலை தந்தாலும், அவனது கள்ளம் கபடமில்லா பேச்சில், பழக்கத்தில், தொடக்கத்தில் இருந்த நெருடல் மறைந்து, அவனிடம் மட்டும் சற்று கூடுதலாகவே நட்பு பாராட்டினாலும் மது.

"ப்ளீஸ் மதி!!” மீண்டும் அவன் கெஞ்ச, கண்டுகொள்ளாமல் நடந்தவாறு இருந்தால் மது. கண்ணை மூடி ஒருபோதும் பெருமூச்சு விட்டவாறு, தலையசைத்து தன் விரக்தியை வெளிப்படுத்தியவன்

"மதி ஒரு நிமிஷம்!!" மது விடுதியின் வாயிலை நெருங்க, நிறுத்தியவன்

"ஐ லவ் யூ!!" அழைத்தவனை திரும்பி பார்த்த அடுத்த நொடி, தயக்கமே இல்லாமல் தனது காதலைச் சொன்னான் ரஞ்சித். அவள் இதை எதிர்பார்க்கவில்லை என்பதை, அவள் முகத்தில் தெரிந்த அதிர்ச்சியே காட்டிக் கொடுக்க எந்தவித சலனமும் இல்லாமல் அவளின் பதிலை எதிர்பார்த்து நின்றான் ரஞ்சித். கல்லூரியில் சேர்ந்து, மதுவை பார்த்த முதல் நொடியில் இருந்தே, அவள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது ரஞ்சித்துக்கு. அழகான பெண்களைப் பார்த்ததும் வரும் ஈர்ப்புதான் என்று நினைத்திருந்தவன், அவளுடன் பழக ஆரம்பித்ததும், அதுவும் அவள் தமிழ் என்றதும், அந்த ஈர்ப்பின் ஈரம் பேணி, காதலாகவே வளர்த்தான், சில மாதங்களுக்குள்.

அவள் தன்னிடம் கள்ளம் கபடமில்லாமல் பழகும் போதெல்லாம், தன்னிடம் தோன்றும் சின்ன நெருடலை சமாளிக்கவே, அவள் கிராஜுவேஷனுக்கு கோயம்புத்தூர் செல்லும் அன்று, சொல்ல வேண்டும் என்று நினைத்ததை, திடீர் என்று ஏற்பட்ட உந்துதலால், கட்டுப்படுத்த முடியாமல் இன்றே சொல்லிவிட்டான்.

"ப்ளீஸ் ஏதாவது சொல்லு!!" அதிர்ச்சி விலகாமல் தன்னைப் பார்த்துக் கொண்டிருந்த அவளை பார்த்து ரஞ்சித் கேட்க, அவள் கண்களில் சிறிதாக துளிர்த்த கண்ணீர், சில நொடிக்குள் அருவி போல் கொட்டியது. அழுதவாரே விறுவிறுவென்று விடுதிக்குள் பறந்தாள். காதலைச் சொன்னதற்கு, கண்ணீர் விட்டு அழுதவளை பார்த்ததும் முதலில் அதிர்ச்சியுற்றவன், பின் செய்வதறியாது

"மதி!! மதி!!" அவளை திரும்பத் திரும்ப அழைத்தும், காதில் வாங்காமல் அவள் செல்ல, சின்னதாக தோன்றிய குற்ற உணர்ச்சியை, உடனே துடைத்தெறிந்து விட்டு, ஏதோ உணர்ந்து கொண்டவன் போல், திரும்பி நடக்க ஆரம்பித்தான், அவன் வீட்டை நோக்கி.

*****************

பிளீஸ், மது!! நீ என்ன என்ன சொன்னாலும் கேக்குறேன்!! இது மட்டும் உன் கழுத்துல இருக்கட்டும்!! பிளீஸ்!!”

நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!! கோபப்படு!! அடி!! என்ன கொன்னு கூட போட்டுறு!! இது மட்டும் உன் கழுத்துல இருக்கட்டும்!!”

நீ என்ன பாக்க கூட வேண்டாம்!! உனக்கு எப்போ தோணுதோ அப்போ எண்ண தேடி வா!! ஆகுவரைக்கும் உன் கண்ணுல கூட பட மாட்டேன்!!”

நீ என்ன சொன்னாலும் கேக்குறேன்!!”

என்ற மணியின் கதறல் எதிரொலிக்க, அவன் கண்முன்னால் கழட்டி வீசி எறிந்த தாலியை, கையில் வைத்துக் கொண்டு அழுது கொண்டிருந்தால் மது, கடந்த இரண்டு மணி நேரமாக. சற்றே, மன அமைதியுடன் ஓடிக்கொண்டிருந்த வாழ்வில், இன்று ரஞ்சித் தன் காதலைச் சொல்லி புயலைக் கிளப்பி விட்டு இருந்தான். தான் வேறு யாரையும் காதலிப்பது அவளால் நினைத்துக்கூட பார்க்க முடியாதது என்றாலும், தன்னை மணியை தவிர வேறொருவன் அந்த கண்ணோட்டத்தில் பார்ப்பதைக் கூட தாங்கிக்கொள்ள முடியாது தவித்து துடித்தாள் மது. தன்னை ஒருவன் காதலிப்பதாகச் சொல்வது கூட, இவ்வளவு வேதனை தரும் என்பதை, அவள் இதற்கு முன் உணர்ந்திருந்தில்லை.

அவனில்லாமல், தன் மீதி வாழ்வை வாழ்வதில், இன்னும் என்னென்ன சங்கடங்கள் எல்லாம் சந்திக்க வேண்டுமோ? என்று நினைத்து மனம் குமுறி, அழுது தீர்த்தவள், பின் ஒரு முடிவெடுத்து, மணி கட்டிய தாலியை, தன் கழுத்தில் இருந்த செயினில் கோர்த்து மாட்டிக் கொண்டாள். செயினில் கோர்த்து கட்டிய தாலியை, தன் முகத்துக்கு நேரே ஏந்தியவள், விதி தன் வாழ்க்கையில் விளையாடும் விளையாட்டை எண்ணி அழுதாள், பின் தாலியை எடுத்து முத்தமிட்டவள், அதை தன் கையால் இறுக பற்றிக்கொண்டு மெத்தையில் விழுந்தவள், அழுது, கிறங்கி, உறங்கிப் போனாள்.

****************

"ஐ லவ் யூ" என்ற ரஞ்சித்தின் வார்த்தைகள் காதுகளில் ஒலிக்க, திடுக்கிட்டு விழித்தவளின் மனம், இன்னும் மட்டுப்பட்டிருக்கவில்லை. பொழுது விடிந்துவிட்டதை உணர்ந்தவள், கல்லூரி செல்வதற்கு தயார்னாள். ஷவரின் அடியில் நெடுநேரம் நின்றவள், ஒருவாராக தன் உணர்வுகளை சமன்படுத்திக் கொண்டு, "அவன் இல்லாத வாழ்வில், இதை விட கடுமையான சவால்களை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்" என்று தனக்குத்தானே தெம்பு சொல்லிக்கொண்டாள். நெடுநேரம் கண்ணாடியைப் பார்த்து கொண்டிருந்தவள், பின் கண்களை மூடி, ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு, குங்குமத்தை எடுத்து நெற்றி வகிட்டில் வைத்தவளின் கண்கள் கலங்கி இருந்தது.

மதுவின் புது தோற்றம் கண்டு, சிறு சலசலப்பு கல்லூரியில். அதிர்ச்சியுற்றவர்களுக்கும், ஆச்சரியப்பட்டவர்களுக்கும் பதிலளித்து மாளவில்லை அவளால். காலையில் மனசஞ்சலத்துடன் கல்லூரிக்கு சென்றவள், நினைத்ததற்கு மாறாக மகிழ்ச்சியுடன் கல்லூரியிலிருந்து திரும்பி வந்தாள் மாலையில். அந்த மகிழ்ச்சி, தன் தோற்றத்தை கண்டு கேள்வி கேட்டவர்களிடம், தனக்கு திருமணமாகிவிட்டது என்று மணியை கணவனாக நினைத்துக்கொண்டு அவள் சொன்னது தான் காரணம். அந்த மகிழ்ச்சி எல்லாம் தின்று தீர்த்தது, அவள் அறையில் இருந்த தனிமை. தனிமை தான் அவளுக்கு நிதர்சனத்தை உணர்த்தியது, என்னதான் வாயார சொல்லிக் கொண்டாலும், அவனுக்கு மனைவியாய் அவனுடன் வாழக் கொடுத்து வைக்கவில்லை தனக்கு என்று நினைக்கையில், தன் மீது உண்டான கழிவிரக்கமே, நெஞ்சம் கொள்ளா வேதனையைத் தர, உடை கூட மாற்றாமல் கட்டிலில் சுருண்டு படுத்துக்கொண்டவள், அப்படியே உறங்கிப் போனாள், முகத்தில் உறைந்தது, உலர்ந்து போயிருந்த கண்ணீர்தடம் சொல்லும் ஆயிரமாயிரும் வலிகளோடு.

*****************

"வாழ்த்துக்கள்!!" மூன்று நாள் கழித்து, ஒரு கிஃப்டை, மதுவிடம் நீட்டியவாறு, சிறு புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான் ரஞ்சித்.

பாடவேளை முடிந்து ஏதோ எண்ணங்களில் கட்டுண்டு இருந்தவள், வகுப்பிலேயே இருந்துவிட, யாருமில்ல சமயத்தை பயன்படுத்திக் கொண்டான் ரஞ்சித். அவன் நீட்டிய கிஃப்டை வாங்காமல், அவனை முறைத்தவாறு, வகுப்பறையில் இருந்து வெளியேற முற்பட்டாள்.

"ஹலோ!!, நியாயமா பாத்தா நான் தான் கோபப்படனும்!!" அடக்கமாட்டாத ஆத்திரத்துடன், வெளியேற எண்ணிய மதுவிடம் இவன் கோபப்பட,

"இனிமே என்கிட்ட பேசின மரியாதை கெட்டுவிடும் மிஸ்டர்!!" வெடித்தாள் மது.

"ஹெய்!! கூல்!! கூல்!! இப்ப என்ன ஆயிடுச்சுன்னு இவ்வளவு கோவப்படுற?" முகத்தில் எந்தவித குற்றவுணர்ச்சியும் இல்லாமல், உண்மையிலேயே கூலாக சிறு புன்னகையுடன் கூறினான் ரஞ்சித்.

"ஒரு பொண்ணு சிரிச்சு பேசிட்டா!!, உடனே லவ்வுன்னு வந்துறது!!" பொரிந்து தள்ளியவள் மின்னலென வெளியேறினாள். கடும் கோபத்துடன் வெளியேறியவளை, ஒரு பெருமூச்சு விட்டு பார்த்தவன், பின், அவளை தொடர்ந்தான் ரஞ்சித்.

"சரி ஓகே!!, நான் பொறுக்கிதான்!!, கொஞ்சநாள் பிரெண்டா பழகினா பாவத்துக்கு!!, இந்த கிஃப்டை வாங்கிக்க, உன் கல்யாண பரிசா!!" ஓடிச் சென்று அவளை நெருங்கியவன், மீண்டும் அவள் முன், கிஃப்ட்டை நீட்ட, எதுவும் சொல்லாமல், நின்று, நிதானமாகவே முறைத்தாள் மது.

"டூ மினிட்ஸ்!! நான் சொல்றத மட்டும் கேளு!!" என்றவன், அவள் பதிலுக்கு காத்திராமல் தொடர்ந்தான்

"உனக்கு கல்யாணமானது எனக்கு தெரியாது!! சொல்லாதது உன் தப்பு!! ஒரு பொண்ணு உன்கிட்ட வந்து, நீ ரெம்ப அழகா இருக்கனு சொன்னா!!, காம்ப்ளிமென்ட்டா எடுத்துக்கிட்டு தேங்க்ஸ் தான சொல்லுவ!! அதே மாதிரி, உன் பர்ஸனாலிட்டிக்கு கிடைச்ச காம்ப்ளிமென்ட்ட, என்னோடு ப்ரோபோசல் எடுத்துக்க!!, சிம்பிள்!! இன்னும் கொஞ்ச நாள் பழகின அதுக்கப்புறம் தான் ப்ரபோஸ் பண்ணனும்னு நினைச்சேன்!!" அவன் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே, அவளது முறைப்பு உக்கிரமாக,

"புரியுது புரியுது!! நான் சொல்றத முழுசா கேளு!!" இரு கைகளையும் உயர்த்தி, பொறுமை காக்குமாறு செய்கை செய்தவன்

"ஸீ!!, உன்ன ஃபர்ஸ்ட் டைம் பார்த்ததுமே, எனக்கு பிடிச்சு போச்சு!!, பேச ட்ரை பண்னேன், நீ அவாய்ட் பண்ண, ஓகேனு, நானும் அதோடு விட்டுட்டுடேன்!! தமிழ் பொண்ணு தெரிஞ்சதும், உன் கூட பிரெண்ட்லி அதான் பேச ஆரம்பிச்சேன்!!, சத்தியமா, அப்போ எனக்கு மனசுல ஒண்ணுமே இல்ல!!, அப்புறம் உன்கிட்ட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம், உன்ன ரொம்ப புடிச்சது, நீ என்னோட லைஃப் பாட்னரா இருந்தா நல்லா இருக்கும்னு தோணுச்சு!!, மனசுல இப்படி ஒரு எண்ணத்தை வச்சுக்கிட்டு, பிரண்டா மட்டும் உன் கூட பழகுறது, எனக்கு ரொம்ப கில்டியா இருந்தது!!, நீ ஊருக்கு போறதுக்கு முன்னாடி தான் சொல்லனும்னு நினைச்சேன்!! பட், திடீர்னு அப்பவே சொல்லணும்னு தோணுச்சு, அதான் சொல்லிட்டேன்!!. We are not kids, just take this as a compliment, I just don't want to miss a good friend!!" எந்தவித அலங்காரமும் இல்லாமல், தன் செயலுக்கு மன்னிப்பு கூட கேட்காமல், மிகவும் எதார்த்தமாக பேசிய ரஞ்சித்தை வினோதமாக பார்த்தாள். ஒரு நிமிடம் தான் ஏன் இவன் விளக்கத்தை நின்று கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்று கூட தோன்றியது மதுவுக்கு.

"உனக்கு நம்பிக்கை இல்லைன்னா, I understand!! பட், இந்த கிஃப்டையாவது வாங்கிக்க, ஜஸ்ட் என்னோட மன திருப்திக்கு!!" என்று அவன் மீண்டும் நீட்டியதை ஏன் வாங்கினோம் என்று தெரியாமலே வாங்கிக்கொண்டு, விடுதியை நோக்கி நடந்தவளை, சிறு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். பின் உதட்டை குவித்து, காற்றை வெளியேற்றி, தன் இல்லம் நோக்கி நடந்தவன் என் முகம் தெளிவாய் இருக்க, அவன் கொடுத்த பரிசை வாங்கிக் கொண்டு நடந்தவளின் முகத்தில் குழப்பம் குடியேறி இருந்தது.

***************
[+] 7 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 06-12-2020, 12:03 PM



Users browsing this thread: 4 Guest(s)