அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன்
பாகம் - 36


திரும்பத் திரும்ப அழைத்து சோர்ந்து விட்டேன். சரி குளித்து விட்டு வரலாம் என்று குளியல் அறைக்குள் புகுந்து கொண்டேன். தேசிய ஜூனியர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளுக்காக ஹைட்ரபாத் வந்து இருந்தேன். நேற்று நடந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதில் இருந்து மதுவிடம் கெஞ்சி கொண்டிருக்கிறேன், இறுதிப்போட்டிக்கு வரச்சொல்லி. ஆனால், எனக்கு ஏதோ சர்ப்ரைஸ் வைத்திருப்பதாகச் சொல்லி வர மறுக்கிறாள். என்னைத் தவிர அத்தனை கேட்டகிரியில் இருந்த தமிழக வீரர்கள் அனைவரும் வெளியேறி இருக்க, கோச்சிங் ஸ்டாப்பை தவிர எல்லோரும் ஏற்கனவே கிளம்பி சென்றிருந்தனர். அந்த தனிமை கூட காரணமாக இருக்கலாம், மதுவை இவ்வளவு தூரம் வற்புறுத்த. எனக்கும் தெரியும் அவ்வளவு முக்கியமானதாக இல்லாவிட்டால், அவள் வரமாட்டேன் என்றெல்லாம் சொல்ல மாட்டாள் என்று. இறுதிப் போட்டியை விடவும், அவள் கொடுக்கப் போகும் சர்ப்ரைஸ் என்னவென்று தெரிந்துகொள்ளவே இப்பொழுது ஆவலாய் இருந்தேன்.

குளித்துவிட்டு தலை துவட்டிக் கொண்டு இருக்கும் போது, என் போன் அடித்தது, அழைத்தது மது தான். எப்படியும் விடாமல் அழைத்ததுக்கு திட்டுவாள் என்று தெரிந்து, அதற்கும் சேர்த்து ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு அட்டெண்ட் செய்தேன்.

"சாரிடா இப்பதான் வந்தேன்!!” என்று என் எதிர்பார்ப்புக்கு மாறாக சாந்தமாகவே பேசினாள்.

"இல்ல!! தூங்குறதுக்கு முன்னாடி உன்கூட பேசலாம்னு பார்த்தேன்!!” என்று நானும் விட்டோத்தியாக பதில் சொன்னேன்.

"டின்னர் ஆச்சா?”

"வரும்போதே, சாப்பிட்டு வந்துட்டேன்!! தூங்க வேண்டிய தான்!!” என்றவாறு மொபைலை எடுத்துக்கொண்டு மெத்தையில் விழுந்தேன்.

எப்பொழுதும் எங்கள் உரையாடலில் இருக்கும் காதலோ, குழைவோ, கொஞ்சலோ கொஞ்சமும் இல்லை. சிறிது நேரம் அவளும் பேசவில்லை நானும் பேசவில்லை வெறுமனே மொபைலை இருவரும் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"ஏன்டா இப்படி பண்ற!!” புன்சிரிப்புடன் கேட்டாள்

"நான் என்ன பண்றேன்?” உணர்ச்சி இல்லாத முகத்துடன் திருப்பி கேட்டேன்.

"டேய்!!.... புரிஞ்சுக்கோடா!! ரொம்ப கஷ்டம் டா!!” கெஞ்சினாள்.

"இப்போ நான் எதுவுமே சொல்லலையே!!” இப்போது என் குரலில் கொஞ்சம் வருத்தம்

"பாப்பா!!”

".............…" பதில் சொல்லவில்லை நான்

"பாப்பா!!” கொஞ்சினால் மீண்டும்,

".............…" பதில் சொல்லவில்லை

"ஏன்டா இப்படி படுத்துற!!” என்று சொன்னவள், ஒரு பெருமூச்சு விட்டாள்.

"நான் எதுவுமே சொல்லலையே!!” என்றேன், முறைத்தாள், நானும் முறைத்தேன். கண்களை மூடி மீண்டும் ஒரு பெருமூச்சு விட்டாள்.

"ப்ளீஸ் பாப்பா!!.... நாளைக்கு எனக்கு எக்ஸாம்!!....மூட் அவுட் பண்ணாத....நல்ல பாப்பா இல்ல!!....கொஞ்சம் சிரிச்சு பேசேன்!!” கெஞ்சினாள், கொஞ்சினாள்

"எனக்கும்தான் நாள் கழிச்சு பைனல்ஸ்!! என்னையும் மூடு அவுட் பண்ணாத!! ப்ளீஸ் எக்ஸாம் முடிஞ்ச உடனே கிளம்பி வந்துட்டேன்!!” நானும் கெஞ்சினேன். சிரித்தாள், நான் மீண்டும் முறைத்தேன்.

"மவனே....நேர்ல மட்டும் இருந்தேன்!!....அந்த முறைக்கிற கண்ண நோண்டி எடுத்துடுவேன்!!” அவள் விரல்களால் என் கண்ணை தோண்டி எடுப்பது போல சைகை செய்ய, அதற்கு மேலும் பொறுக்க மாட்டாமல் சிரித்து விட்டேன். அவளுடன் இருக்கமாக பேச எனக்கு தெரியவில்லை.

"ஹப்பா!!” இரு கைகளையும் நெஞ்சில் வைத்து சொன்னவள், முத்தங்களை பறக்க விட்டாள் என்னைப் பார்த்து.

"பிரிபரேஷன் முடிஞ்சிடுச்சா?”

"கொஞ்சம் டென்ஷனா தான் இருக்கு!!” என்றாள், கீழ் உதடை கடித்தாள்.

"எக்ஸாம் முடிச்சிட்டு வந்த உடனே எனக்கு கால் பண்ணு!!” என்றேன்,

"தூக்கம் வருதா?”

"இல்ல!! பட் கொஞ்சம் டயர்டா இருக்கு!!” உண்மையிலேயே அசதியாக தான் இருந்தது.

"கொஞ்ச நேரம் பேசலாமா!!”

"நீ மட்டும் எக்ஸாம் எழுதி முடிச்சதும், இங்க கிளம்பி வரேன்னு சொல்லு!! நைட் ஃபுல்லா பேசலாம்!!” நான் புருவத்தை உயர்த்தி, பற்களை காட்டினேன்.

"எனக்கு மட்டும் உன்கூட இருக்கணும்னு ஆசை இருக்காதா? அன்னைக்கு எனக்கு ஒரு முக்கியமான வேலை இருக்குடா!!”

"அப்படி என்ன முக்கியமான வேலை?”

"அதுதான் சொன்னேனே!! ஒரு சர்ப்ரைஸ் உனக்கு" கண்ணடித்தாள்

"எனக்கு ஒரு சர்ப்ரைஸ் மண்ணும் வேண்டாம்!! நீ தான் வேணும்!!”

"பாப்பா!!”

"ம்ம்!!”

"ஐ லவ் யூ!!” நான் பதில் சொல்லாமல் அவளை பார்த்துக் கொண்டிருக்க

"டேய் me too ஆவது சொல்லுடா!!” கெஞ்சினாள், நான் மாட்டேன் என்று தலையசைத்தேன்.

"போடா எருமை!!” சிரித்தேன்

"பாப்பா!! குட் நைட்!!” என்று நான் சொல்ல

"வேண்டாம்!! வேண்டாம்!! போன வைக்காத!!” அவசர அவசரமாக சொன்னாள்

"பாப்பா! டயர்டா இருக்கு பாப்பா!! உண்மையிலேயே எனக்கு தூக்கம்!!” கண்ணை
கட்டிக்கொண்டு வந்தது தூக்கம்

"சரி நீ அப்படியே வச்சுட்டு தூங்கு!! நான் பார்த்துகிட்டே இருக்கேன்!!” அவள் ஆசையாக சொல்ல, மொபைல் சார்ஜரில் போட்டு, என் முகம் தெரியுமாறு வைத்துவிட்டு, நானும் அந்த ஸ்கிரீனில் தெரியும் அவள் முகத்தைப் பார்த்துகொண்டு இருந்தேன், எப்போது தூங்கினேன் என்று தெரியாமல் தூங்கிவிட்டேன்.

********

மறுநாள் மதியம் 2 மணி.

அன்று பயிற்சி கட்டாயம் இல்லாவிட்டாலும் கூட, காலையிலே சென்று பயிற்சி செய்துவிட்டு, சிறிது நேரம் நான் இறுதி போட்டி ஆடப்போகும் கோர்ட்டில் நின்று, வெறுமனே அதன் நீள அகலங்களை கண்களால் அளந்துவிட்டு, அறைக்கு வந்தேன்.

ஏன் என்று தெரியவில்லை காலையில் இருந்தே உள்ளம் கொஞ்சம் படபடப்பாகவே இருந்தது. நாளை போட்டியின் போது, யாராவது உடன் இருந்தால் நன்றாக இருக்கும் என்று என் மனம் எங்கியது. அந்த "யாராவது" என்ற கட்டத்துக்குள் மதுவையும், தாத்தாவையும் தவிர யாரையும் மனம் அனுமதிக்கவில்லை. தாத்தாவை தொந்தரவு செய்ய மனதில்லை, மதுவை அழைத்துக்கொண்டுதான் இருக்கிறேன் என்றாலும், அவளும் வரமுடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டாள்.

என் மனதின் ஏக்கத்தில் இருந்து விடுபடவே கட்டாயம் இல்லாவிட்டாலும், காலையில் பயிற்சிக்கு சென்றேன். திரும்ப அறைக்கு வந்து, கதவை அடைத்துக் கொண்டிருக்கும் போதே, என் மொபைல் சிணுங்கியது. முகத்தில் புன்முறுவலுடன் அழைப்பை எடுக்க,

"என்னடா பண்ணுறே?" என்றாள் மது.

"இப்போதான் ரூம்க்கு வந்தேன்!! எக்ஸாம் நல்ல எழுதினியா?”

நினைச்சத விட, நல்லா எழுதியிருக்கேன்!!”

சரி!! வீடியோ கால் வா!!” என்று நான் சொல்ல

"வேண்டாம்!! வேண்டாம்!!” அவசர அவசரமாக மறுத்தாள். நான் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்கவே

"டேய்!! இப்ப தான்டா வந்தேன்!! குளிக்க போறேன்!! பாத்ரும்ல இருக்கேன்!!” குரலில் வெட்கம்.

"அப்ப கண்டிப்பா வீடியோ கால் பண்ணனும்!!” அவளின் வெட்கம் என் எண்ண ஓட்டங்களை திசைதிருப்ப, சிரித்தேன்

"எருமை!! எருமை!!” என்று அவள் திட்டியதற்கும் சிரித்தேன்

"எத்தன மணிக்கு மேட்ச் உனக்கு?”

"நேத்தே சொன்னேனே!! மறந்துட்டியா?”

"அதெல்லாம் ஞாபகம் இருக்கு!! எப்பவுமே ஈவினிங் தானே இருக்கும்!!, எந்த லூசுப் பய 9மணிக்கு மேட்ச் வச்சான்? அதுதான் சின்ன டவுட்!!”

"மெடல் டிஸ்ட்ரிபியூஷன் பண்றதுக்கு ஏதோ லோக்கல் மினிஸ்டர் வர்றாராம்!! அவருக்கு ஈவினிங் வேற எங்கேஜிமெண்ட் இருக்குதாம். அதான் ரெண்டு மணிக்கு ஃபங்ஷன் ஆரம்பிச்சு நாலு மணிக்குள்ள முடிச்சிடுவாங்கனு நினைக்கிறேன்!!”

என்னிடம் பேசிக்கொண்டே குளித்தவள், டிரஸ் மாற்றிவிட்டு வீடியோ கால் செய்தாள்.

அதுக்குள்ள குளிச்சிட்டியா?” தொடுதிரையில் தெரிந்த அவளின் முகத்தை ரசித்துக் கொண்டே கேட்டேன்.

சும்மா ஜஸ்ட் வாஷ்!!” என்றாள், மெத்தையில் படுத்து கன்னத்தில் கைவைத்தவாறு. நான் அவளை கண்களால் விழுங்கிக் கொண்டிருக்க

நீ குளிக்களையா? யு லுக் டேர்டி!! பாத்தாலே தெரியுது!!” என் வியர்வைக் கரை படிந்த டீ-ஷர்ட்டைப் பார்த்து, முகம் சுழித்தாள்.

அதுக்குள்ள உன் கால் வந்துருச்சு!!”

ம்ம்!! நீ குளி!! நான் பாக்குறேன்!!” கண்ணடித்தாள்.

நடிப்பாக முறைத்தேன். குறும்பாக பார்த்தவள், புருவங்களை உயர்த்தி "என்ன" என்று கேட்க, நான் இரு புறமும் தலையாட்டினேன்.

நல்ல பிள்ளையா இப்போ போய் நீ குளிப்பியாம்!! நீ ஒழுங்கா குளிக்கிறையானு நான் செக் பண்ணுவேணாம்!!” ஏதோ சிறு குழந்தைக்கு சொல்லுவதைப் போல் அவள் சொல்ல

ம்ம்!! அப்புறம்?”

குளிச்சுட்டு வந்து, என்ன கொஞ்சுவியாம்!!” குறும்பு மாறாமல் கொஞ்சினாள். அவளின் கொஞ்சலில் என் மனது அவளது அரவணைப்பை தேட, ஏற்கனவே காலையில் இருந்து என் மனதில் இருந்த ஏக்கம் அதிகமானது. அதே ஏக்கத்துடன்

மது!!”

ம்ம்"

இங்க கிளம்பி வா!! லோன்லியா ஃபீல் பண்ணுறேன்!! பிளீஸ்!!” கெஞ்சினேன்.

மறுபடியும் ஆரம்பிக்காத!!” சலித்துக்கொண்டாள். இரண்டு நொடிக்கு முன்வரை கொஞ்சிக் கொண்டிருந்தவள், இப்பொழுது சலித்துக்கொள்ள, எனக்கு எரிச்சலானது. திரையை விட்டு பார்வையை அகற்றி அமைதியானேன்.

பாப்பா!!” என் முக மாறுதலை உணர்ந்தவள், கொஞ்சினாள்.

“..................” அவளது கொஞ்சல், இப்பொழுது எனக்கு எரிச்சலை தந்தது.

பாப்பா!!” மீண்டும் கொஞ்சினாள், குரலில் கூடுதல் குழைவுடன்.

சரி மது!! குளிக்க போறேன்!! அப்புறம் பேசுறேன்!!” உணர்ச்சி அற்ற குரலில் கூறினேன். குளிர்ந்த தண்ணீர் என் மன ஏக்கங்களை குறைக்கும் என்று எண்ணி.

ஓகே!! குளிச்சிட்டு கூப்பிடு!!”

ம்ம்" வெறுமனே கொட்டினேன் 

ஐ லவ் யு!!” கொஞ்சினாள்

நான் அப்புறம் பேசுறேன்!!” என்றேன் வெறுமையாய்.

இப்போ உனக்கு என்ன ப்ராப்ளம்?” கொஞ்சிக் கொண்டிருந்தவள் எரிச்சலானாள்.

நான் பேசுறேன்" என்று சொல்லிவிட்டு, இணைப்பை துண்டித்தேன்.

நான் துண்டித்த பத்து நொடிகளில் மறுபடியும் அழைத்தாள். மொபைலை எடுத்து சைலன்ட் மோடில் போட்டுவிட்டு குளிக்க சென்றேன். எண்ணியதைப் போலவே குளிர்ந்த நீர் என் மனதை கொஞ்சம் அமைதிக்கொள்ள செய்தது. குளித்துவிட்டு வந்து உடை மாற்றிக் கொண்டு, அப்படியே மெத்தையில் விழுந்தேன், தூங்கிப்போனேன்.

தூங்கி எழுந்ததும் மொபைல் எடுத்து பார்க்க, அது சார்ஜ் இல்லாமல் உயிரற்று கிடந்தது. அதை சார்ஜரில் போட்டுவிட்டு, டேபிளில் இருந்த கடிக்காரத்தைப் பார்க்க, மணி 5 என காட்டியது. வெளியே சென்று, ஒரு சின்ன நடை போட்டுவிட்டு, ஒரு மணி நேரம் கழித்து அறைக்கு திரும்பினேன். மொபைலை உயிர்ப்பித்த அடுத்த நொடியில் இருந்து, "டிங், டிங்" என்ற சத்ததுடன் மெசேஜும், தவற விட்ட அழைப்புகளின் நோட்டிபிகேஷன்ஸ், ஒன்றிரெண்டை தவிர அனைத்தும் மது என்றே இருக்க, சின்ன புன்னகை என் உதட்டில் தோன்றியது. “டிங்!! டிங்!!” சத்தம் ஓய்ந்ததும், மதுவிடம் இருந்த வந்த கடைசி மெசேஜைதான் முதலில் படித்தேன், என் விரல்களின் சதியால்.

“don’t act like a kid!!” என்னை பாப்பா!! பாப்பா! என்றவள் அனுப்பியிருந்த மெசேஜை படித்ததும், சற்று முன், என் உதடுகளில் இருந்த சிரிப்பு காணாமல் போக, மீண்டும் எரிச்சலானேன். அங்கிருந்த சேரில் அமர்ந்து கண்களை மூடினேன், நாளைய நாளின் முக்கியத்துவத்தை எனக்கே நினைவு படுத்தி மனதை அமைதியாக்க செய்த முயற்சியை, மொபைலின் ரிங்டோன் முறியடித்தது. மதுவாகத்தான் இருக்கும், என்னை சமாதானம் செய்யத்தான் அழைத்திருப்பாள் என்ற எதிர்பார்ப்போடு எடுத்தால், திரையில் "தாத்தா" என்று பிரதிபலிக்க, வேறு வழியில்லாமல் எடுத்து பேசினேன்.

நீண்ட நாட்களுக்கு பிறகு, வழக்கத்துக்கு மாறாக நெடு நேரம் பேசினேன் தாத்தாவுடன். இறுதி போட்டியை காண நேரில் வர முடியதாதற்கு "சாரி" சொன்னவர், நாளை இரவே எனக்காக கோவையில் வந்து காத்திருப்பதாக சொன்னது, கொஞ்சம் சந்தோஷத்தை கொடுத்தது. மறுநாள் இறுதி போட்டி என்பதால் சீக்கிரமே சாப்பிட்டுவிட்டு ஏழு மணிக்கெல்லாம் அறைக்கு வந்துவிட்டேன் தூங்குவதற்கு. மெத்தையில் விழுந்த சில நேரங்களுக்குள், என் மொபைல் அடித்தது, மது தான் அழைத்திருந்தாள். “don’t act like a kid” என்று அவள் அனுப்பிய மெசேஜ் நினைவுக்கு வர, மீண்டும் மொபைலை, சைலன்ட் மோடில் போட்டுவிட்டு, பெரும் முயற்சி செய்து உறங்கிப்போனேன்.

**********

முழு மூச்சுடன் வாமப்பில் நான் ஈடுபட்டிருந்தாலும், என் செவி பறைகள் என் மொபைலில் எப்பொழுது ரிங்டோன் அடிக்கும் என்று காத்துக் கிடந்தது. நேற்று பேசும் பொழுது, அவளை வரச்சொல்லி நான் வீம்புபிடிக்க, அவள் மறுக்கவும், சண்டையிட்டுவிட்டு ஃபோனை வைத்தவன்தான், அதன் பின், அவள் எவ்வளவோ முறை அழைத்தும் எடுக்கவில்லை. கடைசியாக நேற்று இரவு ஏழு மணிக்கு அழைத்தாள், நான் எடுக்கவில்லை, அதன்பின் அழைக்கவும் இல்லை.

மது வேறு எப்படி சொல்லி திட்டியிருந்தாலும் எனக்கு வலித்திருக்காது. “ don’t act like a kid” என்று அவள் மெசேஜைப் படித்ததும் எனக்கு வந்தே ஒரே எண்ணம் "அப்போ நான் அவ பாப்பா இல்லையா? “ என்பதுதான். அவள் அனுப்பியிருந்த அர்த்தம் வேறு என்றாலும், அதை உணர்ந்துகொள்ள என் மனம் தெளிவில்லாமல் இருந்தது. இப்பொழுது அந்த தெளிவு வந்திருந்தாலும், ஏனோ என் மனம் அவளே அழைக்கட்டும் என்று, வீம்பு பிடித்தது. அதற்கு இரண்டு காரணம், ஒன்று நானே அழைத்தாள் கண்டிப்பாக என்னை வாட்டி எடுத்துவிடுவாள், இரண்டு இன்று இறுதிப்போட்டி என்பதால், எவ்வளவு கோபம் இருந்தாலும் கண்டிப்பாக கால் செய்வாள், அப்படி செய்யும் பொழுது இன்னும் கோபத்தில் இருப்பது போல் விரைப்புடன் நடித்தால், நேற்றைக்கு நடந்ததை பெரிது படுத்தாமல் என்னை சமாதானம் செய்வதிலேயே குறியாய் இருப்பாள்.

"இநாப்!!, ரிலாக்ஸ்!!” என்று கோச் சொல்ல, சிறிது நேரம் ரிலாக்ஸ் செய்துவிட்டு, கிட் பேக்கை எடுத்துக்கொண்டு ஸ்டேடியத்தை நோக்கி நடந்தேன்.

ஆட்டம் தொடங்க இன்னும் அரைமணிநேரம் இருக்க, நான் ஆடவேண்டிய கோர்ட்டுக்குள் நுழைந்து சுற்றிலும் பார்வையை படர விட்டேன். அரங்கில் பத்து சதவிகித இருக்கைகள் கூட நிரம்பவில்லை, அந்த ஆட்டத்தில் எதிராளி மகாராஷ்டிராவைச் சார்ந்தவனாக இருக்க நானோ தமிழ்நாடு, தன் மண்சார்ந்த வீரர்கள் அனைவரும் வெளியேறி இருக்க, இந்த ஆட்டத்தை காண பெரிதாக யாருக்கும் விருப்பமில்லை போலும் என்று நினைத்தவாறு எனக்கு என்று ஒதுக்கப்பட்ட இருக்கையில் அமர்ந்தேன்.

மதுவிடம் பேசாமல் இருப்பது மனதை உருத்தவே, மொபைலை கையில் எடுத்து மதுவுக்கு அழைத்தேன் சுவிட்ச் ஆப் என்றே வர, கோபம் தலைக்கேறியது. இரண்டு பெருமூச்சுகள் இழுத்து விட்டு என்னை சமன் படுத்தி கொண்டு நடக்க இருக்கும் போட்டியில் முழுதாக என் கவனத்தை திருப்பினேன்.

பரஸ்பர அறிமுகத்திற்காக அழைக்கப்படும் போதுதான், என் மொபைலில் "டிங்" என்ற சத்தம் வந்தது. எடுத்துப் பார்த்தால் நேத்ராதான் மெசேஜ் அனுப்பியிருந்தாள் வழக்கமாக எனக்கு வாழ்த்துக்கள் சொல்லி, மெசேஜை படித்துவிட்டு அது மதுவிடம் இருந்து இல்லை என்ற ஏமாற்றம் தந்த எரிச்சலில், "ப்ச்" என்றவாறு தலையை ஆட்டிவிட்டு கோர்ட்டுக்குள் நுழைந்தேன். மது கண்டிப்பாக எங்களது சண்டையில் கோபமாக இருப்பதை நேத்ராவிடம் சொல்லியிருப்பாள், நேத்ராதான் மனது கேட்காமல் மதுவுக்கும் சேர்த்து எனக்கு மெசேஜ் அனுப்பிவிட்டு, மதுவை சமாதானம் செய்துகொண்டிருப்பாள் என்று புரிந்தது.

ஒரு மணி நேரம் கழித்து,

ஹோவ் டூ யு ஃபீல் நோவ்?” என்று கேட்ட ரேபரீயிடம், கட்டை விரலை உயர்த்திக் காட்ட,

இட்ஸ் டைம்!!” என்று மணிக்கட்டை காட்டிவிட்டு, மேட்ச் கோர்ட் நோக்கி சென்றார்.

எழுந்தது இருபுறமும் இடுப்பை வளைத்து, வலி குறைந்திருப்பதை உறுதி செய்து கொண்டு, உடலின் ஒவ்வொரு பாகத்தையும் நீட்டி மடக்கி, மீண்டும் ஆடுவதற்கு என்னை தயார் செய்தேன். முதல் இரண்டு சுற்றுக்களை மிகவும் எளிதாக இருபது நிமிடங்களிலேயே வென்றுவிட, இரண்டாம் சுற்றின் பிற்பகுதியில் நான் அடித்த பந்தை அது எதிராளின் கோர்ட்டில் பிட்ச் ஆகும் முன்பே (a volley shot), அவன் முன் வந்து, என் பக்கத்து மற்றொரு முனைக்கு லாவகமாக திருப்பிவிட, என் உடலின் விசைக்கு எதிராக உடனே திரும்பி, பந்து இரண்டாவது முறை தரையை தொடும் முன்பே, எதிராளி திருப்பி அடிக்க முடியாத விதத்தில், அவனது baselineக்கு நெருக்கத்தில் தரையை தொடுமாறு, பலம் கொண்டு அடிக்க, அது அப்படியே நிகழந்தது.

அந்த ஷாட்டை ஆடுவதற்கு, நான் எடுத்த அதிக சீரத்தையின் காரணமாக, இடுப்பில் வலது பக்கத்தில் மிகவும் லேசாக ஆரம்பித்த வலி, அடுத்த சுற்றில் என் ஆட்டத்தின் வேகத்தை வெகுவாக பாதிக்க, மிகவும் போராடி அந்த சுற்றை தோற்றுவிட்டேன். வலியும் அதிகமாகவே, இஞ்சூரி பிரேக் எடுத்துக்கொண்டு, அணியின் பிஸியோவின் சிகிச்சையின் பலனாக மீண்டும் விளையாட கோர்ட்க்குள் வந்தேன்.

ஆர் யு ரெடி எங் மேன்" ரேபரீ மீண்டும் கேட்க, அவரைப் பார்த்து சிரித்தேன்.

குட்!! தி கேம் இஸ் கெட்டிங் இன்டரேஸிட்டின்க்!! ஐ ஹேட் இஞ்சூரி டிசைடிங்க தி வின்னர்!!” என்றார்

நான் என் கோர்ட்டில் என் பக்கத்துக்கு செல்லும் போது, எதிராளியின் டீம் மெம்பர் ஒருவர், ஏதோ நான் வேண்டும் என்றே காயமாகிவிட்டது போல் நடிப்பதாகவும், opponent-இன், ஃபார்ம் தடைபடுவதரக்கே நான் அப்படி நாடக்கமாடுவதாகவும் சொல்ல, பொறுக்க மாட்டாத நான், இருபது நிமிடங்களில் அவன் இரண்டு சுற்றுக்களை என்னிடம் தோற்றதை அவனுக்கு நினைவு படுத்த, சொற்கள் சிலம்பம் வீச, சலசலப்பானது. எதராளி மஹாராஷ்ட்ரா என்பதாலும், கடந்த ஒரு பத்து வருடங்களாக மஹாராஷ்ட்ராவின் ஆதிக்கம் தான், இந்தியா டென்னிஸ் களத்தில் வேரூன்றி இருந்ததாலும், அவர்கள் பக்க கூச்சலே மேலோங்கி இருந்தது. ரேபரீன் குறிக்கிடுக்கு பின்பே நிலைமை கட்டுக்குள் வந்தது.

மீண்டும் ஆட்டம் துவங்க, சிறிது நேரத்துக்கு முன் நடந்த சலசலப்பு, என் உடலின் வெப்பத்தை ஏகபோகமாக ஏற்றிவிட்டிருந்தது. முதல் இரண்டு சுற்றுக்களை என்னிடம் எதிர்ப்பே இல்லாமல் இழந்துவிட்டு, மூன்றாவது சுற்றில் காயத்துடன் ஆடிய என்னிடம் முப்பது நிமிடம் போராடி வென்றுவிட்டு, அபாண்டமாக பழிபொடும் எதிராளியை, ஏளனாமாக ஒரு பார்வை பார்த்தேன், அவன் பந்தை என்னை நோக்கி அடிக்கும் முன்பு.

“don’t place too much stress in your lower back!!” என்று பிஸியோவும்

“just place the ball, don’t go too hard on yourself!! play smart” என்று கோச்சும் குடுத்த, அறிவுரைகள் எல்லாம் காற்றில் பறக்க,

எதிராளி என்னை நோக்கி பந்தை அடித்த பதினைந்துஐந்து நிமிடங்களில், ஒரு புள்ளி கூட விட்டுக் கொடுக்காமல் வென்றிருந்தேன். இதற்கும் அவன் வேண்டும் தன் காலனியின் கயிற்றை வேண்டும் என்றே, பிரித்து கட்ட, இல்லாத வியர்வையை துடைக்க, இரண்டு முறை ராக்கெட் மாற்ற என, எப்படி எல்லாம் முடியுமோ, அப்படியெல்லம் காலதாமதம் செய்தான், நான் ஒவ்வொரு முறை புள்ளிகளை வெல்லும் போதும். அவனது நோக்கமெல்லாம் நான் எடுத்துக்கொண்ட வலி நிவாராணியின் தாக்கம் குறைந்தால், மீண்டும் என் ஆட்டம் ஆட்டம் காணும் என்பதுதான். கடைசி ஐந்து நிமிடங்கள் மட்டுமே இடையூறு செய்யாமல் தொடர்ந்து ஆடினான், அதுவும் ரேபரீயின் எச்சரிக்கைக்கு பின்.
[+] 2 users Like Doyencamphor's post
Like Reply


Messages In This Thread
RE: அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பன் - by Doyencamphor - 31-10-2020, 11:19 PM



Users browsing this thread: 6 Guest(s)