நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#30
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 07 - ராசு

[Image: nivv.jpg]

ன் அறைக்குள் நுழைந்த மகேந்திரனுக்கு தன் மீதே கோபமாய் வந்தது.

‘அவள்தான் தெரியாமல் வந்து இடித்துவிட்டாள் என்றால் எனக்கு எங்கே அறிவு போனது?’


அவளைத் தள்ளி நிறுத்திவிட்டு இரண்டு திட்டு திட்டிவிட்டு வந்திருந்தால் இப்போது இந்தக் குழப்பம் வந்திருக்காது.’


‘ஏன் அவளை அந்த நேரத்தில் திட்டவில்லை. எப்போதும் போல் அவளைத் திட்டி இருந்தால் அவள் என்னை விட்டு ஒதுங்கியிருப்பாள்.’



‘இப்போது அவள் என்னை ஆச்சர்யத்துடன் பார்த்துவிட்டாளே? அவள் மனதில் சந்தேகம் தோன்றியிருக்குமோ?’



‘ஒரு சின்னப் பெண் என்னை ஆட்டுவிக்கிறாளே?’



தலையைப் பிடித்துக்கொண்டு கட்டிலில் அமர்ந்துவிட்டான்.



அவளைப் பிடிக்காத மாதிரி பேசிவிட்டு இப்போது அவளது ஒரு தொடுகைக்கே மனம் தடுமாறிவிட்டது என்றால் தான் எந்த அளவிற்கு மனதிடம் இல்லாமல் இருக்கிறோம்.



ஒருவேளை அவளிடம் நன்றாகப் பேசி பழகினால் இந்த தடுமாற்றம் இராதோ?



ஆனால் அவளைக் கண்டாலே என்னால் சாதாரணமாக இருக்க முடியவில்லையே.



அந்த இடத்தில் யுகேந்திரன் இருந்திருந்தால் என்ன நினைத்திருப்பான்?



அவனுக்குப் பிரியமானவளை அழைத்து வந்திருக்கிறான்.



அவனுக்கு முதன் முதலில் அவளைப் பார்த்த அந்தக் காட்சி கண் முன்னே வந்து நின்றது.

அவளது மலர்ந்த சிரிப்பைக் கண்ட அவனுக்கு முதலில் திகைப்பாக இருந்தது.

ஒரு சில பெண்கள் ஏற்கனவே அவனது வசதியைக் கண்டு அவனிடம் சிரித்து வழிந்திருக்கிறார்கள்தான். அப்போதெல்லாம் அவன் மனம் தடுமாறியதில்லை. இப்போது ‘யாரென்றே தெரியாத ஒரு சிறு பெண் தன்னைக் கண்டு சிரித்ததும் ஏன் என் மனம் தடுமாறுகிறது?’


தன்னை மீறி அவளுக்கான பதிலைக் கொடுத்துவிடுவோமோ? என்று அவன் பயந்துகொண்டிருந்தபோதே கல்லூரியின் முதல்வர் அவனை வரவேற்க வந்துவிட்டார். அவளுக்குக் கொடுக்க வேண்டிய பதில் புன்னகையை அவருக்கு கொடுத்துவிட்டான். அவளும் அவனிடம் எதையும் எதிர்பார்த்ததாய் நினைவு இல்லை.



ஆனால் முதன் முறையாக தன்னைக் கண்ட அவள் ஏன் அப்படி சிரிக்க வேண்டும்?



அப்புறம்தான் விழாவிற்கு பொறுப்பேற்றுக்கொண்ட பேராசிரியர் அவளுக்குத் தன்னை வரவேற்கும் பொறுப்பைக் கொடுத்திருக்கிறார் என்ற விபரம் தெரிந்தது.



அவர் அடுத்தடுத்தும் அவளை அழைத்து வேலைகளைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.



பரிசுகள் வழங்கும்போது அவள்தான் அதிகமானவற்றைத் தட்டிக்கொண்டு சென்றாள்.



ஒவ்வொரு முறையும் அவனிடம் இருந்து பரிசினை பெறும்போது அவள் சிரித்தது மனதிலேயே பதிந்துவிட்டது.



பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பிறகு கலைநிகழ்ச்சிகள் ஆரம்பமானது.



அதில் அவள் பாரதியாரின் பாடலுக்கு ஆடிய பரதநாட்டியமும் அவன் மனதில் பதிந்தது. அத்துடன் அவள் தன் தம்பியிடம் நடந்துகொண்ட விதமும்.



அவளைக் காணும்போதெல்லாம் தம்பியிடம் காணப்பட்ட மகிழ்ச்சியும் அவன் மனதில் பதிந்தது. அவனுக்குப் பிரியமானவள் என்ற உண்மையும்.



அதன் பிறகு சில நாட்கள் கனவிலும் அவள் முகம் அவனைத் துரத்தியது.



பார்த்த மாத்திரத்திலே ஒருத்தி இப்படி தன்னைச் சலனப்பட வைக்க முடியும் என்று அவன் நினைத்தே பார்த்திரவில்லை.



அவள் இங்கே வரப்போகிறாள் என்று தெரிந்த உடனே ஒரு பக்கம் சந்தோசம் என்றால் மறுபக்கம் அவனுக்குத் தன்னை நினைத்தே பயம்.



அவளைத் தன்னை விட்டு விலக்க வைப்பதற்காக சற்று கடுமையாக நடந்துகொண்டான். அன்று அவளிடம் அவன் திட்டும்போது அவள் முகம் மாறியது கண்டு அவனுக்கே சற்று வருத்தமாகத்தான் இருந்தது.



அவள் நல்லவளோ? இல்லை கெட்டவளோ? தெரியாது. தங்களிடம் உள்ள பணத்திற்காகத்தான் பழகுகிறாளோ? அதுவும் தெரியாது. ஆனால் தம்பிக்கு பிடித்தமானவள்.
என்று அவனது தாயார் நீதான் தம்பியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொன்னாரோ? அன்றே அந்த சிறுவயதிலேயே அவன் மனதில் தம்பி மீது அதீத பாசம் உண்டாகிவிட்டது.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 13-03-2019, 11:56 AM



Users browsing this thread: 9 Guest(s)