Adultery திருமதியின் தீராத் தாபம்
#77
'இந்த உலகத்துலயே எனக்கு உன்னத்தான் ரொம்ப புடிக்கும். உயிர் மேல ஆசை இருக்கறதே உன்னால தான்' என்று உருகி உருகிக் காதலித்தவள் (அடுத்த பாகத்தின் நாயகி) அதை மெய்ப்பிக்கும் விதமாக வேறொருவனை மணம் முடித்துக்கொண்டாள். வாழ்க்கையின் முதல் பெரிய தோல்வியாக நினைத்து விட்டேத்தியாகத் திரிந்தேன். கிடைத்தவரிகளிடம் எல்லாம் புலம்பித் தீர்த்தேன்.

எதையும் ஆற்றிடும் காலம் என்னையும் ஆற்றுப்படுத்தியது. 'ஒன்றை மறப்பதற்கு மற்றொன்றை நினை' என்று அனுபவம் மிக்க சீனியர் நண்பர்கள் சொன்னதை ஏற்ற்றுக் கொண்டு மூவ் ஆன் ஆக ஆரம்பித்திருந்தேன்.

அதேநேரம் வேறொரு நிறுவனமும் மாறியிருந்தேன். புதிய வேலையும் புதிய சூழலும் என்னை சற்று தேற்றியிருந்தது.

இப்புதிய நிறுவனம் சற்று தொலைவில் இருந்த காரணத்தால், கம்பனி பேருந்திலேயே பயணிக்க வேண்டியதாய் இருந்தது. அலுப்பாய் இருந்த அந்தப் பயணம் சில நாட்களிலேயே இன்பமாய் மாறிற்று.

அந்த மாற்றத்திற்குக் காரணம் ப்ரியா.

தாபம் -2

ப்ரியா அவ்வருடம் புதிதாக எங்கள் நிறுவனத்தில் சேர்ந்திருந்தாள். வழக்கம்போல மாலையில் வேலை முடிந்து பேருந்தில் சோர்வாய் ஏறி அமர்ந்தேன். என் நிறுத்தத்திற்கு முதல் நிறுத்தத்தில் பேருந்து நின்றதும், எனக்கு மூன்று இருக்கைகள் முன்னால் இருந்து வெளியே வந்த பெண்ணைப் பார்த்தேன்.

பெண்ணின் பின்ல் இருனாந்து பார்க்கும் போது நம் கண்கள் எங்கே செல்லுமோ அங்கே சென்றது. அழகை மறைக்க அவள் அணிந்திருந்த இறுக்கமான கருப்பு ஜீன்ஸ்  மறைப்பதற்கு பதில் பின்னழகை படம் போட்டு காட்டியது.

அப்பா என்ன ஒரு ஷேப்! என்ன செமயான ஸ்ட்ரக்ச்சர்! என்று வியந்துகொண்டிருக்கும் போதே இறங்கிச் சென்றுவிட்டாள். நம் அலுவலகத்தில் இப்படியொரு பெண்ணா? அதுவும் நம் பேருந்தில்! எனக்குள் ஆசைத்தீ பற்றிக்கொண்டது. அதன்பின் அவளை கவனிக்க ஆரம்பித்தேன்.

நகரத்தில் மேல்தட்டுக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள் என்பது அவள் நடையிலும் உடையிலும் உடலிலும் செயலிலும் பேச்சிலும் அப்பட்டமாகத் தெரிந்தது. நானும் அதுபோலத்தான் என்பதாலும் இதுபோன்ற பெண் தோழிகள் இருந்ததாலும் பெரிதாக பிரம்மிப்போ தயக்கமோ இருக்கவில்லை.

தனியாகத் தான் நிறுத்தத்திற்கு வருகிறாள், தனியாகத்தான் அமர்கிறாள் என்பதை உறுதிசெய்து கொண்டேன். அவளுக்கு பக்கத்து இருக்கையிலோ அல்லது பின்னாலோ அமர்ந்து கொண்டேன். 20 பேருக்கு உள்ளாகவே பயணிக்கும் பேருந்து என்பதால் இருக்கை பிடிப்பதில் சிரமமில்லை. பயணத்தில் பெரிதாக அவள் மொபைலை நோண்டுவதுமில்லை. பாட்டு கேட்பதுடன் சரி. அவளுக்கு காதலன் என்று யாருமில்லை என்று ஊகித்துவிட்டேன். பேச்சு கொடுப்பதற்கு வாய்ப்பு வாய்க்காமல் இருந்தது.

ஒரு நாள் மாலை, அவளுக்குப் பின்னால் இருக்கையில் அமர்ந்திருந்தேன். பேருந்து கிளம்ப இன்னும் சிலநிமிடங்கள் இருந்ததால் உள்ளே 4,5 பேர் தான் இருந்தோம். ஒருவழியாக தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

'ஹாய். புதுசா ஜாயின் பண்றிருக்கீங்களா? எனக் கேட்டேன்.

'யா' என்றாள்கொஞ்சம் திடுக்கிட்டு தலையை பின்னால் திருப்பியபடி.

'நைஸ். எந்த அக்கவுண்ட்?'

'****'

'உங்க பேர்?'

'ப்ரியா. நீங்க?'

'****'

'ஓகே'

அன்று அதற்குப் பிறகும், அடுத்த 2,3 நாட்களுக்கும் வேறு எதுவும் நடக்கவில்லை. பின்பு ஒருநாள் மாலை அவளுக்கு முன்னதாகவே பேருந்தில் அமர்ந்திருந்தேன். கொஞ்ச நேரத்தில் வந்தவள் சரியாக எனக்கு முன் இருக்கையில் அமர்ந்தாள். மனது படபடக்க -

'ஹாய்' என்றேன்

'ஹாய்' என்றாள் தலையை திருப்பி

'சோ எப்படி போகுது வேலை?' (கேவலமான கான்வர்சேஷன் ஸ்டார்ட்டர் தான்)

'யா. ஓகே'

'எல்லாம் செட்டாயிருச்சா?'

'யா'

ஒற்றைச் சொல் பதிலால் கொஞ்சம் கடுப்பாகியவன் இதற்குமேல் இழுக்க வேண்டாம் என்று

'வாட்சாப்ல இருக்கீங்களா? எனக் கேட்டேன்.

'யா'

(அடிங்கொக்கா மவளே என நினைத்துக்கொண்டு)

'நம்பர் சொல்லுங்க' என்றேன்

வலது கையை லேசாக பின்னால் நீட்டினாள். புரிந்துகொண்ட நான் என் மொபைலை அன்லாக் செய்து அவள் கையில் வைத்தேன். அவள் எண்களை தட்டி, திருப்பித் தந்தாள்.

'தேங்க்ஸ்' என்றுவிட்டு அவள் எண்ணை பதிந்துகொண்ட கையேடு உடனே வாட்சப்பை திறந்து

'ஹாய்' அனுப்பினேன்

'ஹாய்' அனுப்பினாள்

'நான் தான் அது' என்று முன்னால் சென்று அவளிடம் சொன்னேன்.

'ஓகே' என்றாள்.

அதன்பிறகு வந்த நாட்களில் நான் அனுப்பும் குறுஞ்செய்திகளுக்கு எப்போதாவது பதில் அனுப்புவாள். அதுவும் இரண்டு பதிலுக்கு மேல் உரையாடல் நீளாது. அவளுக்கு விருப்பமில்லை என்று புரிந்து செய்தி அனுப்புவதை பேசுவதை நிறுத்திவிட்டேன்.

சுமார் ஒரு வாரத்திற்கு பிறகு பேருந்தின் மாலைப் பயணத்தில் -

'ஹாய்'

அவளாக முதன்முதலில் எனக்கு அனுப்பிய செய்தி என் போன் திரையில் பளபளத்தது. உற்சாகத்தில் மனது துடிக்க

'ஹாய்' என்றேன்.

'பிசி?'

'இல்ல. வழக்கம் போலத்தான்'

அத்துடன் அந்த உரையாடல் செத்துப் போனது.

இதேபோல் 2,3 முறை நடக்க, ஒன்று அவளுக்கு நம்மை பிடித்திருக்கிறது ஆனால் முழு நம்பிக்கை வரவில்லை. அல்லது அலையவிட்டு வேடிக்கை பார்க்க நினைக்கிறாள் என்று ஒரு முடிவிற்கு வரமுடியாமல் அடப்போடி என்று சலுப்புடன் அப்படியே விட்டுவிட்டேன்.

அதன்பின்னர் ஒரு மாதத்திற்கு மேல் அவளைப் பேருந்தில் பார்க்கவில்லை. சில ஆயிரம் பேர் வேலை செய்யும் நிறுவனம் என்பதால் அங்கே கண்ணில் படவும் வாய்ப்பு மிகக் குறைவு. இனி பேருந்தில் வேலையில்லை என்று நானும் அலுவலகத்தின் அருகிலேயே வீடு பிடித்து தினமும் காரில் வேலைக்கு வந்து சென்றேன்.

4,5 மாதங்களுக்குப் பின் ஒருநாள் மாலை கார் நிறுத்துமிடம் நோக்கி சென்றுகொண்டிருந்தேன். அப்போது

'****' என்று என் பெயர் சொல்லி யாரோ கத்தி அழைப்பது கேட்டது.

குரல் வந்த திசைநோக்கிப் பார்த்தேன். பார்க்கிங்கின் எல்லையில் கையை மேலே தூக்கி ஆட்டியபடி சேலையில் ஒரு பெண் என்னை அழைப்பது தெரிந்தது.

அருகில் சென்றேன்.

ப்ரியா தான் அழைப்பது என கொஞ்சம் கிட்டே சென்றதும் அடையாளம் கண்டுகொண்டேன்.

இது தான் முதன்முறை அவளை நேருக்குநேராக தரைமீது பார்ப்பது. முன்னால் இருந்து பார்ப்பதற்கும் அழகாகத் தான் இருந்தாள். கட்டிப்பிடித்தால் அவள் உச்சந்தலை என் தாடையில் இடிக்கும் உயரம். கச்சிதமான உடல்வாகு. அகங்காரத்துடன் நின்ற மார்புகள். ஒரு பக்கமாக இடுப்பை சாய்த்துக்கொண்டு ஸ்டைலாக நின்றிருந்தாள்.

அடர்பச்சையும் கருப்பும் கலந்த கொஞ்சம் மெல்லிசான டிசைனர் சேலை அணிந்திருந்தாள். அதற்குப் பொருத்தமான கருப்பு பிளவுஸ், கம்மல், சன்னமான சங்கிலி, கொஞ்சம் லிப்ஸ்டிக். தொப்புளில் இருந்து 2 அங்குலம் கீழே கட்டியிருந்த அந்த மெல்லிசான சேலையில் அவள் வயிறும், முந்தானைக்கு சென்ற மடிப்பில் மறையாத பாதி தொப்புளும் நிழல் போல தெரிந்தன.

'ஹேய்' என்றேன் அருகில் சென்று.

'ஹாய். அடையாளம் தெரியுதா?' என்றாள் 

'எதோ லைட்டா'

'ஹ்ம். எப்படி இருக்கீங்க?'

'சூப்பர். நீங்க? பாத்து ரொம்ப நாள் ஆச்சு'

'ஆமா. ****** போயிருந்தேன்'

'ஹே நைஸ். ஆன்சைட்டா?'

'நோ. என் ஹாஸ்பேண்ட் அங்க தான் இருக்காரு'

'பார்ரா. சொல்லவேயில்லை? கங்கிராட்ஸ்'

'ஆனிவர்சரியே முடிஞ்சாச்சு' என்று புன்னகைத்தவாறே சொன்னாள்.

'ஓ ஓகே' என்று நானும் புன்னகைத்துவிட்டு

'இன்னைக்கு என்ன பேர்வெல்லா?' என்றேன் அவள் சேலையை கைகாட்டி.

'நோ நோ. எத்தினிக் டே. அதுக்கு தான்' என்றாள்.

'அழகா இருக்கு'

'கார்ல வந்தீங்களா?' என பார்க்கிங்கை நோக்கி கழுத்தை அசைத்துக் கேட்டாள்.

'ஆல்வேஸ்'

'டெய்லி? இந்த ட்ராபிக்ல எப்படி அவ்ளோ தூரம்?'

'இல்ல. நான் இப்போ *****க்கு ஷிப்ட் ஆயிட்டேன்'

'ஹே நானும் அங்கதான் இருக்கேன். அங்க எங்க?'

அடையாளம் சொன்னேன். பதிலுக்கு அவள் இருக்கும் இடம் சொன்னாள்.

'சரி மீட்டிங் இருக்கு. சீ யூ' என்று சொல்லிவிட்டுப் பிரிந்தாள்.

அவள் என்னிடம் ஏன் பட்டும்படாமலும் நடந்துகொண்டாள் என்பது இப்பொது புரிந்தது. கல்யாணமான பெண்ணையா சைட் அடித்தோம் என்று நொந்துகொண்டேன். 

சிறகை விரித்தால் வானமே எல்லை; ஊரில் வேறு பெண்ணா இல்லை என்று அவளை மறந்துவிட்டு வேலையை பார்த்துக்கொண்டிருந்தேன்.
[+] 2 users Like Pothos's post
Like Reply


Messages In This Thread
RE: திருமதியின் தீராத் தாபம் - by Pothos - 23-09-2020, 11:44 PM



Users browsing this thread: 2 Guest(s)