நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#29
இரவு உணவுக்கு வரும்போது இருவரும் அருகருகே அமர்ந்துகொண்டு சிரித்துப்பேசியவாறு இருந்தனர்.

அவன் பேசாமல் போய் அமர்ந்தான். பெரியவர்கள் இருவரும் வர அனைவரும் சாப்பிட ஆரம்பித்தனர்.
சாப்பிட்ட பிறகும் கிருஷ்ணவேணி கூடவே அவளது அறைக்குச் சென்றான் யுகேந்திரன்.
தனது அறைக்குள் நுழைந்த மகேந்திரனுக்கு இரவு வணக்கம் கூறியபடியே அவளது அறைக்குள் நுழைந்தான்.
பதில் வணக்கம் கூட எதிர்பார்க்காது தம்பி எதிர் அறைக்குள் நுழைந்துவிட தனது கட்டிலில் வந்து படுத்தவனுக்கு உறக்கம் பிடிக்கவில்லை.
தனக்குத்தானே எத்தனை கெஞ்சி பார்த்தும் உறக்கம் அவனுக்கு வரவேயில்லை. அதன் பிறகு எப்போது உறங்கினான் என்று தெரியவில்லை.
காலையில் வழக்கம்போல் எழுந்துவிட்டான். இன்று விடுமுறை நாள். இருந்தும் எழுந்துவிட்டான்.
காலையிலேயே தம்பியின் குரல் எதிர் அறையில் கேட்டது. அவன் இத்தனை சீக்கிரம் எழுந்திரிக்கவே மாட்டான்.
பரவாயில்லை. அவள் வந்ததினால் இத்தகைய நல்ல மாற்றம் நிகழ்ந்திருந்தால் அவளது வருகை நல்ல விசயம்தான்.
குளித்துக்கிளம்பி கீழே வந்தான். அதற்குள் அவர்கள் இருவரும் கிளம்பி வந்திருந்தனர்.
காலை உணவு முடிந்ததும் மீண்டும் வந்து அமர்ந்தனர். அப்போது வனிதாமணி சமையல் அறைக்குள் வேலை இருப்பதாக கிளம்ப அவரை அங்கேயே அமர்த்தினாள் கிருஷ்ணவேணி.
“அத்தை. கொஞ்சநேரம் இங்கேயே உட்காருங்க. எப்போதும் வீட்டிலே வேலையேப் பார்த்துக்கிட்டு இருக்கீங்க. கொஞ்ச நேரம் உங்களுக்காக ஒதுக்குங்க.”
அவரும் அங்கேயே அமர்ந்துவிட்டார்.
அவரிடம் அவரது சின்ன வயது பற்றிக் கேட்க அவரும் அதற்குள் ஆழ்ந்துவிட்டார்.
அவர்களிடம் பேசிக்கொண்டிருந்ததில் அவர் மனம் லேசானது. தனது இளமையே திரும்பிவிட்டது போல் ஒரு சமயம் அவருக்குத் தோன்றிவிட்டது.
எப்போதும் தனிமையிலேயே அவர் நாட்களைக் கழித்ததுதான் அதிகம்.
யுகேந்திரன் வீட்டில் இருக்கும்போது அந்த தனிமை உணர்வு காணாமல் போய்விடும்.
இப்போதும் அதை உணர்ந்தார்.
“அத்தை. இனி ஒவ்வொரு விடுமுறை நாளும் நாம இப்படி பேசிக்கிட்டு இருக்கனும். சரியா?”
என்று கேட்டாள்.
ரவிச்சந்திரனும் மகேந்திரனும் எந்த பேச்சிலும் கலந்துகொள்ளவில்லை என்றாலும் கவனித்துக்கொண்டுதான் இருந்தார்கள்.
மறுநாள் இருவருக்கும் கல்லூரி ஆரம்பமாகிறது.
அதனால் அன்றைய இரவு தாமதப்படுத்தாமல் இருவரும் சீக்கிரமே உறங்கச்சென்றுவிட்டனர்.
த்தை. என்னை ஆசிர்வாதம் பண்ணுங்க.”

வனிதாமணியின் கால்களில் விழுந்தாள் கிருஷ்ணவேணி.
எளிய கைத்தறி சுடிதார் அணிந்திருந்தாள்.

“நல்லாரும்மா.”


மனதார அவளை ஆசிர்வாதம் செய்துவிட்டு அவளைத் தூக்கினார்.

“பார்த்து போங்க.”

என்று மகனிடமும் அவளிடமும் கூறினார். இருவரும் தலையாட்டியபடி கிளம்பினர்.


அவனோடு செல்வாள் என்று மகேந்திரன் எதிர்பார்த்திருக்க அவள் தன் ஸ்கூட்டியை எடுத்தாள். யுகேந்திரன் தனது வண்டியை எடுத்தான்.



ன்று மாலை.



மகேந்திரன் சீக்கிரம் திரும்பிவிட்டான்.



அவன் வீட்டிற்குள் நுழையும்போது யுகேந்திரன் மாடியில் இருந்து வேகமாக கீழே ஓடிவந்தான்.



என்ன அவசரம்? மெதுவாக வந்தால் என்ன? என்று மனதிற்குள் தம்பியைத் திட்டியவாறே உள்ளே விரைந்தான். அதற்குள் அவன் வீட்டின் பின்பக்கம் சென்றுவிட்டான்.



மகேந்திரன் தனது அறைக்குச் செல்வதற்காக மாடியில் ஏற ஆரம்பிக்க எதிர்பாராத விதமாய் அவன் மீது வந்துமோதினாள் கிருஷ்ணவேணி. கீழே விழ இருந்தவளைத் தாங்கிப் பிடித்தான்.



அவனுக்கு உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததுபோன்று உணர்ந்தான்.



அது தப்பு என்று அறிவு இடித்துரைத்தது. அவளை விடு என்று கட்டளையிட்டது. ஆனால் மனமோ அந்த அண்மையை விரும்பியது. அவன் மனக்கண் முன் தம்பியின் முகம் வந்து போனது.



அவள் முகத்தைப் பார்த்தான். அவள் அவனுக்குப் பயந்து கண்களை மூடியிருந்தாள்.



அவன் விட்டால் விழுந்துவிடுவாள்.

அவளைத் தன்னை விட்டு விலக்கி நிறுத்தினான்.

“சாரி.” என்றான்.


அவள் கண்களைத் திறந்தாள். அவனை ஆச்சர்யத்தோடு பார்த்தாள்.



அவளது பார்வையை எதிர்கொள்ள முடியாமல் தனது அறைக்கு விரைந்தான்.



தன்னைத் திட்டுவான் என்று அவள் எதிர்பார்த்திருக்க அவனோ சாரி என்றுவிட்டு செல்கிறானே?
அவனை யோசனையோடு பார்த்துக்கொண்டிருந்தாள்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 10-03-2019, 11:16 AM



Users browsing this thread: 24 Guest(s)