வீட்டுக்காரர்(completed)
#54
வீட்டுக்காரர் - பகுதி - 11

எனக்கு கண்டிப்பாக தெரியும் ரோஷன் என்னை தொடர்ந்து வருவான் என்று. அது போலவே வந்து என் தோளை பிடித்து நித்து என்னாச்சு உனக்கு ஜோக் எல்லாம் ரசிக்காம கோப படறே ஹே சத்தியமா நான் உனக்கு டெம்பரரி தான் வீட்டிலே சம்மைக்க முடியலைனா கொஞ்ச நாள் ஹோட்டலில் வாங்கி சாபிடுவது போல தான் என்ன அங்கே சாப்பிட சாப்பிடறவங்க பணம் குடுக்கணும் இங்கே சாப்பாடே பணம் குடுக்குது கமான் சரி கிளம்பு முதலில் என் நண்பனின் அறைக்கு போவோம் பிறகு நம்ம பஞ்சாயத்தை வச்சுக்குவோம் என்று சொன்னதும் நான் சற்று அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்து ரோஷன் உன் நண்பனின் வீடு தானே இங்கே இருக்குனு சொன்னே இப்போ அறைன்னு சொல்லற என்று கேட்க அவன் என்னை அருகே இழுத்து கொண்டு ஐயோ அவன் என்னை போல தனிக்கட்டை அவனுடைய சொந்த ஊர் தமிழ்நாடு இங்கே காபி எஸ்டேட் லீஸ் எடுத்து இருக்கான் கொஞ்ச நாள் தான் இங்கே இருப்பான் அது மட்டும் இல்ல ரூம்னா நீ நினைக்கிறா மாதிரி சின்ன அறை இல்ல எல்லா வசதிகளும் இருக்கிற ஆனால் எல்லாமே ஒரே அறையில் இருக்கும் நீ வா முதலில் அங்கே போகலாம் என்று இழுக்க ரோடுக்கு வந்தாச்சு வேறு வழியில்லை என்பதால் காரில் ஏறி கொண்டேன்.




கூர்க் நகருக்குள் நுழையும் போதே அங்கே தெரிந்த பெண்களின் அழகு நளினம் எடுப்பான தோற்றம் எல்லாம் அழகின் அடையாளம் இது தான் என்று புரிய வைத்தது. இது வரை எனக்கு மலையாள பெண்கள் தான் இருப்பதிலேயே அழகு என்று நினைத்து இருந்த எனக்கு இன்று அழகின் இலக்கணம் திருத்தி எழுத பட்டது. ஆனால் ஒரு அதிசயம் ரோஷன் அந்த பெண்களை பார்த்து எந்த வித சலனுமுமே இல்லாமல் கார் ஓட்டி கொண்டிருந்தான். கூட்டமான தெருக்களை கடந்து ஒரு அமைதியாக மரங்கள் நிறைந்த சாலை பளிச்சென்று சுத்தமாக இருக்க ஒரு இரு மாடிகள் கொண்ட வீட்டின் முன் காரை நிறுத்தினான். பிறகு என்னிடம் நித்து காரிலேயே இரு நான் என் நண்பன் இருக்கிறானா என்று பார்த்து விட்டு வருகிறேன் என்று சென்றான். திரும்பி வரும் போது அவன் தனியாக வராமல் கூட ஒருவர் வந்தார். ரோஷன் என்னிடம் நித்தியா இது என் நண்பன் விக்ரம் என்று அறிமுகம் செய்ய நான் கை கூப்பி வணக்கம் சொன்னேன். இது வரை நான் வெள்ளையாக இருக்கும் ஆண்கள் மீசை வைத்து பார்த்ததில்லை விக்ரம் அடர்த்தியான மீசையுடன் கூரான மூக்கு கட்டுமஸ்தான உடல் வாகு அரைகை சட்டை அணிந்து இருந்ததால் அவன் கைகளில் ரோமம் அடர்த்தியாக இருந்தது அவன் வெள்ளை தோலில் பளிச்சென்று தெரிந்தது. ஒரு நிமிடம் இதை எல்லாம் கவனித்த நான் அடுத்த கணமே இவனை ஏன் நாம் ரசிக்கணும் என்று மனதில் திட்டி கொண்டேன். விக்ரம் வாங்க நித்தியா என்று அழைக்க நான் காரை விட்டு இறங்கி அவன் பின்னால் நடக்க ரோஷன் காரை பூட்டி விட்டு வந்தான்.




ரோஷன் ஏற்கனவே சொன்னது போல ஒரு அறை வீடு போல தான் அறையின் அமைப்பு பொருட்களின் நிலை எடுத்து காட்டியது. ஒரு அறை என்றாலும் நான் கொஞ்ச நேரம் முன்பு பார்த்த அந்த ஊர் பெண்களின் களையான எடுப்பான தோற்றம் போலவே அறையும் நேர்த்தியாக இருந்தது. சோபாக்களுக்கு பதிலாக நான்கு நாற்காலிகள் சுவர் ஓரம் ஒரு கட்டில் மெத்தையின் மீது ரொம்பவும் அழகான மெத்தை விரிப்பு சுவற்றில் கவர்ச்சியான புகைப்படங்களுக்கு பதில் ரெண்டு ஓவியங்கள் இருந்தன. விக்ரம் சொல்லாமலே நான் உட்கார்ந்து தான் அந்த அறையின் அழகை பார்த்து கொண்டிருந்தேன். ரோஷன் என் பக்கத்தில் இருந்த நாற்காலியில் அமர விக்ரம் என் எதிரே ஒரு நாற்காலியை இழுத்து போட்டு கொண்டு உட்கார்ந்தான். அப்படி அமர்ந்ததால் என் பார்வை விக்ரம் மீது தான் இருந்தது. 




விக்ரம் சொல்லுங்க நித்தியா ரோஷன் நீங்க இங்கே வந்ததை பற்றி சுருக்கமாக சொன்னான். உங்க கணவருக்கு என்ன ஆச்சு அவர் ஏன் பெங்களூரில் இருந்து மூகாம்பிகைக்கு சிகிச்சைக்காக அழைத்து வந்தீர்கள் என்று கேட்க நான் உண்மையை சொல்லுவதா ரோஷன் என்ன சொல்ல போகிறான் என்று புரியாமல் மென்று முழுங்க ரோஷன் விக்கி இவங்க கணவர் வேறு யாரும் இல்ல உனக்கு கூட தெரியும் நீ பெங்களூர் வரும் போது சந்தித்து இருக்கிறாய் நவீன் ஞாபகம் இருக்கா என்று எடுத்து குடுக்க நான் அப்போதும் அமைதியாகவே இருந்தேன் ரோஷனே சொல்லட்டும் என்று. விக்ரம் தெரியலையே சரி பரவாயில்லை அவருக்கு என்ன ஆச்சு என்று மீண்டும் என்னை பார்த்தே கேட்க நான் ஆனது ஆகட்டும் என்று நவீன் கொஞ்ச நாளா அதிகமா குடிக்க ஆரம்பிச்சு விட்டார் அது அதிகமாகி பத்து நாட்களுக்கு முன் ஒரு சண்டையில் மேலும் அதிலேயே முழுகி ரெண்டு நாட்களுக்கு முன் ரோஷன் தான் அவரை மயங்கிய நிலையில் ஏதோ இடத்தில் கண்டு பிடித்து மூகாம்பிகையில் இதற்கு நல்ல மருத்துவம் இருக்குனு அவரே கொண்டு வந்து சேர்த்து விட்டார். இன்று தான் நான் பார்க்க வந்தேன். என்று நிறுத்தி கொண்டேன்.




பேசி முடித்து ரோஷனை பார்த்தேன் என்ன சொல்லி இருக்கே நீயே சமாளி என்று சொல்லுவதை போல. ரோஷன் கண்ணாலேயே கவலை படாதே நான் பார்த்து கொள்கிறேன் என்று எனக்கு உறுதி அளித்து விக்ரம் என்னடா பேசிக்கொண்டு தான் இருக்க போகிறாயா அவ்வளவு தூரம் டிரைவ் செய்து வந்து இருக்கிறேன் என்றதும் விக்ரம் அருகே இருந்த பிரிட்ஜில் இருந்து பீர் கான்களை எடுத்து கட்டில் மேலே வைத்து எடுத்துக்கோ என்றார். நான் உட்கார்ந்தப்படியே நெளிந்தேன். ரோஷன் ஹே லூசு எனக்கு தான் இந்த பழக்கம் கிடையாதுன்னு தெரியும் இல்ல அப்புறம் என்றதும் விக்ரம் சாரி மச்சான் நண்பர்கள் வந்தாலே இது தான் கேட்பாங்க அது தான் பிரிட்ஜில் எப்போதும் இருக்கும் என்று சொல்லி விட்டு மீண்டும் கான்களை உள்ளே வைக்க கடவுளுக்கு நன்றி சொன்னேன் எங்கே என்னை கட்டாயப்படுத்தி குடிக்க செய்து விடுவார்களோ என்று பயந்து கொண்டிருந்தேன். விக்ரம் என்னை பார்த்து சாரி நித்தியா தப்பா எடுத்துக்காதீங்க என்று சொல்லி விட்டு ரோஷனிடம் சரி நான் என்ன செய்யணும் சொல்லு என்றார். ரோஷன் முதலில் நாங்க ரெண்டு பேரும் இங்கே தான் தங்க போறோம் என்று சொன்னதும் விக்ரம் என்னடா ரோஷன் உனக்கு கிறுக்கு பிடிச்சு இருக்கா நாம ரெண்டு பேருனா கூட பரவாயில்லை நித்தியா எப்படி ரெண்டு ஆண்களுடன் தங்க முடியும் நான் அருகே இருக்கிற லாட்ஜில் ரூம் இருக்கானு கேட்கிறேன் என்று சொல்லி மொபைலில் யாரிடமோ எனக்கு புரியாத மொழியில் பேச அவர் பேசும் போது ரோஷன் என்னிடம் நித்து இது சின்ன ஊரு இங்கே நீ தனியா ஒரு லாட்ஜ் ரூமில் தங்க முடியாது இங்கேயே அட்ஜஸ்ட் செஞ்சுக்கோ என்றான். நான் அவனை முறைத்து பார்க்க அதற்குள் விக்ரம் பேசி முடித்து சாரிடா அங்கே லாட்ஜில் பெண்கள் தனியா தங்க அனுமதி கிடையாதாம் என்றார்.
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 10-03-2019, 10:52 AM



Users browsing this thread: 2 Guest(s)