நண்பனின் முன்னாள் காதலி BY ராகுல் ராஜ்
#43
சுவாதி கருவை கலைக்கமால் ஹோஸ்டல் வந்து யாருக்கும் தெரியமால் ஒரு வாரம் சமாளித்து விட்டாள் .அதே போல் தன் வேலை பார்த்த பாம்பே தமிழ் ஏப் எமில் இருந்தும் ஒரு இரண்டு வாரம் மெடிக்கல் லீவ் எடுத்து கொண்டாள் .
ஹோஸ்டலில் சுவாதியின் ரூம் மெண்டான அஞ்சலி அக்காவும் அவங்க வீட்டுகாரறரையும் குழந்தைகளையும் பார்க்க டெல்லி போனதால் இவள் மட்டும்தான் அந்த ரூமில் இருந்தாள் .அதுவும் அவளுக்கு சாதகமாகவே இருந்தது
அதனால் அவள்மட்டும் தனியாக இருந்ததால் அவள் நினைத்த நேரம் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
ஆனால் அன்று அஞ்சலி அக்கா ஊரில் இருந்து வரவும் இவள் சரியாக அந்நேரம் பாத் ரூமில் வாந்தி எடுத்து கொண்டு இருந்தாள் .
அவள் வாந்தி எடுப்பதை பார்த்த அஞ்சலி என்னடி நேத்து ஏதும் பார்ட்டி போயி நிறைய குடிச்சுட்டியா என கேட்டார்கள் .
அஞ்சலி அக்காவிடம் வாந்தி எடுத்த களைப்பில் மூச்சு வாங்கி கொண்டே வாங்கக்கா நீங்க எப்பக்கா வந்திங்க என சுவாதி கேட்டாள் .
நான் வரரது இருக்கட்டும் நீ எந்த பார்ட்டில போயிட்டு கண்டதையும் குடிச்சுட்டு வந்து இப்படி ஹங் ஓவர் ஆகி கிடக்க என கேட்டார்கள் .அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று சுவாதிக்கு தெரியவில்லை .ஆனால் உண்மையை மட்டும் அவர்களிடம் சொல்லமால் மறைக்க நினைத்தாள் .
அதலாம் பார்டி போயி எதுவும் குடிக்கலாக்கா நேத்து ரொம்ப ஆசையா இருந்துச்சுன்னு நம்ம பாய் கடைல போயி பிரியாணி வாங்கி சாப்புட்டேன் அது உடம்புக்கு ஒத்துக்கல போல என்று பொய் சொன்னாள் .
உனக்கு ஏண்டி இந்த ஆசை அப்படியே பிரியாணி சாப்படனும்னு உனக்கு ஆச இருந்துச்சுனா லீவ் நாள்ல சாப்புட்ருக்க வேண்டியதுதானே .ஏன் இப்படி வீக் டேஸ்ல சாப்புட்டு வேலையவும் கெடுத்துகிற உன் உடம்பையும்கெடுத்துகிற என்று அவர்கள் பேசி கொண்டு இருக்கும் போதே சுவாதிக்கு மீண்டும் குமட்டல் ஏற்பட அவசரமாக பாத் ரூம் போனாள் .
கதவை புட்டி விட்டு வாந்தி எடுத்து விட்டு மூச்சு வாங்கி கொண்டே வெளியே வந்தாள் .என்னடி ரொம்ப உடம்புக்கு முடியாட்டி வா ஹோஸ்பிட்டால் வேணும்னா போவோமா என கேட்டார்கள்.இல்லை வேணாம்க்கா என்று சொல்லி சமாளித்தாள் .
அதன் பின் ஒரு மூன்று நாட்கள் பூட் பாய்சன் ஆனது போல அஞ்சலி அக்காவிடம் சுவாதி நடித்தாள் .அஞ்சலி அக்காவும் வார நாட்கள் ஆனதால் வேலைக்கு போய் விடுவார்கள் .அதனால் ஓரளவு அவர்களுக்கு தெரியமால் மறைத்தாள் .
அன்று சனிகிழமை வந்தது அஞ்சலி அக்காவுக்கும் லீவ் என்பதால் ரூமில் அவளோடு இருந்தார்கள் .அன்றும் அவளுக்கு வழக்கம் போல வாந்தி வருவது போல இருந்தது .ஆனால் வாந்தி எடுத்தால் அஞ்சலி அக்கா கண்டுபுடித்து விடுவார்கள் என்று முடிந்த வரை அடக்கி கொண்டு இருந்தாள் .
சரி சுவாதி ரெண்டு வாரம் நான் ஊருக்கு போனதாலும் நீ உடம்புக்கு முடியாம இருந்ததாலும் நம்ம ரெண்டு பேரும் எதுவும் சரியா பேச முடியல .அதனால இன்னைக்கு ரெண்டு பேரும் எதாச்சும் ஷாப்பிங் மால் போயி ரெண்டு பேறும் ஷாப்பிங் பண்ணிட்டு அப்படியே ஹிர்த்திக் ரோசன் நடிச்ச புது படம் ஒன்னு இந்த வாரம் இறங்கிருக்குன்னு ஆபிஸ்ல சொன்னாளுக நம்ம தியேட்டர் போயி நல்லா ஹிர்த்திக் ரோசன படம் பாத்துகிட்டே சைட் அடிப்போம் என்றார்கள் சிரித்து கொண்டே .

சுவாதிக்கு தெரியும் அவளால் வெளியே போனால் வாந்தி எடுக்கமால் இருக்க முடியாது என்று அதனால் நீங்க மட்டும் போயிட்டு வாங்கக்கா நான் வரல என்றாள் .ஏண்டி உங்க ஊர் சூர்யா ஆர்யாவ மட்டும்தான் சைட் அடிப்பியா எங்க ஊர் ஹிர்த்திக் ரோசனலாம் பாக்க மாட்டயா என்று கிண்டல் அடித்தார்கள் .

அதலாம் இல்லக்கா எனக்கு உடம்புக்கு முடி என்று சொல்வதற்கு முன் அவளால் வாந்தியை அடக்க முடியாமல் வாயை தன் கைகளால் பொத்தி கொண்டு வேகமாக பாத் ரூம் போனாள் .போயி நல்லா வாந்தி எடுத்து முடித்து விட்டு வெளியே மூச்சு வாங்கி கொண்டே தன் வாயில் உள்ள வாந்தி துளி களை துடைத்து கொண்டு வந்தாள் .

அவள் வந்தவுடன் அஞ்சலி அக்கா அவளை முறைத்து பார்த்தவாறே நின்று கொண்டு ஓகே யார் இதுக்கு காரணம் என்று கேட்க சுவாதி தீடிக்கிட்டு நின்றாள்

என்னாக்கா சொல்றிங்க எனக்கு ஒன்னும் புரியலாக்கா என்று மீண்டும் பொய் சொல்லி மறைக்க பார்த்தாள் .

அதை கேட்டு சிறிது நேரம் எதுவும் பேசமால் அமைதியாக அஞ்சலி அவளை முறைத்து பார்த்துவிட்டு என்னயே என்ன நினைச்ச வந்ததுல இருந்து நான் மூனு நாளும் வேலைக்கு போயிட்டு வந்து தூங்கி கிட்டு மட்டும் இருக்கேன்னு நினைச்சியா

இல்ல நீ சொன்னத நான் அப்பிடியே நம்பிட்டேன்னு நினைச்சியா நானும் ரெண்டு குழந்தைக பெத்தவதான் எனக்கும் தெரியும் நீ எடுக்கறது பித்த வாந்தி இல்ல கர்ப்ப வாந்தின்னு சோ ஒழுங்கா சொல்லு யாரோட இது நடந்துச்சு என அஞ்சலி கோபமாக கேட்க

சுவாதி அவர்களுக்கு பதில் ஏதும் சொல்லமால் அமைதியாக இருந்தாள்
தொடரும்
Like Reply


Messages In This Thread
RE: நண்பனின் முன்னால் காதலி BY ராகுல் ராஜ் - by johnypowas - 07-03-2019, 11:23 AM



Users browsing this thread: 1 Guest(s)