நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#19
தொடர்கதை - நீ இல்லாத வாழ்வு வெறுமையடி - 05 - ராசு

[Image: nivv.jpg]

சாப்பிட்டு முடித்தவுடன் கிருஷ்ணவேணியை அறைக்கு ஓய்வெடுக்கச் சொல்லி அனுப்பினான் யுகேந்திரன்.

“கிருஷ், இன்னிக்கு நீ ரொம்ப சோர்வா இருக்கே. நீ போய் அறையில் ஓய்வெடுத்துக்கோ. நான் அப்புறமா வந்து பார்க்கிறேன்.”


அவளுக்கும் இப்போது அதுதான் சரி என்று பட்டது. தலையாட்டிவிட்டு சென்றுவிட்டாள்.


வனிதாமணிக்கு சமையல் மேசையை ஒதுங்கவைப்பதற்கு உதவி செய்தான். அவர் மறுத்தாலும் அவன் கேட்கப்போவதில்லை.



மகனை வாஞ்சையுடன் பார்த்தவாறே தானும் வேலையைத் தொடர்ந்தார்.



மனதிற்குள் அவன் ஏதோ தன்னிடம் தனியே பேச விரும்புவது புரிந்தது. அதனால்தான் கிருஷ்ணவேணியை அறைக்கு அனுப்பியதிலிருந்து அவளைப் பற்றிய எதையோதான் பேசப் போகிறான் என்று உணர்ந்துகொண்டார். இப்போது பேசுவதென்றால் அவள் அழுத காரணத்தை சொல்லப்போகிறானோ?



அவளுக்கு இங்கே என்ன பிரச்சினை?



“என்ன யுகா? கிருஷ்ணா எதுக்கு அழுதா?”



அவன் அவரை வியப்புடன் பார்த்தான்.



“அப்படி என்ன கேட்டுட்டேன்னு நீ என்னை அப்படிப் பார்க்கிறே?”



“எப்படிம்மா? நான் என்ன சொல்ல வர்றேன்னு சொல்றதுக்கு முன்னாடியே கேட்கறே?”



“நான் உன் அம்மாடா?”



அவர்கள் சமையல் அறையில் இருந்தாலும் ஒரு கண்ணை சாப்பாட்டு அறையில் வைத்தான். அவன் எதிர்பார்த்ததுபோல் அங்கே மகேந்திரன் அமர்ந்து இருந்தான். இவர்களைக் கவனிக்காதது போல் வேறு ஏதோ வேலை இருப்பது போல் செல்லை நோண்டியவாறே இருந்தவனைக் கண்டதும் தாங்கள் பேசுவதைக் கேட்பதற்காகதான் அமர்ந்திருக்கிறான் என்று புரிந்தது.

அவன் நல்லவன்தான். அதனால்தான் கிருஷ்வேணியை அழ வைத்துவிட்டு இப்போது அவளைப் பற்றி தெரிந்துகொள்ள ஒட்டுக்கேட்கும் வேலையைச் செய்துகொண்டிருக்கிறான்.

அவள் ஏன் அழுதாள்?”


“வேற என்னம்மா? அவளுக்கு அவளுடைய பெத்தவங்க நினைப்பு வந்துடுச்சு.”



“பாவம்டா அவ. பறிகொடுக்கக் கூடாத வயதில் பெற்றோரை இழந்துவிட்டு சுயநலமிக்க சொந்தங்களுக்கு இடையில் அவள் இத்தனை தூரம் வளர்ந்ததே பெரிது.”



“ஆமாம்மா. அப்பப்ப அவ பெற்றோர் நினைவு வந்துடும். அப்ப அவளை அறியாமலே கலங்க ஆரம்பிச்சிடுவா. போட்டோவில் மட்டுமே பார்த்து வளர்ந்த பெற்றோரை நினைக்கும்போது அவங்க இருந்திருந்தால் இந்த நிலைமை எனக்கு வந்திருக்காதேன்னுதானே அவ மனசு கலங்கும். அப்படிப்பட்ட நினைவில் ஒதுங்கிப்போனவளை நான்தான் கட்டாயப்படுத்தி என்னோட நட்பா பழக வைச்சேன். அவ தேவதைம்மா. அவ சந்தோசமா இருக்கனும்.”



“இருப்பா. அவளை இனி நாம அழாம பார்த்துப்போம். இப்ப நீ போ.”



“சரிம்மா. நீயும் கொஞ்சம் ஓய்வெடு.”



அவர் தனது அறைக்கு போய்விட்டார். அவன் மெல்ல தன் சகோதரனின் அருகில் வந்தான்.



“என்னண்ணா? சாப்பிட்ட உடனே வேலை வந்துடுச்சா? அறைக்குக் கூட போகாம இங்கேயே உட்கார்ந்து செய்ய ஆரம்பிச்சிட்டியே?”



திடீரென்று தம்பியின் குரலைக்கேட்டதும் திடுக்கிட்டுத் திரும்பினான் மகேந்திரன்



தன் பதிலுக்காக எதிர்பார்த்து நிற்பவனிடம் என்ன.பதில் சொல்வது என்று விழித்தான்.



அவன் அசட்டுத்தனமாக சிரிப்பது கண்டு தனக்குள் சிரித்துக்கொண்டான் யுகேந்திரன்.



கிருஷ்ணவேணி பெற்றோரை இழந்தவள் என்று அவனுக்குத் தெரியச் செய்தாயிற்று. இனி என்னதான் அவள் மேல் கோபம் இருந்தாலும் அந்த பரிதாபத்திலாவது அவளை ஏதாவது சொல்லாமல் இருப்பான்.
அப்படி அந்த பரிதாபத்தினால்தான் அவளை அவன் ஏற்றுக்கொள்ளச் செய்ய வேண்டும் என்று இல்லை. அவளைப் பற்றி புரிந்துகொண்டாலே போதும். அவன் மாறிவிடுவான். கட்டாயம் அவன் மாறித்தான் ஆக வேண்டும்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 05-03-2019, 10:30 AM



Users browsing this thread: 22 Guest(s)