31-07-2020, 02:53 PM
கதிரின் அம்மா லட்சுமிக்கு, சந்தோஷம் தாங்க முடியவில்லை. பரபரப்பாக அவர்களுக்கு சாப்பாடு தயார் பண்ணிக்கொண்டிருந்தாள். அண்ணன் மகனும், மகளும், மருமகளும் வந்திருக்காங்க என்று எல்லாருக்கும் தம்பட்டம் அடித்தாள். மகிழ்ச்சியாக இருந்தாள்.
நிஷா வருகிறாள் என்று பூரித்துப்போயிருந்த கதிர், அவளோ, இறுகிய முகத்துடன் களையிழந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். அவ்வப்போது அவள் கடமைக்கு சிரித்து வைப்பதை கவனித்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அவனிடம் முன்புபோல் சகஜமாக... சிரித்துப் பேசாமல் இருப்பது அவனை வேதனைப்படுத்தியது.
என்னாச்சு? என்று ராஜ்ஜிடம் கேட்டான். ஒண்ணுமில்ல... அவளுக்கு வேற ஒரு ஊருக்கு போஸ்டிங்க் வந்திருக்கு அதான்... என்று அவன் மழுப்பினான்.
தீபாவுக்கு போன் போட்டுக் கேட்டான். அவளும், ஒண்ணுமில்லையே.. என்று சாதித்துவிட்டாள். அண்ணனும் அண்ணியும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்காங்க... என்று அவள் வெட்கத்தோடு சொல்ல, அவனுக்கு விஷயம் புரிந்தது.
கதிருக்கு நெர்வஸாக இருந்தது. அம்மா இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...... சிட்டில இல்லாத நவ நாகரீக மாப்பிள்ளைகளா? விஜயகாந்த் படத்துல எல்லாம் மாமனுங்க கிராமத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கமாட்டேனு அடம்பிடிப்பானுங்க, மோகன் மாமா என்னை விடமாட்டேங்குறாரே அப்படி என்ன பண்ணிட்டேன்?
மலர், கதிரை தனியாகக் கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்காரவைத்துப் பேசினாள்.
சொல்லுங்கக்கா... என்றான்.
உங்களுக்கு மாப்பிள்ளை களை வந்திருச்சு... என்றாள்.
ஓட்டாதீங்கக்கா
பார்றா... வெட்கம்லாம் படுறீங்க?
என்ன வா, போன்னே சொல்லுங்கக்கா, எங்க வீடு, ஊரு பிடிச்சிருக்கா?
பிடிச்சிருக்கு கதிர். உங்களுக்கு.. ஸாரி உனக்கு தீபாவை பிடிச்சிருக்கா?
அவன் அமைதியாக இருந்தான்.
மோகன் மாமா, அவருக்கப்புறம் ராஜ்ஜோட சேர்ந்து நீங்களும் கம்பெனியை பார்த்துக்கணும்னு நினைக்குறாரு. கம்பெனி ரொம்ப பெருசா வளர்ந்துட்டிருக்கு. மும்பைலகூட ஓப்பன் ஆகப்போகுது. நிறைய எதிர்ப்புகள். எல்லாத்தையும் சமாளிக்க... தைரியமான, அதே நேரத்துல நல்ல பையனா நீதான் இருக்க. ஏதாவது ஒரு branch ஐ பின்னாடி தீபாதான் நிர்வாகம் பண்ணப்போறா. அதை நீயும் தீபாவும் சேர்ந்து பண்ணனும்னு நாங்க ஆசைப்படுறோம்
உங்களை மாதிரி உறவுகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் அக்கா. ஆனா...
ஆனா?
படிக்கும்போதே... நான் இங்கேயே என் வாழ்க்கையை அமைச்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். கெமிக்கல் கலக்காத உணவுப்பொருட்களை தயாரிக்கணும் மக்களுக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இங்க உள்ள மக்களை முன்னேத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்... என்ன சொல்றதுன்னே தெரியல.
மலருக்கு அவனது லட்சியமும் உறுதியும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.
டேக் யுவர் own time கதிர். யோசிச்சு சொல்லு. But... இப்போ ஒன்னு சொல்லு. தீபாவை உனக்கு பிடிச்சிருக்கா?
ம்.. பிடிச்சிருக்கு. அவளை யாருக்குத்தான் பிடிக்காது?
மலர் அவன் தலையில் கொட்டினாள். எப்பவாவது வெட்கப்பட்டாத்தாண்டா நீ அழகா இருக்குற. இப்படி அடிக்கடி வெட்கப்பட்டா நல்லாவே இல்ல
அவன் அவளை முறைத்தான்.
மோகனுக்கு செய்தி பறந்தது. இதுதான் எனக்கு முதல்லயே தெரியுமே. அவன் இங்க வருவானா? ங்கிறதுதான் விஷயம்! என்க, சப்பென்றானது.
தீபா மட்டும், அவன் வாயாலேயே சொன்னானா அண்ணி? சொன்னானா அண்ணி? என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆமாண்டீ... அவன் வாயாலேயே சொன்னான்.
தீபா வானத்தில் மிதந்தாள். கட்டிக்கிட்டா கதிரை மாதிரி லட்சியத்தோடு இருக்கிற ஒருத்தனைத்தான் கட்டிக்கிடனும். அவனை மாதிரி ஆம்பளையைத்தான் கட்டிக்கிடனும்.
தீபா ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை அவனுக்குப் போன் பண்ணினாள். கதிர் மலைத்துப்போனான். ஒருமுறை மீண்டும் மீண்டும் தன் மனதில் உருத்திக்கொண்டிருப்பதைக் கேட்டான்.
நிஷா ஏன் எப்பவும் சோகமா இருக்கிறாங்க?
தீபா எல்லாவற்றையும் சொன்னாள். நிஷா கண்ணனுக்குச் செய்த துரோகம், சீனு நிஷாவுக்கு செய்த துரோகம்... என்று எல்லாவற்றையும் சொல்ல, கதிர் நொந்துபோனான்.
நிஷா இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டிருப்பாள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள்மேல் அளவில்லாத மதிப்பு வைத்திருந்த அவனுக்கு, அவளுடைய தற்போதைய நிலை பார்த்து, நம்ம நிஷாவா இது? இப்படி அசிங்கப்பட்டுவிட்டு வந்து நிற்பது? இப்படி முட்டாள்தனமாக, புருஷனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் படுத்துக் கிடந்தது? நிஷா இவ்வளவு மேசமானவளா? இவ்வளவு வீக்கானவளா? ச்சே...
அவனுக்கு சோறு இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. நிஷாவைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. சீனுவை.. தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொல்லவேண்டும்போல் இருந்தது. இப்படி அறிவில்லாம நடந்திருக்கியே நிஷா.... என்று அவளை பரிதாபமாகப் பார்த்தான்.
ராஜ், நிஷாவைக் கூட்டிக்கொண்டு வயல்வெளிகளுக்குச் சென்றான். தோட்டங்களைக் காட்டினான். அவள் தன் கண்கள் விரிய இயற்க்கை அழகுகளை பார்த்து ரசிப்பதைக் கவனித்தான். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். இன்னும் சில நாட்கள் அங்கே மலரோடு தங்கினான்.
எனக்கு இந்த ஊரு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா. ஐ லவ் திஸ் பிளேஸ். ஐ லவ் திஸ் பிளேஸ். - நிஷா கைகளை விரித்துக்கொண்டு சுற்றினாள்.
ராஜ் போனை எடுத்தான். அப்பா... நிஷாவுக்கு நம்ம ஊர் பள்ளிக்கூடத்துக்கே போஸ்ட்டிங்க் வாங்கிடுங்க. என்றான்.
நிஷாவின் முகத்தில் தெரிந்த மாற்றம் கதிருக்கு ஆறுதலாயிருந்தது. பாவம் நொந்து போயிருக்கிறாள். இவள் கிடைக்காமல் போய்விட்டாளே என்று எத்தனை நாட்கள் வருந்தியிருக்கிறேன். இப்படித்தானே என்னைப்போல் பலரும் உன்னை உயர்வாக நினைத்திருப்பார்கள் நிஷா. ஏன் இப்படி செய்தாய்? என்று வருந்தினான். மோகன் ஆல்ரெடி தன் தங்கை லட்சுமியிடம் நிஷா பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். தீபா - கதிர் கல்யாணத்தோடு சேர்த்து நிஷாவுக்கும் திருமணம் நடத்திடனும் என்றார்.
கதிர்தான் சென்னைக்கு வரவே ஒத்துக்கமாட்றானே?
மலர் அவனை ஒத்துக்க வச்சிடுவா.. என்றார்.
ராஜ்ஜும் மலரும் நிஷாவும் கிளம்பினார்கள். லட்சுமிக்கு சந்தோஷம். நிஷா நம்ம ஊருக்கு டீச்சரா வந்தா அதைவிட எனக்கு வேற சந்தோசம் என்ன இருக்கு? சின்ன வயசுல.. என் மடியிலேதான் கிடப்பா. எப்படியிருந்த பொண்ணு... ஹ்ம்...
நிஷாவுக்கும் அவளைப் பிடிக்கும். அத்தைக்காரியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு காரில் ஏறினாள். கதிரைப் பார்க்கவே அவளுக்குக் கூசியது. இவனுக்கு இந்நேரம் எல்லா விஷயமும் தெரிந்திருக்கும்!
சில நாட்களில், நிஷா - தன் திங்க்ஸோடு... அந்த ஊருக்கு.... தன் சொந்த ஊருக்கு... டீச்சராக வந்து இறங்கினாள்.
சீனுவுக்கு, அகல்யாவையும் நவீனையும் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்று எப்படி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டதோ... அதுபோலவே, நிஷாவுக்கு, சிட்டி வாழ்க்கையை உயர்வாகச் சொல்லி, கதிரின் மனதை மாற்றி, தீபாவைக் கட்டிக்கொண்டு கம்பெனியை பார்த்துக்கொள்ள சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
ரெண்டும் என்ன பண்ணியதுகள் என்பதை கண்காணிக்கும் டாஸ்க் நமக்கு.
நிஷா வருகிறாள் என்று பூரித்துப்போயிருந்த கதிர், அவளோ, இறுகிய முகத்துடன் களையிழந்து இருப்பதை பார்த்ததும் அதிர்ந்தான். அவ்வப்போது அவள் கடமைக்கு சிரித்து வைப்பதை கவனித்தான். எல்லாவற்றுக்கும் மேலாக அவள் அவனிடம் முன்புபோல் சகஜமாக... சிரித்துப் பேசாமல் இருப்பது அவனை வேதனைப்படுத்தியது.
என்னாச்சு? என்று ராஜ்ஜிடம் கேட்டான். ஒண்ணுமில்ல... அவளுக்கு வேற ஒரு ஊருக்கு போஸ்டிங்க் வந்திருக்கு அதான்... என்று அவன் மழுப்பினான்.
தீபாவுக்கு போன் போட்டுக் கேட்டான். அவளும், ஒண்ணுமில்லையே.. என்று சாதித்துவிட்டாள். அண்ணனும் அண்ணியும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேச வந்திருக்காங்க... என்று அவள் வெட்கத்தோடு சொல்ல, அவனுக்கு விஷயம் புரிந்தது.
கதிருக்கு நெர்வஸாக இருந்தது. அம்மா இதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லையே...... சிட்டில இல்லாத நவ நாகரீக மாப்பிள்ளைகளா? விஜயகாந்த் படத்துல எல்லாம் மாமனுங்க கிராமத்து மாப்பிள்ளைக்கு கொடுக்கமாட்டேனு அடம்பிடிப்பானுங்க, மோகன் மாமா என்னை விடமாட்டேங்குறாரே அப்படி என்ன பண்ணிட்டேன்?
மலர், கதிரை தனியாகக் கூப்பிட்டு, தன் பக்கத்தில் உட்காரவைத்துப் பேசினாள்.
சொல்லுங்கக்கா... என்றான்.
உங்களுக்கு மாப்பிள்ளை களை வந்திருச்சு... என்றாள்.
ஓட்டாதீங்கக்கா
பார்றா... வெட்கம்லாம் படுறீங்க?
என்ன வா, போன்னே சொல்லுங்கக்கா, எங்க வீடு, ஊரு பிடிச்சிருக்கா?
பிடிச்சிருக்கு கதிர். உங்களுக்கு.. ஸாரி உனக்கு தீபாவை பிடிச்சிருக்கா?
அவன் அமைதியாக இருந்தான்.
மோகன் மாமா, அவருக்கப்புறம் ராஜ்ஜோட சேர்ந்து நீங்களும் கம்பெனியை பார்த்துக்கணும்னு நினைக்குறாரு. கம்பெனி ரொம்ப பெருசா வளர்ந்துட்டிருக்கு. மும்பைலகூட ஓப்பன் ஆகப்போகுது. நிறைய எதிர்ப்புகள். எல்லாத்தையும் சமாளிக்க... தைரியமான, அதே நேரத்துல நல்ல பையனா நீதான் இருக்க. ஏதாவது ஒரு branch ஐ பின்னாடி தீபாதான் நிர்வாகம் பண்ணப்போறா. அதை நீயும் தீபாவும் சேர்ந்து பண்ணனும்னு நாங்க ஆசைப்படுறோம்
உங்களை மாதிரி உறவுகள் கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கணும் அக்கா. ஆனா...
ஆனா?
படிக்கும்போதே... நான் இங்கேயே என் வாழ்க்கையை அமைச்சிக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். கெமிக்கல் கலக்காத உணவுப்பொருட்களை தயாரிக்கணும் மக்களுக்கு கொடுக்கணும்னு முடிவு பண்ணிட்டேன். இங்க உள்ள மக்களை முன்னேத்தணும்னு முடிவு பண்ணிட்டேன். அதான்... என்ன சொல்றதுன்னே தெரியல.
மலருக்கு அவனது லட்சியமும் உறுதியும் பார்த்து ஆச்சரியமாக இருந்தது.
டேக் யுவர் own time கதிர். யோசிச்சு சொல்லு. But... இப்போ ஒன்னு சொல்லு. தீபாவை உனக்கு பிடிச்சிருக்கா?
ம்.. பிடிச்சிருக்கு. அவளை யாருக்குத்தான் பிடிக்காது?
மலர் அவன் தலையில் கொட்டினாள். எப்பவாவது வெட்கப்பட்டாத்தாண்டா நீ அழகா இருக்குற. இப்படி அடிக்கடி வெட்கப்பட்டா நல்லாவே இல்ல
அவன் அவளை முறைத்தான்.
மோகனுக்கு செய்தி பறந்தது. இதுதான் எனக்கு முதல்லயே தெரியுமே. அவன் இங்க வருவானா? ங்கிறதுதான் விஷயம்! என்க, சப்பென்றானது.
தீபா மட்டும், அவன் வாயாலேயே சொன்னானா அண்ணி? சொன்னானா அண்ணி? என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தாள்.
ஆமாண்டீ... அவன் வாயாலேயே சொன்னான்.
தீபா வானத்தில் மிதந்தாள். கட்டிக்கிட்டா கதிரை மாதிரி லட்சியத்தோடு இருக்கிற ஒருத்தனைத்தான் கட்டிக்கிடனும். அவனை மாதிரி ஆம்பளையைத்தான் கட்டிக்கிடனும்.
தீபா ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை அவனுக்குப் போன் பண்ணினாள். கதிர் மலைத்துப்போனான். ஒருமுறை மீண்டும் மீண்டும் தன் மனதில் உருத்திக்கொண்டிருப்பதைக் கேட்டான்.
நிஷா ஏன் எப்பவும் சோகமா இருக்கிறாங்க?
தீபா எல்லாவற்றையும் சொன்னாள். நிஷா கண்ணனுக்குச் செய்த துரோகம், சீனு நிஷாவுக்கு செய்த துரோகம்... என்று எல்லாவற்றையும் சொல்ல, கதிர் நொந்துபோனான்.
நிஷா இவ்வளவு கேவலமாக நடந்துகொண்டிருப்பாள் என்று அவன் கனவிலும் நினைத்திருக்கவில்லை. அவள்மேல் அளவில்லாத மதிப்பு வைத்திருந்த அவனுக்கு, அவளுடைய தற்போதைய நிலை பார்த்து, நம்ம நிஷாவா இது? இப்படி அசிங்கப்பட்டுவிட்டு வந்து நிற்பது? இப்படி முட்டாள்தனமாக, புருஷனை விட்டுவிட்டு இன்னொருவனுடன் படுத்துக் கிடந்தது? நிஷா இவ்வளவு மேசமானவளா? இவ்வளவு வீக்கானவளா? ச்சே...
அவனுக்கு சோறு இறங்கவில்லை. தூக்கமும் வரவில்லை. நிஷாவைப் பார்க்கும்போது எரிச்சலாக இருந்தது. சீனுவை.. தேடிக் கண்டுபிடித்து அவனைக் கொல்லவேண்டும்போல் இருந்தது. இப்படி அறிவில்லாம நடந்திருக்கியே நிஷா.... என்று அவளை பரிதாபமாகப் பார்த்தான்.
ராஜ், நிஷாவைக் கூட்டிக்கொண்டு வயல்வெளிகளுக்குச் சென்றான். தோட்டங்களைக் காட்டினான். அவள் தன் கண்கள் விரிய இயற்க்கை அழகுகளை பார்த்து ரசிப்பதைக் கவனித்தான். அவள் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சியை உணர்ந்தான். இன்னும் சில நாட்கள் அங்கே மலரோடு தங்கினான்.
எனக்கு இந்த ஊரு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு அண்ணா. ஐ லவ் திஸ் பிளேஸ். ஐ லவ் திஸ் பிளேஸ். - நிஷா கைகளை விரித்துக்கொண்டு சுற்றினாள்.
ராஜ் போனை எடுத்தான். அப்பா... நிஷாவுக்கு நம்ம ஊர் பள்ளிக்கூடத்துக்கே போஸ்ட்டிங்க் வாங்கிடுங்க. என்றான்.
நிஷாவின் முகத்தில் தெரிந்த மாற்றம் கதிருக்கு ஆறுதலாயிருந்தது. பாவம் நொந்து போயிருக்கிறாள். இவள் கிடைக்காமல் போய்விட்டாளே என்று எத்தனை நாட்கள் வருந்தியிருக்கிறேன். இப்படித்தானே என்னைப்போல் பலரும் உன்னை உயர்வாக நினைத்திருப்பார்கள் நிஷா. ஏன் இப்படி செய்தாய்? என்று வருந்தினான். மோகன் ஆல்ரெடி தன் தங்கை லட்சுமியிடம் நிஷா பற்றி எல்லாவற்றையும் சொல்லியிருந்தார். தீபா - கதிர் கல்யாணத்தோடு சேர்த்து நிஷாவுக்கும் திருமணம் நடத்திடனும் என்றார்.
கதிர்தான் சென்னைக்கு வரவே ஒத்துக்கமாட்றானே?
மலர் அவனை ஒத்துக்க வச்சிடுவா.. என்றார்.
ராஜ்ஜும் மலரும் நிஷாவும் கிளம்பினார்கள். லட்சுமிக்கு சந்தோஷம். நிஷா நம்ம ஊருக்கு டீச்சரா வந்தா அதைவிட எனக்கு வேற சந்தோசம் என்ன இருக்கு? சின்ன வயசுல.. என் மடியிலேதான் கிடப்பா. எப்படியிருந்த பொண்ணு... ஹ்ம்...
நிஷாவுக்கும் அவளைப் பிடிக்கும். அத்தைக்காரியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிவிட்டு காரில் ஏறினாள். கதிரைப் பார்க்கவே அவளுக்குக் கூசியது. இவனுக்கு இந்நேரம் எல்லா விஷயமும் தெரிந்திருக்கும்!
சில நாட்களில், நிஷா - தன் திங்க்ஸோடு... அந்த ஊருக்கு.... தன் சொந்த ஊருக்கு... டீச்சராக வந்து இறங்கினாள்.
சீனுவுக்கு, அகல்யாவையும் நவீனையும் சேர்த்து வைத்துவிடவேண்டும் என்று எப்படி ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டதோ... அதுபோலவே, நிஷாவுக்கு, சிட்டி வாழ்க்கையை உயர்வாகச் சொல்லி, கதிரின் மனதை மாற்றி, தீபாவைக் கட்டிக்கொண்டு கம்பெனியை பார்த்துக்கொள்ள சம்மதிக்க வைக்கவேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டது.
ரெண்டும் என்ன பண்ணியதுகள் என்பதை கண்காணிக்கும் டாஸ்க் நமக்கு.