நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#18
அவனிடம் சண்டை போடுவதில் பயனில்லை. பிறகு போட்டுக்கொடுத்துவிட்டாள் என்று அதற்கும் கிருஷ்ணாவைத்தான் தவறாக நினைப்பான்.

ஆனாலும் அவன் நல்லவன். கிருஷ்ணாவைப்பற்றிய உண்மை தெரிந்தால் அவள் மனம் வருந்துமாறு பேசமாட்டான். அவனுக்கு இரக்க குணம் உண்டு. அதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்திக்கக் கூடாது என்பதற்காக தன்னைச்சுற்றி கடுமையான வேலி ஒன்றை உருவாக்கியிருக்கிறான்.
ஆனால் கிருஷ்ணாவுக்கு தன்னைப் பற்றி மற்றவர்களிடம் கூறுவது பிடிக்காது. அவனே அத்தனை பழகியும் இப்போதுதான் வாயைத் திறந்து சொல்லியிருக்கிறாள்.
அண்ணனோடு பழக்கம் வேறு கிடையாது.
இந்த நிலையில் அவனிடம் உண்மையைச் சொல்ல அவனுக்கு மனம் வரவில்லை. அவன் கொஞ்சம் அவளிடம் பழகிப்பார்க்கட்டும். அவளைப் புரிந்துகொள்வான். அதன் பிறகு அவனிடம் உண்மையைச் சொல்லலாம். கண்டிப்பாக அவனிடம் சொல்லித்தானே ஆக வேண்டும்.
அவள் இந்த வீட்டில் வந்து வாழப்போகிறவள். அதற்கு அடித்தளமாகத்தானே அவளை இங்கே கொண்டு வந்திருக்கிறான்.
அன்புக்கு ஏங்கும் கிருஷ்ணாவை இனி சுயநலம் படைத்த அவளது சொந்தங்களுக்கு இடையில் விட அவனுக்கு மனமில்லை. இனியாவது அவள் சந்தோசமாயிருக்க வேண்டும்.
அவனால் அவளுக்கு சந்தோசத்தை கொண்டு வர முடியும்.
இது வரைக்கும் அவன் தனது விருப்பத்தை அவளிடம் தெரிவிக்கவில்லை.
பரிட்சை முடியும் வரையில் அவளது மனதில் சலனத்தை ஏற்படுத்த விரும்பவில்லை.
அம்மாவிடம் மட்டும் அவன் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறான்.
அதற்கு முன்பே வனிதாமணிக்கு கிருஷ்ணாவை ஏனோ பிடித்துப்போய்விட்டது. அதுவும் மகன் தன் விருப்பத்தை சொன்னதும் முதலில் திகைத்துப் பிறகு சந்தோசப்பட்டார். அப்போதே அவளைத் தங்கள் வீட்டுப் பெண்ணாக நினைக்க ஆரம்பித்துவிட்டார்.
அதனால்தான் அவள் முதன் முதலில் வீட்டிற்கு வரும்போது ஆரத்தி எடுத்ததும், வலது காலை எடுத்து வைத்து வரச்சொன்னதும்.
இதை ஏதும் அறியாத கிருஷ்ணவேணி அவர்கள் சொன்னபடியே செய்தாள்.
இப்போது அந்த நினைப்பு வர அன்பு பொங்க வாத்சல்யத்துடன் அவன் கிருஷ்ணவேணியைப் பார்த்தான்.
அதைக் கண்டுவிட்ட மகேந்திரனின் முகத்தில் அவள் தான் நினைத்து வந்தததை சாதித்துவிட்டாள் என்ற கோபம் படர்ந்தது.

அவளை எப்படியாவது தங்களுடைய வாழ்க்கையில் இருந்து அகற்ற வேண்டும் என்று நினைத்தான்.
அதற்கு நேர்மாறாக யுகேந்திரனோ அவள் முறைப்படி தங்கள் வீட்டிற்கு வரும் நாள் எப்படி இருக்கும் என்று கற்பனைக்கு உள்ளானான். அப்போது அவளது முகத்தில் வரும் சுடர் ஒளியைக் காண ஆவல் கொண்டான்.

அது போல் அவள் என்றும் சந்தோசமாக இருக்க வேண்டும். அப்படி அவளை சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டியது தனது கடமை என்று எண்ணினான்.


வனிதாமணி மனமோ மகனையும் அவளையும் மணக்கோலத்தில் கற்பனை செய்து பார்த்தது.

மூத்த மகன் என்ன செய்வானோ என்ற கவலையும் இருந்தது. அவனும் இளையவன் மாதிரி இருந்திருக்கக்கூடாதா?

தனது மனதில் உள்ளதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்களைத் தவிக்க விடுகிறானே என்று வேதனைப்பட்டார்.

விலகியிருப்பதால் அவரால் மகன் என்ற உரிமையில் பேச முடியவில்லை.

ஏக்கப் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டவர் இப்போது தன்னால் முடிந்த காரியமாய் திரும்பவும் மகனின் மணக்கோலத்தை ரசிக்க ஆரம்பித்தார். அதன் பிறகு தனது பேரக்குழந்தைகளை கொஞ்சுவது போன்றும் அவரது கற்பனை விரிந்தது.

அவர்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. நாம் ஒன்று நினைக்க தெய்வம் வேறு நினைக்கும் என்று.
இந்த இடத்தில் விதி சிரித்தது என்று சொல்லலாமா?
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 28-02-2019, 01:18 PM



Users browsing this thread: 10 Guest(s)