நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு
#17
“போனாப் போயிட்டு போறே போ. இத்தனை நாள் நான் மட்டும்தான் உங்ககிட்ட மாட்டிக்கிட்டு முழிச்சுக்கிட்டு நின்னேன். இப்ப என் கட்சியோட பலம் அதிகமாயிடுச்சு. என்னோட கிருஷ்ணா இருக்கா.”

“சரிம்மா. இனி நானும் தாய்க்குலம் கட்சிதாம்மா.”
என்று சரணடைந்த பின்னேதான் அவனை சாப்பிட விட்டார் வனிதாமணி.
மற்ற மூவரும் அமைதியாக சாப்பிட்டனர்.

வனிதாமணி கிருஷ்ணவேணியைப் பார்த்தார். அவருக்கு சந்தேகம் வந்தது.

வனிதாமணி சின்ன மகனைப் பார்த்து என்ன என்று சைகையில் கேட்க அவன் பிறகு சொல்வதாக சைகை செய்தான்.

மகேந்திரனும் இதை எல்லாம் கவனிக்கத்தான் செய்தான். அவனுக்குப் பக்கத்தில் வனிதாமணி அமர்ந்திருந்தார்.

அவனுக்கு எதிரேதான் யுகேந்திரன் அமர்ந்திருந்தான். அவனுக்குப் பக்கத்தில் கிருஷ்ணவேணி. அவன் அவளுக்கென்று அந்த நாற்காலியை இழுத்துப்போட்டதால் வேறு வழியின்றி அவளும் அதிலேயே அமர்ந்துவிட்டாள்.

மகேந்திரன் ஜாடையாக கிருஷ்ணவேணியைப் பார்த்தான். அவள் உணவிலேயே கவனமாக இருந்தாள்.

அவள் கண் ஓரத்தில் சிவப்பாக தெரிந்தது. ஒருவேளை அழுதிருப்பாளோ? யுகேன் அவளை சமாதானப்படுத்தி அழைத்து வந்ததால்தான் தாமதமாகிவிட்டதோ?

நான் கொஞ்சம் ஓவராக அவளை திட்டிவிட்டேனா?

அவன் சாப்பிட்டு முடிப்பதற்குள் கிருஷ்ணவேணியை இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டான். யாரும் தன்னைக் கவனிக்கவில்லை என்ற நினைப்பில் அவன் செய்துகொண்டிருக்க இதை நாடகத்தை எல்லாம் யுகேந்திரன் கவனித்துவிட்டான்.

மாலை வரை எந்த கவலையும் இல்லாமல் தன்னோடு உற்சாகமாக வேலை  செய்துகொண்டிருந்த அவள் திடீரென்று அழுவானேன்?

அண்ணன்தான் அவளை ஏதோ சொல்லியிருக்க வேண்டும். அது தாங்காமல்தான் அவள் அழுதிருக்கிறாள்.
சரியாக காரணத்தை ஊகித்துவிட்டான்.
Like Reply


Messages In This Thread
RE: நீ இல்லாத வாழ்வு வெறுமையடி by ராசு - by johnypowas - 28-02-2019, 01:17 PM



Users browsing this thread: 23 Guest(s)