நினைத்தாலே இனிக்கும்(முடிவுற்றது )
#16
நான் ஆச்சரியபட்டேன். "எப்படி ஒரு வேளை நமக்கு முன் பஸ் ஏறிவிட்டாளா" நான் குழம்பிக்கொண்டே "மே ஐ கமின் மிஸ்" என்றேன். உடனே திரும்பினாள் மீண்டும் "லலல்லலா லல்லலல...லலலலல"ஒலித்தது.

அவள்"இதுதான் ஸ்கூலுக்கு வர நேரமா"என்றாள்.

"சாரி மேம் பஸ் லேட்"என்றேன்.

"எட்டரையில இருந்து பஸ் வரலையா"அவள் குரலில் கேலி தெரிந்தது.

நம்மை பார்த்திருக்கிறாள்.அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. அவள்"வெளியே நில்லு,ஒரு நாள் நிக்க வச்சா அடுத்த நாள் சீக்கிரம் வருவ"முகத்தில் அறைந்தாற் போல் கூறினாள். அவள் அப்படி சொல்வாள் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை.நிலைகுலைந்தேன்."பூம்பொழில்.அடிப்பாவி உனக்காக தானடி எட்டரை மணியிலிருந்து நாயாக காத்திருக்கிறேன்.

அவள் கூறிவிட்டு விறுவிறுவென சென்றாள்.நான் இடிந்துபோய் நின்றேன்.நேற்று வரை உதட்டோரம் சிரித்து ஓரக்கண்ணால் பார்த்தவளா இவள்.இவளுக்காக தான் லேட்டாக வந்தோம் என்று இவருக்கு தெரிந்திருக்குமா,தெரியாதா.இது அவள் மனதில் இருந்து உதிர்த்த வார்த்தைகளா,இல்லை மாணவர்களுக்கு மத்தியில் கறாராக இருப்பது போல் நடிக்கிறாளா..?

நான் யோசித்துகொண்டிருக்கும் போதே மணி அடித்தது.தொடர்ந்து அவள் குரல்"ஸ்டூடண்ட்ஸ் நாளை வீக்லி டெஸ்ட்க்கு இன்னிக்கு நடத்துன போயம் நல்லா படிச்சிட்டு வந்தீடுங்க,அதில இருந்து எந்த கொஸ்டீன் வேணும்னாலும் நான் கேட்பேன்"என்று கூறிவிட்டு வெளியேறினாள். என்னை கவனிக்கவே இல்லை.

அதன் பிறகு இரண்டு முறை அவளை வராண்டாவிலும் ஒருமுறை கிரௌண்டிலும் பார்த்தேன் ஆனால் அவள் கவனிக்கவே இல்லை.
மாலை பெல் அடித்தது எறும்புகூட்டம் சிதறி ஓடுவது போல் மாணவர்கள் கலைந்து அவரவர் வீட்டிற்கு அம்மாவிடம் திட்டு வாங்க ஆர்வமாக சென்றனர்.வினோத் என்னை வெயிட் பண்ண சொன்னான் நான் பஸ் ஸ்டாப்பில் நிற்பாதாக கூறிவிட்டு வந்து ஒருமணி நேரம் ஆனது அவள் வரவேஇல்லை .பிறகு வினோத் வந்தான் "ஸாரிடா மாப்ள மேட்ஸ் ஸார்கிட்ட கொஞ்சம் டவுட் கேட்டுட்டு வர லேட்டாயிடுச்சி "என்றான்.
"அவ போயிட்டாளாடா"என்றேன் நான்.

"அவன்னா எவ...?.இங்க ஏகபட்ட அவ இருக்காளுங்க,ஏன் நம்ம கிளாஸ் மொக்க ஃபிகர் சரண்யா கூட அவ தான் நீ எவளடா கேக்குற"என்றான்.

"ஒதவாங்க போற உனக்கு எவன்னு தெரியாது"


"ஓ!நீ அவள கேக்குறீயா.அவ போயிட்டா"

"இப்போ நீ எவள சொல்ற"

"ப்ச்!ம்ம் நீ உன் ஆளதான கேக்குற"

"ம்..."

"அவளதான் சொல்றேன் அவ அப்பவே அந்த குந்தானி கூட அந்த ஓட்ட ஸ்கூட்டில ஏறி போயிட்டா"

"எப்போடா..?"

"நீ வெளியில வந்தில அப்பவே"

அப்பொழுதுதான் தெரிந்தது எனக்கு அவள் இவ்வளவு நாளாக அவள் ஸ்கூட்டியில் தான் சென்றிருக்கிறாள்.நாம்தான் அவள் வருவாள் வருவாள் என நினைத்து ஏமாந்திருக்கிறோம் "ச்சே என்ன ஒரு முட்டாள்தனம்"என என்னை நானே நொந்துகொண்டேன்.
Like Reply


Messages In This Thread
RE: நினைத்தாலே இனிக்கும் - by johnypowas - 27-02-2019, 05:07 PM



Users browsing this thread: 1 Guest(s)