வீட்டுக்காரர்(completed)
#28
இருந்தாலும் நவீன் கிட்டே பேசினா நல்லா இருக்குமே என்று பட ரோஷனிடம் ரோஷன் நவீன் நம்பர் போட்டு அவன் ஹலோ ஹலோ என்று சொல்லுவதை மட்டும் கேட்கட்டுமா என்றேன். ரோஷன் ஏன் ஹலோ மட்டும் கேட்கணும் நீயும் பேசேன் அவன் கண்டிப்பா இந்நேரம் ஒண்ணு அந்த பெண்ணோடு விளையாடி கொண்டிருப்பான் இல்லைனா நேற்று மாதிரி எதாவது பாரில் உட்கார்ந்து குடிச்சுட்டு இருப்பான் நீ பேசினா பேசுவானு நம்பறியா அது மட்டும் இல்லை ஒரு வேளை அவன் நீ காணவில்லை என்று போலீசில் கம்ப்ளைன்ட் செய்து இருந்தா கண்டிப்பா செய்து இருக்க மாட்டான் அப்படி செய்து இருந்தா இந்த கால் எங்கே இருந்து வருத்துன்னு போலீஸ் கண்டு பிடிக்காதா அப்புறம் என்ன ரெண்டு பேரும் மாட்டிப்போம் என்று சொல்ல எனக்கு அவன் கம்ப்ளைன்ட் என்று சொன்னது பயத்தை தான் உண்டு செய்தது. எனக்கு அழுகையே வந்து விட ரோஷன் என் தலையை அவன் தோளில் சாய்த்து கொண்டு என்ன நித்தியா இது எதுக்காக செய்யறோம் நவீன் திருந்தனும் என்று தானே ஒரு நாள் இல்லை ரெண்டு நாள் உன்னால் அவனை பிரிந்து இருக்க முடியாதா என்று சொல்லியப்படி என் தலையை ஆதரவா கோதி விட நான் ஆறுதல் அடையாவிட்டாலும் அவன் அரவணைப்பு அப்போ கொஞ்சம் சுகமாக தான் இருந்தது.

கவலை மறந்து பசி ஆரம்பிக்க ரோஷன் தோள் மீது சாய்ந்து இருந்தவள் எழுந்து உட்கார்ந்து ரோஷன் என்ன சாப்பாடு பசிக்குது என்றேன். ரோஷன் என்னை அழைத்து கொண்டு கீழ் தளத்திற்கு சென்று டைனிங் ஹாலுக்குள் சென்றோம். அங்கே ஒரு சிறிய டைனிங் டேபிள் நான்கு பேருக்கு மட்டுமே இருக்கைகள் இருந்ததன. ரோஷன் என்னை உட்கார சொல்லிவிட்டு பைவ் மினிட்ஸ் சாப்பாடு சுட வைத்து விடுகிறேன் என்றான். நான் எழுந்து சென்று ஏன் நான் செய்ய மாட்டேனா விடு நீ போய் உட்கார் என்று அவனை அனுப்பி விட்டு பிரிட்ஜில் இருந்து ஒவ்வொரு வெசல் திறந்து பார்த்து எடுத்து சூடு செய்தேன். அவற்றை டேபிள் மேல் வைக்க ரோஷன் எழுந்து சென்றான். நான் என்ன செய்ய போகிறான் என்று பார்க்க அந்த அறையின் ஸ்க்ரீனை மூடி பக்கத்தில் இருந்த சுவிட்ச் ஆப் செய்தான் கும் இருட்டானது அறை நான் ஹே ரோஷன் உனக்கு என்ன பைத்தியமா சாப்பிட போகும் போது இப்படி விளக்கை அணைத்து இருட்டாக்கி இருக்கியே என்று சத்தம் போட அவன் டேபிளை நெருங்கி வந்து கையில் மறைத்து எடுத்து வந்திருந்த காண்டில் ஸ்டாண்டை டைனிங் டேபிள் மேலே வைத்து அந்த ஸ்டாண்டில் இருந்த நான்கு காண்டில்களையும் ஏற்றினான். மின்சார விளக்கு வெளிச்சம் இல்லை என்றாலும் போதுமான வெளிச்சம் மேஜை மீது படர்ந்தது. அந்த வெளிச்சத்தில் தெரிந்தது உணவு மற்றும் எங்கள் இருவரின் முகங்களும் தான். அவன் செய்ததை ஆமோப்பிப்பது போல என் கட்டை விரலை உயர்த்தி காட்ட ரோஷனும் அவன் கட்டை விரலை உயர்த்தினான். அவனுக்கு பரிமாற முதலில் சிக்கன் லெக் பீஸ் எடுத்து வைக்க அவன் அட இங்கே ஒரு சிக்கென்னே சிக்கன் பரிமாறுது என்றதும் நான் அவன் தலையில் குட்டி நான் சிக்கன் இல்ல கல்யாணம் ஆன ஹென் என்று சொல்லி இருவருக்கும் பரிமாறி விட்டு நானும் அமர இருவரும் சாப்பிட ஆரம்பித்தோம்.

சாப்பிட்டு முடித்ததும் நான் என் வீட்டில் செய்வது போலவே பாத்திரங்களை எடுத்து சென்று கழுவ கிளம்ப ரோஷன் என்னை தடுத்து நித்தியா இதெல்லாம் செய்ய ஆள் இருக்கு நீ செய்ய வேண்டாம் என்றான். நான் கிண்டல் செய்யறியா ரோஷன் இந்த வீட்டிலே உன்னையும் என்னையும் விட்டா நாள் நடமாட்டமே இல்லை இன்னும் என்னவெல்லாம் பொய் சொல்ல போறே என்றேன். அவன் இருக்காங்கனு சொன்னா நம்பு அவங்க வேலை செய்யும் போது மட்டும் தான் இந்த வீட்டிற்குள்ளேயே வருவாங்க என்று சொல்லி என்னை ஹாலுக்கு இழுத்து சென்றான். எனக்கு மனதிலும் உடம்பிலும் சோர்வு இருக்க நான் ரோஷன் நான் சென்று படுக்க போறேன் குட் நைட் என்று சொல்லி விட்டு எனக்கு என்று சொன்ன அறைக்குள் சென்று கதவை அடைத்தேன். ரோஷன் அறையும் மூடும் சத்தம் லேசாக கேட்டது. நான் விளக்கை ஏறிய விட்டே படுத்தேன். மொபைல் எடுத்து பார்க்க புது சிம் மாற்றியது நினைவு இல்லாமல் ஏன் எந்த காண்டக்ட்டும் இல்லை என்று யோசித்தேன்.


யோசிக்கும் போது தான் ஞாபகம் வந்தது சிம் மாற்றி இருப்பது. அது நினைவுக்கு வந்ததும் நவீன் ஞாபகம் வர ஒரு சபலம் நான் இப்போ தனியா தானே இருக்கிறேன் நவீன் நம்பர் போட்டு பார்த்தா என்னவென்று. உடனே ரோஷன் சொன்ன போலீஸ் கம்ப்ளைன்ட் எல்லாம் நிழலாட வேண்டவே வேண்டாம் கண்டிப்பா நவீனொ இல்லை எங்க வீட்டில் உள்ளவர்களோ நான் ஏதோ ஒரு தோழி வீட்டு போய் இருப்பதாக தான் நினைத்து தேடி கொண்டிருப்பார்கள் நான் இப்படி நவீனோட நண்பனுடன் தனியா ஒரு வீட்டில் இருக்கிறேன் என்று தெரிய வந்தால் அவ்வளவுதான் என்று அந்த எண்ணத்தை மறந்தேன். தூக்கமும் வரவில்லை என்ன தான் செய்யலாம்னு தெரியாம படுத்து கிடந்தேன். நேரம் ஆக ஆக அறையின் குளிர்ச்சி அதிகாமாகி கொண்டே போனது ஒரு தருணம் லேசான நடுக்கம் கூட இருந்தது உடம்பில். படுக்கையில் இருந்த கம்பிளியை எடுத்து போர்த்தி கொண்டேன். கம்பிளியை எடுக்கும் போது தரையில் சுவர் ஓரம் ஏதோ ஒன்று ஊறுவது போல தோன்ற உட்கார்ந்தப்படியெ அதை கவனித்தேன். உன்னிப்பாக கவனிக்கும் போது அது குட்டி பாம்பு போல தோன்றியது. அது பாம்பு என்று ஊர்ஜிதம் ஆகாமலே உடல் ஜில்லிட்டது. சத்தம் போடுவதா இல்லை மெதுவாக கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு ஓடி விடலாமா என்று குழப்பத்தில் இருக்க சுவர் ஓரம் ஊறி கொண்டிருந்த அது மெதுவாக கட்டில் பக்கம் தனது பயணத்தை துவங்க அதுக்கு மேல் தைரியமோ தெம்போ இல்லாமல் ரோஷன் பாம்பு என்று சத்தம் போட்டு கொண்டே கதவு அருகே ஓடி கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு சென்றேன். அதே சமயம் என் சத்தம் கேட்டு ரோஷன் அவன் அறை கதவை திறந்து கொண்டு வெளியே வந்து என்ன ஆச்சு நித்தியா என்று கேட்க நான் பதில் ஏதும் சொல்ல கூட வாய் பேச முடியாமல் அவனை கட்டி பிடித்து சைகையால் என் அறையை காட்டினேன். அவன் என்னை பிடித்து கொண்டே அறை அருகே நடக்க நான் அவனை விட்டு ஹாலில் இருந்த சோபாவின் மீது ஏறி நின்றேன். ரோஷன் சிரித்தப்படி என்னப்பா என ஆச்சு என்று கேட்க நான் அங்கே சின்ன பாம்பு இருக்கு என்றேன் தைரியத்தை வர வழைத்து கொண்டு. அவன் நான் இருந்த அறைக்குள் சென்று சிறிது நேரத்தில் கையில் நான் பார்த்த பாம்பை கையில் பிடித்தப்படி வந்தனான். நான் அலறியப்படி ஹே அதை எடுத்து போய் வெளியே போடு என் கிட்டே வராதே என்றேன்.

ரோஷன் என்னை பயமுறுத்தாமல் அதை எடுத்து சென்று பால்கனிக்கு வெளியே வீசி விட்டு வந்தான். ஹே நித்தியா நீ இது வரைக்கும் தண்ணி பாம்பு பார்த்தது இல்லையா அது ரொம்ப ஹார்ம்லெஸ் பாம்பு சரி வெளியே போட்டாச்சு போய் படு என்றான். நான் சோபாவில் இன்னும் நின்றப்படி நான் மாட்டேன் எனக்கு பயமா இருக்கு இங்கேயே இருக்கேன் என்றேன். அவன் என் பக்கத்தில் வந்து நின்று கொண்டிருந்ததால் என் பட்டக்ஸ்சை தட்டி அசடு இனிமே வராது போய் படு என்று மீண்டும் சொன்னான் நான் சமாதானம் அடையாமல் பரவாயில்லை நான் இங்கே உட்கார்ந்து டிவி பார்க்கிறேன் என்றேன். அவன் சரி நீ உன் அறைக்கு போக வேண்டாம் உனக்கு சரி என்றால் என் அறையில் படுத்துக்கோ என்றான். எனக்கும் படுக்க வேண்டும் என்று உடல் அசதி உறுத்தியதால் அவனுடன் அவன் அறைக்கு சென்றேன். அவன் என்னை கட்டில் மேலே படுக்க சொல்லி விட்டு பக்கத்தில் இருந்த சோபாவில் ஒரு பில்லோ போட்டு படுத்தான். அவன் உயரத்திற்கு அந்த சோபா சரி படவில்லை. உடம்பை குறுக்கி கொண்டு படுக்க எனக்கே பாவமாக இருக்க ரோஷன் நீயும் கட்டில் மேலேயே படு ஆனா ஒரு கண்டிஷன் உன் கை கூட என் மேலே படாமல் இருக்கணும் அதற்கு நீ தான் கரண்டீ என்றேன். ரோஷன் அதெல்லாம் என்னால் கரண்டீ தர முடியாது தூக்கத்தில் என் கை உன் மேல் பட்டால் நானா குடுத்த கரண்டீ தவறிடும் நான் இங்கேயே படுத்துக்கறேன் என்றான். நான் அதை ஏற்று கொள்ள மனம் இல்லாமல் எழுந்து சென்று அவனை அழைத்து வந்து சரி சரி கரண்டீ எல்லாம் வேண்டாம் ஆனா நான் உன்னுடைய பிரெண்டோட மனைவி என்று நினைத்து கொண்டே தூங்க போ என்றேன். ரோஷன் படுத்தப்படி நித்தியா சட்டப்படி தர்மம் படி ஒரே ரத்தம் ஓடும் பெண்களுடன் தான் தவறாக நினைக்க கூடாது நீ என் ப்ரெண்ட் மனைவி தான் என்று சொல்லி விட்டு குட் நைட் என்று சொல்லி விட்டு கம்பிளியை அவன் முகம் மேல் இழுத்து கொண்டான்
Like Reply


Messages In This Thread
RE: வீட்டுக்காரர் - by johnypowas - 27-02-2019, 10:23 AM



Users browsing this thread: 1 Guest(s)