காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள்(completed)
#50
அதன் பிறகு சிறிது நேரத்தில் அந்த பெரிய டாக்டர் அம்மா முதலில் வெளியே வந்தார்கள் உடன் அவர்களின் மருமகள் அதாங்க முதலிளிருந்தே பிரசவம் பார்க்க இருந்த டாக்டர் அம்மாவும் வந்தார்கள்.

சின்ன டாக்டர்: ஏங்க, உங்களுக்கு கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா. இப்படிதான் டெலிவரி அன்னைக்கும் லேட்டா வருவதா. உங்களால அதிகம் பாதிக்க பட போறது உங்களோட மனைவியும் குழந்தையும் தான் அதை கொஞ்சமாவது புரிஞ்சு நடந்துக்கோங்க. என்று பொரிந்து தள்ளிவிட்டார்.

அவள் சொல்ல சொல்ல எனக்கு பயம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க தொடங்கியது. அதன் பிறகு அந்த பெரிய டாக்டர் அம்மா என்னிடம் வந்து

'அவள் அப்படிதான், மனசுள்ள வச்சுகாதிங்க தாயும் சேயும் இப்போ நல்லா இருக்காங்க. உங்களுக்கு வெல்ல கட்டி மாதிரி ஆண் மகன் பொறந்து இருக்கான். முதல்ல அங்கே போய் பாருங்க. என்று வாழ்த்தும் ஆறுதலும் சொல்லி சென்றால்.

சிறிது நேரத்தில் எனது அம்மாவும் மாமியாரும் வெளியே வந்தார்கள். நான் அவர்களிடம் 'பவானி இப்போ எப்படி இருக்கா'. என்று கேட்டேன்.

அம்மா: இப்போ எல்லோரும் நல்ல இருக்காங்கடா. இன்னும் கொஞ்ச நேரத்தில் இரண்டு பேரையும் நார்மல் வார்டுக்கு மாத்திடுவாங்க நீ அங்கே போய் பாரு..

நான்: உங்களை மட்டும் எதற்கு உள்ள வர சொன்னாங்க..?

மாமியார்: அதுவா!! இவளோட பிடிவாததால தான். குழந்தை அப்போவே பொறந்துடுசாம். ஆனால் மூச்சு பேச்சு இல்லாம இருந்திருக்கும் போல. என்ன பண்றதுன்னு தெரியாம பெரிய டாக்டர் அம்மாவை வர சொல்லி இருக்காங்க... அவங்கதான் குழந்தையை அழவே வச்சாங்க..சும்மா சொல்ல கூடாது, பெரிய டாக்டர் அம்மா நல்ல கைராசியான டாக்டர்தான். அவா வெளியே வரட்டும். அவளுக்கு வச்சிருக்கேன் கச்சேரி..

நான்: ஐயையோ அதை, எதுவா இருந்தாலும் என்னை திட்டிருங்க..அவ ரொம்ப பாவம். நான்தான் சொன்ன நேரத்துக்கு வர முடியாம லேட்டா வந்தேன்.

அம்மா: அடே அப்பா!!! பொண்டாடி மேல பாசத்த பாரேன் என்று என்னை கிண்டல் செய்தால்.

மாமியார்: நான் சும்மா சொன்னேங்க. உங்களை எப்படி நான் போய். சரி சரி நீங்க போய் குழந்தையை பாருங்க என்று சொன்னார்கள்

Like Reply


Messages In This Thread
RE: காதல் கிறுக்கனின் கிறுக்கல்கள் - by johnypowas - 25-02-2019, 11:06 AM



Users browsing this thread: 1 Guest(s)