அன்பு ஒன்றுதானே அனாதை - நீலியின் கதை
#13
[Image: IMG-20200521-224328.png]

காளிங்கராயர் தன் அறையின் பால்கனியில் இருந்த டிரேட் மில்லில் நடந்துகொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் யாரோ பேசும் சத்தம் கேட்டது. அது கமலாவும், தோட்டக்காரனும்.. "ஐயோ அம்மா நீங்க எதுக்கு இதெல்லாம் பண்ணறிங்க. கொடுங்க நான் செடிக்கு தண்ணி ஊத்தறேன். "
"பொறுங்க.. மொட்டையண்ணா. இவ்வளவு பெரிய தோட்டத்துல நீங்க மட்டும் என்ன பண்ணுவிங்க. இன்னையிலிருந்து இந்த ரோசா செடிகள் எல்லாம் என்னோடது. நான் பார்த்துக்கொள்கிறேன்." என தண்ணீரை பூவாளியில் ஊற்றிக் கொண்டிருந்தாள். பாவாடை நினையக்கூடாது என லுங்கியை மடித்து கட்டுவது போல ஒரு மடிப்பே கட்டியிருந்தாள். காளிங்கராயர் கண்கள் அவளது வலுவலுப்பான கால்களை தடவி விழுந்து எழுந்து மீண்டும் கால்களில் சருக்கு மரம்போல வழுக்கி வழுக்கி விழுந்து கொண்டிருந்தது.

வேதா.. காளிங்கராயரின் அறைக்குள் வந்தாள். கமலி.‌.. இங்க இருக்கியா?. வேதாவின் சத்தத்தை கேட்ட ராயர் சுதாரித்துக் கொண்டு டிரேட் மில்லில் இருந்து இறங்கினார். "வேதா.. இங்கவா.. "
"என்ன டார்லிங்"
"நீ தேடறவ.. கார்டனில் இருக்கா"
"ஓ.. ரூமுக்குள்ள இருப்பானு ஒவ்வொரு ரூமா பார்த்துக்கிட்டு இருக்கேன்" வேதா ராயர் அருகே வந்தாள். அவளை இடுப்போடு அனைத்தபடி ராயர் தோட்டத்தை பார்த்தார்.
வேதாவும் ராயரும் கமலா தோட்டத்திற்குள் தண்ணீர் விட்டுக்கொண்டிருப்பதை ரசித்து பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
"கமலி வித்தியாசமா இருக்கால்ல.. நம்ம பொண்ணுங்க பேத்திங்க யாருமே பிளான்ட்க்கு வாட்டர் விட மாட்டாங்க.." என்றாள் வேதா.
"நாம விட்டிருக்கோமா.. நம்ம மாதிரி தான் நம்ம பிள்ளைகளும் இருந்தாங்க". பிறகு ராயரும் வேதாவேம் கமலாவைப் பற்றி நிறைய பேசிக்கொண்டிருந்தார்கள்.

கமலா பால்கனியில் இருந்து சத்தம் வருவதை கவனித்து வேதாவை பார்த்து கைகளை அசைத்தாள். அப்போது வேதாவோடு சேர்ந்து ராயரும் கையசைத்தார். கமலா மட்டும் அல்ல வேதாவுக்கும் இது இன்ப அதிர்ச்சியாக இருந்தது.
horseride sagotharan happy
[+] 2 users Like sagotharan's post
Like Reply


Messages In This Thread
RE: அன்பு ஒன்றுதானே அனாதை - நீலியின் கதை - by sagotharan - 22-05-2020, 08:35 AM



Users browsing this thread: